tag:blogger.com,1999:blog-37661078.post4471199780596493555..comments2023-07-04T06:55:49.226-07:00Comments on அரை பிளேடு: திருப்பதி - ஸ்ரீநிவாசனா ? முருகனா? - ஒரு சர்ச்சைஅரை பிளேடுhttp://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-37661078.post-15788130880658545462010-05-20T10:28:05.565-07:002010-05-20T10:28:05.565-07:00இந்து மதம் எங்கே போகிறது - அக்னிஹோத்தரம் தாத்தாச்ச...இந்து மதம் எங்கே போகிறது - அக்னிஹோத்தரம் தாத்தாச்சாரி எழுதிய புத்தகம்.<br /><br />நக்கீரன் வெளியீடு..<br /><br />அதில் ஏழுமலையானுக்கு பின்னலுடன் கூடிய ஜடை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் காளி என்று சொல்கிறார்....சகோதரன் ஜெகதீஸ்வரன்https://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-72500088632378029482008-11-19T12:28:00.000-08:002008-11-19T12:28:00.000-08:00எப்படி இருக்கீங்க அரைபிளேடு? நலமா?ரொம்ப நாள் கழிச்...எப்படி இருக்கீங்க அரைபிளேடு? நலமா?<BR/><BR/>ரொம்ப நாள் கழிச்சி, இந்தப் பதிவுக்கு வரேன்! அண்மையில் இந்தியப் பயணத்தில் திருமலை சென்று வந்தேன்! அங்க கிடைச்ச லட்டு இங்கும் கிடைக்குமா? அல்வா தான் கிடைக்கும்-ன்னு சொல்லக் கூடாது :))<BR/><BR/>இந்த முறை தரிசனத்தின் போது, உங்க ஞாபகமும் வந்தது. உங்களுக்குப் புண்ணியம் தான் போங்க! :)<BR/><BR/>திருப்பாவாடைச் சேவையில், ஆபரணங்கள் களைந்து, நெடிய மேனித் திருக்கோலம்! மிக எளிதில் சங்கு சக்கர தரிசனத்தைக் காணலாம்! கரங்களில் தான் இருக்கும்! தோள்களில் அல்ல! <BR/><BR/>சரி, மேட்டர் இது தான்! இங்கேயே விவாதம் என்பதால், இங்கேயே இதைப் பதிந்தும் வைக்கிறேன்! <BR/><BR/>வாரியார் சுவாமிகள் திருவேங்கடத்தில் இருப்பது முருகப் பெருமான் என்று சொல்லவில்லை! அதற்கான ஒலிநாடா: திருத்தணி-திருப்பதி. இங்கு அந்தந்த தெய்வங்களை அப்படியே பேசுகிறார் சுவாமிகள்! சென்னையில் வாங்கியாந்தது! அதைக் கேட்டுக்கிட்டே இந்தப் பின்னூட்டத்தையும் பதிக்கிறேன்!<BR/><BR/>மேலும் அருணகிரியின் திருப்புகழும் எடுத்துத் தருகிறார்!<BR/>//உலகீன்ற பச்சை உமை அண்ணன் <BR/>வட வேங்கடத்தில் உறைபவன்<BR/>உயர் சார்ங்க சக்ர கரதலன்-அவன் மருகோனே//<BR/>என்பது திருவாஞ்சியத் திருப்புகழ்!<BR/>இதில் மிகத் தெளிவாக வட வேங்கடத்தில் இருப்பது பெருமாளே என்று அருணகிரி குறித்து விட்டார்!<BR/><BR/>அருணகிரி இராமானுசருக்குப் பின் வந்தவர் என்று சொன்னாலும், முருகனை அருணகிரியே அறிய மாட்டாரா என்ன?<BR/> <BR/>ஒரு பேச்சுக்குச் "சதியே" நடந்திருந்தாலும், அருணகிரி இதைப் பற்றிப் பாடாமல் வேண்டுமானால் போய் இருக்கலாம்! <BR/>ஆனால் வலிந்து வேங்கடத்தில் சக்கரம் ஏந்திய பெருமாள், உமையின் அண்ணன் என்று பாடுகிறார் என்றால்...<BR/>அருணகிரி பொய் சொல்கிறாரா? :)<BR/>அதை முருகச் செல்வர்களும், முருகப் பதிவர்களும் ஒப்புவார்களா? :)<BR/><BR/>வாரியார் சுவாமிகள் இன்னொன்றும் குறிப்பிட்டார் ஒலிநாடாவில்!<BR/>அதாவது திருமலை(திருவேங்கடம் அல்ல) என்ற ஒரு தலம், திருநெல்வேலி-குற்றாலத்துக்கு அருகிலும் உள்ளது! அது முருகன் கோயில்! பொதிகை மலை ஆலயம்!<BR/>குற்றாலம்/செங்கோட்டை/பண்பொழில் மார்க்கத்தில் அமைந்துள்ளது.<BR/>http://senkottaisriram.blogspot.com/2007/09/thirumalaikoil.html<BR/>http://thecomforts.com/thecomforts_directory.asp?spc=2376<BR/><BR/>இந்தத் திருமலையைத் தான் அருணகிரியும் பாடியுள்ளார்! கந்த குரு கவசத்திலும் வருகிறது!<BR/>//திருமலை முருகா நீ திட ஞான மருள்புரிவாய் செல்வமுத்துக் குமரா மும்மலமகற்றிடுவாய் திருமலை முருகன் பிள்ளைத் தமிழ் என்று பாடற் தொகுப்பும் உள்ளது! <BR/><BR/>எதையும் பகுத்தறியாது, வெறுமனே திருமலை என்று யாரோ கிளப்பி விட, அது எப்படி எல்லாம் பற்றும் என்பதற்கு இந்தத் திருவேங்கட சர்ச்சை ஒரு உதாரணம்! :)<BR/><BR/>மிக முக்கியமான ஒன்று!<BR/>இராமானுசருக்கும் மிக மிக முற்பட்ட, முதற் சங்க காலத்து நக்கீரர் கூட வேங்கடத்து இறைவனை முருகப் பெருமான் என்று குறித்தார் இல்லை!<BR/><BR/>அவர் காலத்தை ஒட்டிய பரிபாடல்களும் வேங்கடத்து நெடியோனை மாலவன் என்று தான் குறிக்கின்றன!<BR/><BR/>அதற்குப் பின்னால் பக்தி இலக்கிய காலகட்டத்திலும் நாயன்மார்களோ, இன்னும் சைவப் பெரியோர்களோ, ஒருத்தர் கூட, மருந்துக்கு கூட, திருவேங்கடம் முருகத் தலம் என்று சொன்னாரில்லை!<BR/><BR/>இவர்களுக்கு எல்லாம் அப்புறம் வந்தது தான்....<BR/>யாரோ ஒரு புண்ணியவான் கொளூத்திப் போட்ட பட்டாசு! :)<BR/>அதன் பின்னால் தான் இராமானுசர் நிறுவ வேண்டிய நிலைக்குப் போய் விட்டது!<BR/><BR/>சங்கு சக்கரங்கள் எப்பவும் எல்லாப் பெருமாள் கோயில்களிலும் இறைவன் சிலையிலேயே இருக்கும் என்ற வாதமும் முற்றிலும் தவறு!