<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-37661078</id><updated>2012-01-31T17:11:13.735-08:00</updated><category term='கவிஜ.. கவிஜ'/><category term='கதை விட்டது.'/><category term='கல்யாணராமன் கதை.'/><category term='மெகாஆஆஆஆ லட்சுமி'/><category term='ஆ. ஏ. அ. ஆனான் - தொடர்'/><title type='text'>அரை பிளேடு</title><subtitle type='html'>கொள்கைகள் ஏதுமில்லாதவன்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>115</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-5166109310478480157</id><published>2008-03-14T16:16:00.000-07:00</published><updated>2008-03-14T16:32:04.766-07:00</updated><title type='text'>அதிகார மையங்களை கேள்வி கேட்கும் போராளி அரைபிளேடு குறித்து...</title><content type='html'>இந்த தமிழ்பரப்பில் பார்ப்பனீய உருவாக்கத்தாலும் கருத்தாக்கத்தாலும் பாதிக்கப்பட்டு, கட்டியமைக்கப்பட்ட அதிகார மையங்களை நோக்கி குரலெழுப்பி அவற்றை வென்று அதன் மீதேறி நின்று நம்மை நாமே பார்த்துக்கொள்ளும் போது அதிகாரங்களை சிதைத்த நாம், அந்த அதிகாரங்களை சிதைத்ததால் மற்றுமொரு அதிகார மையத்தை நிறுத்தி, அந்த அதிகாரத்தின் காரணமாக இதற்குமுன் அதிகாரத்தை நாம் கேள்வியெழுப்பியது சமத்துவத்தை நிலைநிறுத்துவதற்காகவே என்னும் அடிப்படையை மறந்து சமத்துவத்தை தொலைத்து ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட பிண்ணனியை கொண்டாட இனம் சார்ந்த ஆதிக்க பின்னணியை கட்டி நிறுத்தி வென்ற இடத்தில் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் தொலைத்திருக்கிறோமா என்ற கேள்வி அந்த வாசிப்பின் மூலமாக நீண்டு, என்னுள் பொங்கி எழுந்த ஒரு தருணத்தில்,  இந்த சமூகத்தில் தனி மனிதனின் இருப்பும் சிறப்பும் பிறப்பு சார்ந்து அமைகிறது என்ற கட்டுகளை வெட்டியுடைத்த நாம் அதே கட்டுகளை அதே பிறப்பு சார்ந்து பிறரிடம் பிரயோகித்து நமது கொள்கை வழுவி தடம் புரண்டு அதிகார போதையேறி அரண்டது பேயாக கண்டது பாம்பாக, பார்ப்பது எல்லாம் பார்ப்பனீயமாக கண்ணுக்குள் திராவிட திரை மறைப்பதால் சாதீயங்களை ஒழிக்க வேண்டிய இடத்தில் அதனை ஒழிக்காது ஒழிந்து அடிப்படையில் சாதீயத்திற்கு எதிரான குரல் என்று எழுப்பப்படும் எமது குரல் சாதீய விழுமங்களையே மீண்டும் கட்டியெழுப்புவது குறித்ததான எமது கருத்துக்கள் குறித்ததான எமது விமர்சனங்களை நாமே மேற்கொள்ளவேண்டிய தருணங்களில் அதனை புறக்கணித்து புறந்தள்ளி புனிதங்களை பிட்டுப்போட்டு சிதைத்து புனித பிம்பங்களை புடைத்து சமூக புத்துணர்வு தந்து புதுயுகம் தரவேண்டிய கடமையே புறந்தள்ளி எமது கொள்கைகளுக்கு யாம் புனிதத்தன்மை கொடுத்து அந்த புதிய புனிதத் தன்மையில் மனிதருக்காய் போராட கிளம்பிய தருணங்கள் தொலைந்து இனம் சார்ந்த இருத்தலை இறுதிவடிவமைப்பதான ஒரு பணியை செய்து கொண்டிருக்கிறோமா என்ற கேள்வியை கேட்க வேண்டிய தருணத்தில் அமைப்புகளை அதிகார மையங்களை எதிர்ப்பதே புரட்சியென்றும் அப்புரட்சியே சமூகத்தின் தேவையென்றும் களப்பணியாற்றி வந்த நாம் அந்தக் களப்பணியில் வென்று அந்த அதிகாரங்களையும் வென்றெடுத்தவர்களாக இருக்கும் தருணத்தில் புரட்சிகரமான போராளிகளான நாம் நமது போராட்டத்தில் என்றும் ஓய்வதில்லை என்பதால் அதிகாரம் சார்ந்த அமைப்புகளுக்கு எதிரான போராட்டத்தை தொடரும் வேளையில் அப்போராட்டம் அதிகாரத்தை அடைந்தவர்களான எமது மீதே இருப்பதால் அதிகாரத்தை எதிர்ப்பது தன்னைத் தானே எதிர்ப்பதாகுமா என்ற எண்ண அலைகளை ஒரு போராளியாக கடந்து போராளியின் கடன் போராட்டம் மற்றும் போராட்டத்தை பதித்தலாகவே இருக்கவேண்டும் என்பதற்காக இக்கருத்தை இங்கு பதிவதன் அவசியத்தையும் இக்கருத்து பதிதல் கருத்துக் களத்தில் இலக்கிய வடிவம் பெற்று பின்நவீனத்துவ புனிதத்தை பெறுவது என்ற இலக்கிய அறிவு உடையவர்களாக காலத்தால் அழியாத இந்த இலக்கியங்களை எமது போராட்டத்தின் வலியை தன்மையை மக்கள் அறியக் கொடுப்பதற்காக மக்கள் கலைகளான கவிதைகள் பக்கம் கவனம் செலுத்தி புதுயுகம் காண புதுக்கவிதை படைத்து களப்பணி ஆற்றி வருங்கால் அப்பணியை எதிர்த்தும் எமது கருத்துக்களை மறுத்தும் வெறுத்தும் எழும் எதிர் கருத்துக்கள் மதிப்பேதும் கொடுத்து கவனிக்கப் படவேண்டியவையே அல்ல என்றாலும் குப்பைக் கூடைக்குள் போக வேண்டியவை என்றாலும் எதிர் கருத்துக்களை எதிர்ப்பவனே போராளி என்ற போராளிக்கான இலக்கணத்தை கைவிடாது எதிர்கருத்து கண்டவிடத்தில் எகிறி எம்கருத்துக்களை செலுத்தி எம் கருத்துக்களால் மட்டுமே மறுமலர்ச்சியும் புத்துணர்ச்சியும் புதுமையும் கொண்ட குமுதாயம் ஒன்றை அமைக்க முடியும் என்பதை இந்த குமுதாயத்திற்கு உணர்த்துவதற்காக கும்மிகளை பதிலுக்கு கும்மி அல்லது கும்பி இக்கும்முதலுக்கும் கும்புதலுக்கும் இலக்கிய வடிவம் பெற வேண்டி எம் மொழியின் வீச்சை &lt;b&gt;குறி&lt;/b&gt;த்தும்  செறித்தும் பறித்தும் ப&lt;b&gt;யோனி&lt;/b&gt;த்தும் மொழியை தன்வயப்படுத்துவதான ஒரு தோற்றத்தை கட்டமைப்பதற்காக தேவைப்படின் மொழியை சிதைத்தும் கதைத்தும் பதைத்தும் எழுதுவதும் இலக்கிய வடிவமே என்ற பின்நவீன அறிவு கொண்டும் மொழியும் பகுத்தே அறியப்படுவது என்பதும் பகுத்தறிவதே முதல் பொருள் என்னும் தன்மையால் யாவையும் பகுத்தும் வகுத்தும் கூட்டியும் கழித்தும் அறிந்து பதிந்து வரும் இக்கருத்துக்களை பகுத்தறிவோடு அணுகாது மதமென்னும் சாயம் கொண்டு அணுகி எம்மை இங்கு இழித்தும் பழித்தும் தோழர் உரைப்பது தகுமா என்ற சக தோழரின் கேள்விக்கு பதிலளிப்பதற்காக பகுத்தறிவும் கொள்கையும் கோட்பாடும் இணையும் இடம் எது என்பதை இணையத் தோழர்கள் அறிய வேண்டும் என்பதற்காக பதிவின் தேவை மிக முக்கியம் என்பதாலேயே தொடர்ந்து அத்தனை எதிர்ப்புகளையும் புறந்தள்ளி எதிர்ப்பின்னூட்டங்களை குப்பைக் கூடைக்கு தள்ளி எம் கருத்துக்களை யாம் பதிவதை  எம்மிடம் பொருத்திப் பார்த்து எமது பின்னூட்டத்தை உமது அதிகார மையப் பார்வை கொண்டு புறந்தள்ளல் சரியா எனக்கேள்வி கேட்பது அதிகார மையத்திற்கு எதிரான குரலாகாது என்பதை உணர்ந்தே இருந்தாலும் எதிர்க்குரல் எழுப்பும் புல்லர்கள் தொலைந்து போன அதிகார மையங்களை மீண்டும் கட்டமைக்கும் குரூர எண்ணத்துடனேயே இக்கேள்வியை எழுப்புகிறார்கள் என்பதை நாம் அறியாமல் இல்லை என்பதும் இத்தகு கேள்விகளே அதிகாரத்தை யாம் பெற்ற பின்னும் போராளியாக தொடருவதற்கான நியாமான காரணங்களாக தொடருகின்றது என்ற நியாயத்தை நாம் தொடர்ந்து எமது பதிவுகளில் நிலை நிறுத்தியும் கட்டமைத்தும் தொடர்ந்து எழுதியும் தேவைப்படும் இடங்களில் பின்னூட்டம் இட்டும் தொடர்ந்து வந்திருக்கிறோம் என்பதை மீண்டும் மீள்பதிவு செய்து தொடர்ந்து தொடரும் எமது கருத்துக்கள் எம் மனதில் தொடர்ச்சியான அலைகளாக எமது போராட்டம் எமது இருப்பு எமது எழுத்தின் தேவை இதனால் நாட்டுக்கு ஏற்படும் சேவை இவற்றின் காரணமாகவே நாளொன்றுக்கு குறைந்தது மூன்று நான்கு பதிவுகளாவது இட்டு இந்த ஆதிக்க சக்திகளை எதிர்க்க வேண்டிய அவசியம் மிக முக்கிய காரணமாகிறது என்பதை மீண்டும் மீண்டும் சிந்திப்பதால் இந்த சமூகத்திற்காக சிந்திக்கும் எமது சிந்தனை இருபத்திநான்கு மணிநேரமும் தொடர்வதால் அந்த தொடர்ச்சியின் நீட்சியானது இந்தப் பதிவை போல் முற்றுப்பெறாதாக முற்றுப்புள்ளிகள் மறந்ததாக தொடர்ந்து போராட்டங்கள் பதிவுகள் பின்னூட்டங்கள் அவற்றால் அசைபடும் அதிகார மையங்கள் என எமது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தொடர்ந்து கொண்டிருப்பேன் என்பதை இவ்விடத்தில் எந்த பாசாங்கும் கும்மியும் இல்லாமல் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருப்பதானாது இந்த அமைப்புகளை கேள்வி கேட்பதற்கான எமது கடமையே என்பதும் அதிகார மையங்களை எதிர்க்கும் போராளியான நான் எனது தொடர்ச்சியான எண்ணங்களை எனது அடுத்த பதிவுகளில் தொடர்ந்து பகிர்ந்து கொள்வேன் என்பதை தெரிவித்துக்கொள்வதோடு............&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-5166109310478480157?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/5166109310478480157/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=5166109310478480157' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/5166109310478480157'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/5166109310478480157'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2008/03/blog-post_14.html' title='அதிகார மையங்களை கேள்வி கேட்கும் போராளி அரைபிளேடு குறித்து...'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-5659584985148105176</id><published>2008-03-11T01:32:00.000-07:00</published><updated>2008-03-11T01:36:14.466-07:00</updated><title type='text'>பால்விலை உயர்வு - சில எதிரொலிகள்.</title><content type='html'>&lt;strong&gt;செய்தி:&lt;/strong&gt; 13 ரூபாய் 75 காசாக இருந்த ஒரு லிட்டர் பாலின் விலை,  15 ரூபாய் 75 காசாக அதிகரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;----------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜெயலலிதா அறிக்கை: &lt;/strong&gt; ஏழைகளின் நலனை சிறிதும் கருதாத அரசு என்று இந்த மைனாரிட்டி அரசு மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது.  பாலுக்கு அழும் பிள்ளை கூட பாலின் விலையை கேட்டு வாய் மூடும் அவலம் நேர்ந்திருக்கிறது.  இந்த அரசு இனியும் தொடரவேண்டுமா.  கருணாநிதி பதவி விலகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கலைஞர் கடிதம்: &lt;/strong&gt;  உடன்பிறப்பே.  கழகத்தின் கட்டுக்கோப்பான ஆட்சியில் விலைகள் கட்டுக்குள்தான் இருக்கின்றன.  பாலின் விலை அதிகரித்தது என்று கூப்பாடு போடுபவர்கள் அண்டை மாநிலங்களில் பாலின் விலை என்ன என்று பார்க்க வேண்டும்.  டெல்லி எருமைகள் மிகுந்த டெல்லியில் கூட பால் லிட்டர் 20 ரூபாய்.  பாலின் விலை சிறிதளவே உயர்ந்துள்ளது.  இதனால் பால் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள 21 லட்சம் குடும்பங்கள் பயன்படுகின்றன என்பதை யாரும் எண்ணிப் பார்ப்பதாய் தெரியவில்லை.  பாலின் விலைகுறித்து முழக்கமிடுபவர்கள் ஆந்திரா, கர்நாடாகா, கேரளாவுக்கு சென்று பாலின் விலை என்னவென்று முதலில் விசாரிக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;--------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குமுதம் ஆனந்த விகடனில் அடுத்தவார ஜோக்குகள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணமான புதிதில் கணவன்:&lt;br /&gt;கமலா.  நான் நம்ம முதலிரவுக்கு ஒரு சொம்பு பால்தானே கேட்டேன். இதுக்குபோய் வரதட்சணை புகார் கொடுப்பேன்னு நீ சொல்றது கொஞ்ச கூட நல்லாயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;--------&lt;br /&gt;&lt;br /&gt;தலைவரே.  உளர்றத நிறுத்துங்க.  பால் விக்கறவங்களை பால் வியாபாரிங்கன்னு சொல்லலாம்.  ஆனா பாலியல் தொழிலாளிகள்னு சொல்லக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;---------&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர்:  நீயெல்லாம் பசுமாடு மேய்க்கத்தான் லாயக்கு.&lt;br /&gt;மாணவன்:  ரொம்ப தாங்ஸ் சார்.&lt;br /&gt;&lt;br /&gt;--------&lt;br /&gt;&lt;br /&gt;பந்தியில்:&lt;br /&gt;&lt;br /&gt;அது என்ன ஸ்பூன்ல கொஞ்சமா விடறாளே.  நெய்யா?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை. பால் பாயாசம்.&lt;br /&gt;&lt;br /&gt;-----&lt;br /&gt;&lt;br /&gt;பால் விலையை குறைக்கறதுக்காக மூலிகைப் பால் கண்டுபிடிச்சதுக்கா உன்னை உள்ளே தள்ளிட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா. நான் கண்டு பிடிச்சது கள்ளிப் பால்.&lt;br /&gt;&lt;br /&gt;----&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-5659584985148105176?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/5659584985148105176/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=5659584985148105176' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/5659584985148105176'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/5659584985148105176'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2008/03/blog-post_11.html' title='பால்விலை உயர்வு - சில எதிரொலிகள்.'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-6440122539919475985</id><published>2008-03-09T19:43:00.000-07:00</published><updated>2008-08-27T17:03:16.216-07:00</updated><title type='text'>ராதை என்றொரு பேதையும், உள்ளத்தில் கள்ளம் வைத்த கண்ணனும்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;புள்ளினங்களும் ஆவினமும் நிறைந்த பிருந்தாவனம். அதன் அமைவிடம் அழகிய யமுனை தீரம். இனிய மாலை நேரம். நீராட கிளம்பினாள் ராதா. அவள் விருஷபானுவின் மகள். இன்று அயனாவின் மனைவி.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த இனிய மாலைப் பொழுது அவளின் மனதில் எந்த மகிழ்வையும் தருவதாயில்லை. குயில்களையோ மற்ற புள்ளினங்களையோ அவள் கவனித்தாளில்லை. அவளது கால்கள் பழகிய அந்த வழி நடந்தன. அவள் மனம் அங்கிருப்பதாயில்லை. கண்கள் கண்ணீரை சிந்தி கொண்டிருந்தன. கண்ணீர் தாரை தாரையாக பெருக்கெடுத்தது. மனம் அவளுக்கு ஒரு வாரத்திற்கு முன் நிகழ்ந்த திருமணத்தை நினைத்தது. ஏன். ஏன் எனக்கு இது நிகழ்ந்தது. எனது மனம் கண்ணனிடம் சென்ற பின் மணமும் அவனுடனல்லவா நிகழ்ந்திருக்க வேண்டும். இன்று நான் அயனாவின் மனைவி. இன்னும் என் மனம் கண்ணனை ஏன் எண்ணுகிறது. கண்ணனை இன்னும் என் மனம் நினைப்பது சரியா. தவறா. இது முறையா. மனம் குழப்பமடைந்தது. ஆடைகளைந்து நீரில் இறங்கினாள். தண்ணீரின் குளுமை உடல் தொட்டது. உள்ளம் இன்னமும் தணலாய்த் தகித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இது என்ன முரளீதரனின் மூங்கிலின் இசை கேட்கிறதே. முகுந்தன் கண்ணன் இங்குதான் உள்ளான் போலும். ஏன் அந்தக் கண்ணன் நேரத்தில் வரவில்லை. ஏன் என்னை அவன் தடுத்தாட்கொள்ளவில்லை. எங்கே அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ராதை." புல்லாங்குழலினினும் இனிய குரல். கண்ணன் நதியின் கரையில் சிரித்த வண்ணம் இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"கண்ணா. நான் குளிக்குமிடத்திற்கு ஏன் வந்தாய்."&lt;br /&gt;&lt;br /&gt;"நான் வரக்கூடாதா ராதா. நம் காதல் மறந்தாயா. கோபியர் கூட்டத்தில் நிலவு நீ. ஆயிரம் கோபியர் இருப்பினும் என்உள்ளம் உன்னிடமே. உன் உள்ளத்தில் உறைந்தவளே. நான் உன் காதலன்."&lt;br /&gt;&lt;br /&gt;"காதலன். சிலகாலமாய் எங்கிருந்தாய் கண்ணா. எனது திருமணம் நடந்து முடிந்தது. என் வாழ்வும் முடிந்தது. ஏன் என்னை தடுத்தாட்கொள்ளவில்லை. இன்று நான் மாற்றான் மனைவி. இங்கு நில்லாதே. அது பாவம்."&lt;br /&gt;&lt;br /&gt;"எது பாவம். ராதை. காதல் பாவமா. உனது திருமணத்தை நான் அறியவில்லை. குருகுலத்தில் என் மாயைகளை மறைத்து சாதாரண மாணவனாய் நானிருந்த காலத்தில் உன் திருமணம் நடந்தது. அறிந்திருந்தால் வந்து தடுத்திருப்பேன். இப்போதும் உனக்காகவே இங்கு வந்தேன். நமது காதலுக்கு உன்திருமணம் ஒரு தடையல்ல."&lt;br /&gt;&lt;br /&gt;"ஏது பேசுகிறாய் கண்ணா. இன்று நான் மாற்றான் மனைவி. இனி உன்னை நினைப்பதும் பாவமன்றோ."&lt;br /&gt;&lt;br /&gt;"ராதை நான் சூரியனென்றால் நீ ஒளி. நான் புல்லாங்குழலெனில் நீ காற்று. நான் தண்ணீரென்றால் நீ அதன் குளுமை. நான் உன்னை நினைப்பதும் நீ என்னை நினைப்பதும் எப்படிப் பாவமாகும்."&lt;br /&gt;&lt;br /&gt;"கண்ணா...."&lt;br /&gt;&lt;br /&gt;"பேதை ராதையே. மாயை பிரித்ததடி நம்மை. மாயை விலக்க நானே வந்தேன். இனி நம்மிடையே எது தடை.."&lt;br /&gt;&lt;br /&gt;"கண்ணா.. ஆனால் என் கணவன்."&lt;br /&gt;&lt;br /&gt;"ராதை. நான் பரம் பொருள். நீ என் ஜீவன். ஜீவன்கள் பிறப்பதும் பின் பரத்தில் கலப்பதும் இயற்கை. நான் யார். நீ யார் என்பதை புரிந்து கொள். உனது திருமணம். உனது கணவன் யாவும் மாயை. நீ நிஜம். நான் நிஜம். ராதையின்றி கண்ணனில்லை. கண்ணனின்றி ராதையில்லை. நீயும் நானும் ஒரே பொருளின் இருவடிவங்கள். ஒன்றின்றி ஒன்றில்லை. எழுந்து வா. என்னில் கலந்திடு. "&lt;br /&gt;&lt;br /&gt;"கரையில் இருக்கும் ஆடைகளை எடுத்துப்போடு கண்ணா. அணிந்து கொண்டு வருகிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆடைகள் என் முன் உனக்கெதற்கு ராதை. மறையின் பொருளே உன் முன் நிற்க ஆடை கொண்டு எதை மறைப்பாய். எழுந்து வா." மாயவன் கள்ளப் புன்னகை பூத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ராதை கண்ணனை பார்த்தாள். கார்முகில் வண்ணன் தன் மாயச்சிரிப்பு மயக்கியது. அவன் மேனிகண்டவள் மோகம் தாக்குற்றாள். கண்ணன் புல்லாங்குழல் எடுத்தான். இசை. இன்னிசை. ராதை தன்னை மறந்தாள். தான் யார் என்பது மறந்தாள். உலகம் மறந்தாள். எதிரே கண்ணன். மாயவன். இசை. உள்ளம் உருகியது. இது காதலா. காமமா. பக்தியா. அவள் நீர் நிலை விடுத்தாள். கண்ணன் தன் மார்பு சாய்ந்தாள். உன்னித்தெழுந்த ராதை தடமுலைகள்.. தீண்டி அணைத்த கண்ணன் கைவிரல்கள்... மயக்கம். மாயை. மாலை. மாலையின் வேளை. ஆதவன் மறைய, ஒளி குறைய, மனதில் மோகம் நிறைய. இவன் இறை. நான் இவனின் நிறை. இனி ஏது குறை. யமுனையின் வெள்ளத்தினும் பெரிது என் உள்ளத்து காதல். காதல் நிறைந்தது. கண்ணனை கடவுளென உணர.. தகித்த அவள் உள்ளம் குளிர.. உடல்கள் புணர.. இரு பொருள்கள் ஒரு பொருளாக.. பரமாத்மாவை ஜீவாத்மா அடைய...&lt;br /&gt;&lt;br /&gt;விளையாட்டு தினமும் தொடர்ந்தது. தினமும் மாலையில் நீராட யமுனையை அடைந்தாள் ராதை. கண்ணனை கலந்தாள். பிறவிப்பயன் அடைந்தாள். அந்த இறைவனையே அடைந்த பின் அடையப்பெறும் பேறு ஏது இவ்வுலகில்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் மாலை. ஜோடி கண்கள் கண்ணீரோடு இந்த விளையாட்டை பார்த்தன. அவை அயனாவின் கண்கள்... பார்த்தவன் அங்கிருந்து அகன்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"கண்ணா. ஊர் அறியாமல் உலகம் அறியாமல் உன்னுடன் இவ்விளையாட்டை எத்தனை நாள் நடத்துவது. ஊரறிய என்னை உன் மனையாளாக ஏற்றுக்கொள்." ராதை தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ராதை. நான் நாளை மதுரா செல்கிறேன். அதன் உரிமை என்னுடையது. அதை வெல்வேன். அதன் மன்னாக திரும்பி வருவேன் உன்னை மணப்பேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"நிச்சயமாக.."&lt;br /&gt;&lt;br /&gt;"நிச்சயமாக ராதா. எனது கண்ணே."&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணன் தனது மாயா லீலைகளை தொடர்ந்தான். ராச லீலைகளால் அந்த மாலை நிறைந்தது. ராதை மீண்டும் மீண்டும் அந்தப் பரம்பொருளில் கலந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp1.blogger.com/_uHlvUWLz62w/R9SoUKEzC_I/AAAAAAAAAG8/qtf0Vq92gSI/s1600-h/275px-Radha_Madhavam.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5175946936010869746" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp1.blogger.com/_uHlvUWLz62w/R9SoUKEzC_I/AAAAAAAAAG8/qtf0Vq92gSI/s400/275px-Radha_Madhavam.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;வீடு திரும்பிய ராதையை அவள்கணவன் பேசாது புறக்கணித்தான். மாற்றானோடு கலந்து திரும்பிய மனைவியை அவன் திரும்பியும் பார்த்தானில்லை.&lt;br /&gt;பரம்பொருளோடு தன்னை தன் கணவன் பார்த்துவிட்டான் என்பதை ராதை உணர்ந்து கொண்டாள். அவள் அவனது புறக்கணிப்பை பொருட்படுத்தவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணன் வருவான். மதுராபுரி மன்னாக. நான் மனம் விரும்பும் மணாளனாக. என்னை ஏற்பான். அவள் மனம் முழுதும் கண்ணன் நிறைந்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ராதையின் சேதி ஊருக்கு தெரிய வந்தது. புறக்கணிப்புகள் தொடர்ந்தன. பெற்றோரும் மற்றோரும் கூட அவளை பொருட்படுத்துபவராயில்லை.&lt;br /&gt;கணவன் கைவிட தனியனானாள். யமுனையின் தீரத்தில் கண்ணனோடு களித்திருந்த இடங்கள் தோறும் அவள் சுற்றி வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணன் வருவான். எனக்காக வருவான். காலங்கள் பறந்தன. வருடங்கள் உருண்டன. கண்ணன் வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணன் பற்றிய செய்திகள் வந்தன. கண்ணன் மதுரா விடுத்து துவாரகை புகுந்தான். கண்ணனுக்கு மணமானது. ருக்குமணி, சத்யபாமா, ஜாம்பவதி, காளிந்தி, மித்ரபிந்தா, சத்யா, பத்ரா, லக்ஷ்மணா. எட்டு மனைவிகள் பட்ட மகிஷிகளாக. நரகனை கொன்று மீட்ட 16000 மங்கைகளின் மணாளனான் கண்ணன். கண்ணன் வருவான் என்று இன்னமும் ராதை காத்திருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் யெளவனம் தேய்ந்தது. நரை கூடியது. தோல் சுருங்கியது. ஆனால் மனம் இன்னமும் கண்ணன் வருவான் என்று நம்பியது. கண்ணன் வருவான். அவன் பரந்தாமன். அவன் வந்து தீண்ட தன் இளமை திரும்பும் என்று நம்பினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சமூகம் அவளை முற்றிலும் நிராகரித்து விட்டதால் அவள் காட்டிலேயே வாழ்ந்தாள். கானகம் முழுவதும் கண்ணன் மீது கொண்ட காதலால் அவள் சுற்றி வந்தாள். கண்ணா கண்ணா என்று கதறினாள். கண்ணன் மட்டும் வரவேயில்லை.&lt;br /&gt;ஒரு நாள் பரமாத்மாவையே நினைத்திருந்த அவள் ஜீவாத்மா உடல் உகுத்தது.&lt;br /&gt;கண்ணனுக்கு என்று மட்டுமே அவள் அர்ப்பணித்த அவள் தேகத்தை காகங்களும் கழுகுகளும் நரிகளும் பங்கிட்டுக்கொண்டன.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணன். அவன் கடைசிவரை வரவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;----------&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-6440122539919475985?