<BR/>வைணவத் திருப்பதிகளில் முதல் பதியான திருவரங்கத்தில், அரங்க நாதனுக்கு சங்கு சக்கரங்களே கிடையாது! எந்தப் படத்திலும் பாருங்கள்! வெறும் பாம்பணை மட்டுமே! <BR/>http://sagareswar.com/images/101316%5B12-8%5D.jpg<BR/><BR/>சங்கு சக்கரம் இல்லை! அதனால் அவன் அரங்கன் இல்லை, அறுமுகன்! சோலைகள் சூழ்ந்த திருவரங்கம். சோலைகள் என்றால் குறிஞ்சி நிலம் தான்! என்று புதிதாக யாரேனும் கிளப்பிவிட்டால் இன்னும் சூப்பரா இருக்கும்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-4668024596904059132008-03-14T14:48:00.001-07:002008-03-14T14:48:00.001-07:00அரைபிளேடு,பதிவுக்கு மிக்க நன்றி.பதிவும், பின்னூட்ட...அரைபிளேடு,<BR/>பதிவுக்கு மிக்க நன்றி.<BR/><BR/>பதிவும், பின்னூட்டங்களும் சுவையாகவும், அறிந்திராத பல தகவல்களை அறியக் கூடியதாகவும் உள்ளது.<BR/><BR/>நீண்ட நாட்களுக்குப் பின்னர் தமிழ்மணத்தில் பண்பான, கண்ணியமான , சுவையான கருத்துப் பரிமாற்றம் இந்தப் பதிவின் மூலம் நட்ந்து கொண்டிருக்கிறது.<BR/><BR/>வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும்.<BR/><BR/>தமிழ்மணத்தின் அறிஞர்கள், ஆன்மீகவாதிகள் என நான் கருதும் இராம.கி ஐயா, குமரன், ரவிசங்கர் கண்ணபிரான், மற்றும் கல்வெட்டு போன்றோர் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது இன்னும் மெருகேற்றுகிறது.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-27401475739808670102008-03-14T14:48:00.000-07:002008-03-14T14:48:00.000-07:00//அதாச்சும், ஆழ் மனசு எதைப் பார்க்க விரும்புதோ, அத...//அதாச்சும், ஆழ் மனசு எதைப் பார்க்க விரும்புதோ, அதைத் தான் கண்ணும் பாக்குது! :-)<BR/><BR/>என்ன தான் புள்ளி விவரங்களையும் ஆதாரங்களையும் அடுக்கினாலும், பல அறிஞர்கள் இதைப் பற்றிப் பேசி விட்டாலும், <BR/>சில விஷயங்கள் கெளம்பிடுச்சின்னா, ஓயவே ஓயாது! :-)<BR/>இது அந்த மாதிரி விஷயம்!<BR/><BR/>நல்லா உத்துப் பாத்துட்டு வாங்க தல! உத்து உத்து பாத்தாலும், சுத்தி சுத்தி வந்தீங்க-ன்னு தான் வருவோம்! :-)<BR/><BR/>இந்த மாதிரி ஆராய்ச்சி எல்லாம் பண்ணி கண்டு புடிச்சிடலாம்னா, இந்நேரம் பல பேருக்கு எளிதில் அகப்பட்டு இருப்பானே! அதானே இறைவன் கணக்கு! :-)<BR/>//<BR/><BR/>மிக அருமை. மிக உண்மை. வாழ்த்துகள் கே.ஆர்.எஸ் அவர்களே. <BR/><BR/>அரைபிளேடு,<BR/><BR/>கல்வெட்டு அவர்களின் திருப்பரங்குன்ற கோவிலைப் பற்றிய பதிவை படித்தீர்களா? <BR/><BR/>மேலும், வீயெஸ்கே பதிவில் முருகனுக்கு தேவயானி என்ற மனைவி இருப்பதற்கான ஆதாரமே இல்லை என்று விவாதம் நடந்தது.<BR/><BR/>நிற்க! வரலாறு சிலசமயம் நிகழ்கிறது. பல சமயம் உருவாக்கப் படுகிறது. வேறு சில சமயம் கேள்விக்குட்படுத்தப் படுகிறது.<BR/><BR/>எத்தனை விவாதங்கள் நடந்தாலும் இன்றைய பக்த கூட்டம் 'வேங்கட்ட ரமணா... ஏழுமலையாண்டவா... கோவிந்தா! கோவிந்தா!' என்று கூவிக்கொண்டே பல மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்வதுதான் நிதர்சனம் என்று தோன்றுகிறது.<BR/><BR/>பல அரிய தகவல்கள் தெரிந்து கொண்டேன். நன்றி!Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-78611019496904549882008-03-12T21:49:00.000-07:002008-03-12T21:49:00.000-07:00//"பால ஸ்கந்த நாராயண தம்ம பாதனை" வணங்குவோம்.அரோக...//"பால ஸ்கந்த நாராயண தம்ம பாதனை" வணங்குவோம்.<BR/><BR/>அரோகரா ! கோவிந்தா ! புத்தம் சரணம் கச்சாமி !//<BR/><BR/>:)))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-54246605799699103522008-03-12T06:16:00.000-07:002008-03-12T06:16:00.000-07:00பிப்ரவரி மாச ஞான ஆலயம் புக் வாங்கி பாருங்க. "திருப...பிப்ரவரி மாச ஞான ஆலயம் புக் வாங்கி பாருங்க. "திருப்பதி மலை மேல் இருப்பவன் யார்?" அப்டீன்னு ஒரு கட்டுரையே வந்துருக்கு. வழக்கம ஆன்மீக கட்டுரைகளையே எழுதும் எழுத்தாளர் அரவிந் சுப்பிரமணியமே இந்த கட்டுரைல இது பெருமாள் மட்டும் தானா, சிவன், அம்பாள், முருகனாகவும் இருக்கலாம் அப்டீன்னு ஆதாரங்களை அடுக்கியிருக்கார்.Readerhttps://www.blogger.com/profile/02268236652479385056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-7149173270428012132008-01-15T05:44:00.000-08:002008-01-15T05:44:00.000-08:00ஐயா சான்றோர்களே, மிக நல்ல வாதம். பாராட்டிற்குரிய வ...ஐயா சான்றோர்களே, <BR/>மிக நல்ல வாதம். பாராட்டிற்குரிய விஷயம் என்னவென்றால், ஒருவரும் மற்றவரை தாக்கிப் பேசாமல் நயமாகவும் அழகாகவும் ஒப்புதலையும் எதிர்ப்பையும் தெரிவிப்பது ஒரு அரிய அழகு. Please keep it up.<BR/><BR/>சிலப்பதிகாரமென்பது ஒரு கற்பனைக் கதை என்பதற்கு எழுத்தாளர் சுஜாதா அவர்களின் 'கற்றதும் பெற்றதும்' புத்தகத்தில் ஒரு செய்தி படித்தேன். சரியாக நியாபகமில்லை எனினும், சிலப்பதிகாரத்தில் நடந்தவை போன்று நிஜமாகவே நடந்ததா என்பதற்கு சான்று எங்குமில்லை என நினைக்கிறேன். எனவே, சிலப்பதிகாரத்தில் வரும் எடுத்துக்காட்டு எந்த வகையில் ஏற்புடையது என்ற கேள்வி எழுகிறது. ஆழ்வார்க்கடியான் நம்பி என்பவர் கல்கியின் கற்பனைத் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. <BR/><BR/>மர்மம் தொடர்கிறது... ;-)rkwinnerhttps://www.blogger.com/profile/17287522901580333316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-57690430979556029042007-12-19T19:03:00.000-08:002007-12-19T19:03:00.000-08:00சீனு சதயம் அவர்கள் பதிவிட்டிருக்கிறார்.http://sadh...சீனு <BR/>சதயம் அவர்கள் பதிவிட்டிருக்கிறார்.<BR/>http://sadhayam.blogspot.com/2005_12_01_archive.html<BR/><BR/>நன்றி.<BR/><BR/>------------<BR/><BR/>இராம. கி. ஐயா<BR/><BR/>மொட்டையடித்தல் குறித்த விரிவான விளக்கங்களுக்கு நன்றி.<BR/><BR/>முருகன் "மாயோன் மருகனாகவே" குறிக்கப்படுகிறான். தாங்கள் சுட்டியது போல் "மாயோன்" என்பது முருகனை குறிப்பதற்கான வாய்ப்புகள் குறைவே. <BR/>சிலப்பதிகாரத்தை விரிவாக படிக்க இருக்கிறேன். <BR/><BR/>மிக்க நன்றி.<BR/><BR/>---------<BR/><BR/>குமரன்<BR/><BR/>இடைச்செருகல் என்று சொல்வது உண்மையிலேயே சொத்தையான வாதம்தான். இடைச்செருகலுக்கு வாய்ப்பு இருக்குமோ என்பதுதான் கேள்வி. அவ்வண்ணம் இருக்க முடியாதென்றே கருதுகிறேன்.<BR/><BR/>திருப்பதியை புத்த தலமாக நிறுவும் புத்தகத்தில் சிலப்பதிகார ஆதாரம் நூல் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தது என்று புறந் தள்ளப்படுகிறது. சிலம்பு எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தது என்று சொல்வது அபத்தம்.<BR/><BR/>------<BR/><BR/>கே.ஆர்.எஸ்.<BR/><BR/>அதுதானே. இலக்கியங்களில் மொட்டையடித்தல் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும்.<BR/><BR/>கேட்டீங்களே ஒரு கேள்வி..<BR/><BR/>மொட்டை எப்படி முருக வழிபாட்டுக்கு வந்தது.<BR/><BR/>ஐயா, முருகன் தானே மொட்டையடித்து கோவணாண்டியாக பழனியில் நிற்கும் தெய்வம்.<BR/><BR/>தெய்வமே மொட்டையடித்து நிற்கும் போது பக்தர்கள் அடிக்க மாட்டார்களா.<BR/><BR/>புத்தரோ கோவிந்தனோ எங்கும் மொட்டைத் தலையோடு இல்லை என்பதும் உற்று நோக்கத்தக்கது.<BR/><BR/>:)<BR/><BR/>-----------<BR/><BR/>சீனா..<BR/><BR/>நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக் கூடாதுதான். இருந்தாலும் இறைநம்பிக்கை என்பது ஒரு தேடல்தானே. :)<BR/><BR/>நன்றி.அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-46647785626469159422007-12-19T16:17:00.000-08:002007-12-19T16:17:00.000-08:00அரியும் சிவனும் ஒண்ணு - அறியாதவர் வாயிலே மண்ணு.திர...அரியும் சிவனும் ஒண்ணு - அறியாதவர் வாயிலே மண்ணு.<BR/><BR/>திருப்பதி - சிரீனிவசனா - முருகனா - விவாதம் சூடு பிடித்துப் பலப்பல ஆதாரங்கள் தரப் பட்டிருக்கின்றன.<BR/><BR/>புதுப் புது செய்திகள். இருக்கட்டும்.<BR/><BR/>பல காலமாக திருப்பதி வைணவத்தலம் என நாம் தலைமுறை தலைமுறையாக வணங்கி வருகிறோம். நதிமூலம் ரிஷிமூலம் - ஆராயக்கூடாது. அடி முடி கண்டவரில்லை. <BR/><BR/>நடுவினில் புத்தரோ என ஒரு ஐயப்பாடு. தேவைதானா ?<BR/><BR/>//அந்த<BR/>"பால ஸ்கந்த நாராயண தம்ம பாதனை" வணங்குவோம்.<BR/><BR/>அரோகரா ! கோவிந்தா ! புத்தம் சரணம் கச்சாமி !//<BR/><BR/>இதுதான் முடிவுcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-16143615879728047772007-12-18T15:52:00.000-08:002007-12-18T15:52:00.000-08:00//திருப்பதி தவிர்த்து வேறு வைணவத்தலம் எதிலாவது மொ...//திருப்பதி தவிர்த்து வேறு வைணவத்தலம் எதிலாவது மொட்டையடிக்கும் வழக்கம் உண்டா//<BR/><BR/>உண்டு! <BR/><BR/>//திருவரங்கத்தில் யாராவது மொட்டை அடிப்பார்களா//<BR/><BR/>இல்லை!<BR/><BR/>//மொட்டை அடிப்பது வைணவப் பாரம்பரியமா//<BR/><BR/>ஆமாம்! பாரம்பரியம் என்று சொல்லாவிட்டாலும் வைணவத்தி்லும் இந்தச் சடங்கு உண்டு!<BR/><BR/><BR/>//உங்களுக்கு மற்றுமொரு கேள்வி//<BR/><BR/>அட எப்பப் பாரு நீங்களே கேள்வி கேட்டுக்கிட்டு இருந்தா எப்படி? :-)<BR/>இந்தாங்க பிடிங்க...<BR/><BR/>சமய வழக்கமாய் மொட்டை அடிக்கும் பழக்கம் தமிழர்களுக்கே உரிய ஒன்றா? இது பற்றித் தமிழ் இலக்கியங்கள் சொல்வது என்ன?<BR/><BR/>இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி என்பார்கள். தமிழர்கள் பலர், வாழ்வில் ஒரு முறையாச்சும் மொட்டை போடுகிறார்கள். இந்த வழக்கம் பற்றி நம் இலக்கியங்கள் சொல்வது என்ன? <BR/>இல்லை ஒன்றுமே சொல்லவில்லையா? (என்ன கொடுமை சரவணன்! :-)<BR/><BR/>மொட்டை அடிக்கும் வழக்கம் முருக வழிபாட்டுக்கு மட்டுமே உரியதா?<BR/>பெரியபாளையம், சமயபுரம், மாரியம்மன் என்று அம்மன் ஆலயங்களிலும் உள்ளது அல்லவா?<BR/><BR/>மொட்டை சமண/பெளத்த வழக்கமாகவே கருதப்பட்ட காலம் ஒன்று உண்டல்லவா? இது எப்படி முருக வழிபாட்டுக்கு வந்தது!<BR/>காவடி எடுப்பது இடும்பன் கதையின் ஆதாரம் உண்டு! அதே போல் மொட்டை போடுவதற்கு ஏதாச்சும் இருக்கா?