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/6440122539919475985/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=6440122539919475985' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/6440122539919475985'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/6440122539919475985'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2008/03/blog-post_09.html' title='ராதை என்றொரு பேதையும், உள்ளத்தில் கள்ளம் வைத்த கண்ணனும்'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_uHlvUWLz62w/R9SoUKEzC_I/AAAAAAAAAG8/qtf0Vq92gSI/s72-c/275px-Radha_Madhavam.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-9077413938390488295</id><published>2008-03-06T11:50:00.000-08:00</published><updated>2008-03-06T14:01:56.967-08:00</updated><title type='text'>நெறி தவறிய சீதையும், நெருப்புக் குழியிறக்கிய இராமனும்.</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;மோகத்தீ மூட்டும் மூன்றாம் ஜாமம். வெண்ணிலவும் தென்றலும் மன்மதனின் தொழிலுக்கு துணை செல்ல தன் அந்தப்புரத்தில் மகிழ்ந்திருந்தான் மன்னன் இராமன்.  இராவணனை வில்லெடுத்து வென்றவன் மன்மதனை வெல்ல சீதையை நாடினான். இதுவும் ஒரு போர். யுத்தக்களத்தில் அல்ல. மஞ்சத்தில். மோகம் மன்னனையும் மங்கை சீதையையும் ஆரத்தழுவியது. மோகம் தலைக்கேற உடல்கள் இயங்க, முனகல் ஒலிகள் கிளம்பின.&lt;br /&gt;&lt;br /&gt;சீதை முனகினாள். "ஆ... இராவணா...".&lt;br /&gt;&lt;br /&gt;இராமனின் இயக்கங்கள் நின்றன. காது பிழை செய்யவில்லையே. இராமனின் பத்தினி "இராவணா" என்று முனகுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சீதை தன் நாக்கை கடித்துக் கொண்டாள். வார்த்தை வாய் தவறி வந்து விழுந்திருந்தது. இராமனின் கண்கள் சினம் கக்கின.&lt;br /&gt;&lt;br /&gt;"உடலால் என்னைத் தழுவினாய். உள்ளத்தை யாரிடம் கொடுத்தாய்."&lt;br /&gt;&lt;br /&gt;சீதை இனியும் மறைக்க முடியாதவள் ஆனாள். "எனது உள்ளத்தால் இராவணனைத்தான் நினைத்தேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"இது என் செய்தாய். இப்பிறப்பில் என் மனதாலும் இன்னொரு மங்கையை நாடாத மாபெரும் விரதம் ஏற்ற என் மனைவி மாற்றானை மனதில் கொண்டாளா. உடலால் என்னைத் தழுவியவள் உள்ளத்தால் மாற்றானை தழுவினாளா. நீயும் பத்தினியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"நான் பத்தினிதான். தீ இறங்கி நிரூபித்திருக்கிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"பேசாதே. மாற்றானிடம் சிறைப்பட்ட மனைவியை ஏற்பதற்காக நான் நடத்திய நாடகம் அது. என் மீது பழி ஏற்படாதிருக்க. எனது கெளரவத்திற்காக. அந்த நாடகத்தில் நீயும் நன்றாகவே நடித்தாய்."&lt;br /&gt;&lt;br /&gt;"சாத்திரங்களின் படியும் விதிகளின் படியும் நடக்கும் உத்தமரே. அந்த நாடகத்தில்தான் தங்கள் உண்மையுருவை தரிசித்தேன். உங்களை விடவும் சகலவிதங்களிலும் உயர்ந்தவன் ஒருவனை கண்டேன். மனம் சஞ்சலம் கொண்டாலும் தர்மத்தின் பக்கம் நின்று அவனை விலக்கினேன். உடலளவில் நான் உத்தமிதான். உள்ளம்தான் சஞ்சலம் கொண்டது."&lt;br /&gt;&lt;br /&gt;"சீ. உள்ளத்தாலும் அவனை நீ நினைக்கலாமா.".&lt;br /&gt;&lt;br /&gt;"மென்மையை மட்டும் தங்களிடம் கண்ட என் பெண்மை, பேராண்மையை அவனிடம் கண்டதால் மனம் சஞ்சலம் கொண்டது. மன்னியுங்கள்.."&lt;br /&gt;&lt;br /&gt;"இதை எப்படி மன்னிக்க முடியும். உடலால் நீ மாசுபடவில்லை என்று சாதித்தாலும் மனத்தால் மாசுபட்டவளே. நீ என் முகத்தே விழிக்காதே."&lt;br /&gt;&lt;br /&gt;"நான் செய்தது தவறுதான். மன்னியுங்கள். மாற்றானை மனதில் கொண்டது தவறு. இனி மனதாலும் அவனை நினைக்க மாட்டேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"உன்னை எவ்வாறு நம்புவதே. என்னை விட்டு விலகிப் போ."&lt;br /&gt;&lt;br /&gt;"போ என்று சொன்னால் எங்கு போவேன். இது பெருங்குற்றம். இந்த குற்றம் புரிந்தேன் என குற்றம் சாட்டினால் இந்த குற்றத்தை கொண்டவளாக என் தந்தை வீட்டிற்கும் செல்ல முடியாதே."&lt;br /&gt;&lt;br /&gt;"எங்கேனும் போ. எனது கோபம் எல்லை கடக்குமுன் போய்விடு."&lt;br /&gt;&lt;br /&gt;"சுவாமி.."&lt;br /&gt;&lt;br /&gt;"போ. மறுமுறை என்முகத்தில் விழித்தால் அந்தக் கணமே உன்னைக் கொல்வேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"மன்னியுங்கள்."&lt;br /&gt;&lt;br /&gt;"இப்போது உன்னைக் கொல்லாமல் விடுவதே அதிகம்."&lt;br /&gt;&lt;br /&gt;இராமன் உறுதியுடையவனாய் நின்று இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அழுது கண்ணீர் வற்றிப்போன சீதை மரக்கட்டையாய் வெளியேறி கானகம் புகுந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;--------------&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டுகள் பல கடந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;தனது புகழை பாடிய சிறுவர்களை இராமன் பார்த்தான். அவனுள் அன்பு சுரந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"குழந்தைகாள். நன்று பாடினீர். யார் உமது பெற்றோர்."&lt;br /&gt;&lt;br /&gt;"மன்னா. அவர்கள் தங்கள் புதல்வர்கள். எனது வயிறு உதித்தோர்." சீதை தோன்றினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீயா.. எனது முன்வர என்ன துணிச்சல்."&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னும் உங்கள் மனம் மாறவில்லையா."&lt;br /&gt;&lt;br /&gt;இராமன் கல்லாயிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இவர்கள் தங்கள் புதல்வர்கள். தங்களிடம் ஒப்புவிக்கவே வந்தேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"எனது புதல்வர்கள் ?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆம்."&lt;br /&gt;&lt;br /&gt;"இவர்கள் எனது புதல்வர்கள்தான் என்பதற்கு என்ன சாட்சி.".&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயோ." சீதை தனது காதுகளை பொத்திக் கொண்டாள்.&lt;br /&gt;"இந்த வார்த்தைகளை கேட்டும் நான் உயிர் வாழ வேண்டுமா. ஏ பூமா தேவி. நீ பிளந்து என்னை உள்ளிழுத்துக் கொள்ளக் கூடாதா."&lt;br /&gt;&lt;br /&gt;இராமன் ஒரு குரூரப் புன்னகையை வெளிப்படுத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"சீதை. உனது வேண்டுதல் நிறைவேறும்."&lt;br /&gt;&lt;br /&gt;பூமியில் குழியொன்று தோண்டப்பட்டது. சீதை அதில் உயிரோடு இறக்கப்பட்டாள். இராமன் ஒரு கைப்பிடி மண்ணை அள்ளிப் போட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"பூமித்தாயே. உனது புதல்வியை ஏற்றுக்கொள்."&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து மண் கொட்டப்பட்டது. சீதை புதையுண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பூமாதேவியால் உள்ளிழுத்துக் கொள்ளப்பட்ட தன் மனைவிக்காக இராமன் தன் மகன்களோடு அழத் துவங்கினான்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-9077413938390488295?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/9077413938390488295/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=9077413938390488295' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/9077413938390488295'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/9077413938390488295'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2008/03/blog-post_06.html' title='நெறி தவறிய சீதையும், நெருப்புக் குழியிறக்கிய இராமனும்.'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-28643983139846714</id><published>2008-03-01T22:18:00.000-08:00</published><updated>2008-03-01T22:24:34.117-08:00</updated><title type='text'>வடாபாவ் தேசமும் கோதுமைநிற அழகியும் காதலும்</title><content type='html'>"அவளைப் பார்க்கும் போது என்னோட உடம்புல எல்லா ஹார்மோனும் அலர்ட்டாயிடுது. அளவுக்கு அதிகமா எல்லாம் வேலை செய்யுது. இது காதல்தான். நீ என்ன சொல்ற நண்பா."&lt;br /&gt;கேட்டவன் என் அலுவலக மற்றும் அறை நண்பன் சுரேஷ் ஆர். என்கிற சுரேஷ் ராஜரத்தினம்.&lt;br /&gt;&lt;br /&gt;"இருக்கலாம். நண்பா." நான்.&lt;br /&gt;&lt;br /&gt;"காதலுக்கான ஹார்மோன் என்னடா. அட்ரீனலின் இல்லாட்டி பிட்யூட்டரி."&lt;br /&gt;&lt;br /&gt;"இரண்டும் இல்லை. ஆணா இருந்தா ஆண்ட்ரோஜன். பெண்ணா இருந்தா ஈஸ்ட்ரோஜன்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆங். ஆண்ட்ரோஜன். காதல் எனக்குள்ள சுரக்க ஆரம்பிச்சிருச்சி நண்பா."&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு வேற ஒண்ணுதான் அளவுக்கு அதிகமா சுரக்கறதா தெரியுது."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னது."&lt;br /&gt;&lt;br /&gt;"ஹார்மோன் இல்லை. சலைவா. தமிழ்ல சொல்லணும்னா ஜொள்ளு."&lt;br /&gt;&lt;br /&gt;"ஹி.. ஹி." வழிந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனை இப்படி வழிய வைத்தவள் ஸ்ருதி ராஜ்தான். கோதுமை பிரதேச செழிப்பில் மிளிர்ந்த கோதுமை நிறத்தவள். அலுவலகத்தில் கவன ஈர்ப்பு பெற்ற கட்டழகி. இந்த ஈர்க்குச்சிக்கு அவள் மேல் காதலா. இருக்கட்டும்.&lt;br /&gt;இந்த மும்பை நகரில் தமிழ்பேச தெரிந்தவன் அறைநண்பனாக வேண்டும் என்பதற்காகவே இவனையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"நண்பா. நீ தான் என் காதலுக்கு உதவி பண்ணனும்."&lt;br /&gt;&lt;br /&gt;"நான் என்னடா பண்ணனும். தூது போகனுமா. கணையாழியை கழட்டிக் கொடு. எத்தனை தடைகள் இருந்தாலும் அத்தனையும் தாண்டி சென்று அவளிடம் உன் காதலை சொல்கிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் வேண்டாம். காதலை சொல்லுறத எல்லாம் நான் பாத்துக்கறேன். அவகிட்ட பேச நீ எனக்கு இந்தி கத்துக்கொடு போதும்."&lt;br /&gt;&lt;br /&gt;"உனக்கு இந்தி சொல்லித் தரணுமா. கொஞ்சம் கஷ்டம் முயற்சி பண்றேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"தாங்ஸ். அப்புறம் இரண்டாவது உதவி. நீ அவகிட்ட இந்தியில கடலை போடறதை நிறுத்தணும்."&lt;br /&gt;&lt;br /&gt;"இது ரொம்ப ரொம்ப கஷ்டம். நம்ம ஆஃபீஸ்ல இருக்கறதிலேயே உருப்படியான ஃபிகர் அது ஒண்ணுதான். இருந்தாலும் ஃபிரெண்டு நீ கேட்டுட்ட. உனக்காக முயற்சி பண்ணுறேன். ஒரு நண்பனுக்காக இந்த தியாகத்தை கூட நான் பண்ண மாட்டேனா என்ன."&lt;br /&gt;&lt;br /&gt;"டேய்..."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி. சரி. ஒழிஞ்சித் தொலை. உனக்காக விட்டுக் கொடுத்துட்டேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"அது போதும் நண்பா. எனக்கு இந்தி சொல்லிக் கொடு. இந்தியில பேசியே காதலை வளர்க்கிறேன். ஆமா காதலுக்கு இந்தியில என்ன"&lt;br /&gt;&lt;br /&gt;"ப்யார். இஷ்க். முஹப்பத். மூணுமே காதல்தான்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஒண்ணு ஒண்ணா சொல்லுடா. எழுதிக்கிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லித் தொலைக்கறேன். என்ன பண்றது. மஜ்பூரி."&lt;br /&gt;&lt;br /&gt;"இப்ப என்னமோ சொன்னியே அது என்ன"&lt;br /&gt;&lt;br /&gt;'எது."&lt;br /&gt;&lt;br /&gt;"ஏதோ பேல்பூரி மாதிரி சொன்னியே."&lt;br /&gt;&lt;br /&gt;மஜ்பூரி என்ற வார்த்தை எனக்கு பழக்கத்தில் வந்திருந்தது. இதற்கான தமிழ்வார்த்தை என்ன என்று மண்டையை உடைத்துக் கொண்டு "(காலத்தின்) கட்டாயம். கம்பல்ஷன்." என்று ஒரு வழியாக மொழிபெயர்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்கு காதல் ஆரம்பித்தது. எனக்கு தலைவலி.&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லாம் சரிடா. அவளுக்கு உன் மேல காதல் வரும்னு நினைக்கிறாயா."&lt;br /&gt;&lt;br /&gt;"உனக்கு காதலோட முதல் விதி தெரியுமா."&lt;br /&gt;&lt;br /&gt;"அது என்னடா."&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;span style="color:#663366;"&gt;&lt;strong&gt;எந்த ஒரு பெண்ணும் காதல் விசை அவள் மீது செலுத்தப்படாத வரை காதலற்ற நிலையிலும், காதல் செலுத்தப்பெற்றால் காதல் இயக்கத்திலும் தொடர்ந்து இருக்கிறாள்.&lt;/strong&gt;&lt;/span&gt;  இதுதான் காதல் நிலைமம்."&lt;br /&gt;&lt;br /&gt;"தெய்வமே. ஒரு முடிவோடதான் இருக்கே. நடத்து."&lt;br /&gt;&lt;br /&gt;அவன் நடத்தத் துவங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ருதியிடம் நெருங்கி பழகத் துவங்கினான். அவளுக்காக சின்னச் சின்ன உதவிகள் செய்யத் துவங்கினான். இருவரையும் ஒன்றாக நிறைய பார்க்க முடிந்தது. திங்கட்கிழமைகளில் வடாபாவ் சாப்பிட அழைத்துச் சென்றான். செவ்வாயில் பாவ் பாஜி. புதனில் தஹி சேவ் பூரி. வியாழனில் போஹா. வெள்ளிக் கிழமை ரகடா பட்டீஸ். அவனது காதல் நாளொரு பொழுதும் தினமொரு சாட் ஐட்டமுமாக வளர்ந்தது.&lt;br /&gt;ஸ்ருதிதாசன் என்ற பெயரில் இணையத்தில் கவிதைகள் எழுதினான். முப்பது நாட்களில் இந்தியுடன் முட்டி மோதினான். இதற்கென்ன அர்த்தம் அதற்கென்ன அர்த்தம் என்று என்னை பின்னி பெடலெடுத்தான். பிராண்டி எடுப்பதால்தான் ஃபிரெண்டு என்று சொல்கிறார்கள் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;மாதங்கள் மூன்று ஓடி மறைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;"நண்பா. இந்த இந்தி கவிதை எப்படி." என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகா. இத்துணை நாளா தமிழில் மட்டும் கவிதை எழுதியவன் இப்போது இந்தியிலுமா.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதையை படித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஜப் தூ ஹன்ஸ்தி ஹை ஹஜாரோன் ஃபூல் கில்தி ஹை.&lt;br /&gt;ஜப் தூ போல்தி ஹை பான்சுரி பஜ்தி ஹை."&lt;br /&gt;&lt;br /&gt;"தமிழ்ல சொல்லவா." சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"நீ சிரித்தால் ஆயிரம் பூக்கள் மலர்கின்றன.&lt;br /&gt;நீ பேசினால் புல்லாங்குழல் ஒலிக்கிறது." &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அபாரம்டா. பன்மொழி புலவனாயிட்ட. கவிதையில கலக்கற போ."&lt;br /&gt;&lt;br /&gt;சிரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் சரிடா. உன் காதலெல்லாம் எப்படிப் போயிட்டிருக்கு. கனெக்ட் பண்ணி காதல் கரெண்டு கொடுத்து பல்பு பிரகாசமா எரியுது போல."&lt;br /&gt;&lt;br /&gt;சிரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"காதலை சொல்லிட்டியா."&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லைடா. காதலோட இரண்டாவது விதியை கிட்டத்தட்ட இப்பத்தான் அப்ளை பண்ணி முடிச்சிருக்கேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"அது என்னடா இரண்டாவது விதி."&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;span style="color:#663366;"&gt;&lt;strong&gt;காதல் விசையானது காதலின் எடை மற்றும் காதல் முடுக்கம் இரண்டிற்கும் நேர்விகிதத்தில் இருக்கும்.&lt;/strong&gt;&lt;/span&gt;  இதுதான் இரண்டாவது விதி. அவளுக்குள்ள காதல் விசை வர்ரதுக்காக என்னோட காதலில கொஞ்சம் கொஞ்சமா முடுக்கத்தை கூட்டி காதலின் எடையையும் அதிகரிச்சுக்கிட்டே வந்திருக்கேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"விளங்கின மாதிரிதான். இப்ப என்ன செய்யப் போற."&lt;br /&gt;&lt;br /&gt;"நாளைக்கு அவளோட பிறந்த நாள். காதலின் மூன்றாவது விதியை செயல்படுத்தப் போகிறேன். காதலை சொல்லப் போகிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;பரிசாக வாங்கி வைத்திருந்த மோதிரத்தை காட்டினான். அழகாக காதலின் சின்னம் பொறித்து இருந்தது அதில்.&lt;br /&gt;&lt;br /&gt;"அது என்னடா மூன்றாவது விதி."&lt;br /&gt;&lt;br /&gt;"காதலைச் சொல்லுதல்.  &lt;span style="color:#663366;"&gt;&lt;strong&gt;எந்த ஒரு காதல் விசைக்கும் சமமான அதே போன்ற எதிர் காதல் விசை உண்டு.&lt;/strong&gt;&lt;/span&gt;"&lt;br /&gt;&lt;br /&gt;"சரிதான்."&lt;br /&gt;&lt;br /&gt;"நான் எவ்வளவு விசையோட நாளைக்கு காதலை சொல்லப் போறனோ. அதே விசையோட அவளும் பதிலுக்கு காதலை சொல்லுவா."&lt;br /&gt;&lt;br /&gt;"வாழ்த்துக்கள்.  நண்பா.  உன் காதல் கொடி அவள் உள்ளத்தில் பறக்கட்டும். ஆல் தி பெஸ்ட்."&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் அவன் மகிழ்ச்சியாக தன் காதலைச் சொல்ல கிளம்பி சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;----------------&lt;br /&gt;&lt;br /&gt;மாலை வீடு திரும்பியவன் கண்கள் கலங்கியிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா. என்ன ஆச்சு."&lt;br /&gt;&lt;br /&gt;"முடிஞ்சு போச்சு.  எல்லாம் முடிஞ்சு போச்சு."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா சொல்றே."&lt;br /&gt;&lt;br /&gt;"அவள் கிட்ட காதலை சொன்னேன். வாட் ஈஸ் திஸ் ஃபூலிஷ்னஸ். யூ ஆர் மை பெஸ்ட் ஃபிரெண்டுன்னு சொன்னா."&lt;br /&gt;&lt;br /&gt;"அச்சச்சோ. கவலைப்படாத. எப்படியும் உன் காதலை அவ புரிஞ்சிப்பா. ஏத்துப்பா."&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லைடா. முக்கேஷ்னு ஒருத்தனை அறிமுகப்படுத்துனா.  அவனைத்தான் இன்னும் மூணு மாசத்துல கல்யாணம் பண்ணிக்கப் போறாளாம்.  வேலைய கூட ரிசைன் பண்ணப் போறாளாம்."&lt;br /&gt;&lt;br /&gt;கேட்ட எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.  "நண்பா...." பேச வாயெடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை நண்பா.  என்னை கொஞ்சம் தனியா விடு. எனக்கு கொஞ்சம் அழணும்."&lt;br /&gt;&lt;br /&gt;புரிந்து கொண்டு அமைதியானேன்.  கவலையின் கனத்த மெளனம் இருவருக்கும் இடையில்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் தன் காதலை கண்ணீரால் கழுவித் தள்ளும் முயற்சியில் இறங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளத்தில் தோன்றி உயிரில் உறைந்த காதலை அத்துணை எளிதில் உதறித் தள்ள முடியுமா.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணீரில் கரைந்து காணாமல் போவதோ காதல்.  காலம் அவனுக்கு பதில் சொல்லக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;-----------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-28643983139846714?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/28643983139846714/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=28643983139846714' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/28643983139846714'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/28643983139846714'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2008/03/blog-post.html' title='வடாபாவ் தேசமும் கோதுமைநிற அழகியும் காதலும்'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-875897280240569621</id><published>2008-02-26T11:48:00.000-08:00</published><updated>2008-02-26T12:00:09.491-08:00</updated><title type='text'>செல்போனில் பெண்ணை படம் பிடித்து</title><content type='html'>"ஏய். மிஸ்டர்.  என்னை எதுக்கு போட்டோ எடுத்தீங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"நான் உங்களை போட்டோ எடுக்கலையே."&lt;br /&gt;&lt;br /&gt;"பொய்.  ஒரு அழகான பொண்ணு தனியா போகக் கூடாதே. பின்னாடியே வந்து மொபைல்ல போட்டோ எடுக்கறது. பொறுக்கி."&lt;br /&gt;&lt;br /&gt;"மிஸ். வார்த்தைய அளந்து பேசுங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"உனக்கென்ன மரியாதை.  கொண்டா அந்த மொபைலை."&lt;br /&gt;&lt;br /&gt;அவனிடம் இருந்து அந்த மொபைலை அவள் பறித்தாள்.  புகைப்பட ஃபோல்டரை திறந்து முதல் படத்தை பார்த்தாள்.  அவளது படமேதான்.&lt;br /&gt;&lt;br /&gt;"மிஸ்டர் இப்ப இதுக்கு என்ன சொல்றீங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"நான் உங்களை எடுக்கணும்னு எடுக்கலை.  நான் எடுத்த போட்டோவில நீங்க வந்தது தற்செயல்."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன கதை விடறீங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"மிஸ்.  மத்த போட்டோக்களையும் பாருங்க.  நான் இங்க இருக்கற ஒவ்வொரு புக் ஸ்டாலையும் படம் பிடிச்சிட்டு இருக்கேன்.  அந்த புக் ஸ்டாலை படம் பிடிச்சப்ப நீங்க அதுல வந்தது யதார்த்தமா வந்ததுதான்."&lt;br /&gt;&lt;br /&gt;அவள் மத்த போட்டோக்களை பார்த்தாள்.  ஒவ்வொரு புத்தக நிலையத்தின் படமும் பதிவாகி இருந்தது.  முல்லை பதிப்பகம், மருதம் பதிப்பகம் என..&lt;br /&gt;&lt;br /&gt;"மிஸ்.  இந்த புக் ஃபேர்ல இருக்கிற ஸ்டால்களைத்தான் படம் பிடிச்சிட்டுருக்கேன். உங்களை இல்லை."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா..  ஆனா இத்தனை புக் ஸ்டாலையும் படம்பிடிச்சு.. எதுக்கு."&lt;br /&gt;&lt;br /&gt;"ஐ அம் ரைட்டிங் பிளாக்.  தமிழ்ல.  இந்த புத்தகக் கண்காட்சியை பத்தி ஒரு ரைட் அப்புக்காக இந்த படங்களை எடுத்தேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ. ஐ அம் சாரி."&lt;br /&gt;&lt;br /&gt;"பரவாயில்லை.  வேணுமின்னா நீங்க இருக்கற படத்தை டெலீட் பண்ணிட்டு மொபைலை கொடுங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"இட். ஈஸ் ஓக்கே.  இந்தாங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"தாங்ஸ்.  மிஸ்."&lt;br /&gt;&lt;br /&gt;"சத்தம் போட்டு உங்க கையில இருந்து மொபைலை எல்லாம் பிடுங்கி...  ஐ அம் ரியல்லி சாரி."&lt;br /&gt;&lt;br /&gt;"நோ பிராப்ளம்."&lt;br /&gt;&lt;br /&gt;"இஃப் யூ டோண்ட் மைண்ட்.  நாம ஒரு காபி சாப்பிடலாமா."&lt;br /&gt;&lt;br /&gt;முன்பின் தெரியாத தன்னை காபி சாப்பிட அழைக்கும் அவளது தைரியம் அவனுக்கு ஆச்சரியமளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓக்கே."  இருவரும் அங்கிருந்த கேண்டீனுக்கு சென்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"மிஸ் உங்க பெயர் என்னன்னு நான் தெரிஞ்சிக்கலாமா."&lt;br /&gt;&lt;br /&gt;"அர்ச்சனா."  சிரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என் பெயர்.."  அவன் ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"கிள்ளி வளவன்."  