<BR/><BR/>இல்லை சமண/பெளத்த வழக்கத்தை முருகனின் வழக்கமாகவும் ஆக்கி விட்டார்களா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-72450486720114420232007-12-18T04:25:00.000-08:002007-12-18T04:25:00.000-08:00தல, நம் கருத்துக்கு ஒத்துவராத தரவுகளை 'இடைச்செருகல...தல, <BR/><BR/>நம் கருத்துக்கு ஒத்துவராத தரவுகளை 'இடைச்செருகல்' என்பது ஒரு மகா மகா சொத்தையான வாதம். இப்படிப் பார்த்தால் எந்த ஒரு தரவையும் ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்காது. கருத்துகளைத் தரவின் அடிப்படையில் மாற்றிக் கொள்ளும் திறந்த மனது தான் எந்த ஆய்விற்கும் ஏற்றது. அது இல்லாவிட்டால் ஆய்வு செய்வதே வீண் வேலை. அதற்குப் பின்னர் உங்கள் விருப்பம். <BR/><BR/>திருமலை மேல் இருப்பது திருமாலா முருகனா சிவனா அம்பிகையா புத்தனா என்ற விவாதங்கள் பல நாட்களாக இருக்கின்றன. திருமால் என்று பல நூறு வருடங்களாக வணங்கப்படுகிறான். ஆனால் ஆதியில் எந்த உருவமாக இருந்தது என்பதில் இது வரை நான் பார்த்த தரவுகளால் தெளிவு இல்லை. <BR/><BR/>நான் அறிந்த வரையில் இருக்கும் கருத்துகளை முன்பு சொல்லிச் சென்றேன். அவ்வளவு தான். பின்னர் மற்றவர் வைக்கும் கருத்துகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-90435539452986561982007-12-18T04:09:00.000-08:002007-12-18T04:09:00.000-08:00சிவகங்கை மாவட்டத்தாரிடையே அழகர் கோயிலிலும் மொட்டை ...சிவகங்கை மாவட்டத்தாரிடையே அழகர் கோயிலிலும் மொட்டை அடிக்கும் வழக்கம் உண்டு. அப்படிப் பார்த்தால் சிவன் கோயிலிலும் மொட்டை அடிக்கும் வழக்கம் தமிழரிடையே உண்டு. (காட்டு: புள்ளிருக்கு வேளூர் - வைத்தீசுவரன் கோயில்.) இது போலப் பல்வேறு அய்யனார் கோயில்களிலும் கூடப் பெருவாரியானவர்கள் மொட்டை அடிப்பார்கள். (தென்பாண்டி நாட்டில் பெரும்பாலரின் குலத் தெய்வம் அய்யனார் தான்.) மொட்டை அடிப்பது ஒரு வேண்டுதலை நிறைவேற்றுவதாகும். இது திராவிடர் என்ற இனக்குழுவினரின் பழக்கம். பிறக்கும் குழந்தைக்கு இந்திந்தக் கோயில்களில் மொட்டை போடுவதாகக் கூடப் பலரும் வேண்டிக் கொள்வார்கள். (வடக்கே இந்தப் பழக்கம் மிகக் குறைவு.) சிவநெறியாளர், விண்ணவ நெறியாளர் என்ற இருவரிடமும் இந்தப் பழக்கம் உண்டு.<BR/><BR/>அழகர் கோயில் பெருமாள் கோயிலில் கீழே மலையடிவாரத்தில் தான் மொட்டை அடிப்பார்கள். மேலே இருக்கும் சோலைமலை முருகனுக்கு அல்ல. (குன்றுதோறாடல் என்ற பெயரை முருகனை ஒட்டிச் சோலைமலை முருகனுக்குச் சொல்வார்கள்.) <BR/><BR/>வேங்கடவன் கோயில் திருமாலுடையதா, முருகனுடையதா என்ற வாதம் நெடுநாட் பட்டது. ஆனாலும் கிடைக்கும் ஆதாரங்களைச் சீர்தூக்கிப் பார்த்தால், குறைந்தது 2000 ஆண்டுகளாக வேங்கடத்துக் கோயில் விண்ணவன் கோயிலைத் தான் குறிக்கிறது என்று அழுத்தமாகச் சொல்லலாம். அதில் ஐயமில்லை.<BR/><BR/>மாயோன் என்ற சொல் முருகனைக் குறிப்பதாய் நான் கண்டதில்லை. எங்கு அப்படி வருகிறது என்று சொன்னால் தெளியமுடியும். சேயோன் என்பதே முருகனைக் குறிக்கும். சிலம்பில் மதுரையை ஒட்டி வரும் ஆய்ச்சியர் குரவை இடைச்செருகலாய் இருக்க வழியில்லை. மதுரைக் காண்டத்தில் தலைமாந்தர் தங்கியிருப்பது கோட்டைக்கு வெளியே உள்ள முல்லை நிலம் சார்ந்த ஆயர் பகுதி. கோவலன், மாதவி என்ற பெயர்களும், பல்வேறு முல்லைநில விவரிப்புக்களும் மாயோனை ஒட்டிய பழக்கங்களை நமக்கு உணர்த்தும். இதே போலக் குறிஞ்சியைச் சொல்லும் போது சேயோனைப் பற்றிய குறிப்புகள் மிகுந்து வரும். மாயோனுக்கும் சேயோனுக்கும் தமிழரிடையே எப்போதும் பெருத்த செல்வாக்கு உண்டு. கருப்பும் சிவப்பும் இன்று நேற்றல்ல; நெடுநாளாக நம்மை ஆட்டிப் படைத்திருக்கின்றன. :-) சிலம்பை ஆழப் படிக்குமாறு பரிந்துரை செய்கிறேன். <BR/><BR/>அன்புடன்,<BR/>இராம.கி.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-50648990339047576992007-12-18T03:16:00.000-08:002007-12-18T03:16:00.000-08:00ரொம்ப நாளா இருக்கும் சந்தேகம் தான். இருந்தாலும் பர...ரொம்ப நாளா இருக்கும் சந்தேகம் தான். இருந்தாலும் பரமேஸ்வரன் (அது முருகனோ ஸ்ரீநிவாஸனோ என்ன வடிவமானாலும்) இருக்குமிடமென்பதால் பெருசா அலட்டிக்கறதில்லை. :P<BR/><BR/>குமரன் முதல் ஆளா வந்தது ஆச்சரியம் இல்லை. கே.ஆர்.எஸ்ஸும் தான். பல புது தகவல்களை தந்திருக்கிறார்கள். <BR/><BR/>யுவர் ஆனர், மை இசுமால் கொஸ்டின் இஸ் - வேர் இஸ் ஜி.இரா வென் வீ நீட் ஹிம்? :))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-69541538558914258882007-12-18T00:49:00.000-08:002007-12-18T00:49:00.000-08:00திருப்பதி முருகனா ? பாலாஜியா ?எனக்கு கவலை இல்லை.சு...திருப்பதி முருகனா ? பாலாஜியா ?<BR/>எனக்கு கவலை இல்லை.<BR/><BR/>சுவையான லட்டு கிடைக்கும். அதுக்கு பங்கம் வந்துடக் கூடாது.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-35305314646817519532007-12-18T00:08:00.000-08:002007-12-18T00:08:00.000-08:00இத பத்தி ரொம்ப நாளுக்கு முன்னாசியே (வேற யாரோ) பதிவ...