அவள் முடித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என் பெயர் உங்களுக்கு எப்படித் தெரியும்."&lt;br /&gt;&lt;br /&gt;"வளவன் நான் உங்க பதிவுகள் எல்லாம் படிக்கறதுண்டு. உங்க பதிவுல உங்க புகைப்படம் எல்லாம் பார்த்திருக்கேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.."&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க புக் ஸ்டாலைத்தான் படம் எடுக்கறீங்கன்னு எனக்கு தெரியும்.  சும்மா கலாய்ச்சேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;"நான் உங்க ரசிகை.  ஒரு வருடத்துக்கு மேல உங்க பதிவெல்லாம் படிக்கறேன்.  உங்க பதிவுல முதல் பின்னூட்டம் எப்பவுமே நான் தான் போடுவேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க... மாணிக்க மலர்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா.  மாணிக்க மலர் அப்படின்ற பெயர்ல உங்களுக்கு பின்னூட்டம் போடுவது நான்தான்.  நாம மின்னஞ்சல் மூலமா ரொம்பவே பேசியிருக்கிறோம். உங்களைப் பத்தி எல்லாம் எனக்கு தெரியும்.  என்னைப் பத்தி எல்லாமே உங்களுக்கும் தெரியும் என்னோட பெயரைத்தவிர.."&lt;br /&gt;&lt;br /&gt;"வாவ்.  உங்களை இப்படி சந்திச்சது ஆச்சரியம்."&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கும்.  உங்களை இப்படி புத்தகக் கண்காட்சியில் பார்ப்போம்னு நினைக்கலை.   சும்மா கலாய்ச்சேன்.  சாரி."&lt;br /&gt;&lt;br /&gt;அவன் சிரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்கு இடையே நீண்ட ஒரு மெளனம் நிலவியது.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் அதை உடைத்தாள்.  "உங்க ரசனைகள் என்னுடைய ரசனைகள் எல்லாமே ஒத்துப் போகுது.  எழுத்தையும் தாண்டி ஏதோ ஒண்ணு இருக்கிறதா உணர்கிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"நானும்."  என்றான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் கண்கள் பேசிக்கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;"காதலை பின்னூட்டத்தில சொல்ல முடியாது.  நேர்லதான் சொல்லணும்."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்ப சொல்லிடலாமே."&lt;br /&gt;&lt;br /&gt;காதல் அவர்கள் இருவருக்கும் இடையே கயமை செய்து விளையாட துவங்கியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-875897280240569621?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/875897280240569621/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=875897280240569621' title='28 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/875897280240569621'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/875897280240569621'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2008/02/blog-post_26.html' title='செல்போனில் பெண்ணை படம் பிடித்து'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>28</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-1550880871950612516</id><published>2008-02-25T19:22:00.000-08:00</published><updated>2008-02-25T19:32:14.938-08:00</updated><title type='text'>கோணிக்குள் என்ன இருக்கிறது.</title><content type='html'>"தோ. பார்றா. ஒரு கோணி.".&lt;br /&gt;&lt;br /&gt;"அண்ணாத்தை இந்த கோணிக்குள்ள இன்னா கீது."&lt;br /&gt;&lt;br /&gt;"நல்ல கிரெளடு இருக்கிற செண்ட்ரல் ஸ்டேஷன்ல வாசல்ல இந்த கோணியை விட்டுட்டு யாரு போயிருப்பாங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"ஏதாவது கிராமத்து டிக்கட் கோணியை வச்சுட்டு எங்கயாவது டீ சாப்பிட போயிருக்கும்.  வா அண்ணாத்தை நாம போவலாம்."&lt;br /&gt;&lt;br /&gt;அந்த இரண்டு போர்ட்டர்களும் அங்கிருந்து அகன்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;செண்ட்ரல் ரயில்வே நிலையத்தின் மாலை நேரம்.  அந்த கோணி கவனிப்பாரற்றுக் கிடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;-----------&lt;br /&gt;&lt;br /&gt;அரை மணி நேரம் கழித்து...&lt;br /&gt;&lt;br /&gt;"அண்ணே இந்த கோணி இங்கயே இருக்கு பாருண்ணே."&lt;br /&gt;&lt;br /&gt;"இத இங்க வச்ச புண்ணியவான் யாருன்னு தெரியலையே."&lt;br /&gt;&lt;br /&gt;"திறந்து பார்ப்பமா அண்ணே."&lt;br /&gt;&lt;br /&gt;"அட.  இவனே ஏதாச்சும் ஏடா கூடமா இருக்கப் போதுடா."&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சணல் கோணி ஏதாலோ நிறைந்து கட்டப்பட்டு துருத்தி கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"போலீஸ்ல சொல்லுவமா.".&lt;br /&gt;&lt;br /&gt;----------&lt;br /&gt;&lt;br /&gt;"சார் இந்த கோணிதான்.  சார்.  பாம் ஏதாச்சும் இருக்குமா சார்"&lt;br /&gt;&lt;br /&gt;"யாரும் கிட்ட போகாதீங்க.  அலர்ட்."&lt;br /&gt;&lt;br /&gt;"யோவ் கான்ஸ்டபிள்.  கிரவுட் இந்த பக்கம் வராம பாத்துக்கய்யா."&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் மக்களுக்கு கோணியில் பாம் இருக்கும் செய்தி பரவியது.  எல்லோரும் அதை ஒரு அச்சத்தோடு பார்த்தார்கள்.  கிரவுட் வரக்கூடாது என்று சொன்ன பிறகுதான் கோணியை பார்ப்பதற்கு அதிக கிரவுட் சேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"சார்.  ஒரு வேளை அந்த கோணியில பாம் இல்லைன்னா."&lt;br /&gt;&lt;br /&gt;"யோவ். இப்படி அனாமத்தா ஒரு கோணி. அதுவும் சரக்கு குடோன் பக்கத்துல கூட இல்லாம, இப்படி ஜனங்க நடமாடுற இடத்துல இப்படி தனியா இருக்குன்னா... ஏதாச்சும் இருக்கும்யா."&lt;br /&gt;&lt;br /&gt;"யாராச்சும் தெரியாம போட்டிருந்தா.  எவ்வளவு கிராமத்து ஆளுங்க கோணியோட வாராங்க போறாங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்யா இது பப்ளிக் ப்ளேஸ்.  இந்த இடத்துல இப்படி ஒரு கோணியை கொண்டாந்து போட்டுட்டு போயிருக்குன்னா கட்டாயம் அதுக்குள்ள விவகாரமா பாம் ஏதாவது இருக்கலாம்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆர்.பி.எஃப்.  பாம் ஸ்குவாடுக்கு சொல்லியாச்சு. சார்."&lt;br /&gt;&lt;br /&gt;-------&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் பய பீதியோடு அந்த கோணியை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கோணி.  ஒரு அழுக்கு சணல் கோணி.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரிடமும் அதைப் பற்றியே பேச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டொரு நிருபர்கள் எட்டி பார்த்தார்கள்.  செய்திகளை முந்தித் தரும் சேனல் ஒன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி கசியத் துவங்கியது.  பதட்டம் நிலவியது.  சிலர் பயத்தில் ரயில் நிலையத்தை விட்டு ஓடத் துவங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;மோப்ப நாய்கள் வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;மெட்டல் டிடக்டர்களோடு இருவர்.  மெட்டல் டிடக்டர் வைத்துப் பார்த்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றியிருந்தவர்கள் நாடித் துடிப்பு எகிறியது.  மெட்டல் டிடக்டரில் எதுவும் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த போலீஸ்காரர் வேர்த்து வழியும் தன் நெற்றியை துடைத்துக் கொண்டு  கோணியைத் திறந்தார் படு ஜாக்கிரதையாக.&lt;br /&gt;&lt;br /&gt;"சார்.  எருமட்டை சார்,"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னது."&lt;br /&gt;&lt;br /&gt;"பசுஞ்சாண எருமட்டை சார்."   அந்த கோணி முழுதும் எருமட்டைகள் வட்டவட்டமாக...&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் பெருமூச்சு விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு ஒண்ணுமில்லாத கோணியை இந்த அளவுக்கு பில்ட் அப் கொடுத்து விட்டீங்களேய்யா."&lt;br /&gt;&lt;br /&gt;"கோணி.  கோணிக்குள்ள காய்ஞ்சுகோன எருமட்டை சாணி.  இந்த விஷயத்தை ஏணி வெச்சு ஏத்திவிட்டுட்டீங்களேய்யா."&lt;br /&gt;&lt;br /&gt;"நான் அப்பவே சொன்னேன் இது ஒரு சாதாரண கோணிதான்னு."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாய்யா இப்ப சொல்லுங்க.  பப்ளிக் ப்ளேஸ்ல இதோ கோணி... அதோ கோணின்னு கிளப்பிவிட்டுட்டு....  எவனோ போணியாகாத கோணியை இங்க வந்து போட்டுட்டு போயிருக்கான்..  கண்டுக்காம போவீங்களா."&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு சகஜநிலை திரும்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;"செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்ல அதுவும் நிறைய பப்ளிக் நடமாடுற எடத்துல இந்த மாதிரி கோணியெல்லாம்.  இனிமே கோணியை ரயில்வே ஸ்டேஷன் மாதிரி பப்ளிக் பிளேஸ்ல கொண்டு வரவே தடை விதிக்கணும்."   ஒருவர் கருத்து தெரிவித்தார்.  இன்னொருவர் ஆமாம் போட்டுக் கொண்டிருந்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-1550880871950612516?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/1550880871950612516/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=1550880871950612516' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/1550880871950612516'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/1550880871950612516'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2008/02/blog-post_25.html' title='கோணிக்குள் என்ன இருக்கிறது.'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-91625803866274871</id><published>2008-02-22T11:22:00.000-08:00</published><updated>2008-02-22T11:53:45.623-08:00</updated><title type='text'>மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது</title><content type='html'>மனு தர்மம். மனு நீதி அப்படின்னு நிறைய பேர் சொல்லி கேட்டு இருக்கோம்.  அது என்னன்னு தெரியாம இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மனு நீதியோட ஆங்கில ஆக்கம் இணையத்துல படிக்க கிடைச்சது.&lt;br /&gt;&lt;br /&gt;படிச்சு பார்த்தா.  அது மனு தர்மமா தெரியலை.  அதர்மமா தெரியுது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் ஆரம்பத்துல இருட்டா தண்ணியில மூழ்கி கிடந்ததாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ சுயம்புவா ஒரு பொன்னிற முட்டை சூரிய வெளிச்சத்தோட தோணுச்சாம்.  அதுலதான் பிரம்மன் இருந்தாராம்.  நாரா அப்படின்ற தண்ணியல அயணம் (வசித்தல்) செஞ்சதால அவருக்கு நாராயணா அப்படின்னும் பேராம்.&lt;br /&gt;அப்பாலிக்கா அந்த முட்டை உடைஞ்சு அவர் வெளிய வர மேல் பகுதி சொர்க்கமாவும்,  கீழ்ப்பகுதி பூமியாவும் ஆச்சாம்.  அப்புறம் அவர் உலகத்தை படைக்க ஆரம்பிச்சாராம்.&lt;br /&gt;நெருப்பு, காத்து, சூரியன் இதுல இருந்து அவர் ரிக், யஜீர், சாம வேதங்களை எடுத்து அதும்படி சிருஷ்டிய ஆரம்பிச்சாராம்.&lt;br /&gt;அப்புறம் பஞ்சபூதங்கள்,  காலம், நல்லது கெட்டதெல்லாம் படைச்சுட்டு மனுசப்பயலை படைக்கணும்னு முடிவு பண்ணாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிராமணன், ஷத்ரியன், வைசியன், சூத்திரன் இவர்களை முறையே வாய்,  கை, தொடை,  கால் இதிலிருந்து படைச்சாராம்.  (கதையா இருக்கே ?)&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் மரிகி, அத்ரி, ஆங்கிரஸ், புலஹா, கிருது, பிரகதேஸ், வஷிஸ்டர், நாரதர் எல்லாரையும் படைச்சாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் யக்ஷர்கள், ராக்சசர்கள், அசுரர்கள் (யார் இவங்க?), கந்தர்வர்கள், அப்சரசுகள்,  நாகர்கள் எல்லாரையும் படைச்சாராம்.&lt;br /&gt;கூடவே புல், பூண்டு பூச்சி, கால்நடை, வனவிலங்கு, பறவை. பாம்பு, மீனு எல்லாம் உட்கார்ந்து படைச்சிருக்காரு.&lt;br /&gt;&lt;br /&gt;கிருத, திரேத, துவாபர கலியுகத்தை பத்தி அப்புறம் குறிப்பு இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;பிராமணனோட தொழில் வேதத்தை படித்தல் சொல்லி கொடுத்தல்.&lt;br /&gt;ஷத்ரியனோட தொழில் ஜனங்களை காத்தல், பரிசளித்தல் (யாருக்கு), வேதம் படித்தல்.&lt;br /&gt;வைசியன் தொழில் கால்நடை பராமரிப்பு,  வாணிகம், உழவு, பரிசளித்தல் (யாருக்கு), வேதம் படித்தல்.&lt;br /&gt;இவங்க மூணு பேருமே பூணூல் தரிக்கலாம்.  முறையே பருத்தி, சணல், மற்றவை.&lt;br /&gt;&lt;br /&gt;சூத்திரனுக்கு தொழில் ஒண்ணே ஒண்ணுதான்.  இவங்க மூணு பேருக்கும் சேவை செய்தல். அவன் வேதம் படிக்க கூடாது.  &lt;br /&gt;&lt;br /&gt;ஏன்னா தொப்புளுக்கு மேல இருக்கற பகுதி புனிதம். சுயம்புவான கடவுளுக்கு அதுல இருந்து பிறந்தவங்க புனிதம்.  அதுவும் புனிதமான வாயில இருந்து பிறந்தவங்க இன்னும் புனிதம்.  (வாட் ஈஸ் திஸ். மிஸ்டர் மனு.)&lt;br /&gt;&lt;br /&gt;பிராமணர்களே யாவரிலும் அதிபுத்திசாலிகள் என்கிறார் மனு.  அது இல்லாமல் பெயர் சூட்டும் விதிகளை வகுக்கிறார்.&lt;br /&gt;பிராமணணின் முதல் பெயர் மங்களகரமானதாகவும், சத்ரியனின் முதல் பெயர் வீரமானதாக அதிகாரத்தைகுறிப்பதாகவும், வைசியனின் முதல்பெயர் செல்வத்தைக் குறிப்பதாகவும், சூத்திரனின் பெயர் விலக்கத்தக்கதாகவும் இருக்க வேண்டுமாம்.&lt;br /&gt;அதே போல் இரண்டாவது பெயர் (குடும்பபெயர்)  முறையே மகிழ்ச்சி, பாதுகாப்பு, செல்வத்தை குறிக்க  சூத்திரனுக்கு மட்டும் அவனது தொழிலை குறிக்க வேண்டுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிராமணன் நான்கு சாதியிலும் திருமணம் செய்யலாம். சத்ரியன் சத்ரிய, வைசிய சூத்திர பெண்களை மணக்கலாம்.  வைசியன் வைசிய சூத்திர பெண்களை மணக்கலாம். சூத்திரன் சூத்திர பெண்ணை மட்டும் மணக்க வேண்டும்.&lt;br /&gt;அனைவருக்கும் முதல் மனைவி அதே வர்ணத்தில் இருக்க வேண்டும்.  &lt;br /&gt;&lt;br /&gt;பிராமணண் கடும் விரதமேற்று குறைந்தது 9 ஆண்டுகளாவது வேதம் பயில வேண்டும்.  குறைந்தது ஒரு வேதத்தையாவது.&lt;br /&gt;&lt;br /&gt;பிராமணன் எதை சாப்பிட வேண்டம் எதை சாப்பிடக்கூடாது என்றெல்லாம் சொல்லப் படுகிறது.  வெங்காயம் வெள்ளப்பூண்டு சாப்பிடக் கூடாது. மந்திர நீர் தெளிக்கப்படாத இறைச்சியை சாப்பிடக்கூடாது.  பன்றி, நாட்டுக்கோழி என்று சாப்பிடக்கூடாத லிஸ்ட் நீளுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசன் எப்படி தண்டனை விதிக்க வேண்டும் என்பதெல்லாம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிராமணனுக்கு வெறும் ஐந்து நாள் உபவாசமும் காயத்ரி மந்திர ஜபமுமாய் போகும் தண்டனை சூத்திரனுக்கு மரணத்தை விதிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சூத்திரன் காதிலும் வாயிலும் ஈயத்தை காய்ச்சி ஊற்றச் சொல்லும் தண்டனைகள் இருக்கின்றன.  மற்றவர்களுக்கு அப்படி இருப்பதாய் காணோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சில தண்டனைகள் சூத்திரனுக்க 8 மடங்கு பிராமணனுக்கு 64 மடங்கு என்று இருக்கிறது.  அடடே என்று பார்த்தால் அது அபராதத் தொகையாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சூத்திரனுக்கு எந்த கட்டத்திலும் வேதத்தை சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களை இன்னும் சிறப்பாக வைத்திருக்கிறது மனுதர்மம்.&lt;br /&gt;அவர்கள் வேதம் கற்கக்கூடாது.  இயற்கையாகவே பெண் அலையாயும் மனம் உடையவள். அவர்கள் காவலில் வைக்கப்படவேண்டியவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தம் ஒரு பன்னிரண்டு சேப்டர் இருக்கு.  நாலு சேப்டர் படிச்சேன்.  இதுக்கு மேலயும் இந்த குப்பையை படிக்க முடியாதுன்னு விட்டாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;மனுவோட இந்த தர்மம் தோன்றிய  புண்ணிய பூமி பிரம்மவார்த்தா.  மனுவே சொல்வது போல அது சரஸ்வதி நதிக்கும் திருஷ்டாவதி நதிக்கும் இடைப்பட்ட பகுதி.&lt;br /&gt;&lt;br /&gt;நிலைநாட்டப்பட்ட பகுதி ஆர்யவார்த்தா இமயத்தில இருந்து விந்தியம் வரைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு கீழே இருப்பது மிலேச்சர்களின் பூமியாம்.  &lt;br /&gt;நல்லது. இந்த மிலேச்சர்களின் பூமிக்கு நிச்சயம் மனு ஸ்மிருதி தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;Reference:  The Laws of Manu&lt;br /&gt;George Bühler, translated 1886.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-91625803866274871?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/91625803866274871/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=91625803866274871' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/91625803866274871'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/91625803866274871'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2008/02/blog-post_22.html' title='மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-406092618221881414</id><published>2008-02-19T10:42:00.000-08:00</published><updated>2008-02-19T10:44:58.987-08:00</updated><title type='text'>இதெல்லாம் கவிதையாடா ?</title><content type='html'>தனிமை பயம் அவனை &lt;br /&gt;"பீடி"த்திருக்கிறது.&lt;br /&gt;பீடி புகைநடுவே&lt;br /&gt;அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;பயம் என்னை &lt;br /&gt;பீடித்திருக்கிறது.&lt;br /&gt;அவனது கவிதை&lt;br /&gt;தாள்களுடன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;------&lt;br /&gt;&lt;br /&gt;"காதலி"&lt;br /&gt;என்றான்.&lt;br /&gt;என்னடா என்றால்&lt;br /&gt;மூன்றெழுத்து கவிதையென்றான்.&lt;br /&gt;இதெல்லாம் கவிதையாடா ?&lt;br /&gt;&lt;br /&gt;------------&lt;br /&gt;&lt;br /&gt;பாரி கதறினான்...&lt;br /&gt;முல்லைக்கு தேர் தரவோ&lt;br /&gt;கார் தரவோ காசில்லை&lt;br /&gt;என்னிடம்.&lt;br /&gt;&lt;br /&gt;போடாவென்று&lt;br /&gt;சொல்லி போய்விட்டாள்&lt;br /&gt;காதலி முல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;(யதார்த்தக் கவிஞன் !!)&lt;br /&gt;&lt;br /&gt;----------&lt;br /&gt;&lt;br /&gt;மெதுவாகவும்..&lt;br /&gt;ஊர்ந்தும்..&lt;br /&gt;தேய்ந்தும்..&lt;br /&gt;நீடித்தும்..&lt;br /&gt;நின்றும்&lt;br /&gt;நீண்டுகொண்டிருக்கிறது.&lt;br /&gt;காலம்&lt;br /&gt;அவளில்லாத காரணத்தால்.&lt;br /&gt;&lt;br /&gt;(உண்மையில் அவன் கடிகாரத்தில் ஒழுங்கான பேட்டரி போடாத காரணத்தால்.)&lt;br /&gt;&lt;br /&gt;------&lt;br /&gt;&lt;br /&gt;கையில் பேனா...&lt;br /&gt;கன்னத்தில் கைவைத்து&lt;br /&gt;விட்டம் வெறிக்கிறான்.&lt;br /&gt;கொட்டுகிறது கவிதை.&lt;br /&gt;போட்டோ பிடித்தால்&lt;br /&gt;பின்னட்டைக்கு பயன்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;----------&lt;br /&gt;&lt;br /&gt;அவள் போனதால்.&lt;br /&gt;அவன் கவிதை எழுதினான்.&lt;br /&gt;எலக்கியம் வளர்ந்தது.&lt;br /&gt;அதை விட அவன் தாடி&lt;br /&gt;நன்றாக வளர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;----------&lt;br /&gt;&lt;br /&gt;வெங்காயம் அரை கிலோ.&lt;br /&gt;தக்காளி கால் கிலோ.&lt;br /&gt;இஞ்சி.&lt;br /&gt;பச்சை மிளகாய்.&lt;br /&gt;கருவேப்பிலை,  கொத்தமல்லி.&lt;br /&gt;உ. பருப்பு அரை கிலோ.&lt;br /&gt;து. பருப்பு ஒரு கிலோ.&lt;br /&gt;2 ரெக்சோனா.&lt;br /&gt;&lt;br /&gt;(பின்குறிப்பு:  ஒண்ணுங் கீழ ஒண்ணு எழுதப் படுவதெல்லாம் கவிதையல்ல.  மளிகை கடைக்கான லிஸ்ட்டாக கூட இருக்கலாம்.)&lt;br /&gt;&lt;br /&gt;-----------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-406092618221881414?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/406092618221881414/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=406092618221881414' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/406092618221881414'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/406092618221881414'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2008/02/blog-post_19.html' title='இதெல்லாம் கவிதையாடா ?'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-5120777194561562727</id><published>2008-02-18T15:06:00.000-08:00</published><updated>2008-02-18T19:03:54.037-08:00</updated><title type='text'>அமெரிக்காவில் சி.ஐ.டி.  ஷங்கர்.  -  "தி  கிங்பின்"</title><content type='html'>"பாஸ். நாம அமெரிக்காவில நியூயார்க் வந்து இறங்கிட்டோம். நினைச்சாலே ரொம்ப சந்தோஷமா இருக்கு." மாலு மிக மகிழ்ச்சியாக இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"வேற என்ன பண்றது. ஆசிரியர் நிறைய தமிழ்வாணன் துப்பறியும் கதை படிச்சிருப்பாரு போல. "அமெரிக்காவில் சி.ஐ.டி. ஷங்கர்" அப்படின்னு தலைப்பு வெச்சிட்டார். உனக்கும் எனக்கும் விசிட்டர் விசாவெல்லாம் எடுத்து எவ்வளவு செலவாயிடுச்சு தெரியுமா." ஷங்கர் சலித்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"பாஸ். நீங்களேதான் டிராவல் எஜென்சியும் வெச்சிருக்கீங்களே. இதென்ன பெரிய விஷயமா." மாலு தொடர்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"நாம இங்க வெறுமனே சுத்தி பார்க்க மட்டும் வரலை. எதுக்கு வந்திருக்கோம்னு தெரியும் இல்லை"&lt;br /&gt;&lt;br /&gt;"தெரியும் பாஸ். ஏதோ "சேஃப்டி பின்"னை கண்டு பிடிக்கணும்னு சொன்னீங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"அது சேஃப்டி பின் இல்லை. கிங் பின்."&lt;br /&gt;&lt;br /&gt;"கிங் பின்னா. கேள்வி பட்டதே இல்லையே பாஸ். அது எவ்வளவு பெரிசா இருக்கும். "&lt;br /&gt;&lt;br /&gt;"கிங் பின் அப்படின்றது கேங் லீடர். நிழலுலக தாதா. அந்த தாதாவை கண்டு பிடிக்கிறதுதான் நம்ப பிளான்."&lt;br /&gt;&lt;br /&gt;"தாதா ?"&lt;br /&gt;&lt;br /&gt;"நீ மார்வல் காமிக்ஸ் எல்லாம் படிக்கிறது இல்லையா. கிங் பின்தான் ஸ்பைடர் மேனோட வில்லன். இப்ப வந்த டேர் டெவில் படத்திலயும் கிங்பின்தான் வில்லன். இங்க அண்டர் கிரவுண்ட் தாதாவை கிங்பின் அப்படின்னு சொல்வாங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"வாவ். கண்டுபிடிச்சு என்ன செய்யப் போறோம்."&lt;br /&gt;&lt;br /&gt;"உலகப் பொருளாதாரத்தை நிமிர்த்தப் போறோம்."&lt;br /&gt;&lt;br /&gt;"வாட்?"&lt;br /&gt;&lt;br /&gt;"உனக்கு தெரியும் இல்லையா. அமெரிக்கா பெரிய அளவுல பொருளாதார சரிவை நோக்கி போயிட்டிருக்கு. அதுக்கு காரணம் என்னன்னு பார்த்தா வீட்டுக் கடன். இங்க ஒரு கும்பல் வீடுகளை வாங்கிட்டு வட்டி கட்டாம விட்டுடறாங்க. இதனால வீடு ஏலத்துக்கு வருது. வாங்க ஆளில்லாம வீடு மதிப்பு குறைஞ்சு, வட்டி வீதம் குறைஞ்சு அதனால உலக பொருளாதாரமே சரிஞ்சு போச்சு. இத்தனைக்கும் பின்னாடி அந்த கும்பலோட தலைவனா ஒரு தாதா இருக்கான். அந்த கிங்பின்னை தான் நாம கண்டு பிடிக்கறோம். இதை தடுத்தி நிறுத்தி உலகப் பொருளாதாரத்தையே உயர்த்தப் போறோம்."&lt;br /&gt;&lt;br /&gt;"பாஸ். கேட்கவே சூப்பரா இருக்கு. சின்ன வயசுல ராணி காமிக்ஸ்ல படிச்ச ஜேம்ஸ் பாண்டு கதையெல்லாம் நியாபகம் வருது."&lt;br /&gt;&lt;br /&gt;"இது ஆக்சன் டைம்."&lt;br /&gt;&lt;br /&gt;"தட் ஈஸ் மை ஷங்கர்." இந்த முறை அவனுக்கு புத்துணர்வு கன்னத்திலல்ல. உதட்டில் கிடைத்தது. அமெரிக்க மண்ணில்லையா.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் கிறுகிறுத்துப் போனான். அவர்கள் வெளியேறும் வழிக்காக முன்னேறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"பாஸ் அங்க பாருங்க NEWARK இண்டர்நேஷனல் ஏர்போர்ட் அப்படின்னு எழுதியிருக்கு. நாம NEWYORK தான வந்து இறங்கி இருக்கோம்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா இருக்கும்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஏர்போர்ட்ல பத்தடிக்கு இருபதடின்னு பெரிசா எழுதிவைக்கறவன் தப்பாவா எழுதியிருப்பான்."&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கும் புரியலையே. இரு பக்கத்துல கேட்கிறேன்." என்றவன் பக்கத்திலிருந்த தமிழ் இளைஞனிடம் கேட்டான் (சாஃப்ட்வேராயிருக்கும்.). "இது நியூயார்க்தானே."&lt;br /&gt;&lt;br /&gt;அவன் ஷங்கரை பூச்சி போல பார்த்து விட்டு சொன்னான். "இது நெவார்க். நியூஜெர்சி. ஆனா நியூயார்க் பக்கம்தான்."&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரத்தில் மாலு ஷங்கரை பின்னி எடுத்துக் கொண்டிருந்தாள். "வந்து இறங்குனது நெவார்க்கா, நியூயார்க்கான்னு கூட தெரியலை. பெரிய துப்பறியும் நிபுணர்."&lt;br /&gt;&lt;br /&gt;"டிக்கட்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா நெவார்க்னு அடிச்சிட்டாங்கன்னு நினைச்சிட்டிருந்தேன். ஹி... ஹி." வழிந்தான். "சரி வா. இங்க எதோ கிரவுண்ட் ட்ரான்ஸ்போர்ட்ல போய் கேட்டா நாமளே ஓட்டற மாதிரி கார் கிடைக்குமாம்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓக்கே. போய் காரை எடுங்க... ஆமா உங்களுக்கு லைசென்ஸ் ?"&lt;br /&gt;&lt;br /&gt;"இண்டர்நேஷனல் ட்ரைவிங் லைசென்ஸ், இண்டியன் ட்ரைவிங் லைசென்ஸ் இரண்டும் வெச்சிருக்கேன். கார் எடுக்கிறோம். நியூயார்க் லாங் ஐலண்ட்ல நாம தங்கப் போற ஹோம் ஸ்டீட் ஹோட்டல், ஜாக்சன் ஹைட்ஸ் பக்கத்துல இருக்கு. அங்க போறோம்."&lt;br /&gt;&lt;br /&gt;"வழி தெரியுமா."&lt;br /&gt;&lt;br /&gt;"இங்க ஜிபிஎஸ் சிஸ்டம் இருக்கு. போய்ச்சேர வேண்டிய அட்ரசை கொடுத்தா போதும். சேட்டிலைட் மூலமா கனெக்ட் ஆகி போய் சேர வேண்டிய இடத்துக்கு வழியை அதுவே சொல்லும். மேப் ஸ்கிரீன்ல தெரியும்."&lt;br /&gt;&lt;br /&gt;"வாவ்."&lt;br /&gt;&lt;br /&gt;----------------------&lt;br /&gt;&lt;br /&gt;"பாஸ். ரைட்ல ஓட்டுங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"ரைட்டாதான் ஓட்டுறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"அய்யோ ரைட் சைட்ல ஓட்டுங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமால்ல. இந்த ஊருல ரைட் சைடுதான் ரைட் சைடு." ஒரு வழியாக அவர்கள் ஹோட்டலை போய் சேர்ந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;----&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த இரண்டு நாட்களும் சுதந்திர தேவி சிலை, எம்பயர் ஸ்டேட் பில்டிங், மேடம் டுஸாட்ஸ், செண்ட்ரல் பார்க் இன்னும் சில மியூசியங்கள் எல்லாம் சுற்றி பார்த்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"பாஸ். உண்மைய சொல்லுங்க. சும்மா சுத்தி பார்க்கலாம்னு தான வந்தோம். கிங்பின் எல்லாம் உடான்ஸ் தானே."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன இப்படி சொல்லிட்டே. நாம வெறுமனே சுத்தி பார்த்தோம்னு நினைச்சியா. நான் கிங்பின்னோட ஆட்களோட நடமாட்டத்தையும் நோட் செஞ்சுட்டுதான் இருந்தேன். நாம தங்கியிருக்கிற ஓட்டல்லதான் கிங்பின்னோட காதலி வெனஸ்ஸா ஃபிஸ்க் தங்கியிருக்கா. அவளுடைய நடமாட்டத்தை நோட் பண்ணிட்டுதான் இருக்கேன்.".&lt;br /&gt;&lt;br /&gt;"வெனஸ்ஸா பிஸ்க்தான் கிங்பின்னோட காதலி அப்படின்னு உங்களுக்கு எப்படி தெரியும்."&lt;br /&gt;&lt;br /&gt;"சும்மாவா எத்தனை ஸ்பைடர்மேன், டேர்டெவில் கதையெல்லாம் படிச்சிருக்கேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"இப்ப என்ன பண்ண போறிங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"ஜேம்ஸ் பாண்டு ஸ்டைல். அவளை செட்யூஸ் பண்ணி கிங்பின் பத்தின ரகசியங்களை கேட்டு தெரிஞ்சுக்கப் போறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னது.."&lt;br /&gt;&lt;br /&gt;"பத்தியா என்னை தப்பா நினைச்சிட்டு. சும்மா மயக்க மட்டும்தான் செய்வேன். உண்மைகள் தெரியணும் இல்லையா.."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி எப்படியோ போங்க. இந்த மூஞ்சிக்கு எவளும் மயங்க மாட்டா. நான் ஒருத்தியே உங்களுக்கு அதிகம்..."&lt;br /&gt;&lt;br /&gt;ஷங்கர் அந்த ஹோட்டலின் பாரில் அமர்ந்திருந்த வெனஸ்ஸாவை நோக்கி முன்னேறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹாய். ஐ யம் ஷங்கர்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஐ யம் வெனஸ்ஸா." வன்னிலா ஐஸ்கிரீமில் செய்தது போல் இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"யூ ஆர் பியூட்டிஃபுல். மே ஐ கிவ் யூ கம்பெனி."&lt;br /&gt;&lt;br /&gt;"இட் ஈஸ் மை பிளஷர். யூ ஆர் சோ மேன்லி.. குட் யூ ப்ளீஸ் ஆர்டர் வைன் ஃபார் மி."&lt;br /&gt;&lt;br /&gt;"ஷ்யூர்." ஷங்கர் மாலுவை பார்த்து கண்ணடித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"வாட் யூ வில் ஹாவ்."&lt;br /&gt;&lt;br /&gt;"ய கேன் ஆஃப் கோக். ஓப்பன்டு பட் நாட் ஸ்ட்ராவ்டு."&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரத்தில் வெனஸ்ஸாவோடு அவன் அவளது அறைக்கு சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்தொடர்ந்த மாலு அந்த அறைக்கதவு சாத்தப்பட்டதால் வெளியே இருந்து பார்த்து விட்டு அவர்கள் அறைக்கு திரும்பினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;-------&lt;br /&gt;அரை மணி நேரம் போனது. ஷங்கர் திரும்பாததால் மாலு மீண்டும் அந்த அறைக்கு சென்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே இருந்து முக்கல் முனகல் ஒலிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடப்பாவி. "சும்மாதான்.." அப்படின்னு சொன்னானே.&lt;br /&gt;&lt;br /&gt;கதவை திறந்து கொண்டு நுழைந்தவள் ஷங்கரை தேடினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தரையில் ஷங்கர் கைகால்கள் கட்டப்பட்டு பனியன் ஜட்டியோடு இருந்தான். வாயில் ஒட்டியிருந்த பிளாஸ்டரை பிரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"பாஸ். என்ன இது. செட்யூஸ் பண்றேன்னு கிளம்பி வந்து இப்படி டிரெஸ் எல்லாம் ரெட்யூஸ் ஆகி கிடக்கறீங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆக்சுவலி கோக் ட்ரஸ் மேல ஊத்திக்கிச்சு. அதுக்காகத்தான் ட்ரெஸ்ஸை கழட்டினேன். ஹி.. ஹி."&lt;br /&gt;&lt;br /&gt;"நம்பி தொலைக்கிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஏமாந்த நேரமா பார்த்து கட்டி போட்டுட்டு பாக்கெட்ல இருந்த கேஷ் மொத்தமும் எடுத்துக்கிட்டா. நல்ல வேளை கார்டு எல்லாம் உங்கிட்டதானே இருக்கு."&lt;br /&gt;&lt;br /&gt;"இப்படியா ஏமாறுவீங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை. நான் கிங் பின்னை பத்தி கேட்டதும் உஷாராயிட்டா. என்ன கட்டி போட்டுட்டு தப்பிச்சிட்டா."&lt;br /&gt;&lt;br /&gt;"பாஸ். உங்க ட்ரெஸ் எல்லாம் இதோ இந்த மூலையில இருக்கு."&lt;br /&gt;&lt;br /&gt;"தாங்ஸ்" எடுத்து அணிந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"பாஸ். இந்த விளையாட்டு நமக்கு வேண்டாம். ஊருக்கு போயிடலாம்."&lt;br /&gt;&lt;br /&gt;"முன் வெச்ச காலை பின் வெச்சு ஷங்கருக்கு பழக்கமேயில்லை. கட்டாயம் கிங் பின்னை பிடிப்பேன்."&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அவள் உள்ளே நுழைந்தாள். வெனஸ்ஸா. உடன் நான்கு தடியர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் துப்பாக்கியை நீட்டினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;-----------&lt;br /&gt;&lt;br /&gt;"பாஸ். இவங்க நம்மை எங்க கொண்டு வந்திருக்காங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"யாருக்கு தெரியும் கண்ணைக் கட்டி கொண்டு வந்திருக்காங்க. கிங் பின்னோட ஆட்களா இருக்கலாம்."&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அவர்களுக்கு எதிரே இருந்த சுவர் சுற்றியது. மறுபுறம் மேஜை. சுழல் நாற்காலி. அதில் ஒரு மொட்டைத் தலையர் இவர்களுக்கு முதுகு காட்டியபடி.&lt;br /&gt;&lt;br /&gt;"வெல்கம் மிஸ்டர் ஷங்கர்."&lt;br /&gt;&lt;br /&gt;"யூ... யூ... கிங் பின்."&lt;br /&gt;&lt;br /&gt;"எஸ். கரெக்டா கண்டுபிடிச்சிட்டியே."&lt;br /&gt;&lt;br /&gt;"உனக்கு தமிழ் தெரியுமா."&lt;br /&gt;&lt;br /&gt;"வேலூர் ஜெயில்ல இரண்டு வருசம் இருந்தேன். தமிழ் கத்துகிட்டேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியா.. ரோஜா படத்தில வர்ற காஷ்மீர் தீவிரவாதி தமிழ் நாட்டு ஜெயில்ல தமிழ் கத்துக்க முடியும். ஆனா அமெரிக்க கிங் பின்... எப்படி வேலூர் ஜெயில்ல..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஹா.. ஹா... ஜோக்கடிச்சா நம்பிடறதா... என்னைத் தெரியலை."&lt;br /&gt;கிங்பின் மொட்டைத் தலையில் தாளம் தட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ... நீங்க.."&lt;br /&gt;&lt;br /&gt;"ஷிவாஜி. த பாஸ். தி கிரேட் கிங்பின்."&lt;br /&gt;ஷங்கரும் மாலுவும் அதிர்ச்சியானார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க சாஃப்ட்வேர்ல இருந்து இருநூறு கோடி சம்பாதிச்சு மக்களுக்கு உதவறதா......"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹா.. ஹா.. ஹா.. அதை நீயும் நம்பறியா. நூறு இல்லை இருநூறு வருசம் பொட்டி தட்டுனாலும் இருபது கோடி கூட சாப்ட்வேர்ல சம்பாதிக்க முடியாது. நான் சம்பாதிச்சதெல்லாம் கிங் பின்னா இருந்துதான்."&lt;br /&gt;&lt;br /&gt;"இது தப்பில்லையா."&lt;br /&gt;&lt;br /&gt;"கண்ணா. தப்பு எதுன்னு நீ பாக்குறே. சரி எதுன்னு நான் பாக்குறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சொல்றீங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னைக்கு நீ 45 ரூபாய் கொடுத்து ஒரு டாலர் வாங்குறதுக்கு பதிலா 39 ரூபாய்கு ஒரு டாலர் வாங்கி ஈஸியா அமெரிக்கா வர முடிஞ்சிருக்கு. காரணம் யாருன்னு யோசிச்சு பார்த்தியா."&lt;br /&gt;&lt;br /&gt;ஷங்கர் யோசிக்க ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்திய கருப்பு பணத்தை ஆஃபீஸ் ரூம் போட்டு அங்கிருந்து இங்க கடத்துறேன். அந்த பணத்தை வெச்சு இங்க வீடு குறைஞ்ச விலைக்கு வாங்கி அதை எங்க ஆளுங்களை வெச்சு அதிக விலைக்கு பேங்க் லோன் போட்டு வாங்க வைக்குறேன். லாபத்துக்கு லாபம். கொஞ்ச நாள்ல அவங்க கடன் கட்டாம போக பேங்க் திவால் ஆகுது. அதனால அமெரிக்கா திவால் ஆகுது. அதனால இந்தியா சூப்பர் பவராகுது."&lt;br /&gt;&lt;br /&gt;"இது தப்பில்லையா."&lt;br /&gt;&lt;br /&gt;"நான் இந்திய தேசத்துக்காக உழைக்கிற ஒரு வீரன். என்னோட வழி உனக்கு தப்பா தெரியலாம். ஆனா அது இந்திய தேசத்தை முன்னேத்துற வழி. என் வழி தனி வழி."&lt;br /&gt;&lt;br /&gt;"இருந்தாலும்..."&lt;br /&gt;&lt;br /&gt;"கண்ணா இப்ப நான் உனக்கு இரண்டு சாய்ஸ் தர்றேன். நான் பண்றது சரின்னு நினைச்சா உன்னை கூட்டி வந்த மாதிரியே கொண்டு போய் விட்டுடுவாங்க. நான் பண்றது தப்புன்னு நினைச்சின்னா வா என்னோட ஆஃபீஸ் ரூம் போய் பேசலாம்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆஃபீஸ் ரூமா... நீங்க செய்யறது தப்புன்னு நான் எப்ப சொன்னேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஹா... ஹா... ஹா.."&lt;br /&gt;&lt;br /&gt;"நாங்க உங்க முகத்தை பார்க்கலாமா."&lt;br /&gt;&lt;br /&gt;"ஹா... ஹா.. ஹா.. எனக்கு விளம்பரம் பிடிக்காது. "&lt;br /&gt;அவர் ஸ்டைலாக தன் தலையில் மீண்டும் தாளம் தட்டினார்.&lt;br /&gt;"ஷிவாஜியும் நானே. எம்ஜியாரும் நானே."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்ப வெற்றிமோகன் எழுதினது உங்களை பத்திதானா ?"&lt;br /&gt;&lt;br /&gt;"யாரது என்னை பத்தி எழுதறது. அடுத்த தடவை அந்த ஆளை தூக்கிட்டு வாங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"விட்டுடுங்க சார். பாவம். அவர் ஒரு எலக்கியவாதி."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி. நீங்க போகலாம்"&lt;br /&gt;----------&lt;br /&gt;&lt;br /&gt;மாலுவும் ஷங்கரும் அதே ஹோட்டலில் இறக்கி விடப்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"மாலு நாம நாளைக்கு இந்தியா திரும்பறோம்."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்ப கிங்பின்."&lt;br /&gt;&lt;br /&gt;"அவர் சட்டப் படி நடக்காம இருக்கலாம். நியாயப்படி நடக்கிறார். அதனால அவரை சட்டத்துல பிடிச்சிக் கொடுக்க என் மனசாட்சி இடம் கொடுக்கலை. ஹி ஈஸ் எ கிரேட் பேட்ரியாட். ஜெய் ஹிந்த்."&lt;br /&gt;&lt;br /&gt;------&lt;br /&gt;&lt;br /&gt;விமானத்தின் ஜன்னலில் கீழே தெரியும் நியூயார்க்கை பார்த்துக் கொண்டிருந்தாள் மாலு. (நெவார்க் அல்ல).&lt;br /&gt;&lt;br /&gt;"இட் ஈஸ் ஆல் இன் த கேம்" என்றான் ஷங்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;--------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;சி.ஐ.டி. ஷங்கர் கதைகள்:&lt;br /&gt;&lt;br /&gt;3. &lt;/span&gt;&lt;a href="http://araiblade.blogspot.com/2008/02/blog-post_7900.html"&gt;&lt;span style="color:#000099;"&gt;சி.ஐ.டி. ஷங்கர் தோன்றும் "ஆப்பரேஷன் ப்ளூ ஃபிலிம் ஸ்டார்." &lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;2. &lt;/span&gt;&lt;a href="http://araiblade.blogspot.com/2008/01/blog-post_31.html"&gt;&lt;span style="color:#000099;"&gt;மீண்டும் சி.ஐ.டி. ஷங்கர் தோன்றும் "நடிகையின் அந்தரங்கம்". &lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;1. &lt;/span&gt;&lt;a href="http://araiblade.blogspot.com/2008/01/blog-post_30.html"&gt;&lt;span style="color:#000099;"&gt;மீண்டும் சி.ஐ.டி. ஷங்கர் தோன்றும் "என்ன எழவுடா இது ?". &lt;/span&gt;&lt;/a&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-5120777194561562727?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/5120777194561562727/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=5120777194561562727' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/5120777194561562727'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/5120777194561562727'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2008/02/blog-post_18.html' title='அமெரிக்காவில் சி.ஐ.டி.  ஷங்கர்.  -  &quot;தி  கிங்பின்&quot;'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-6041150751209850442</id><published>2008-02-13T16:47:00.000-08:00</published><updated>2008-02-13T17:12:35.303-08:00</updated><title type='text'>சி.ஐ.டி. ஷங்கர் தோன்றும் "ஆப்பரேஷன் ப்ளூ ஃபிலிம் ஸ்டார்."</title><content type='html'>"ஹாய்.  பாஸ்.  வாட்ஸ் அப்?"  மாலு ஷங்கரை அழைத்த படியே உள்ளே நுழைந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"மாலு.  நாம ரொம்ப ஆங்கிலம் பேசுறோமாம்.  இது தமிழ் கதையா ஆங்கில கதையான்னு வாசகர்கள் கேள்வி கேட்கிறாங்க.  தமிழ்லயே பேசுறயா."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியே ஆகட்டும்.  நாதா. தங்கள் சித்தம் என் பாக்கியம்."&lt;br /&gt;&lt;br /&gt;"கொடுமையா இருக்கு.  சாதாரணமாவே பேசு.".&lt;br /&gt;&lt;br /&gt;"சரி. சரி. ஏதாவது புது கேஸ் வந்து இருக்கா."&lt;br /&gt;&lt;br /&gt;"எதுவும் இல்லை.  நான் என்ன நினைக்கிறேன்னா, நாம கேஸ் நம்ம கிட்ட வரணும்னு நினைக்கிறத விட கேஸை தேடி போறதுதான் பெட்டர்னு நினைக்கிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா யாரோ ஒரு கொத்தனார் கூட யாரோ லீனாவோ வீணாவோ, அவங்க ஜாக்கெட்டை காணலைன்னு சொல்லியிருந்தார்.  நாம அந்த கேஸை எடுத்துகிட்டா என்ன பாஸ்."&lt;br /&gt;&lt;br /&gt;"இதெல்லாம் ஒரு கேசா.  நாம துப்பறியறத ஒரு ஹாபியா ஒரு த்ரில்லுக்காக பண்றோம்.  அதை சமூகத்துக்கு பயன்படுற மாதிரி பண்ணா என்ன."&lt;br /&gt;&lt;br /&gt;"புரியலையே பாஸ்."&lt;br /&gt;&lt;br /&gt;"வீ ஆர் க்ரைம் ஃபைட்டர்ஸ்.  சட்டத்துக்கு தப்பி நடக்கிற காரியங்களை நாம கண்டிக்கனும்.  குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தரணும்.  அமைதியான குற்றங்களில்லாத ஒரு சமூகத்தை படைக்கணும்."&lt;br /&gt;&lt;br /&gt;"பாஸ்.  சம்பந்தா சம்பந்தம் இல்லாம பேசறீங்களே.  இது காமெடி ஸ்டோரி. நியாபகம் இருக்கட்டும்."&lt;br /&gt;&lt;br /&gt;"எனஃப் காமெடி.  ஆல் ஐ நீட் ஈஸ் ஆக்சன்.  இன்னிக்கு இந்த சமூகத்தை செல்லரிச்சுக்கிட்டு இருக்க முக்கியமான பிரச்சனை ப்ளூ ஃபிலிம்.  அதை எடுக்கறவங்களை கண்டு பிடிச்சு சட்டத்து முன்னாடி நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்கிறோம்.  இந்த ஆப்பரேஷனுக்கு நான் வெச்சிருக்கிற பெயர் ஆப்பரேஷன் ப்ளூ ஃபிலிம் ஸ்டார்."&lt;br /&gt;&lt;br /&gt;"வாவ். இண்ட்ரஸ்டிங்.  ஆனா அவங்களை எப்படி கண்டுபிடிப்பீங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"இங்க பார்த்தியா.  இது எல்லாம் ப்ளூ ஃபிலிம் சிடி டிவிடி.   இதையெல்லாம் போட்டு பார்த்து...."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ. இவ்வளவு பில்ட் அப்பும் நீ ப்ளூ ஃபிலிம் பார்க்கறதுக்குத்தானா."  கோபப்பட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அச்சச்சோ.  தப்பா புரிஞ்சிகிட்டியே.  இதையெல்லாம் போட்டு பார்த்து அதுல வர்ற பங்களா. அதுல வர்ற இண்டீரியர் டிசைன் இதெல்லாம் நோட் பண்ணனும்.  அப்பதான் இதை எடுத்த பங்களா எதுன்னு தெரியும்.  நாமளும் ஈஸியா இதை எடுத்துடறவங்கள கண்டுபிடிச்சிடலாம்."&lt;br /&gt;&lt;br /&gt;"பரவாயில்லையே ஐடியா நல்லா இருக்கே."&lt;br /&gt;&lt;br /&gt;"நான் இந்த பத்து டிவிடியும் ஏற்கனவே பார்த்துட்டேன்.  இதுல வர்ற பங்களாவை பார்த்தா வளசரவாக்கம் பக்கத்துல இருக்க ஒரு பங்களா மாதிரியே இருக்கு.  நாம அதை நோட்டம் விடறோம்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.."&lt;br /&gt;&lt;br /&gt;"முதல்ல நீ அந்த பங்களாவுக்குள்ள போற.  ஏதாவது ஏடாகூடமா இருந்தா இந்த விசிலை ஊது.  அப்ப நான் கரெக்ட் டைமுக்கு வந்து உன்னை காப்பாத்துறேன். அவங்களை கையும் களவுமா பிடிக்கிறோம்.  இட் ஈஸ் ஆக்சன் டைம்."&lt;br /&gt;&lt;br /&gt;"விளையாடறீங்களா.  நான் ஒரு பொண்ணு ஏடா கூடமா ஏதாவது ஆயிட்டா."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி. சரி.  அப்படின்னா நானே பொம்பளை வேஷத்துல போறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;-------------------------&lt;br /&gt;&lt;br /&gt;"பாஸ்.  பொம்பளை வேஷத்தில அழகா இருக்கீங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி. சரி. நான் உள்ளே போறேன்.  எதாவதுன்னா விசில் அடிக்கிறேன். நீ போலீசுக்கு போன் போட்டு ரவுண்ட் அப் பண்ணிடு."&lt;br /&gt;&lt;br /&gt;"விசிலெல்லாம் பழைய டெக்னிக் பாஸ்."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்ப மொபைல் போன்ல மிஸ்டு கால் கொடுக்கறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பவும் மிஸ்டு கால்தானா. அல்பம் பாஸ் நீங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி. சரி"  பெண்வேடத்திலிருந்த ஷங்கர் உள்ளே நுழைந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீதான் ஷீலாவா.  உனக்காகத்தான் வெயிட்டிங்."  வரவேற்ற நபர் இளம் சொட்டையர். 45 வயது.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க". பெண்மை கலந்த குரலில் ஷங்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐ யம் டாக்டர் பிரகாஷ்.  இது பீட்டர்.  உன்னோட கோ ஆர்ட்டிஸ்ட்."  பீட்டர் இளித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எடுக்கிறது அந்தப்படம். இதுல இந்த தடியன் 'கோ ஆர்ட்டிஸ்ட்.'ஆ.   மலையாளப்படங்களில் வருபவனை போல் இருந்தான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;"நாம ஷாட்டுக்கு போலாமா ஷீலா."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன மாதிரி ஷாட்."&lt;br /&gt;&lt;br /&gt;"ரேப் சீன்.  நான் எக்ஸ்ப்ளெயின் பண்ணட்டுமா."  டாக்டர் பிரகாஷ் நெருங்க..&lt;br /&gt;&lt;br /&gt;"சார்." இன்னொரு பெண் குரல் கேட்டது...  "நான் ஷீலா." அவள் உள்ளே நுழைந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்ப இது."   ஷங்கர் ஆக்சன் டைம் என்பதை உணர்ந்து கொண்டான்.   கடமையாக ஒரு மிஸ்டு காலை தட்டிவிட்டவன் பாய்ந்தான்...&lt;br /&gt;&lt;br /&gt;பிரகாஷின் தாடையில் ஒரு அடி இறங்கியது.  அடியா அது இடி.