இத பத்தி ரொம்ப நாளுக்கு முன்னாசியே (வேற யாரோ) பதிவு போட்டதா நியாபகம்...சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-15379841580385792362007-12-17T18:59:00.000-08:002007-12-17T18:59:00.000-08:00கே.ஆர்.எஸ்.1. குன்றுகள் தோறும் என் கண்கள் குமரனைய...கே.ஆர்.எஸ்.<BR/><BR/>1. குன்றுகள் தோறும் என் கண்கள் குமரனையே காண்கின்றன. என் கண்களின் பிழை போலும். குறிஞ்சிக் கடவுளல்லவா.<BR/><BR/>பரங்கிமலை ஏறினாலும் முருகனைத்தான் வணங்கி வருவேன் என்று நினைக்கிறேன். :))<BR/><BR/>முருகன் ஆதித் தமிழனல்லவா.<BR/><BR/>ஒருவேளை திருப்பதி முதலில் முருகன் கோவிலாக இருந்து, பின்னர் பொளத்த ஆலயமாக மாறி, இடையில் பாலாம்பிகையாக கருதப்பெற்று... இராமானுஜரால் சங்கு சக்கரம் பொருத்தப்பட்டு ஸ்ரீநிவாசனாக மாறி இருக்குமோ.<BR/><BR/><BR/>2. வேகும் கடம் - பாவங்கள் வேகும் இடம். இந்த பாவங்களை எரிக்கும் இறைவனாக ஒரு காலத்தில் முருகனே இருந்து இருப்பானோ.<BR/><BR/>(அந்தணர் ஓருவர் கீழ்க்குல மங்கையை மணக்க, அதனால அவருக்கு பாவம் சூழ... அந்த பாவத்தை இறைவன் எரித்தான். அதனால்தான் அவன் வெங்கடேசன் என தல புராணம் கூறுகிறது.)<BR/><BR/>இராம.கி. ஐயா "தொல்காப்பிய உரை எழுதிய இளம்பூரணர் (11 ஆம் நூற்றாண்டு) தன் உரையில் என்ன காரணத்தாலோ, வேங்கடத்தைத் திருமாலோடு பொருத்திச் சொல்லவில்லை. ஆனால் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நச்சினார்க்கினியர் நிலங்கடந்த நெடுமுடியண்ணலாகிய திருமால் உறையும் மலையாகத் தான் வேங்கட மலையைக் கூறுகிறார்." என தமது பதிவில் குறித்திருக்கிறார்.<BR/><BR/>இடையில் 12 ஆம் நூற்றாண்டிலேயே இராமானுஜர் திருப்பதியை வைணவத்தலமாக நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.<BR/><BR/>3. இறைவனின் பெயர்களைத்தானே ஆராய்கிறோம். <BR/><BR/>"ஈஸ்வர முனிகள்" என்று வைணவர் ஒருவரின் பெயரை இறைவனுடைய பெயராக பொருத்திப் பார்க்க இயலுமா. <BR/><BR/>அந்த காலகட்டத்தில் ஒரே வீட்டில் அண்ணன் தம்பி ஒருவர் சைவராகவும் மற்றவர் வைணவராகவும் இருந்ததும் நடந்ததே. (பொன்னியின் செல்வனில் ஆழ்வார்கடியானும் சிவன் கோவில் பட்டரும்.)<BR/><BR/>எதிர்காலத்தில் தங்கள் பிள்ளை சைவனா, வைணவனா என்று அறியாத நிலையில் பெற்றோரன்றோ பெயரிடுகின்றனர். :))<BR/><BR/>4. பல்லவர்கள் காலம் 7 ஆம் நூற்றாண்டுக்கு பிறகுதான். திருப்பதியின் சிம்மம் பல்லவர்களுடையது என்றால் கோவில் அப்போதுதான் வந்தது என்றாகிவிடும். மற்று பல்லவர்கள் தங்கள் ராஜ்ஜியத்தில் இப்படி ஒரு புகழ்பெற்ற வைணவ ஆலயம் இருப்பதை கண்டு கொண்டதாகவே தெரியவில்லையே. இத்துணைக்கும் பல்லவர்கள் வைணவக்கோவில்கள் பலவற்றையும் எழுப்பியவர்கள். பல்லவர்கள் திருப்பதி கோவிலுக்கு மானியம் கொடுத்ததாக எங்கும் இல்லை. 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டு சோழர்களான இராஜ இராஜன் மற்றும் இராஜேந்திரனின் குறிப்புகளிலும் திருப்பதி இல்லை.<BR/><BR/>பல்லவ அரசி சாமவை... இவருடைய காலம் பற்றிய குறிப்புகள் ஆராயப்பட வேண்டிய ஒன்று.<BR/><BR/>5. பாவாஜி வழிபட்டவர்தான் "பாலாஜி" என்ற பெயர்க்காரணம் அவ்வளவாக ஏற்புடையதாக இல்லை. இந்தப் பாவாஜி என்பவருடைய காலம் இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளுக்குள்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.<BR/><BR/>பாலாஜி என்பது இறைவனுடைய வெகு சமீபத்திய பெயர். விக்கிபீடியா Balaji (though this is a more recent name).<BR/><BR/>விக்கிபீடியா சொல்லும் பாலாஜி பெயர்க்காரணம்...<BR/>Lord Venkateshwara's temple is at the top of the seven hills in the place called Tirumala. The temple of the Lakshmi, in the form of Princess Padmavati, is located at the foot of the seven hills at Tirupati, in a town called Tiruchanur. Another legend that goes by is that of a boy called Bala. This boy was a helper boy, who was one day wrongly accused as a thief. He ran for his life when he was chased by people. He was hit on the head by the mob and his head was bleeding profusely. He ran to the Tirupathi temple of Lord Vishnu and ran to the main door where GOD is placed. When the people entered the temple they couldn't find the boy but saw the head of God's idol bleeding.It was considered that the boy was sheltered and protected by God himself and the priests put cloth on the idol's head to stop the bleeding. So we see white covering on the God's idol and the presiding God is called BALAJI.<BR/><BR/><BR/><BR/>6. வேலை இடுப்புக்கு மேல் பிடித்து விறைப்பாக நிற்க முருகன் என்ன வாயிற் காவலனா. இடுப்பு கீழ் இடது கையை தழைத்து தொட்டும் தொடதவனாய் தன் வேலை தோளில் சாய்த்து ஒய்யாரமாய் இளநகை புரியும் இறைவனல்லவா. அதே போன்ற தோற்றமல்லவா திருமலையில் உள்ளது. முருகன் ஆலயங்களில் பெரும்பாலும் வேல் தனியாக செய்யப்பட்டு அல்லவா சார்த்தப் பெறும்.<BR/><BR/>ஆனால் ஆகம விதிப்படி திருமாலோ நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் இரண்டில் சங்கு சக்கரத்தோடு இருக்க வேண்டியது நியமமல்லவா.<BR/><BR/>சங்கு சக்கரங்கள் மட்டுமல்ல இரண்டு கைகளே ப்யூஸ் செய்யப்பட்டவை என்றும் படித்தேன். :))<BR/><BR/>சிலப்பதிகாரப் பாடலுக்கு நன்றி.<BR/><BR/>எனது கேள்வி...<BR/>சிலப்பதிகார கதை பூம்புகாரில் தொடங்கி மதுரையில் நடந்து வஞ்சியில் முடிவது.<BR/><BR/>பாடியவர் சமணத்துறவியான இளங்கோவடிகள்.<BR/><BR/>திருவேங்கடம் உறையும் திருமாலை பாடவேண்டிய தேவை சிலப்பதிகாரத்தில் எந்த கட்டத்தில் நிகழ்கிறது.<BR/><BR/>இடைச்செருகலாக இருக்குமோ :))<BR/><BR/>பகவத் கீதையிலேயே இடைச்செருகல்கள் இருக்கிறதாம்.<BR/><BR/>இராமானுஜர் இறைவனை சங்கு சக்கரத்தை ஏற்க வைத்த அறிவுத் திறத்தை சிலர் சிலாகிக்கிறார்கள்.<BR/><BR/>இறைவன் கருடரூபராக வந்து எனது கோவில் என்று சொல்லாமல் பூட்டிய கதவுகளின் பின் சங்கு சக்கரத்தை ஏற்றது ஏன் :))<BR/><BR/>8. திருப்பதி கல்வெட்டுகள் தேவஸ்தான வெளியீடுகளில் இருக்கும். காசு கொடுத்து வாங்கியே ஆராயலாம்.<BR/><BR/>ஆனால் தேவஸ்தானம் தனக்கு பாதகமாக இருக்கும் கல்வெட்டு செய்திகளை தனது வெளியீட்டில் சேர்த்திருக்குமா :))<BR/><BR/>9. //மேலும் ஆலயத்தில் தாயார் சன்னிதியே கிடையாது!//<BR/><BR/>நீங்களே பாயிண்ட் எடுத்துக் கொடுக்கறீங்க. வைணவ கோவில்களில் இருக்க வேண்டிய பிரகார மூர்த்திகள் அனைவரும் மிஸ்ஸிங். ஏன்.<BR/><BR/>உற்சவரும் முருகர் மாதிரியேதான் இருக்காருன்றதுதான் நாம சொல்ல வர்றது. உற்சவர் ஏன் உள்ளே இருக்கும் சாமியின் அலங்காரம் போலவே இல்லை :))<BR/><BR/>11. //அப்படியே குன்றின் மேல் கல்லாகி நிற்கின்றாய் கண்ணா//<BR/><BR/>மூலவர் சுயம்பு. அதைத்தான் இந்த பிற்கால பாடல் சொல்கிறது.<BR/><BR/>முன்னர் வேறுசிலையாய் இருந்ததை பின்னர் வேறுவிதமாய் அலங்கரித்து சுயம்பு என்று சொல்லலானது.<BR/><BR/>அனைத்து அலங்காரங்களுக்கும் பின் மூல சிலை தனது அடையாளம் முற்றிலும் மறைந்ததாக புதியதொரு வடிவமாகவே ஆகிப்போனது.<BR/><BR/>சரி. சரி. அடுத்த முறை வெள்ளி நடக்கும் அபிஷேகத்திற்கு சென்று பார்க்க வேண்டும். :)<BR/><BR/>வெள்ளி தோறும் அபிஷேகம் நடப்பதும், மஞ்சள் பயன்படுத்தப்படுவதும் அம்பாள் என்பதால் என்று படித்தேன் :))<BR/><BR/>12. வாரியாருடைய கந்தபுராண சொற்பொழிவு ஆடியோக்களில் இருப்பதாக படித்ததுதான். கேட்டதில்லை. வாரியாருடைய சொற்பொழிவை கேட்க வேண்டும். :))<BR/><BR/>13. குமரதாரா நீர்வீழ்ச்சியும் குமரனுடைய கோவில் என்று உறுதிபடுத்துவதே.<BR/><BR/>இந்த ஷேத்திரம் ஆதிவராக ஷேத்திரமாக இருந்தது என்றும், அந்த ஆதிவராகத்தை வழிபடவே குமரன் தவமிருந்தார் என்றும் சொல்லுவர். குமரன் வழிபட்டது கோவிந்தனையன்று.<BR/><BR/>எனவே ஆதிவராகமும் குமரனும்தான் இந்த தலத்திற்கு உரியவர்களாய் இருப்பரோ.<BR/><BR/>தலபுராணம் சீனுவாசன் ஆதிவராகத்திடம் இந்த தலத்தில் தான் கோவில் கொள்ள வேண்டிக் கொள்வதாகவே சொல்கிறது.<BR/><BR/>குமரகுருபரர், அருணகிரி, பாம்பன் சுவாமிகள் ஆகியோரின் காலத்திற்கு முன்பே இராமனுஜர் வைணவத்தலமாக இதை நிறுவுவிட்டார்.<BR/><BR/>மாயோன் என்ற பெயர் முருகனுக்கும் பொருந்துவதே. <BR/><BR/>இலக்கியங்களில் திருவேங்கடம் என்பதே பெரிய ஆராய்ச்சியாக இருக்கும்.<BR/>----------<BR/><BR/>உங்களுக்கு மற்றுமொரு கேள்வி.<BR/><BR/>திருப்பதி தவிர்த்து வேறு வைணவத்தலம் எதிலாவது மொட்டையடிக்கும் வழக்கம் உண்டா.<BR/><BR/>திருவரங்கத்தில் யாராவது மொட்டை அடிப்பார்களா.<BR/><BR/>மொட்டை அடிப்பது வைணவப் பாரம்பரியமா.<BR/><BR/>பழனி, திருத்தணி, செந்தூர் என்று தலமெங்கும் முருக பக்தர்கள் மொட்டை அடிக்கிறார்கள்.<BR/><BR/>அதே போல் திருப்பதியிலும் இறைனுக்கு நாமம் சாத்தியபின்னும் பழக்கம் விடாத பக்தர்கள் மொட்டையடிக்கிறார்கள் போலும்.<BR/><BR/><BR/>--------<BR/><BR/>அம்பிகையோ..<BR/>முருகனோ..<BR/>கோவிந்தனோ..<BR/>புத்தனோ...<BR/><BR/>இறை நம்பிக்கை என்பது ஒரு தேடல். இத்தகு தேடலைத் தரும் இறைவன் திருப்பதி உறைபவன்.<BR/><BR/>அந்த<BR/><B>"பால ஸ்கந்த நாராயண தம்ம பாதனை"</B> வணங்குவோம்.<BR/><BR/>அரோகரா ! கோவிந்தா ! புத்தம் சரணம் கச்சாமி !அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-58619278842316772472007-12-17T17:33:00.000-08:002007-12-17T17:33:00.000-08:00இரண்டாம் சொக்கரே..தங்கள் சுட்டிக்கு நன்றி. படித்...இரண்டாம் சொக்கரே..<BR/><BR/>தங்கள் சுட்டிக்கு நன்றி. படித்துப் பார்த்தேன். அக்கட்டுரை தொடர் பெருமளவு கல்வெட்டு அவர்கள் குறிப்பிட்ட புத்தகத்தின் சாரமாகவே இருக்கிறது. :)<BR/><BR/>நன்றி.<BR/><BR/>தாங்கள் சமணக் கோவில் என்று வாதிடுவதை கேட்க ஆவலாக உள்ளேன். திருப்பதி மலையிருக்கும் தீர்தங்கரர்... திகம்பரரோ ? சுவேதாம்பரரோ ? <BR/><BR/>:))<BR/><BR/>---------<BR/><BR/>வசந்தம் ரவி..