&lt;br /&gt;"ஹா. ஹா. என்னையாடா ரேப் பண்ணுவீங்க.  நான் ஆம்பிளைடா." ஷங்கர் சிரித்தான்.&lt;br /&gt;ஷீலா அலறி ஓடி பதுங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுதாரித்துக் கொண்ட பீட்டரும் பிரகாஷ்ம் நெருங்கி ஷங்கரை பிடித்தார்கள்.  கிட்டத்தட்ட ஷங்கர் இருவரிடமும் மாட்டிக் கொள்ள மாலு அதிரடியாக எண்டரி கொடுத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலு ஷங்கர் கூட்டணியின் அதிரடி தாக்குதலில் பீட்டரும் டாக்டரும் விழுந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"மாலு, நல்ல நேரத்தில வந்து என் கற்பை காப்பாத்தின."&lt;br /&gt;&lt;br /&gt;கீழே விழுந்தவர்கள் மலங்க மலங்க பார்த்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன பார்க்கறீங்க.  நீங்க அந்த மாதிரி படம் எடுக்கறது எனக்கு எப்படி தெரியும்னா.   துப்பறியும் சிங்கம் ஷங்கரை என்னன்னு நினைச்சீங்க."  ஷங்கர் கர்ஜித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த மாதிரி படமா." அடியின் வலியோடு டாக்டர் முனக.&lt;br /&gt;&lt;br /&gt;"எஸ். நீங்க ரேப் சீன் எடுக்கறேன்னு சொன்னதை நான் ரெக்கார்ட் பண்ணிட்டேன். மாலு போலீஸ்க்கு போன் போடு. இவன்களை பிடிச்சி கொடுக்கலாம்."&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதுதான் அந்த ஆசாமி உள்ளே ஓடி வந்தான்.  "சார். டைரக்டர் சார்..."&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு வில்லன். மாலுவும் ஷங்கரும் அலர்ட்டானார்கள்.  "யாருய்யா நீ.."&lt;br /&gt;&lt;br /&gt;"நான் புரொடக்சன் மேனேஜர்."&lt;br /&gt;&lt;br /&gt;"அடப்பாவிகளா.  புரோடக்சன் மேனேஜர் வச்சு அந்த மாதிரி படம் எடுக்கற அளவுக்கு ஆயிடுச்சா."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னய்யா சொல்றீங்க.  அங்க மொத்த யூனிட்டும் டைரக்டருக்காக காத்துக்கிட்டு இருக்கு.   "தங்கை" சீரியலுக்காக....."&lt;br /&gt;&lt;br /&gt;"தங்கை சீரியலா...  இரண்டு வருசமா ஓடுதே அந்த மெகாசீரியலா.... இந்த ஆளு ரேப் அது இதுன்னானே"  ஷங்கர் குளறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாய்யா.  ஹீரோயினோட அஞ்சாவது தங்கச்சி பத்து வருஷம் ஹாஸ்டல்ல தங்கி படிச்சு பெரிய பொண்ணாகி அக்காவை பாக்க வருது.  வர்ற வழியில வில்லன் மயக்கி கொண்டு போய் அவளை கற்பழிச்சிடுறான். அந்த ஷாட்டை இன்னைக்கு புது ஆர்டிஸ்ட்டை வெச்சி எடுக்கறோம்."&lt;br /&gt;&lt;br /&gt;"யோவ் புரொடக்சன். அந்த ஆளுகிட்ட என்னய்யா கதை பேசிக்கிட்டு.  முதல்ல என்னை தூக்குய்யா."  டைரக்டர் பிரகாஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க டாக்டர் பிரகாஷ்? டீவி சீரியல்..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்யா. டாக்டருக்கு படிச்சா டிவி சீரியல் டைரக்ட் பண்ண கூடாதா.  யோவ். புரொடக்சன். போலீசுக்கு போன் போடுய்யா... இவங்களை...."&lt;br /&gt;&lt;br /&gt;"போலீசா."  ஷங்கர் மாலுவை பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலு ஷங்கரை பார்க்க இருவருமாக தப்பி வெளியே ஓடினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷங்கர் பைக்கை ஸ்டார்செய்ய தப்பி வந்து சேர்ந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தடவை ஷங்கருக்கு மாலுவிடம் இருந்து தேவைக்கு அதிகமாகவே கிடைத்தது எனர்ஜி பூஸ்ட் கன்னத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;வீங்கிய கன்னத்தை தடவியபடி ஷங்கர் "இட் ஈஸ் ஆல் இன் த கேம்." என்றான் சோகமாக.&lt;br /&gt;&lt;br /&gt;---------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-6041150751209850442?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/6041150751209850442/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=6041150751209850442' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/6041150751209850442'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/6041150751209850442'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2008/02/blog-post_7900.html' title='சி.ஐ.டி. ஷங்கர் தோன்றும் &quot;ஆப்பரேஷன் ப்ளூ ஃபிலிம் ஸ்டார்.&quot;'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-5073886447727304213</id><published>2008-02-13T12:59:00.000-08:00</published><updated>2008-02-13T13:00:09.278-08:00</updated><title type='text'>மனுசப்பயலுங்க ஏன் காதலிக்க வேணும்</title><content type='html'>காதல். &lt;br /&gt;இந்த மூணு எழுத்து வார்த்தை மனுசனை படுத்தியெடுக்கிற மாதிரி வேறு எதுவும் படுத்தியெடுக்கிறதா தெரியலை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியும் மனுசப் பயலுங்க காதலிச்சிட்டுதான் இருக்காங்க.  ஏன் ?&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் தோணுண காலத்துல இருந்து இந்த காதல் கருமம் இருந்துகிட்டுதானே இருக்கு.&lt;br /&gt;எம்புட்டு காலம். எவ்வளவு காதல்.  இன்னும் இங்க காதல் ஏன் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் நெருப்புல கருகிய பலரை பார்த்தும் காதல் ஏன் தொடருது ?&lt;br /&gt;&lt;br /&gt;காதல் கதகதப்பான நெருப்பு.  அந்த கதகதப்புதான் மனுசனை இன்னும் காதலிக்க வைக்குது.&lt;br /&gt;ரொம்பவே நெருங்கிட்டாலும் அதே நெருப்பு சுட்டெரிச்சுடுது.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் கத்திரிக்காய் இல்லை.  கத்தி இரண்டு பக்கமும் கூரான கத்தி.  அதை வெச்சு கத்திரிக்காயை வெட்டலாம்.   என்ன கொஞ்சம் தப்புனா ஆளை வெட்டிடும்.  அதுக்காக கத்தியே வேணாம்னு தூக்கி போட்டுட முடியுதா என்ன.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் சுயமிழத்தல்.  சுயநினைவிழத்தல். தன்னையே இழத்தல்.  அது ஒரு போதை.  மதுவை குடித்தவன் மயங்குவது போல் அதுவும் ஆளை மயக்குகிறது.  ஆனால் தேவையான போதை.&lt;br /&gt;எல்லாத்துலயும் ஒரு அளவு தெளிவு வேணும்.  காதலில் கூட. &lt;br /&gt;&lt;br /&gt;காதல் தப்பில்லை.  சில சமயம் காதலிக்கிறவங்க தப்பா இருக்கிறதால காதலே தப்போன்னு தோணிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;காதல்ன்றது என்ன.  காதல் என்பது அன்பு.  ஆண் பெண் இருவருக்கு இடையே இருக்கக்கூடிய அதீத அன்பு.  தங்கள் வாழ்வின் கடைசி நிமிடம் வரை காதலிக்கப்படுபவர்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள்.  ஆனால் நடைமுறையில் காதல் ஏதேனும் ஒரு கட்டத்தில் காலாவதியாகிவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் பணத்தையோ இல்லை அழகையோ பார்த்து வந்தா அது காதல் இல்லை.&lt;br /&gt;அந்த காதல்ல எதிர்பார்ப்பு மட்டும் இருக்குமே தவிர அன்பு இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையான காதல் என்பது எந்த காதலில் காதலன் அல்லது காதலியின் தோளில் சாய்ந்து அழ முடியுமோ அந்த காதல்தான்.&lt;br /&gt;பொய்யான காதல் வாழ்வின் தோல்வியின் போது நம்மை விட்டு வெகுதூரம் சென்றுவிடும்.  &lt;br /&gt;&lt;br /&gt;காதலியுங்க.  அன்பைத் தேடி காதலியுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;நாம மறுத்தாலும் வெறுத்தாலும் ஒதுக்கினாலும் இந்த உலகம் இருக்கிற வரைக்கும் காதல் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல காதல் இருக்கிற வரைக்கும்தான் இந்த உலகமும் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;காதலர் தின வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;(எச்சரிக்கை:  காதல் மனநலத்திற்கு தீங்கானது.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-5073886447727304213?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/5073886447727304213/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=5073886447727304213' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/5073886447727304213'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/5073886447727304213'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2008/02/blog-post_13.html' title='மனுசப்பயலுங்க ஏன் காதலிக்க வேணும்'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-7954787691325517986</id><published>2008-02-11T19:37:00.000-08:00</published><updated>2008-02-11T19:40:13.016-08:00</updated><title type='text'>காதல் என்பது வெங்காயம்....</title><content type='html'>கண்டவுடன் காதல்.&lt;br /&gt;அழகான வானவில்.&lt;br /&gt;மழைநின்றதும் மறைந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;----------------&lt;br /&gt;&lt;br /&gt;காதல் ஒரு வெங்காயம்.&lt;br /&gt;உரித்தால் ஒன்றுமில்லை.&lt;br /&gt;வெட்டினால் கண்ணீர் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;---------&lt;br /&gt;&lt;br /&gt;காதலுக்காக உயிர் கொடுப்பேனென்றாய்.&lt;br /&gt;வேண்டாம்.&lt;br /&gt;எனது உயிரை எடுக்காமல் இருந்தால் போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;----------&lt;br /&gt;&lt;br /&gt;காதலிப்பது&lt;br /&gt;அறிவோடு யோசிப்பது.&lt;br /&gt;இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;---------&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையான காதல் என்பது பேய் பிசாசை போல&lt;br /&gt;எல்லோரும் அதைப்பற்றி பேசுகிறோம்.&lt;br /&gt;யாராவது ஓரிருவர்தான் அதைப் பார்த்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;---------&lt;br /&gt;&lt;br /&gt;காதலில்லாத வாழ்க்கை வெறுமையானது.&lt;br /&gt;ஆனால் காதலை விட அந்த வெறுமை மிக மேலானது.&lt;br /&gt;&lt;br /&gt;----------&lt;br /&gt;&lt;br /&gt;காதலென்பது ஒரு புதைகுழி.&lt;br /&gt;எத்துணை ஆழம் நாம் அதில் இறங்குகிறோமோ&lt;br /&gt;அத்துணை கடினம் அதிலிருந்து வெளியேறுவது. &lt;br /&gt;&lt;br /&gt;----------&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தின் காதல்கள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றன.&lt;br /&gt;பெரும்பாலானவை கல்யாணத்தில் முடிவதில்லை.&lt;br /&gt;மற்றவை கல்யாணத்தோடு முடிந்து போகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காதலுக்கு கண்ணில்லை.&lt;br /&gt;கண்மூடி கிடக்கும் வரை அது நீடிக்கிறது.&lt;br /&gt;கண்திறந்தால் காணாமல் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;------------&lt;br /&gt;&lt;br /&gt;காதல் ஒரு கவசம்.&lt;br /&gt;மனிதம் அதற்குள்தான் தன் காமத்தை மறைத்து வைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காதலில்லாத காமம் சாத்தியம்.&lt;br /&gt;காமமில்லாத காதல் ????&lt;br /&gt;&lt;br /&gt;-------------&lt;br /&gt;&lt;br /&gt;காதல் கணத்தில் தோன்றுகிறது.&lt;br /&gt;நாட்கள் செல்ல வெளிப்படுகிறது.&lt;br /&gt;மாதங்கள் வருடங்களில் வளர்கிறது.&lt;br /&gt;மறக்கப்படுவதற்கு ஒரு வாழ்க்கையை எடுத்துக் கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;----------&lt;br /&gt;&lt;br /&gt;பிப்ரவரி 14&lt;br /&gt;இன்னுமோர் முட்டாள்கள் தினம்.&lt;br /&gt;&lt;br /&gt;---------&lt;br /&gt;&lt;br /&gt;காதல் என்பது கடவுள்.&lt;br /&gt;நான் நாத்திகவாதி.&lt;br /&gt;இரண்டையுமே நம்புவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;--------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-7954787691325517986?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/7954787691325517986/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=7954787691325517986' title='28 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/7954787691325517986'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/7954787691325517986'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2008/02/blog-post_11.html' title='காதல் என்பது வெங்காயம்....'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>28</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-5111535539595977004</id><published>2008-02-04T09:43:00.000-08:00</published><updated>2008-02-04T09:50:05.221-08:00</updated><title type='text'>எனது தற்கொலை பற்றிய தகவல்...</title><content type='html'>அன்புள்ள நட்புக்கு&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய தினம் நான் மரணிக்கவிருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எத்துணை பேருக்கு தனது மரணத்தை பிறருக்கு அறிவித்து விட்டு மரணிக்கும் பேறு கிடைக்கும் என்று தெரியவில்லை.  சொல்லி விட்டு விடைபெறும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்.  நான் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிர்ச்சி வேண்டாம்.  பிறப்பு போல் இறப்பும் இந்த புவியில் மிக சகஜமானதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன இறப்பை எல்லோரும் விரும்புவதில்லை.  ஆனால் நான் விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வில் நான் அனைத்தையும் கடந்து வந்திருக்கிறேன்.  சுகங்கள் சோகங்கள் அனைத்தையும்.&lt;br /&gt;&lt;br /&gt;சோகங்கள் வந்தபோதும் சில பற்றுக்கோடுகள் இருந்ததால் இதற்குமுன் எளிதில் அதை கடந்து வந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தருணத்தில் எனது பற்றுக்கோடுகள் அனைத்தும் உடைந்து விட்டதாய் உணருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது வாழ்வின் மகிழ்ச்சிகள் தொலைந்து போயுள்ளன.  எதுவுமே எனக்கு மகிழ்ச்சி தருவதாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தருணத்தில் இது நிகழ்ந்தது என்பதை நான் அறிவேன்.  அது எனது வாழ்வின் சோகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று என்னைச் சுற்றி தனிமை மட்டும் மிஞ்சியிருக்கிறது.  ஆயிரம் பேர்களுக்கு மத்தியில் இருந்தாலும் தனிமையை மட்டுமே உணர்கிறேன்.  அது மிக கொடுமையாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இருத்தலின் இறத்தல் நன்று என்று உணர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி எதுவும் எனது முடிவை மாற்ற முடியாது என்ற நிலையில் இந்த மின்னஞ்சலை எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய தினம் மாலை 6 மணியளவில் இவ்வுலகை துறக்கிறேன்.  நான் யார் என்பதை அறிய முயல வேண்டாம்.  என் மரண செய்தி எட்டும் போது நான் யார் என்பது தெரிய வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லாமல் போவதில் எனக்கு உடன்பாடில்லை என்பதால்தான் இந்த மின்னஞ்சல்.   &lt;br /&gt;&lt;br /&gt;போகிறேன் எனது மரணத்தில் வாழ்வு முழுமையடைந்தது என்ற மகிழ்வுடன்.   &lt;br /&gt;&lt;br /&gt;---பெயர் தெரிவிக்க விரும்பாத நண்பன்.&lt;br /&gt;&lt;br /&gt;----------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திகைப்படைந்திருந்த ஷங்கரை மாலு உலுப்பினாள்.  "என்னாச்சு".&lt;br /&gt;&lt;br /&gt;"நீயே படி."  படித்தவள் தானும் அதிர்ச்சியானாள்.   "இது.. இது..".&lt;br /&gt;&lt;br /&gt;"யார்னு தெரியலை...  மெயில் ஐடி abcdef1234@gmail.com.  னு இருக்கு.  இந்த மெயில் அனுப்பறதுக்காக புதுசா ஒரு மெயில் ஐடி திறந்திருக்கலாம்.  'எனது தற்கொலை பற்றிய தகவல்'   அப்படின்ற சப்ஜக்டோட வந்திருக்கு."&lt;br /&gt;&lt;br /&gt;"மெயில் படிச்சு பார்த்தாலே அதிர்ச்சியாயிருக்கு.  போகஸா இருக்குமா."&lt;br /&gt;&lt;br /&gt;"இருக்கும். இருக்கணும்.  ஆனா படிச்சு பார்த்தா அப்படி தோணலை.".&lt;br /&gt;&lt;br /&gt;"யாருன்னு கண்டுபிடிச்சு காப்பாத்த முடியாதா..."&lt;br /&gt;&lt;br /&gt;"உலகத்தோட எந்த மூலையில இருந்தும் வந்திருக்கலாம்.   ஐ.பி. அட்ரசை வெச்சு கண்டு பிடிக்கலாம்.  மணி இப்ப மதியம் 3.   நமக்கு இன்னும் மூணு மணிநேரம்தான் இருக்கு."&lt;br /&gt;&lt;br /&gt;"to, cc யில இருக்க பெயர்களை வெச்சு.  யார் யாருக்கெல்லாம் காமன் ஃபிரெண்டுன்னு பார்த்து கண்டுபிடிக்கலாமா."&lt;br /&gt;&lt;br /&gt;"பார்த்துட்டேன்.  எல்லா மெயிலும் bcc யில போட்டு மெயில் அனுப்பியிருக்கணும்."&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.பி. அட்ரசை கண்டுபிடிக்கும் முயற்சிகளை மேற்கொண்டார்கள்.  மின்னஞ்சல் எக்மோரில் இன்டர்னெட் மையத்திலிருந்து வந்ததாக தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் அந்த இணைய மையத்தை அடைந்த போது நேரம் 4:45.&lt;br /&gt;&lt;br /&gt;"எக்ஸ்கியூஸ் மி.  மதியம் இங்க இருந்து 2:30 மணிக்கு எனக்கு ஒரு மெயில் வந்தது.  அனுப்பினவரை பத்தி தெரிஞ்சுக்க முடியுமா."&lt;br /&gt;&lt;br /&gt;"எத்தனையோ பேர் வர்றாங்க.  போறாங்க.  ஃபுளோட்டிங் பாப்புலேசன் இங்க அதிகம் சார்.  ஏதாவது அடையாளம் சொல்லுங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த மெயில்ல நான் தற்கொலை செய்துக்க போகிறேன்னு இருந்தது."&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த பைத்தியமா இருக்கும்.  மதியம் ஒரு பைத்தியம் சார்.  பார்த்தா பைத்தியம்னே தெரியாது.  பிரெளஸ் செஞ்சிட்டிருந்தது.  கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில இருந்து வந்து பிடிச்சுட்டு போனாங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"தாங்ஸ்." அங்கிருந்து கிளம்பினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு வேளை அந்த பைத்தியம்தான் மெயில் அனுப்பியிருக்குமோ."  மாலு.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படித்தான் தோணுது. ஹாஸ்பிட்டல்ல விசாரிச்சுடலாம்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-----------------&lt;br /&gt;&lt;br /&gt;கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை.&lt;br /&gt;&lt;br /&gt;தலைமை மருத்துவரின் முன் அமர்ந்திருந்தனர் மாலுவும் ஷங்கரும்.&lt;br /&gt;&lt;br /&gt;"மிஸ்டர் ஷங்கர்.  உங்களுக்கு வந்த மெயிலை அனுப்பியது கதிரேசனேதான்."&lt;br /&gt;&lt;br /&gt;"கதிரேசன்."&lt;br /&gt;&lt;br /&gt;"எஸ்.  அவர் இங்க இருக்க ஒரு பைத்தியம்.  மதியம் தப்பிப்போய் இன்டர்நெட்ல இருந்து மெயில் அனுப்பியிருக்காரு.  எனக்கும் மெயில் வந்து இருக்கு."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ."&lt;br /&gt;&lt;br /&gt;"கவலைப்படாதீங்க அவரைப் பிடிச்சிட்டோம். இனி பயமில்லை."&lt;br /&gt;&lt;br /&gt;"தாங்ஸ் டாக்டர்.  ஆனா அவர் ஏன் இப்படி."&lt;br /&gt;&lt;br /&gt;"அவர் ஒரு மென்பொறியாளர்.  டைவர்ஸீ.   அவரது மனைவி பிரிஞ்சு போனது அவரை பெரிய அளவுல பாதிச்சு, அந்த அதிர்ச்சிகளால அவரது மனநிலை பாதிச்சுருக்கு.  தற்கொலைக்கு பலமுறை முயற்சி செய்து மத்தவங்க காப்பாத்தியிருக்காங்க.  ஒரு கட்டத்துல பேசறதையே நிறுத்தி மரம் மாதிரி ஆயிட்டார்.  அவரால யாருக்கும் பிரச்சனை இல்லை.   ஆனா பேசுறதை நிறுத்தி தன்னையே மறந்திட்ட அவரை குணப்படுத்தறதுக்காக உறவினர்களும் நண்பர்களுமா இங்க சேர்த்திருக்காங்க.   அவரோட ரெக்கார்ட்ஸ் படி இன்னைக்கு அவரோட திருமண நாள்.   தப்பிச்சு போனவரை கஷ்டப்பட்டு கொண்டு வந்து செடடிவ் கொடுத்து படுக்க வெச்சிருக்கோம்.  இனி பிரச்சனையில்லை."&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு எப்படி அவர்கிட்ட இருந்து மெயில்."&lt;br /&gt;&lt;br /&gt;"எங்க ரெக்கார்ட்ஸ் படி அவருக்கு துப்பறியும் கதைகள், நாவல்கள் பிடிக்கும். உங்க கதைகளை அவர் படிச்சிருக்கலாம்."&lt;br /&gt;&lt;br /&gt;"நல்லது டாக்டர்.  ப்ளீஸ்  டேக் கேர் ஆஃப் ஹிம்."&lt;br /&gt;&lt;br /&gt;தடால் என்ற சத்தம் கேட்டது.   கூச்சல் குழப்பங்கள்.  மூவருமாக வெளியே எட்டி பார்த்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"டாக்டர்.   கதிரேசன் ஐந்தாவது மாடியில இருந்து குதிச்சிட்டார்."   நர்ஸ் அலறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மூவரும் கீழிறங்கி ஓடினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு கதிரேசன் இரத்த வெள்ளத்தின் நடுவே பிணமாக.....&lt;br /&gt;&lt;br /&gt;ஷங்கர் தனது வாட்சை பார்த்தான்.   நேரம் மாலை 6:00.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-5111535539595977004?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/5111535539595977004/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=5111535539595977004' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/5111535539595977004'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/5111535539595977004'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2008/02/blog-post.html' title='எனது தற்கொலை பற்றிய தகவல்...'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-4202778363002077902</id><published>2008-01-31T10:48:00.000-08:00</published><updated>2008-01-31T10:52:38.286-08:00</updated><title type='text'>மீண்டும் சி.ஐ.டி. ஷங்கர் தோன்றும் "நடிகையின் அந்தரங்கம்".</title><content type='html'>(வாசகர்களுடைய பேராதரவை பெற்ற உலகபுகழ் துப்பறியும் சிங்கம் சி.ஐ.டி. ஷங்கர் இனி &lt;a href="http://araiblade.blogspot.com/2008/01/blog-post_30.html"&gt;துப்பறியமாட்டார் என்று அறிவித்திருந்தோம்&lt;/a&gt;.  இதை கண்டித்து வாசகர் கடிதங்கள் லட்சக்கணக்கில் குவிந்த வண்ணம் இருக்கின்றன.  இதில் ஒரு வாசகர் மீண்டும் ஷங்கருடைய துப்பறியும் கதைகள் வரவில்லையெனில் தீக்குளிப்பேன் என்று எழுதியிருந்தார்.  வாசகர்களுக்காக இதோ மீண்டும் வந்துவிட்டார் சி.ஐ.டி. ஷங்கர் - ஆசிரியர்.).&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன இது.?"  மாலு கோபத்துடன் செய்தித்தாளை வீசியெறிந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"உலகப்புகழ்பெற்ற சி.ஐ.டி. ஷங்கர் அவர்களின் துப்பறியும் நிறுவனம் புதிய இடத்திற்கு மாறியுள்ளது.  முகவரி  xxxxx.   போன் xxxxx.".  என்ற விளம்பரத்தை அவள் வட்டமிட்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே கோபத்தோடு ஷங்கரது கணினித்திரையை பார்த்தாள்.  "யோனி.  முலை.  ஆண்குறி."  போன்ற வார்த்தைகள் கணினித்திரையெங்கும் இறைந்து கிடந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆஃபீஸ்ல உட்கார்ந்து அந்த மாதிரி சைட் எல்லாம் வேற படிக்கறியா ?"  மேலும் கோபமானாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அச்சச்சோ.  இது தமிழ்மணம்.  தமிழ்பதிவு.  இலக்கிய தமிழ்.  பின் நவீனத்துவம்.  எக்ஸ்பிரசனிசம். நீ தப்பா புரிஞ்சுகிட்ட...."  குளறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த கண்றாவியை அப்புறம் வெச்சுக்கறேன்.  மொதல்ல இந்த கண்றாவிக்கு பதில் சொல்லு.  துப்பறியும் வேலை வேண்டாம்னு சொன்னேன் இல்லையா ?".&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம்.  ஆனா பாரு அப்பாவோட ட்ராவல் ஏஜென்சி போரடிக்குது.  வாழ்க்கையில த்ரில் வேண்டாமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அதுக்காக.".&lt;br /&gt;&lt;br /&gt;"பாரு பிசினசை நான் விடல.  துப்பறியும் தொழில் பார்ட் டைம்.  ட்ராவல் ஏஜென்சியோட அட்ரஸ்தான் அதுக்கும் கொடுத்திருக்கேன்."&lt;br /&gt;&lt;br /&gt;போன் அடித்தது.  எடுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஷங்கர் டிடக்டிவ் ஏஜென்சி."&lt;br /&gt;&lt;br /&gt;"எஸ்."&lt;br /&gt;&lt;br /&gt;"சார். எங்க வீட்டு செப்டிக் டாங்க் அடைச்சிருச்சி.  எங்க அடைச்சிருக்குன்னு துப்பறிஞ்சு சொல்றீங்களா."&lt;br /&gt;&lt;br /&gt;"வையா.  போனை."   வைத்தான்.   "ஹி.  ஹி.  ராங் நம்பர்."  அவளிடம் வழிந்தான்.  நல்ல வேளை போன்ல அவன் பேசுனதை அவ கேட்டிருக்க மாட்டா என்று சமாதானமானான்.&lt;br /&gt;&lt;br /&gt;"மாலு.  நான்தான் பார்ட் டைம்னு சொல்றனே.  கன்சிடர் பண்ணேன்.  நீயும் வழக்கம் போல எனக்கு அசிஸ்டண்ட்டா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்.".&lt;br /&gt;&lt;br /&gt;பார்ட் டைம் என்பதில் அவள் சமாதானம் ஆனாள்.  "வேற வழி.  பேயை காதலிச்சா முருங்கை மரம் ஏறித்தான் ஆகணும்.  இருந்து தொலைக்கிறேன்.".&lt;br /&gt;&lt;br /&gt;"தாங்ஸ் மாலு."  வழிந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதுதான் அவன் வந்தான்.   வயது 35 இருக்கும்.  &lt;br /&gt;&lt;br /&gt;"சார் உள்ளே வரலாமா ?"&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க ?".&lt;br /&gt;&lt;br /&gt;"நேனு எர்ரபள்ளி வெங்கடநாராயண ஸ்ரீனிவாச காந்திகிருஷ்ண ரெட்டி.  நீங்கதானே தி ஃபேமஸ் டிடக்டிவ் ஷங்கர்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா.  வாங்க ரெட்டி."&lt;br /&gt;&lt;br /&gt;ரெட்டி நாற்காலியில் அமர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லுங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"சார்.  பெரிய மனசு பண்ணி என்னோட கேசை எடுத்துக்கணும்."&lt;br /&gt;&lt;br /&gt;ஷங்கர் மாலுவை பார்த்து கண்சிமிட்டினான்.  பார்த்தாயா புது கேஸ் என்ற பெருமிதம் அதில் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"கேசை சொல்லுங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சொல்ல சாரே.  நான் ஒரு பாவப்பட்ட மனுச ஜன்மம்.  சினி இண்டஸ்ட்ரில கேட்டு பாருங்க.  நேனு எந்த பெரிய ஃபைனான்சியர்னு எல்லாரும் சொல்லுவாங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியா.  மேல சொல்லுங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுக்கு பப்பிஸ்ரீ தெரியுமில்லையா?"&lt;br /&gt;&lt;br /&gt;"கவர்ச்சிக்கன்னி பப்பிஸ்ரீயை தெரியாதவன் தமிழனே இல்லை சார்.".&lt;br /&gt;&lt;br /&gt;"அவளேதான்.  அவ என்னுடைய பொண்டாட்டி."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ."&lt;br /&gt;&lt;br /&gt;"சீக்ரெட் மேரேஜ் சார்.  ஆந்திராவுலே விஜயவாடாவுல பெல்லி சேஸ்குன்னானு.  ஒரு வருசம் ஆகுது.  யாருக்கும் தெரியாது."&lt;br /&gt;&lt;br /&gt;"இண்ட்ரஸ்டிங்.  பப்பிஸ்ரீக்கு கல்யாணம் ஆயிருச்சா."&lt;br /&gt;&lt;br /&gt;"பாருங்க.  எங்க மேரேஜ் நல்லாதான் போயிட்டிருந்தது.   ஆனா பப்பிஸ்ரீக்கு திடீர்னு ஒரு பாய் ஃபிரெண்டு.  அவன் கூட சுத்துறா.  தப்பு பண்றா.  சொன்னா கேக்குறதில்லை.  நேனு எந்த பாதபட்குன்னானுன்னு மீக்கு தெள்ளிது சார்."&lt;br /&gt;&lt;br /&gt;"புரியுது.  இதுக்கு எங்க கிட்டே ஏன் வந்தீங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"நான் அவளை விவாகரத்து செய்யணும்.  அதுக்கு எனக்கு அவ தப்பா நடக்கிறான்றதுக்கான ஃப்ருஃப் வேணும். நீங்கதான் எனக்கு ஹெல்ப் செய்யணும். "&lt;br /&gt;&lt;br /&gt;ரெட்டி கதறி கதறி அழ ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"டேக் இட் ஈஸி ரெட்டி.  உங்க கேசை நாங்க எடுத்துக்கறோம்.  உங்க மனைவியை நாங்க வாட்ச் பண்றோம்.  உங்களுக்கு வேண்டிய ஃப்ரூஃப் இன்னும் ஒரு வாரத்துல உங்களுக்கு கொடுக்குறோம்."&lt;br /&gt;&lt;br /&gt;கதறி அழுத ரெட்டியை ஆறுதல் கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;-----------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;"மாலு என்னமோ சொன்னியே.  இங்க பார்த்தியா ரெட்டி மொத்த பேமண்ட்டையும் கேஷாவே கொடுத்துட்டு போயிருக்கான். பிஃப்டி தவுசண்டு."  ஷங்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;"அவன் கேட்ட ஆதாரம் எல்லாம்."  இது மாலு.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த ஷங்கரை யாருன்னு நினைச்சே.  சும்மா ஒரு வாரமா பப்பிஸ்ரீயை வாட்ச் பண்ணினேன்.   அவளும்  அவ பாய்ஃபிரண்டும் சோலா ஷெரட்டன்ல புக் பண்ணின ஓட்டல் ரூம்ல யாருக்கும் தெரியாம கேமராவை ஃபிக்ஸ் பண்ணினேன்.  தேவையான ஆதாரம் போட்டாவாவே கிடைச்சிருச்சி."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ."&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த போட்டோவெல்லாம் நீ பார்க்கலையே.  சும்மா கிளுகிளுப்பா இருந்தது.  மூணு நாள் முன்னாடிதான் ரெட்டி எல்லாத்தையும் வாங்கிகிட்டு போனான்.  இன்நேரம் ரெட்டி அதை தன் வக்கீல் கிட்ட கொடுத்து இருப்பான்.  அவனோட கேஸ் ஸ்ட்ராங்கா ஆயிருக்கும்.  நம்ம கேஸ் கிராண்ட் சக்சஸ்"&lt;br /&gt;&lt;br /&gt;"ப்ரில்லியண்ட்.  நான் ரிலேட்டிவ் மேரேஜ்காக போன இந்த ஒரு வாரத்துல நீ இவ்வளவையும் தனியாவே சாதிச்சு இருக்கியே".     அவனுக்கு வேண்டிய புத்துணர்வு டபுள் டோசாக அவன் கன்னத்தில் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"தட் ஈஸ் மை ஷங்கர்."&lt;br /&gt;&lt;br /&gt;"இட் ஈஸ் ஆல் இன் த கேம்."&lt;br /&gt;&lt;br /&gt;டெலிபோன் ஒலித்தது.  "அடுத்த கிளையண்டா இருக்கும்"  பெருமையாக ஷங்கர் போனை எடுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹல்லோ. டிடக்டிவ் ஷங்கர் ஸ்பீக்கிங்."&lt;br /&gt;&lt;br /&gt;"யோவ் உனக்கு அறிவிருக்கா ?"  மறுமுனையில் கோபமான பெண்குரல்.&lt;br /&gt;&lt;br /&gt;"மேடம்.  யார் நீங்க.  ராங் நம்பர்னு நினைக்கிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"கரெக்ட் நம்பர்தான்.  நான் பப்பிஸ்ரீ பேசுறேன்.  நீதானே ரெட்டிக்கு போட்டோ எடுத்து கொடுத்தது."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா.  உங்க கணவர் ரெட்டி உங்க நடத்தையில சந்தேகப்பட்டு ஆதாரம் கேட்டாரு.".&lt;br /&gt;&lt;br /&gt;"கணவனா.  அந்த ஆளு என்னோட மேனேஜரா இருந்தான்.  ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் வேலையை விட்டு துரத்தினேன்.  நான் கல்யாணம் பண்ணிக்க இருக்கிற என்னோட பாய் ஃபிரரெண்ட் கூட இருக்க போட்டோவை நீ அவனுக்கு எடுத்து கொடுத்திருக்கே."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆ..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாய்யா.  ரெட்டி அந்த போட்டோவை காண்பிச்சு வெளியிட்டுடுவேன்னு சொல்லி பிளாக் மெயில் பண்ணி அஞ்சு லட்சம் என்கிட்ட வாங்கிட்டான்.  சரி அஞ்சு லட்சத்தோட தொலையுதுன்னு கொடுத்து போட்டோவை வாங்கிட்டேன்.  அதுகூட விசிட்டிங் கார்ட்ல உன் அட்ரசும் போன் நம்பரும் இருந்தது."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆனா அந்த ராஸ்கல் இன்டர்நெட்ல வேற படத்தை போட்டு விட்டுட்டான்.   என் மானமே போச்சு."&lt;br /&gt;&lt;br /&gt;"சாரி. மேடம்."&lt;br /&gt;&lt;br /&gt;"சாரி. என்னய்யா. சாரி.  இன்னும் நாலு நாள்ல உனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;போனை வைத்துவிட்டாள்.  ஷங்கரும் மாலுவும் பேயறைந்தவர்கள் ஆனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;-------&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு நாட்கள் ஓடின.  ஷங்கர் வக்கீல் நோட்டீஸ் வரும் என்று பயந்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று டெலிபோன் மணியடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹல்லோ ஷங்கர்.  பப்பிஸ்ரீ இயர்."&lt;br /&gt;&lt;br /&gt;"மேடம். நீங்க வக்கீல் நோட்டீஸ்னு..."&lt;br /&gt;&lt;br /&gt;"பர்கெட் இட்.   இன்னைக்கு பேப்பர் பார்த்தியா.".  அவள் குரலில் மகிழ்ச்சி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சுருக்கமான செய்தி: புகைப்படத்தில் இருப்பது நானல்ல -  பப்பிஸ்ரீ மறுப்பு.   டூப்பாகவோ அல்லது ஒட்டு வேலையாகவோ இருக்கும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.  உடன் இருக்கும் நபர் யார் என்றே தெரியாது என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"உன் மேல கேஸ் போட்டா அந்த ஃபோட்டோவில இருக்கிறது நான்தான்னு நானே ஒத்துக்கிட்ட மாதிரி இருக்கும்னு வக்கீல் சொன்னார்.  நான் கேஸ் எதுவும் போடலை."&lt;br /&gt;&lt;br /&gt;"தாங்ஸ் மேடம்."&lt;br /&gt;&lt;br /&gt;"நான் தான் உங்களுக்கு தாங்ஸ் சொல்லணும் ஷங்கர்.  தமிழ்ல படமே இல்லாம மலையாளத்துல மட்டும் பண்ணிட்டு இருந்தேன்.  இந்த மேட்டர் வந்ததுல நாலு தமிழ் படம் புக் ஆகியிருக்கு."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ. கங்கிராட்ஸ் மேடம்.".&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்களும் இதை பத்தி யாருகிட்டயும் மூச்சு விடாதீங்க.  முக்கியமா என் பாய் ஃபிரெண்ட் பத்தி.  நாங்க ஒரு இரண்டு வருசம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம்."&lt;br /&gt;&lt;br /&gt;"வெரி நைஸ் ஆஃப் யூ மேடம்.  நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"தாங்ஸ்"  அவள் போனை வைத்து விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பாடா" நிம்மதி பெருமூச்சு விட்டனர் மாலுவும் ஷங்கரும்.&lt;br /&gt;&lt;br /&gt;(வாசகர்கள் சி.ஐ.டி. ஷங்கரின் இந்த சாகசத்தை ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.  இனி ஷங்கரும் மாலுவும் அவ்வப்போது வந்து தங்கள் சாகசத்தை நிகழ்த்துவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.  வாசகர்கள் யாரும் தீக்குளிக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.  - ஆசிரியர்.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-4202778363002077902?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/4202778363002077902/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=4202778363002077902' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/4202778363002077902'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/4202778363002077902'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2008/01/blog-post_31.html' title='மீண்டும் சி.ஐ.டி. ஷங்கர் தோன்றும் &quot;நடிகையின் அந்தரங்கம்&quot;.'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-4901570692701424575</id><published>2008-01-30T17:53:00.000-08:00</published><updated>2008-01-30T18:45:51.422-08:00</updated><title type='text'>என்ன எழவுடா இது ?</title><content type='html'>கோடம்பாக்கத்தின் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் முன் தனது பைக்கை ஸ்டாண்டினான் ஷங்கர்.  உலகமே நமது கதாநாயகன் சி.ஐ.டி. ஷங்கரைப் பற்றி அறியும் என்பதால் அவனை பற்றிய வர்ணனைகளை வெட்டிவிட்டு ஓவர் டு மாலினி. மாலு அலையஸ் மாலினி நமது கதாநாயகனின் அசிஸ்டண்ட்.  சேர்ந்து நான்கு மாதம் ஆகிறது.  நீல ஜீன்ஸ் கால்சட்டையும் வெள்ளை சட்டையும் போட்டு குதிரை வால் கொண்டையில் அழகாக இருந்தாள்.  மேலும் அந்த...  வேண்டாம்.  பேக் டு ஹீரோ.  &lt;br /&gt;&lt;br /&gt;ஷங்கர் அந்த குடியிருப்பை நோட்டமிட்டவனாக சிக்லெட்டை மெல்ல துவங்கினான்.  துப்பறியும் சிங்கம் ஷங்கருக்கு சிக்லெட் புத்துணர்வு தரும் என்பது உலகமறிந்த செய்தி.  (கதாநாயகர்கள் புகைப்பிடிக்கக் கூடாது என்பதால் நமது நாயகன் சிக்லெட்டுக்கு மாறிவிட்டான் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். - ஆசிரியர்.).&lt;br /&gt;&lt;br /&gt;"பாஸ். இந்த ஃப்ளாட்ஸ்லதானா ?"&lt;br /&gt;&lt;br /&gt;"எஸ் மாலு.  இந்த அசோசியேசன் செக்ரட்ரி நரேஷ் அய்யர்தான் கால் பண்ணியிருந்தார்.  ஒரு திருட்டு நடக்கிறதாவும் அதை கண்டு பிடிக்கணும்னும் சொன்னார்."&lt;br /&gt;&lt;br /&gt;"வாவ். நான் உங்க கிட்ட சேர்ந்து இந்த நாலு மாசத்துல முதல் கேஸ்.  திருட்டா ?  த்ரில்லிங்.".&lt;br /&gt;&lt;br /&gt;"முதல்ல இந்த பகுதியை நோட்டம் விட்டுக்கிட்டு அப்புறம் உள்ளே போவோம். "&lt;br /&gt;&lt;br /&gt;"பாஸ்.  இந்த நாலு மாசத்துல நீங்க எனக்கு சாலரியே கொடுத்ததில்லை.  ஆஃப்டர் திஸ் கேசாவது....".&lt;br /&gt;&lt;br /&gt;"யூ சில்லி.  யூ ஆர் நாட் ஜஸ்ட் மை அசிஸ்டன்ட்.  ஆல்சோ மை லவர்.  உனக்கு எதுக்கு சாலரி."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை.  என்னோட அப்பா கிட்ட நீங்க பெரிய துப்பறியும் புலின்னு சொல்லி வெச்சிருக்கேன்.  எத்தனை கேஸ் கண்டுபிடிச்சிருக்கீங்கன்னு கேக்குறார்.  அட்லீஸ்ட் அச்சீவ் சம்திங் இன் திஸ் கேஸ் ஃபார் அவர் லவ் சேக்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓக்கே. ஓக்கே.  குட் யூ ப்ளீஸ் கிவ் மி சம் எனர்ஜி பூஸ்ட்."&lt;br /&gt;&lt;br /&gt;"ப்ச்"  (சிக்லெட்டோடு இப்போது மாலுவின் முத்தமும் நமது நாயகனுக்கு புத்துணர்வு தருவது என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். - ஆர்.)&lt;br /&gt;&lt;br /&gt;இருவருமாக மாடியேறிச் சென்று "F" இலக்கமிட்ட வீட்டின் காலிங்பெல்லை அழுத்தினர்.&lt;br /&gt;ஒரு சொட்டைத் தலையர் எட்டிப் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"குட் மார்னிங். மிஸ்டர் ஐயர்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஐ அம் நாட் ஐயர்.  ஐயம் ஐயங்கார்."&lt;br /&gt;&lt;br /&gt;"வாட்?"&lt;br /&gt;&lt;br /&gt;"நான் ஐயங்காராக இருப்பதில் பெருமிதம் அடைகிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன எழவுடா இது"  மனதுக்குள் நினைத்துக் கொண்டான் ஷங்கர்.  "மிஸ்டர்  நரேஷ் ஐயர்......"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ.  அவரா.  அவர் எதிர்ல F."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆனா இதுதானே F".&lt;br /&gt;&lt;br /&gt;"இது E.   எழுத்தோட கால் உடைஞ்சிருச்சி."  மாலு தலையிலடித்துக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;--------------&lt;br /&gt;&lt;br /&gt;"கம் இன் மிஸ்டர் ஷங்கர்.  ஐ அம் நரேஷ் ஐயர்.  செக்ரட்ரி ஃபார் திஸ் ரெசிடென்சியல் அப்பாரட்மெண்ட்ஸ்."&lt;br /&gt;&lt;br /&gt;நரேஷ் ஐயர் அவர்களை வரவேற்றார்.  "ப்ளீஸ் பீ சீட்டட்."  அமர்ந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"மிஸ்டர் நரேஷ்  இங்க திருட்டு போறதா சொல்லியிருந்தீங்க இல்லையா."&lt;br /&gt;&lt;br /&gt;"எஸ்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஐ அப்சர்வ்டு தி திங்ஸ் அரவுண்டு.   ப்ராக்சிமிட்டி ஆஃப் அதர் பில்டிங்ஸ்.  யூ ஹவ் ஏ வாட்ச்மேன் அரவுண்ட் தி கிளாக்.  பட் ஸ்டில் திருட்டு போகுதுன்னா... ஐ திங்க் திருடன் பக்கத்து பில்டிங்ல இருந்து கயிறு மூலமா உங்க பில்டிங்குக்கு வந்து திருடியிருக்கலாம்."&lt;br /&gt;&lt;br /&gt;"நோ.  நோ.  யூ ஆர் மிஸ்டேகன்."&lt;br /&gt;&lt;br /&gt;"மே பி.  ஐ ஜஸ்ட் சஜஸ்டட் எ பாசிபிலிட்டி.  எங்க என்ன என்ன வேல்யபிள்ஸ் ஜிவல்லரீஸ் திருட்டு போச்சுன்னு சொல்றீங்களா."&lt;br /&gt;&lt;br /&gt;"நான் உங்களை வரச்சொன்னது வேற ஒரு திருட்டுக்கு.  தண்ணி திருட்டு."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னது."&lt;br /&gt;&lt;br /&gt;"எஸ்.  வாட்டர்.  யூ சீ.    இந்த ஃப்ளாட்ஸ்க்காக டெய்லி ஒரு வாட்டர் லாரி ஃபுல்லா தண்ணி கொண்டு வந்து பேஸ்மண்ட் டேங்க் ஃபில் பண்றோம்.  அதுதான் திருட்டு போகுது."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ"  (என்ன எழவுடா இது.  திரும்பவும் மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.).&lt;br /&gt;&lt;br /&gt;"காலையில 6 ஓ க்ளாக் ஃபில் பண்ற வாட்டர் மதியம் 12 ஓ க்ளாக்குக்குள்ள காணாம போயிடுது.  யூ ஹவ் டு இன்வஸ்டிகேட் திஸ்."&lt;br /&gt;&lt;br /&gt;"தண்ணிதானே சார்.  இதுக்கு போய் இன்வஸ்டிகேஷன் எல்லாம்."&lt;br /&gt;&lt;br /&gt;"நோ. நோ.  யூ சீ.  ஹவ் காஸ்ட்லி தி வாட்டர் ஈஸ்.  500 ருப்பீஸ் ஃபார் ஒன் ட்ரிப் இன் லாரி.  அண்டு ஐ அம் தி ஆன்சரபிள் செக்ரட்ரி."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓக்கே.  யாராவது அதிகமா யூஸ் பண்ணி காலியாகியிருக்கும்.".&lt;br /&gt;&lt;br /&gt;"நோ. இட் ஈஸ் நாட் யூஸ்டு டு பி லைக் திஸ்.  லாஸ்ட் ஒன் வீக்காகத்தான் இப்படி ஆகுது."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓக்கே சார்.  வீ வில் ஹவ் யுவர் கேஸ்".  மாலு அறிவித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"மாலு" என்று துவங்கிய ஷங்கரை கண்களால் அடக்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"தாங்ஸ்.  ஹோப் யூ வில் ஃபைன்ட் இட் அவுட்.  எனக்கு ஆஃபிஸ் போகணும்.  ஐ வில் பி பேக் பை ஃபைவ் இன் த ஈவினிங்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓக்கே சார்.  வீ வில் ஹேங்க் அரவுண்ட் அண்டு வில் ஃபைன்ட் இட் ஃபார் யூ.".&lt;br /&gt;&lt;br /&gt;அவர் கிளம்பி சென்றார்.  &lt;br /&gt;&lt;br /&gt;"ஓழுங்கா இந்த கேசையாவது கண்டுபிடிங்க."  என்ற மாலுவை ஷங்கர் பரிதாபமாக பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;---------------------&lt;br /&gt;&lt;br /&gt;மாலை திரும்பிய நரேஷை மகிழ்ச்சியோடு வரவேற்றது நமது துப்பறியும் ஜோடி.&lt;br /&gt;&lt;br /&gt;"சார். வீ ஹவ் ஃபைன்ட் இட் ஃபார் யூ.".  ஷங்கர் அறிவித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ரியலி."&lt;br /&gt;&lt;br /&gt;"இட் ஈஸ் யுவர் வாட்ச்மேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ."&lt;br /&gt;&lt;br /&gt;"வீ வாட்ச்டு. அந்த காவல்கார கிழவன் 11 மணியிலிருந்து 12 மணி வரைக்கும் தொட்டி தண்ணியையும் வெறும் மண் தரையில ஊற்றி காலி செஞ்சுட்டான்."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியா."&lt;br /&gt;&lt;br /&gt;"ஸீ.  போட்டோ ஃப்ரூப்.   வீ ஹவ் டேக்கன் பிக்சர்ஸ் ஆஃப் ஹிம் இன் ஆக்சன்."&lt;br /&gt;போட்டோக்களை நரேஷ் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"பைத்தியக்காரத்தனமா இருக்கு.  வெறும் தரையில தண்ணிய இறைச்சுக்கிட்டு."&lt;br /&gt;&lt;br /&gt;"ஐ திங்க் ஹி மஸ்ட் பி எ சைக்கோ."&lt;br /&gt;&lt;br /&gt;"முனுசாமி..."  &lt;br /&gt;அந்த காவல் கிழவன் பம்மியபடி வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன இது.  நீ ஏன் தண்ணியை இப்படி வீணடிச்சு இருக்க."&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயா செக்ரட்ரி அம்மாதான்..."&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மாவா..."&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா உங்க கிட்ட சொல்லலீங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"வாட் தி ஹெல் ஈஸ் கோயிங் ஆன் ஹியர்."  வெளியேயிருந்து உள்ளே நுழைந்த அவள் மிஸஸ் ஷீலா அய்யர் வைஃப் ஆஃப் மிஸ்டர் நரேஷ் ஐயர்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஸீ திஸ் பிக்சர்ஸ் ஃபார் யுவர் செல்ஃப்."  ஐயர் போட்டோக்களை அவளிடம் நீட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"எஸ்.  ஃபார் அவர் ரெசிடென்ஸ் உமென்ஸ் அசோஷியேசன் வீ நீட் எ பேட்மின்டன்ட் கோர்ட் வித் கிராஸ்.  நான்தான் முனுசாமியை லான்ல புல் வளரட்டும்னு தண்ணி விட சொன்னேன்.   வை யூ பிக்சர்டு இட்?"&lt;br /&gt;&lt;br /&gt;"நத்திங்."  நரேஷ் அய்யர் மென்று முழுங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"புல்ஷிட்."  அவள் போய்விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"சாரி. "  நரேஷ் அய்யர் நமது ஜோடியிடம் மென்று முழுங்கினார்.&lt;br /&gt;"ஆக்சுவலி எங்களுக்குள்ள பத்து நாளா சண்டை. நாங்க பேசிக்கிறது இல்லை.  அதுல அவ எங்கிட்ட சொல்லாம விட்டுட்டா போல.  ஐ அம் ரியலி சாரி."&lt;br /&gt;&lt;br /&gt;"நோ பிராப்ளம் சார்.  இட் ஈஸ் ஆல் இன் த கேம்."&lt;br /&gt;&lt;br /&gt;நமது ஜோடி சோகமாக வெளியேறியது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஷங்கர் இனியும் இந்த துப்பறியற வேலை உங்களுக்கு தேவையா.  ப்ளீஸ் ஜாயின் த பிசினஸ் ஆஃப் யுவர் டாட்.  அட்லீஸ்ட் ஃபார் அவர் லவ் சேக்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓக்கே". ஷங்கர் தலையாட்டினான். &lt;br /&gt;&lt;br /&gt;"தட் ஈஸ் நைஸ் ஆஃப் யூ."