<BR/><BR/>சிக்சர் அடிப்பது நமது நோக்கமல்ல. :)<BR/><BR/>நமது நோக்கம் கடவுளை அறிவது.<BR/>கடவுளை நோக்கிய பயணம் மிக நீண்டது. சைவமோ, வைணவமோ, சாக்தமோ, சரவணமோ, பெளத்தமோ, ஜைனமோ. இந்த ஆறுமே திருப்பதி மலையை சொந்தம் கொண்டாடுகின்றன. எம்மார்க்கமும் எமக்கு ஷண்மார்க்கமே. ஷண்முகனின் மார்க்கமே !!!<BR/><BR/>:))<BR/><BR/>------<BR/><BR/>மாயவன் / கே.ஆர்.எஸ்.<BR/><BR/>இலங்கை நகருக்கு இறைவன் (ஈஸ்வசரன்) என்ற பொருளில்தான் இராவணன் இலங்கேஸ்வரன் என்று வழங்கப்பட்டான். <BR/><BR/>இராவணேஸ்வரன் என்பதே தவறான வழக்கு.<BR/><BR/>அதே போல் வெங்கட மலையின் இறைவன் என்ற பொருளிலேயே வெங்கடேசுவரன் வழங்கப்படுகிறான் போலும்.<BR/><BR/>அந்த வெங்கட மலையின் ஈஸ்வரன் <BR/>யார் என்பதுதானே இந்த பதிவு.<BR/><BR/>-------<BR/><BR/><BR/>புரட்சித் தமிழன்..<BR/><BR/>நீங்கள் சொல்லும் பட்டிமன்றத்தை இராமானுஜர் பனிரெண்டாம் நூற்றாண்டிலேயே ஏற்பாடு செய்தாராம்.<BR/><BR/>அந்த பட்டிமன்றத்தில் வென்றுதான் "நிராயுதபாணியாக" இன்னாரென்று தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாது இருந்த இறைவனுக்கு சங்கு சக்கரம் பொருத்தி "கோவிந்தனாய்" வெளிக்கொணர்ந்தனர்.<BR/><BR/>அந்த வாத பிரதிவாதங்கள் பெரிதும் தெரியாத நிலையில்.. மீண்டும் நேரடி ஒளிபரப்பில் ஒரு பட்டி மன்றம் வைக்கலாம். :))<BR/><BR/>-------அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-35493066104132867802007-12-17T17:02:00.000-08:002007-12-17T17:02:00.000-08:00குமரன் தங்கள் இரு கேள்விகளுக்கும் கே.ஆர். எஸ். பதி...குமரன் தங்கள் இரு கேள்விகளுக்கும் கே.ஆர். எஸ். பதில் சொல்லிவிட்டார்.<BR/><BR/>காஞ்சியில் செயற்கைக் குன்று. அகோபில மலை மேல் நரசிம்மர்.<BR/><BR/><BR/>-----------------------<BR/><BR/><BR/>கே.ஆர். எஸ்.<BR/><BR/>புத்தம். நாராயணம். சரணம். கச்சாமி !!!<BR/><BR/>----------<BR/><BR/>அறிவன்<BR/><BR/>அபிஷேக தரிசனம் இருப்பதாக கே.ஆர்.எஸ் தெரிவித்துள்ளார்.<BR/><BR/>பார்க்க..<BR/><BR/>http://www.etirupati.com/services.htm<BR/><BR/>டிக்கட் ஒருவருக்கு ரூ. 750.<BR/><BR/>அடுத்த முறை இந்த தரிசனத்திற்கு டிக்கட் வாங்கி செல்ல வேண்டும். :))<BR/><BR/>----------<BR/><BR/><BR/>இலவசக்கொத்தனார்...<BR/><BR/>இவர்தான் அவரா அவர்தான் இவரா கன்ப்யூசன் திருப்பதியில மட்டும் இல்லை.<BR/><BR/>பூரி ஜெகன்னாதர் புத்தராம்.<BR/>ஐயப்பனுக்கு "தர்ம சாஸ்தா" அப்படின்னு புத்தர் பேர் இருக்குறதால அவரும் புத்தராம்.<BR/>(பார்க்க கல்வெட்டு அவர்கள் குறிப்பிட்ட "Tirupati Balaji was a Buddhist Shrine" புத்தகம்)<BR/>எனக்கொன்னவே மலைமேல இருக்கறதால ஐயப்பன் ஒரிஜினலா முருகரோன்னு டவுட்டு :))<BR/><BR/>-------------<BR/><BR/><BR/>மீனா அருண்<BR/><BR/>நான் தெய்வத்தின் குரல் படித்ததில்லை. ஜகத்குருவுக்கும் சந்தேகம் வந்திருப்பதால் மலையில் இருப்பவர் முருகன்தான் என்ற நமது கட்சி வலுவாகிறது. :))<BR/><BR/>---------<BR/><BR/>கல்வெட்டு அவர்களே..<BR/><BR/>தங்கள் சுட்டியை கண்டதும் புத்தகத்தை தரவிரக்கம் செய்து படிக்க ஆரம்பித்தேன்.<BR/><BR/>முடித்துவிட்டுத்தான் மீண்டும் பதில் பின்னூட்டம் போடவே வந்தேன். அந்த அளவிற்கு புத்தகம் சுவாரசியமாக இருந்தது.<BR/><BR/>படித்து முடித்தவுடம் போதி சத்துவர்தான் "அவலோகிதா" என்ற நாமம் தாங்கி புலிக்குன்றத்தில்(திருப்பதிதான்) எழுந்தருளியுள்ள இறைவன் என்பதை நம்பவே ஆரம்பித்து விட்டேன்.<BR/><BR/>:))<BR/><BR/>தங்கள் சுட்டிக்கு மிக்க நன்றி.<BR/><BR/>--------அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-49037490126921851242007-12-17T03:01:00.000-08:002007-12-17T03:01:00.000-08:00எதுக்குப்பா இவ்வளவு பிரச்சினை பேசாம முருகனையும் பெ...எதுக்குப்பா இவ்வளவு பிரச்சினை பேசாம முருகனையும் பெருமாளையும் கூப்பிட்டு பாப்பையா முன்னிலையில பட்டிமன்றம் வச்சி பார்த்துடலாம் இல்லபுரட்சி தமிழன்https://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-36100186619651649312007-12-17T02:05:00.000-08:002007-12-17T02:05:00.000-08:00//6. நீங்கள் கொடுத்த சுட்டியில் திருச்செந்தூர் மு...//6. நீங்கள் கொடுத்த சுட்டியில் திருச்செந்தூர் முருகனின் திருவுருவத்தின் இடது கரத்தைப் பாருங்கள். திருப்பதி இறைவனின் இடது கரத்தை முற்றிலும் ஒத்திருக்கிறது.//<BR/><BR/>தலைவா! இதையும் கொஞ்சம் பாருங்க! கன்னியாகுமரி அம்மன்!<BR/>http://media.radiosai.org/Journals/Vol_04/01APR06/images/H2H%20special/kanyakumari.jpg<BR/>இங்கேயும் இடது கரம் அப்படியே தான் இருக்கு! வடவேங்கடம்-தென் குமரி! என்னா கனெக்சன் பாத்தீங்களா? :-)<BR/><BR/>செந்தூர் முருகப்பெருமானின் திருக்கரம் தொடையின் மேல் வைத்து, எல்லா விரல்களும் விரிந்து இருக்குங்க! எல்லா விரலும் விரிந்து இருந்தா எப்படி வேலைப் பிடிக்க முடியும்? அதுவும் வேலை இடுப்புக்குக் கீழ் யாரும் பிடிப்பாங்களா என்ன? கற்பனை செய்து பாருங்க!