..... "ப்ச்ச்ச்"  இன்னொரு முறை புத்துணர்வு கிடைத்தாலும் ஷங்கர் இனி எதையும் கண்டு பிடிக்கப்போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;(இவ்வாறாக அகில உலக புகழ்பெற்ற நமது கதாநாயகன் ஷங்கர் தனது துப்பறியும் தொழிலை விட்டு விட்டதால் இனி அவரது துப்பறியும் கதைகள் இடம் பெறாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். - ஆசிரியர்.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-4901570692701424575?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/4901570692701424575/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=4901570692701424575' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/4901570692701424575'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/4901570692701424575'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2008/01/blog-post_30.html' title='என்ன எழவுடா இது ?'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-6850642458438476558</id><published>2008-01-29T13:04:00.000-08:00</published><updated>2008-01-29T13:22:02.288-08:00</updated><title type='text'>காந்தி என்றொரு மனிதன் இருந்தான்</title><content type='html'>கோட்சேவின் துப்பாக்கி குண்டுகள் காந்தியை துளைத்து 60 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. (ஜனவரி 30, 1948).  ஒரு தேசத்தின் தந்தை "மகாத்மா" என்று அழைக்கப்பட்ட மனிதரின் கொள்கைகளின் தாக்கங்கள் இன்றும் தொடர்கிறதா?  அல்லது இந்த தேசம் அதைக் கடந்துவிட்டதா.&lt;br /&gt;&lt;br /&gt;காந்தியின் குரல் வெறும் சுதந்திர போராட்ட குரலாக இருக்கவில்லை.  அது ஒரு சித்தாந்தத்தை தேடி நிறுவி அதன் மூலம் சுதந்திரம் நோக்கி என்று பயணித்தது.  "அகிம்சை"  மூலம் காந்தி சுதந்திரம் பெற்றுத்தந்தார் என்று நமது வரலாற்று பாடபுத்தகங்கள் படிப்பிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திரம் பெற்றுத்தந்தது "அகிம்சை வழி போராட்டங்கள்" மட்டுமல்ல.  பல காரணிகளில் அதுவும் ஒன்று என்றாலும் அதன் பங்கை மறுப்பதற்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய சூழலில் காந்திய தத்துவமான "அகிம்சை"  இன்னும் எடுபடக் கூடியதா ?&lt;br /&gt;&lt;br /&gt;காந்திய தத்துவார்த்த அரசியல்தான் என்ன.  அறவழி போராட்டங்கள், அனைவரையும் நேசித்தல்,  வன்முறையை எதிர்க்க அகிம்சை வழியில் போராட்டம்.  இவை இன்றும் செல்லுபடியாகுமா?&lt;br /&gt;&lt;br /&gt;"லகே ரஹோ முன்னா பாய்"  திரைப்படம் இந்த கேள்வியை என்னுள் கிளறிவிட்டது.  அடிதடியை தொழிலாக கொண்ட ஒருவன் காதலிக்காக காந்தியை உள்வாங்கி காந்தியவாதியாக மாறுகிறான்.  சமூகத்தின் சகல பிரச்சனைகளுக்கும் காந்திய முறையில் தீர்வு சொல்கிறான் வானொலியின் பண்பலையில்.&lt;br /&gt;தீர்வுகள் பலன் தருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;"எனது வாசலில் தினமும் பீடாவை துப்பிச் செல்லும் அடாவடியான பலவான் ஒருவனை என்ன செய்ய. அவனிடம் சண்டை போட்டு பீடாவை துப்பாதே என்று அடித்து சொல்லலாமா."&lt;br /&gt;"வேண்டாம்.  அவனிடம் இன்முகம் காட்டு.  அவன் துப்பிய இடத்தை இன்முகத்தோடு தூய்மை செய்."&lt;br /&gt;அவன் தினமும் துப்ப இவனும் இன்முகத்தோடு தூய்மை செய்கிறான்.&lt;br /&gt;ஒரு நாள் இரண்டு நாள் மூன்று நாள்,  அவன் துப்ப துப்ப இவனும் சிரித்தபடி தூய்மை செய்கிறான்.&lt;br /&gt;நான்காம் நாள்  துப்பியவன் உணர்ந்து துப்பாமல் மன்னிப்பு கோரி செல்கிறான்.&lt;br /&gt;காந்தியம் வெல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கன்னம் அறைந்தவனுக்கு மறு கன்னம் காட்டினால் அவன் வெட்கி திருந்துவான் என்பது காந்தியம்.&lt;br /&gt;இது எல்லா நிலைகளிலும் சாத்தியமா?  &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவன் தன் தினசரி வாழ்வில் தன்னை அறைபவர்க்கு மறுகன்னம் காட்டிக் கொண்டிருந்தால் வாழ முடியுமா. இரு கன்னத்திலும் மாறி மாறி அறைபடுபவன் என்ன செய்வான்?&lt;br /&gt;&lt;br /&gt;தினசரி வாழ்வில் காந்தியத்தின் சாத்தியம் காந்தியை போன்றோர்க்கு மட்டும்.  இத்துணை பெரிய மனிதர் இவ்வளவு பணிந்து வருகிறார் என்பதால் எதிராளியும்/அமைப்பும் பணிந்து போவான்/போகும்.&lt;br /&gt;அகிம்சை ஆயுதம் தனி நபர்களை பொறுத்தவரை, பலமுள்ளவர்கள் அல்லது தங்கள் பலத்தை நிரூபித்தவர்கள் ஆகியோருக்கு மட்டுமே சாத்தியமானது. பயன்தரக்கூடியது.&lt;br /&gt;புலி புலால் உணவை மறுதளித்தால் கவனிக்கப்படும்.  ஒரு மான் மறுதளித்தால் ?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சாதாரணன் ஏற்கனவே பணிந்து கிடப்பவன் இன்னும் பணிவதால் என்ன சாதிக்க முடியும்.  காணாமல்தான் போவான்.  &lt;br /&gt;இந்த திரைப்படத்திலும் ஏற்கனவே பெரிய ரெளடியாக இருப்பவன் பணிந்து காந்தியம் பேசுவதாலேயே சாதிக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;மிகச் சாதாரணன் வாழ்வில் காந்தியம் பயனற்றதே.&lt;br /&gt;எல்லோரும் காந்தியை தனிமனித வாழ்வில் பின்பற்றினால் என்ன ஆகும் ?&lt;br /&gt;வேர்க்கடலை வியாபாரம் நன்றாக ஆகும்.   (சொன்னவர் கண்ணதாசன் என்று நியாபகம்).&lt;br /&gt;&lt;br /&gt;காந்தி தன்னளவில் தன் கொள்கைகளை சோதித்து சத்திய சோதனையாக மேற்கொண்டார்.  அவர் அளவில் அது சரியே.  அவர் தனது சோதனைகளில் வென்றார் என்பதற்கு அவருக்கு பரிசாக கிடைத்த துப்பாக்கி குண்டுகளே சான்று.&lt;br /&gt;காந்தி மகாத்மா என்பதில் சந்தேகம் இல்லை. இது போன்று இன்னொரு மனிதர் பிறந்து வருதலும் சாத்தியமில்லை.  அவருடைய கொள்கைகள் அரசியலில் தூய்மையும் எளிமையும் நேர்மையையும் வலியுறுத்தியவை.  &lt;br /&gt;அவை சாதாரணன் தனிமனித வாழ்வில் கைக்கொள்ள வேண்டியவை அல்ல.  மக்கள் சேவைக்கென்று வரும் அரசியல்வாதிகள்/குழுக்கள் கைக்கொள்ள வேண்டியவை.  &lt;br /&gt;&lt;br /&gt;ஒற்றைச் சுள்ளி எளிதாக உடையும்.  கட்டுச் சுள்ளி எதிர்ப்பை தாங்கி நிற்கும்.  காந்தியவாதம் குழுக்களுக்கானது. சமூகம் குழுவாக இயங்கும் போது தனது துவேசங்களை களைந்து அகிம்சை வழியில் நடப்பதை உறுதி செய்வது.  இன்றைய நிலையில் கொள்கை/மத/இன/சாதி ரீதியாக ஒன்றுபட்டு வலிமை பெறும் குழுக்கள்/அவற்றின் எதிர்குழுக்கள் காந்தியத்தை/அகிம்சையை கட்டாயம் கைக்கொள்ள வேண்டும்.  அதுவே வன்முறைகளை தவிர்க்கும் வழியாக இருக்கும்.&lt;br /&gt;இன்றைய நிலையில் அரசியல் குழுக்கள்/கட்சிகளிடம் காந்தியவாதம் கவலைக்கிடமாகவே உள்ளது.&lt;br /&gt;அதற்காக காந்தியம் காலாவதியாகி விட்டதா என்றால் நிச்சயம் இல்லை.&lt;br /&gt;அது என்றும் இருக்கும்.&lt;br /&gt;குறைந்த பட்சம் அரசியல்வாதிகளிடம் முகமூடியாகவாவது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-6850642458438476558?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/6850642458438476558/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=6850642458438476558' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/6850642458438476558'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/6850642458438476558'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2008/01/blog-post_29.html' title='காந்தி என்றொரு மனிதன் இருந்தான்'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-1814021143778722086</id><published>2008-01-21T19:27:00.001-08:00</published><updated>2008-08-27T17:03:09.653-07:00</updated><title type='text'>"கார்"ட்டூன் ரத்னா........</title><content type='html'>&lt;a href="http://bp2.blogger.com/_uHlvUWLz62w/R5Vjysu5ehI/AAAAAAAAAGs/oAUvXfMzpbk/s1600-h/Bharath_ratna.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5158138670875245074" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_uHlvUWLz62w/R5Vjysu5ehI/AAAAAAAAAGs/oAUvXfMzpbk/s400/Bharath_ratna.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp1.blogger.com/_uHlvUWLz62w/R5Vjocu5egI/AAAAAAAAAGk/_si3bSa_tDs/s1600-h/ratna_ration.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5158138494781585922" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp1.blogger.com/_uHlvUWLz62w/R5Vjocu5egI/AAAAAAAAAGk/_si3bSa_tDs/s400/ratna_ration.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp1.blogger.com/_uHlvUWLz62w/R5Vjjcu5efI/AAAAAAAAAGc/T6D-8LQxkLQ/s1600-h/rahul_ratna.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5158138408882239986" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp1.blogger.com/_uHlvUWLz62w/R5Vjjcu5efI/AAAAAAAAAGc/T6D-8LQxkLQ/s400/rahul_ratna.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp0.blogger.com/_uHlvUWLz62w/R5VjFMu5edI/AAAAAAAAAGM/3cFB1Wy9EWs/s1600-h/half_lakh.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5158137889191197138" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_uHlvUWLz62w/R5VjFMu5edI/AAAAAAAAAGM/3cFB1Wy9EWs/s400/half_lakh.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;centre&gt;இது உங்கள் லட்ச ரூபாய் காரை இழுத்துச் செல்லும்.&lt;/centre&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;a href="http://bp1.blogger.com/_uHlvUWLz62w/R5Vi8cu5ecI/AAAAAAAAAGE/PfE3Mp-4Yq0/s1600-h/dad_car.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5158137738867341762" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp1.blogger.com/_uHlvUWLz62w/R5Vi8cu5ecI/AAAAAAAAAGE/PfE3Mp-4Yq0/s400/dad_car.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp0.blogger.com/_uHlvUWLz62w/R5VizMu5ebI/AAAAAAAAAF8/K3G6c5OBZ9c/s1600-h/car_rush.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5158137579953551794" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_uHlvUWLz62w/R5VizMu5ebI/AAAAAAAAAF8/K3G6c5OBZ9c/s400/car_rush.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp1.blogger.com/_uHlvUWLz62w/R5VjRcu5eeI/AAAAAAAAAGU/JjA5M85Nb7Q/s1600-h/traffic_jam.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5158138099644594658" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp1.blogger.com/_uHlvUWLz62w/R5VjRcu5eeI/AAAAAAAAAGU/JjA5M85Nb7Q/s400/traffic_jam.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;நன்றி: "மிட் டே"&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-1814021143778722086?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/1814021143778722086/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=1814021143778722086' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/1814021143778722086'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/1814021143778722086'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2008/01/blog-post_21.html' title='&quot;கார்&quot;ட்டூன் ரத்னா........'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp2.blogger.com/_uHlvUWLz62w/R5Vjysu5ehI/AAAAAAAAAGs/oAUvXfMzpbk/s72-c/Bharath_ratna.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-1569180491831493379</id><published>2008-01-17T18:11:00.000-08:00</published><updated>2008-01-17T18:38:16.195-08:00</updated><title type='text'>நீங்க காதலிச்சு இருக்கீங்களா  ???</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#000066;"&gt;"நீங்க காதலிச்சு இருக்கீங்களா". அதிகம் பழகாத ஒருவனிடம் இருந்து வரும் கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் அன்றுதான் சந்தித்திருந்தோம். செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் நடந்த பட்டிமன்றத்தில் எனது கல்லூரி சார்பில் கலந்துகொண்டு பேருந்தில் திருவண்ணாமலை திரும்பி கொண்டிருந்தேன்.&lt;br /&gt;(தலைப்பு பாரதிதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது தமிழா ? சமூக உணர்வா ? காதலா ? )&lt;br /&gt;எனது அருகில் அவன் அமர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க ரொம்ப நல்லா பேசினீங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"நன்றி. நீங்களும் ரொம்ப நல்லாவே பேசினீங்க கதிர்வேல். பாரதிதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது தமிழ்தான் அப்படின்னு நடுவர் தீர்ப்பு சொன்னார்னா அதுக்கு உங்க பேச்சு அப்புறம் வாதங்கள்தான் காரணம்."&lt;br /&gt;&lt;br /&gt;"நன்றிங்க." என்றான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;"கலைக்கல்லூரில என்ன படிக்கிறீங்க கதிர்."&lt;br /&gt;&lt;br /&gt;"தமிழ். BA. எனக்கு ஆச்சரியங்க. இஞ்சினியரிங் கல்லூரியில இருந்து வந்து பட்டிமன்றம் பேசுறீங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு ஆர்வம்தான்." சிரித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓடும் பேருந்தில் ஊர் போய் சேர இரண்டு மணி நேரம் இருக்க இன்னும் என்ன என்னமோ பேசினோம்.&lt;br /&gt;ப்ளஸ் டூ முடித்து தான் முதலில் ஆசிரியர் பயிற்சி முடித்ததாகவும், வேலைக்கு பதிந்து அது கிடைக்க ஐந்தாண்டுகள் ஆகலாம் என்பதால் இப்போது கல்லூரியில் சேர்ந்து தமிழ் படிப்பதாகவும் அவன் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;"பாரதிதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது காதலேன்னு நீங்க பேசுனது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. நல்ல நல்ல கவிதையெல்லாம் மேற்கோள் காட்டினீங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"பாரதிதாசனை காதல் கவிஞர்னு சொல்லுறது அபத்தம். தோற்கப் போகிற தலைப்புன்னு தெரியும். இருந்தாலும் கொடுத்த தலைப்பில்தானே பேசமுடியும்." சிரித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இருந்தாலும் அருமையாக பேசினீங்க. &lt;b&gt;காதலை பாடாத கவிஞன் இல்லை. காதலை பாடாதவன் கவிஞனே இல்லை.&lt;/b&gt; அப்படின்னு நீங்க சொன்னீங்க பாருங்க அதுக்கு கைவலிக்கிற அளவுக்கு நான் கைதட்டினேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"நன்றி. ஆனா என்னன்னா எனக்கு காதல் பிடிக்காது. தலைப்புக்காகத்தான் பேசினேன். எதிர்காலத்துல தமிழுக்கு எதாவது கஷ்டம் வந்து நான் கவிஞன் ஆனாக்கூட காதலை பாடத கவிஞனனாகத்தான் இருப்பேன்."&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதுதான் அந்த கேள்வியைக் கேட்டான். "நீங்க காதலிச்சு இருக்கீங்களா ?".&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை. படிக்கிற காலத்துல காதல்னு சொல்லிக்கிட்டு பொண்ணுங்க கிட்ட வழியறதும், அவங்களுக்கு லெட்டர் கொடுக்கிறதும். அவங்களுக்கு பாடிகார்டு மாதிரி பின்னாடியே போறதும். எனக்கு பிடிக்கிறதில்லை."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னை மாதிரியே யோசிச்சு இருக்கீங்க. என்னதான் நம்ம மனசு கல் கோட்டை மாதிரி இருந்தாலும் காதல் காத்து மாதிரி உள்ள நுழைஞ்சிடுது. அப்ப மனசு அலையடிச்ச மணல் கோட்டை மாதிரி கரைஞ்சு போயிடுது." கவிதையாய் பேசினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனையே பார்த்தேன். இப்போது நான் கேட்டேன். "நீங்க காதலிச்சு இருக்கீங்களா ?".&lt;br /&gt;&lt;br /&gt;"காதலிக்கப்பட்டிருக்கிறேன். காதலிப்பதை விட காதலிக்கப்படுவது சுகமானது."&lt;br /&gt;&lt;br /&gt;"இண்ட்ரஸ்டிங். சொல்லுங்களேன்." கேட்பதற்கு எனக்கு நேரமிருந்தது. பாதி தூரபயணம் மீதியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"இளவரசிகளை தேடிப்பிடித்து காதலிக்க நான் இளவரசன் இல்லைங்க. காதல்ன்றது எனக்கு வரமாயிருக்க முடியாது. சாபமாய்த்தான் இருக்கும். என்னுடைய அப்பா கூலி தொழிலாளி. அம்மா பீடி மண்டியில பீடி சுத்துறாங்க. மூணு தங்கச்சிங்க. நானும் லீவ் நாள்ள மண்டியில பீடி சுத்துவேன். கஷ்டத்திலதான் படிக்கிறேன். செலவு அதிகமில்லா அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில படிச்சிட்டேன். அதே மாதிரி ஒரு டிகிரி வேணும்னு அரசு கலைக் கல்லூரியில தமிழ் மூணாவது வருடம். நானெல்லாம் காதலிக்க முடியுமா சொல்லுங்க."&lt;br /&gt;&lt;br /&gt;அமைதியாயிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் தன் கதையை தொடர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"காதல் எப்ப வரும்னு நினைக்கிறீங்க. முதல் பார்வையிலேயே வருமா. இல்லை பழகி பார்த்து புரிஞ்சிகிட்ட பின்னாடி வருமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னை பொறுத்த வரைக்கும் முதல் பார்வையிலேயே ஏதாவது வந்தா அது பேரு காதல் இல்லை காமம். பழகி நல்லா தெரிஞ்சிகிட்ட பின்னாடி வந்தா அது சுயநலம்." நான் சொன்னதற்கு சிரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நிறைய பெண்கள் கிட்ட பழகறோம். ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கே தவிர அதை காதல்னு சொல்ல முடியறதில்லை. என்னுடைய வகுப்பில இருபது பெண்கள். எங்க துறையில முதலாமாண்டு இரண்டாமாண்டு எல்லாம் எடுத்துகிட்டா கூட ஒரு அறுபது பேராவது இருப்பாங்க. நான் கல்சுரல் செக்கரட்ரியா மற்ற துறையில இருக்கிறவங்க கிட்டயும் பழகுறேன். எப்படியும் நூறு பெண்கள் இருக்கிற சூழ்நிலையில எல்லார்கிட்டயும் பேச பழக இருந்தாலும் ஒரு தொலைவு இருக்கவே செய்யுது. அவங்க கிட்ட பேசும்போது ஒரு உதறல் கூட இருக்கும். நட்பு இருக்குமே தவிர காதல் எல்லாம் வந்ததில்லை. இந்த சிச்சுவேஷன்லதான் அந்த லெட்டர்."&lt;br /&gt;&lt;br /&gt;"லெட்டரா.."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா. காலேஜ் விட்டு வீடு கிளம்ப என்னுடைய சைக்கிளை எடுக்கறப்ப சைக்கிள் கேரியர்ல இருந்தது. அழகா இதயம் படம் போட்ட காகித உறை. யார் வெச்சிருப்பாங்கன்னு சுத்தி முத்தும் பார்த்தா யாரும் இல்லை."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்புறம். "&lt;br /&gt;&lt;br /&gt;"என்னுடைய பெயர் எழுதியிருந்த அந்த கவரை பிரிச்சு பார்க்கிறேன். அன்புள்ள கதிர்வேலுவுக்கு அப்படின்னு ஆரம்பிச்சு எழுதியிருந்தது."&lt;br /&gt;&lt;br /&gt;"ம்.."&lt;br /&gt;&lt;br /&gt;"நான் உங்களை மிகவும் விரும்புகிறேன். உங்கள் இனிய பேச்சு பழகும் விதம் எல்லாம் எனக்கு பிடித்திருக்கிறது. உங்களுடன் நட்பாக பழகிவிட்டு எப்படி காதலை சொல்வது என்று தெரியவில்லை. உங்கள் குடும்ப நிலையிலிருந்து உங்களை பற்றி எல்லாமே நான் அறிவேன். நீங்கள் என் காதலை நிராகரித்துவிட்டால் நமது நட்பும் உடன் சேர்ந்து உடைந்து விடும் என்பதால் மிகவும் தயங்குகிறேன். ஆனால் மனதிலுள்ள காதலை சொல்லாமலே வைத்திருக்க முடியுமா. சொல்லிவிடலாம் என்றுதான் இந்த கடிதம். இந்த கடிதத்தில் கூட என்னை வெளிப்படுத்திக் கொள்ள தயக்கமாகவே இருக்கிறது. எந்த தருணத்தில் உங்கள் மீது காதல் வந்தது என்று கூட எனக்கு தெரியவில்லை. எல்லோரிடமும் ஒரே மாதிரி பழகும் உங்களுக்கு என் மீது தனிப்பட்ட நேசமோ காதலே இருக்காது என்பதை நான் அறிவேன். ஒரு பெண்ணாக என்னுடைய காதலை என்னால் நேரடியாக சொல்ல முடியாது. அப்படி சொல்லி நிராகரிக்கப்பட்டுவிட்டால் அதை தாங்கும் சக்தி எனக்கு கிடையாது. என்னுடைய காதலை விவரித்து என்னால் இக்கடிதத்தில் முழுமையாக எழுதமுடியவில்லை. என்னுடைய காதல் விவரிக்க முடியாதது. என்னை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நாளைய தினம் பிப்ரவரி 14. நீங்கள் எனக்காக உங்களிடம் இருக்கும் பச்சை நிற சட்டையை அணிந்து கல்லூரிக்கு வந்தால் மிகவும் மகிழ்வேன். என்னுடைய தயக்கத்தை உதறி தங்களிடம் என் காதலை சொல்வேன். அப்படி நீங்கள் பச்சை சட்டையில் வராவிட்டால்... நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. ஆனால் உங்கள் நிலையறிந்து விலகிவிடுவேன். ஆனால் என் மனதில் உங்கள் மீதான காதல் அழியாத ஓவியமாக என்றும் இருக்கும். அப்படி நடக்கக்கூடாது என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். நாளைய தினத்திற்காக காத்திருக்கிறேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;காதலுடன்.... &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;அப்படின்னு எழுதியிருந்தது. யார் எழுதியதுன்னு தெரியலை."&lt;br /&gt;&lt;br /&gt;"அடுத்த நாள் பச்சை சட்டையில் போனீங்களா...".&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை. யாரோ விளையாடுறாங்கன்னு நினைச்சேன். ஆனா கடிதத்தை திரும்பி திரும்பி படிச்சு பார்த்தா விளையாட்டு இல்லைன்னு தோணிச்சு."&lt;br /&gt;&lt;br /&gt;"ம்.."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னுடைய நிலையில் காதலுக்கு எல்லாம் இடமில்லை. அடுத்த நாள் கருப்பு சட்டையில போனேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ."&lt;br /&gt;&lt;br /&gt;"இரண்டு நாள் கழிச்சு என்னுடைய சைக்கிள் கேரியர்ல இன்னொரு கடிதம்."&lt;br /&gt;&lt;br /&gt;"அதில என்ன இருந்தது.."