<BR/><BR/>திருப்பதி-ன்னு இல்லை!<BR/>பல ஆலயஙகள், தாஜ் மகால்-னு சர்ச்சைகள் வீசிக்கிட்டே தான் இருக்கும் போல!<BR/><BR/>திருப்பரங்குன்றத்தில் இருப்பது முருகப்பெருமானே அல்ல! அது பெண்ணுருவம்-னு நேத்து பொன்னியின் செல்வன் போன்ற நல்ல யாகூ குழுமத்தில் பார்த்து திகைத்துப் போனேன்! <BR/>http://www.ponniyinselvan.net/messages/view/thiruparamkundram-the-non-muruga-temple-011237.htmlKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-51945775234987844312007-12-17T00:30:00.000-08:002007-12-17T00:30:00.000-08:00அடிச்சான் பாருய்யா அரைபிலேடு ....சிக்சர்அடிச்சான் பாருய்யா அரைபிலேடு ....சிக்சர்வசந்தம் ரவிhttps://www.blogger.com/profile/06225776790320481096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-6547991747653261422007-12-17T00:17:00.000-08:002007-12-17T00:17:00.000-08:00// kannabiran, RAVI SHANKAR (KRS):மேலும் இராவணனை இ...// kannabiran, RAVI SHANKAR (KRS):<BR/>மேலும் இராவணனை இராவனேஸ்வரன், இலங்கேஸ்வரன் என்று சொல்வதால் அவன் சிவனாகி விட முடியுமா என்ன? :-)//<BR/><BR/>இராவணன் சிவன் இல்லை..<BR/><BR/>அவன் சிறந்த சிவபக்தன் என்பதால் தான் அவனை இராவனேஸ்வரன், இலங்கேஸ்வரன் என்று சொல்வார்கள்..Maayavanhttps://www.blogger.com/profile/13780800746816117837noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-41492641449943828432007-12-16T23:01:00.000-08:002007-12-16T23:01:00.000-08:00இரண்டாம் சொக்கன்,நான் முன்னர் சொன்னபடி ( "Tirupati...இரண்டாம் சொக்கன்,<BR/>நான் முன்னர் சொன்னபடி ( "Tirupati Balaji was a Buddhist Shrine" --> http://www.ambedkar.org/Tirupati/Tirupati.pdf ) புத்த மதத்திற்கு உரிய ஒன்றாக இருக்கவே அதிக வாய்ப்பு என்று நினைக்கிறேன். சமணமாக இருந்திருக்கலாம- என்பது பற்றிய தகவலை அறிய ஆவல்.Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-81521034961375664432007-12-16T22:24:00.000-08:002007-12-16T22:24:00.000-08:00மிகத்தீவிரமாய் விவாதம் நடப்பதினால் இந்தசுட்டியினை ...மிகத்தீவிரமாய் விவாதம் நடப்பதினால் இந்தசுட்டியினை இனைக்கிறேன்.<BR/><BR/>http://sadhayam.blogspot.com/2005_12_01_archive.html<BR/><BR/>தேவைப்பட்டால் திருப்பதி ஒரு பௌத்த/சமண மடாலயமாக இருக்க வாய்ப்புள்ளதற்கான காரணிகளுடன் தனிபதிவிடுகிறேன்.இரண்டாம் சொக்கன்...!https://www.blogger.com/profile/04788583976993887740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-27530119536737206062007-12-16T21:44:00.000-08:002007-12-16T21:44:00.000-08:00//டாவின்சி வரை எல்லோரும் கட்டி காப்பாற்றியது போல...//டாவின்சி வரை எல்லோரும் கட்டி காப்பாற்றியது போல்.... திருப்பதி ரகசியத்தை அந்த கால ஆழ்வார்கள் முதல் அன்னமாச்சார்யாக்கள் வரை கட்டி காப்பாற்றி வருகிறார்கள் போலும்.//<BR/><BR/>ஹிஹி!<BR/>டாவின்சிக்கு எதிர் சமயம் இல்ல! அதனால சுளுவா வெளிவரலை!<BR/>இங்க தான் ஆறு சமயம் அறுபது கட்சின்னு இருந்துச்சே! ரொம்ப டகால்டி வேலை எல்லாம் பண்ண முடியாது!<BR/><BR/>வேங்கடவன் மார்பில் இருக்கும் திருமகள் (ஸ்ரீவத்சம்) என்னும் அந்தத் திருமறு...சிலையில் இருப்பதாகவே சொல்லப்படுகிறது!<BR/><B>அதனால் இப்படி ஒரு பெண் இருப்பதையும் கண்டு, வேறொரு புருஷனாக அந்தத் தெய்வத்தைக் கொள்ளும் அளவுக்கு ஆழ்வார்கள் தரம் இறங்க மாட்டார்கள் என்பதே என் துணிபு!</B><BR/><BR/>//எனக்கென்னவோ முருகன்தான் "சீனுவாசனாக" அவதாரம் எடுக்க வைக்கப்பட்டான் என்று தோன்றுகிறது//<BR/><BR/>அதாச்சும், ஆழ் மனசு எதைப் பார்க்க விரும்புதோ, அதைத் தான் கண்ணும் பாக்குது! :-)<BR/><BR/>என்ன தான் புள்ளி விவரங்களையும் ஆதாரங்களையும் அடுக்கினாலும், பல அறிஞர்கள் இதைப் பற்றிப் பேசி விட்டாலும், <BR/>சில விஷயங்கள் கெளம்பிடுச்சின்னா, ஓயவே ஓயாது! :-)<BR/>இது அந்த மாதிரி விஷயம்!<BR/><BR/>//அடுத்த முறை சென்றால் நன்கு உற்றுப் பார்க்க வேண்டும்//<BR/><BR/>நல்லா உத்துப் பாத்துட்டு வாங்க தல! உத்து உத்து பாத்தாலும், சுத்தி சுத்தி வந்தீங்க-ன்னு தான் வருவோம்! :-)<BR/><BR/><B>இந்த மாதிரி ஆராய்ச்சி எல்லாம் பண்ணி கண்டு புடிச்சிடலாம்னா, இந்நேரம் பல பேருக்கு எளிதில் அகப்பட்டு இருப்பானே! அதானே இறைவன் கணக்கு! :-)<BR/><BR/>அடுத்த முறை திருமலையில் நீங்க அரோகரா ன்னு கூவினாலும் அதுவும் அவனுக்கு உகப்பாகத் தான் இருக்கும்! :-)<BR/>ஏன்னா ஆழ்வார் சொல்லிய படி, "இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து"! </B><BR/><BR/>தல...பதிவாப் போட வேண்டியது, பின்னூட்டமா நீண்டு போச்சி! சாரி! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com