&lt;br /&gt;&lt;br /&gt;"அன்பானவருக்கு... &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;எனது உள்ளம் உடைந்த நிலையில் எழுதுகிறேன். என் காதலை மறுக்க நீங்கள் பச்சை சட்டை அணியாமல் வந்திருக்கலாம். ஆனால் எனது மனதை உடைப்பது போல் ஏன் கருப்பு சட்டை அணிந்து வந்தீர்கள். எனது காதல் தோற்றாலும் இனியும் நான் உங்களிடம் எப்போதும் போல பழகுவேன். இனி எப்போதும் என்னுடைய காதலையோ என்னையோ நான் வெளிப்படுத்திக் கொள்ளப் போவதில்லை. யாரும் அறியாமல் என் மனதில் பூத்த இந்தக் காதல் யாரும் அறியாமல் என் மனதோடு காலத்திற்கும் இருந்து என் மரணத்தில்தான் மடியும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#cc0000;"&gt;நான் உங்களை &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#cc0000;"&gt;காதலித்தேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#cc0000;"&gt;காதலிக்கிறேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#cc0000;"&gt;காதலிப்பேன் காலமெல்லாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஆனால் அதை உங்களிடம் சொல்ல மாட்டேன். மேலே சிவப்பு வண்ணத்தில் இருப்பது மை அல்ல. என் இரத்தம். ஏனெனில் இந்தக் காதல் என் இரத்தத்தில் ஊறியது. இதை இரத்தத்தால் சொல்வது பொருத்தம் அல்லவா. என்னுள் சூல் கொண்டு கருவாகி உருவாகி கனிந்த காதலை அதற்கு உரியவரிடம் சொல்லி விட்டேன் என்ற திருப்தி ஒன்றே எனக்கு போதும். இனி உங்களுக்கு என் காதலால் தொல்லை தரமாட்டேன். நான் யார் என்பதை அறிய முயலவேண்டாம். என் கையெழுத்தை வைத்து என்னை கண்டுபிடிக்க முடியாது. மாற்றி எழுதியிருக்கிறேன். என்றும் நீங்கள் உங்கள் வாழ்வில் சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இறைவனிடத்தில் எந்த நாளும் உங்களுக்காக பிரார்த்திப்பேன். காதல் சிதைந்த நிலையில் மாறாத அன்புடன்... காதலை சுமக்கும் ஒருத்தி."&lt;br /&gt;&lt;br /&gt;"படிச்சதும் நான் பெரிய தப்பு செஞ்சிட்டனோன்னு தோணுச்சு. யாராயிருக்கும். இரத்தத்தால காதலை சொல்லி..... எவ்வளவு காதல் இருந்திருந்தா. தப்பு பண்ணிட்டேன். இந்த அளவுக்கு காதல் இருக்கிற பெண்ணை ஏமாத்திட்டேன் அப்படின்னு ஒரு குற்ற உணர்வு. இந்த காதலுக்கு பதிலா நான் என்ன தர முடியும். காதலை தவிர...."&lt;br /&gt;&lt;br /&gt;"யாருன்னு தெரிஞ்சதா."&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை. இந்த கடிதம் வந்து ஒரு மாசமாகுது. யாராயிருக்கும்னு முடிஞ்ச வரைக்கும் தேடிப்பார்த்துட்டேன். ஒரு நல்ல காதலை இழந்துட்டேன். இன்னிக்கு நீங்க காதலை பத்தி பேசினப்ப மனசு என்னமோ செஞ்சுது. உங்க கிட்ட சொல்லணும்னு தோணுச்சு."&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கிடையில் பெரும் மெளனம் நிலவியது. எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆனா. காதலைவிட காதலிக்கப்பட்டவனுடைய நலன் முக்கியம்னு அந்த பெண் தன்னை வெளிப்படுத்திக்காம விலகிட்டது என்னை பாதிச்சுருச்சு. என்னுடைய நட்பு வட்டத்தில் ஒரு பெண்தான்னு நல்லா தெரியுது. என்னுடன் நட்போட பழகிக்கிட்டுருக்கவங்கள்ல அவ யாரு அப்படின்னு நான் எப்படி தெரிஞ்சுக்கிறது. கல்லூரி முடிய இன்னும் ஒரு மாதம்தான் இருக்கு. அவளை எப்படியும் நான் கண்டுபிடிப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அவ யாரு எப்படியிருப்பா அப்படின்றது எனக்கு தெரியலை. ஆனா யாராயிருந்தாலும் இந்தக் காதல் இந்த அன்பு இழக்கப் படவேண்டிய ஒன்று இல்லை. இந்த அன்புக்காக எதுவும் செய்யலாம். அவளை கண்டுபிடிச்சு என் காதலை கட்டாயம் சொல்லுவேன்."&lt;br /&gt;&lt;br /&gt;பஸ் பேருந்து நிலையத்தை அடைந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"காதலிப்பதை விட காதலிக்கப்படுவது மிக சிறப்பானது. உங்க காதலை நீங்க கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்." விடைபெற்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது பயணம் முடிந்தது.  அவன் தன் காதலைத் தேடி முடிவுறதா அவன் பயணத்தில் பிரிந்து பயணித்தான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-1569180491831493379?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/1569180491831493379/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=1569180491831493379' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/1569180491831493379'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/1569180491831493379'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2008/01/blog-post_524.html' title='நீங்க காதலிச்சு இருக்கீங்களா  ???'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-6507257303624234638</id><published>2008-01-17T10:02:00.000-08:00</published><updated>2008-01-17T18:25:21.085-08:00</updated><title type='text'>நீங்க காதலிச்சு இருக்கீங்களா</title><content type='html'>&lt;p&gt;கதை முழுமை பெற்று &lt;a href="http://araiblade.blogspot.com/2008/01/blog-post_524.html"&gt;இங்கு&lt;/a&gt;  உள்ளது.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;பின்னூட்டி துரிதப்படுத்திய CVR, வெட்டி, கொத்தனாருக்கு நன்றி.   &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-6507257303624234638?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/6507257303624234638/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=6507257303624234638' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/6507257303624234638'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/6507257303624234638'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2008/01/blog-post_17.html' title='நீங்க காதலிச்சு இருக்கீங்களா'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-5304239716392500199</id><published>2008-01-15T18:52:00.000-08:00</published><updated>2008-01-15T19:50:31.250-08:00</updated><title type='text'>எயுதனதுல புட்சது</title><content type='html'>போன வருசத்துல நாம இன்னா எயுதிக்கிறமோ அதுல நமக்கு புட்சது இன்னான்னு சொல்லனுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு &lt;A href="http://surveysan.blogspot.com/2008/01/2007.html"&gt;விளையாட்டு&lt;/A&gt; ஓடிக்கினுகீது.  நண்பர் &lt;A href="http://vettipaiyal.blogspot.com/2008/01/blog-post_14.html"&gt;வெட்டியார்&lt;/A&gt; நம்மளையும் இதுல இயுத்து விட்டுட்டாரு.&lt;br /&gt;&lt;br /&gt;பதிவுலகத்துல நாம இன்னா எயுதி சாதிச்சோம் அப்படின்னு நினைச்சி பார்த்தா நாம இன்னும் இங்க இருக்கறதே சாதனைதான்னு தோணுது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னா எயுதிக்கிறோம்னு திரும்பி பார்த்தா... கதை எயுதி இருக்கிறோம்.  கவிஜ எயுதி இருக்கோம்.  சர்ச்சைய கிளப்புற விஷயத்தை அப்பப்ப தொட்டு இருக்கோம்.&lt;br /&gt;அப்புறம் இருக்கவே இருக்கு உப்புமா, ஜல்லி, மொக்கை எல்லாம்.  ரைட் சைடுல "ஏற்கனவே எயுதனது"ன்றதுக்கு அடியில எல்லாமே இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பி பார்த்தா குறுக்கால ஆறு மாசமா தலைமறைவா இருந்து கூட 64 பதிவு எயுதி இருக்கோம்ன்றது ஆச்சரியமாதான் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் புட்சதா எதாவது ஒண்ணு சொல்லணுமாமே. &lt;br /&gt;&lt;br /&gt;என்னான்ட ஒரு பிரச்சனை என்னன்னா ஒரு எழுத்தாளனா (!!) என்னோட பதிவு எல்லாமே எனக்கு பிடிக்கும்.  ஒரு விமர்சகனா என்னோட எந்த பதிவுமே எனக்கு பிடிக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி புட்சதா பதிவு சொல்லணும்னு வந்தாச்சு.   முட்டைய ஒடைக்காம ஆம்லெட் போட முடியுமா என்ன.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு காதல் கதைகள்லாம் பிடிக்காது.  ஆனா நானே காதல் கதை எழுதி இருக்கேன்றது எனக்கே ஆச்சரியம்.&lt;br /&gt;அந்த ஆச்சரியத்தையே இங்க சஜஸ்ட் பண்ணிடறேன்.&lt;br /&gt;&lt;A href="http://araiblade.blogspot.com/2007/11/blog-post_18.html"&gt;"கோடம்பாக்கத்தில் மிஸ்டர் ஷெர்லாக் ஹோம்ஸ்... "&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதிய பதிவர்கள் படித்திராத பட்சத்தில் எனது ஆல்டைம் ஃபேவரிட் காமெடி &lt;A href="http://araiblade.blogspot.com/2006/12/blog-post_06.html"&gt;.கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி - குறும்பான முழு நீள கதை&lt;/A&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் நகைச்சுவைக்காக..&lt;br /&gt;&lt;A href="http://araiblade.blogspot.com/2007/11/blog-post_21.html"&gt; மும்பை பெண்கள் அழகானவர்கள் !!!! &lt;/A&gt;.&lt;br /&gt;&lt;A href="http://araiblade.blogspot.com/2007/09/blog-post_24.html"&gt;ராமர் பாலம் - இடிக்காதிருக்க சூப்பர் மாற்று வழி &lt;/A&gt;.&lt;br /&gt;&lt;A href="http://araiblade.blogspot.com/2007/02/blog-post_19.html"&gt;  அமெரிக்காவில் கார் ஓட்ட லைசன்ஸ்.&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாலிக்கா என்ன...   அடுத்து மத்தவங்களை ஆட்டத்துக்கு கூப்பிடணுமாம்.&lt;br /&gt;தெரிஞ்சோ தெரியாமலோ அரைபிளேடு "ஆணியவாதி"  அப்படின்னு ஒரு இமேஜ் பில்ட் அப் ஆயிடுச்சி.&lt;br /&gt;அதை உடைக்க இந்த பொன்னான வாய்ப்பை பயன் படுத்திக்கலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆறு பெண் பதிவர்களை தங்கள் சிறந்த படைப்புகளை பகிர்ந்து கொள்ளுமாறு பணிவோடு அழைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;A href="http://shylajan.blogspot.com"&gt;ஷைலஜா.&lt;/A&gt;   (http://shylajan.blogspot.com)  -  (2007 ல் இவர் அதிகம் எழுதவில்லை. இப்போது மீண்டும் அதிகம் எழுதுகிறார். கவிதை பக்கங்கள்.)&lt;br /&gt;2. &lt;A href="http://engineer2207.blogspot.com"&gt;மை ஃபிரண்ட்&lt;/A&gt;  (http://engineer2207.blogspot.com/)  -  (பதிவுகளை விட பின்னூட்டங்களில் இவரை அதிகம் படித்திருக்கிறேன்.  சிறந்த பதிவை படிக்க தர கோருகிறேன்)&lt;br /&gt;3.  &lt;A href="http://gayatri8782.blogspot.com"&gt;காயத்ரி&lt;/A&gt;  (http://gayatri8782.blogspot.com) - (கவிதாயினி.  76 கவிதைகள் இவரது பக்கத்தில் இருக்கிறது.  எனக்கு கவிதை பயம். அதுவும் பெண் எழுதிய கவிதை என்றால் சுத்த அலர்ஜி.  தங்களுடைய சிறந்த கவிதையை பகிர்ந்து எனது கவிதை பயத்தை போக்க தங்களை கேட்டுக்கொள்கிறேன்.)&lt;br /&gt;4. &lt;A href="http://tamilkkalvi.blogspot.com"&gt;ப்ரியா வேங்கடகிருஷ்ணன்&lt;/A&gt;  (http://tamilkkalvi.blogspot.com/)  (இவர் நட்சத்திரமானதும்தான் முதல் தடவையாக வாசித்தேன்.  ஆச்சரியமூட்டும் தமிழார்வம்.  2007 இல் அதிகம் எழுதவில்லை.  தமிழை நிறைய எழுதவும் இதுவரை தான் எழுதியதை பகிர்ந்து கொள்ளவும் இவரை கேட்டுக்கொள்கிறேன்.)&lt;br /&gt;5. &lt;A href="http://thooya.blogspot.com"&gt;தூயா.&lt;/A&gt;  (http://thooya.blogspot.com)  -  (இவரது சமையல்கட்டு பக்கங்களை பார்த்து சில சமையல் குறிப்புகளை முயன்றுள்ளேன்.  பதிலுக்கு பதில் பழிவாங்குவதற்காக இப்போது அவரை பதிவெழுத அழைக்கிறேன்.)&lt;br /&gt;6. &lt;A href="http://pirakeshpathi.blogspot.com"&gt;செல்லி&lt;/A&gt; (http://pirakeshpathi.blogspot.com) -  (வெரைட்டியான பதிவுகள். இலக்கிய இன்பம் தொடரை இவர் படங்களுடன் தந்தது நன்றாக இருந்தது.).&lt;br /&gt;&lt;br /&gt;துவங்கிய சர்வேசருக்கும் அழைத்த வெட்டியாருக்கும் தொடர்ஓட்டத்திலுள்ள பதிவர்களுக்கும் நன்றிகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-5304239716392500199?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/5304239716392500199/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=5304239716392500199' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/5304239716392500199'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/5304239716392500199'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2008/01/blog-post_15.html' title='எயுதனதுல புட்சது'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-6812037133754299170</id><published>2008-01-15T11:19:00.000-08:00</published><updated>2008-01-15T11:27:15.658-08:00</updated><title type='text'>லட்ச ரூவா காரு.  சிரிப்பு வருது பாரு.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_uHlvUWLz62w/R40Iecu5eZI/AAAAAAAAAFs/J_0Zg6dQ5gI/s1600-h/twoplease.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_uHlvUWLz62w/R40Iecu5eZI/AAAAAAAAAFs/J_0Zg6dQ5gI/s400/twoplease.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5155786467611081106" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_uHlvUWLz62w/R40IWcu5eYI/AAAAAAAAAFk/oBpVCTSbyFo/s1600-h/tvOrCar.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_uHlvUWLz62w/R40IWcu5eYI/AAAAAAAAAFk/oBpVCTSbyFo/s400/tvOrCar.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5155786330172127618" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_uHlvUWLz62w/R40I_cu5eaI/AAAAAAAAAF0/HPucCyFzlSY/s1600-h/servant.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_uHlvUWLz62w/R40I_cu5eaI/AAAAAAAAAF0/HPucCyFzlSY/s400/servant.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5155787034546764194" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp3.blogger.com/_uHlvUWLz62w/R40IG8u5eXI/AAAAAAAAAFc/2SC94mpYXZE/s1600-h/scooter.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp3.blogger.com/_uHlvUWLz62w/R40IG8u5eXI/AAAAAAAAAFc/2SC94mpYXZE/s400/scooter.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5155786063884155250" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp2.blogger.com/_uHlvUWLz62w/R40H8su5eWI/AAAAAAAAAFU/lo_uQNTIdsQ/s1600-h/reservePark.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp2.blogger.com/_uHlvUWLz62w/R40H8su5eWI/AAAAAAAAAFU/lo_uQNTIdsQ/s400/reservePark.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5155785887790496098" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp3.blogger.com/_uHlvUWLz62w/R40Hy8u5eVI/AAAAAAAAAFM/DA6mVBJv-H8/s1600-h/poor.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp3.blogger.com/_uHlvUWLz62w/R40Hy8u5eVI/AAAAAAAAAFM/DA6mVBJv-H8/s400/poor.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5155785720286771538" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp2.blogger.com/_uHlvUWLz62w/R40Hpsu5eUI/AAAAAAAAAFE/NyETm9R7uLc/s1600-h/begger.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp2.blogger.com/_uHlvUWLz62w/R40Hpsu5eUI/AAAAAAAAAFE/NyETm9R7uLc/s400/begger.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5155785561372981570" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-6812037133754299170?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/6812037133754299170/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=6812037133754299170' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/6812037133754299170'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/6812037133754299170'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2008/01/blog-post.html' title='லட்ச ரூவா காரு.  சிரிப்பு வருது பாரு.'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_uHlvUWLz62w/R40Iecu5eZI/AAAAAAAAAFs/J_0Zg6dQ5gI/s72-c/twoplease.bmp' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-7336178864293956407</id><published>2007-12-20T21:09:00.000-08:00</published><updated>2007-12-20T21:12:57.501-08:00</updated><title type='text'>மாமு... மாமு... போலீஸ் மாமு....</title><content type='html'>நான் சென்னை சாலையெங்கும் பைக் ஓட்டி அலுவலகம் செல்ல ஆரம்பித்த புதிது.  &lt;br /&gt;எது ஒன் வே என்ன ஏது என்று தெரியாத புதிது.&lt;br /&gt;காலை 8:45. பாண்டி பஜாரின் சந்து ஒன்றுக்குள் சென்று  விட்டு மீண்டும் மெயின் ரோட்டை பிடித்து அலுவலகம் செல்ல திரும்பினேன்.&lt;br /&gt;பிடிச்சாரு டிராபிக் போலீஸ்காரர்.&lt;br /&gt;"நிறுத்து. நிறுத்து. இது ஒன் வே."&lt;br /&gt;"சார். தெரியாது சார். போர்டு எதுவும் பார்க்கலையே." ஒன்வே போர்டு எதையும் நிஜமாகவே பார்க்கவில்லை நான்.&lt;br /&gt;"போர்டு பார்க்கலைன்னா என்னா. இது ஒன்வேன்னு தெரியாதா."&lt;br /&gt;"தெரியாது சார். நான் கொஞ்சம் புதுசு."&lt;br /&gt;"சரி. சரி. ஐம்பது ரூபா கொடுத்துட்டு நகரு."&lt;br /&gt;"ஃபைனா சார்.".&lt;br /&gt;"ஆமா. கொடுத்துட்டு போயிட்டே இரு."&lt;br /&gt;"சரி. சார். தர்றேன். ரிசிப்ட் கொடுப்பீங்களா."&lt;br /&gt;"ரிசிப்டா..."&lt;br /&gt;"ஆமா சார். நான் ஃபைன் கட்டுனதுக்கு ரிசிப்ட்."&lt;br /&gt;&lt;br /&gt;அந்த டிராபிக் போலீஸ் என்னை வித்தியாசமாக பார்த்தார்.&lt;br /&gt;"இன்ஸ்பெக்டர் ரவுண்ட்ஸ்ல இருக்காரு.  அவர்தான் ரிசிப்ட் கொடுக்க முடியும். அவர் வர நேரமாகும். நீ ஃபைன கொடுத்துட்டு நகரு."&lt;br /&gt;"பரவாயில்லை சார். நான் இருந்து ரிசிப்ட் வாங்கிகிட்டே போறேன்." யோசித்தார்.&lt;br /&gt;"சரி. கொஞ்சம் நில்லு."&lt;br /&gt;கொஞ்ச நேரம் கழித்து வந்தார்.  வண்டியின் பின் ஏறிக்கொண்டார்.  "பனகல் பார்க் பக்கத்துல இருக்கிற ஸ்டேஷனுக்கு விடு."&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அலுவலகத்திற்கு வெளியே வண்டியை நிறுத்தி இருவருமாய் உள்ளே சென்றோம்.&lt;br /&gt;இன்னொரு போலீஸ்காரரிடம் கொண்டு நிறுத்தினார்.&lt;br /&gt;"என்னய்யா."&lt;br /&gt;"சார்.  ஒன்வேயில வந்ததுக்காக பிடிச்சேன்."&lt;br /&gt;"சரியா. இங்க ஏன் கூட்டி வந்த."&lt;br /&gt;"ஒன்வேயில வந்ததுக்கு ஃபைன் கட்டணும்னு சொன்னேன்.  ரிசிப்டு கேக்கறாரு."&lt;br /&gt;அவர் என்னை பார்த்தார்.&lt;br /&gt;"என்ன நீங்க பிரஸ்ஸா."&lt;br /&gt;"இல்லை சார்.  ஒன்வே. ஃபைன் கட்டுன்னு சார் சொன்னாரு.  சரி ரிசிப்டு கொடுங்கன்னு கேட்டேன்."&lt;br /&gt;"எங்க வேலை பார்க்கறீங்க."&lt;br /&gt;சொன்னேன்.  மேற்கொண்டு என் அலுவலகம் எங்கே வீடு எங்கே என்ற விசாரணைகள்.&lt;br /&gt;"இன்ஸ்பெக்டர் வெளியே போயிருக்காரு. அவருதான் ரிசிப்டு தரணும்.  சரி. இந்த பேப்பருல உங்க அட்ரஸ் வண்டி நம்பர் எழுதுங்க."&lt;br /&gt;அவர் கொடுத்த வெள்ளைத்தாளில் எனது முகவரியும் வண்டி எண்ணையும் எழுதினேன்.&lt;br /&gt;"சரி பணத்தை கொடுத்துட்டு போங்க.  ஈவினிங் இந்த பக்கமாதானே போவீங்க.  வந்து ரிசிப்டை வாங்கிட்டு போங்க."&lt;br /&gt;ஐம்பது ரூபாயை கொடுத்தேன். "தாங்ஸ் சார்."&lt;br /&gt;நேரத்தை பார்த்தேன்.  10:15.&lt;br /&gt;&lt;br /&gt;அச்சோ. அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது.  அலுவலகம் சென்றதும் இருந்த ஆணிகளை பிடுங்கி கிளம்பும் போது இரவு 8:30.&lt;br /&gt;இதற்கு மேல் எங்கே சென்று நான் ரிசிப்டு வாங்குவது.  அப்புறம் அந்தப் பக்கம் நான் போகவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று வரை எனக்கு தெரியாத விஷயம்.  ஒன்வேயில் வந்தால் ஃபைன் இருக்கிறது என்றால் எவ்வளவு.  அதற்கு ரிசிப்ட் உண்டா.&lt;br /&gt;அப்படியானால் அதை தரும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-7336178864293956407?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/7336178864293956407/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=7336178864293956407' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/7336178864293956407'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/7336178864293956407'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2007/12/blog-post_20.html' title='மாமு... மாமு... போலீஸ் மாமு....'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-2671300186826365308</id><published>2007-12-19T09:29:00.000-08:00</published><updated>2007-12-19T09:37:09.616-08:00</updated><title type='text'>ஒரு போர்வீரனின் கதை..</title><content type='html'>எத்தனை யுகங்களாக நான் இவ்வாறு இருக்கிறேன்.  இது தூக்கமா இல்லை மரணமா. கண்கள் திறந்து பார்க்கிறேன்.&lt;br /&gt;இது சொர்க்கமா.  இத்துணை தேவதைகளும் தேவர்களும் எங்கிருந்து வந்தார்கள்.&lt;br /&gt;இல்லை இது ஏதோ மடாலயமாக காண்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ இந்த வெண்தாடி பெரியவர் யார். எனக்கு இவர் ஏதோ குடிக்க தருகிறாரே.  இது என்ன கசக்கிறது.  மீண்டும் மயங்குகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இம்முறை கண்களை திறக்கிறேன்.  ஏதோ தெளிவாக உணர்கிறேன்.  சிரித்தபடி அந்தப் பெரியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயா. நான் யார். நீங்கள் யார்.  இது எந்த இடம்."&lt;br /&gt;&lt;br /&gt;"பொறுமை தம்பி.  மிகவும் களைத்திருக்கிறாய்.".&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை ஐயா. இப்போது மிகவும் தெம்பானவனாக உணர்கிறேன்.  தாங்களே என்னைக் காப்பாற்றி போஷித்தவர் என்று அறிகிறேன்.  ஆயின் எதுவும் நினைவில் இல்லை. தாங்கள் விளக்க முடியுமா."&lt;br /&gt;&lt;br /&gt;"தம்பி.  நீ நமது தேசத்தின் குதிரை வீரன். நானொரு சாதாரணத்துறவி.  இன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு முன் நடந்த யுத்தத்தில் நீ காட்டிய வீரத்தை நினைத்தால் எனக்கு இப்போதும் மெய் சிலிர்க்கிறது."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆம். ஐயா நினைவுக்கு வருகிறது.  நமது பகையரசன் கிழக்கு கோட்டையில் இருக்கிறான் என்ற தகவல் கிடைத்ததும் நமது படைப்பிரிவு கிளம்பியது.  குதிரைவீரர்களும் காலாட் படையினரும் பல எந்திரப் பொறிகளுடன் கிளம்பினோம்.  கோட்டையின் மதில் சுவரை தாக்கியழித்து கோட்டையை கைப்பற்ற யுத்தமும் துவங்கினோம்.  நினைவுக்கு வருகிறது.  ஆயின் யுத்தம் என்னவானது.  நாம் வென்றோமா ?"&lt;br /&gt;&lt;br /&gt;"துரதிர்ஷ்ட வசமாக இல்லை தம்பி.  மிகவும் உக்கிரமாக யுத்தம் நடந்தது.  நமது வீரர்கள் மதிலை உடைத்து உள் போந்தார்கள். காயப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்ய நானும் உங்கள் உடனிருந்தேன்.  கோட்டையை முற்றுகையிட்டு எரியூட்டினோம்.  என்னமாய் போரிட்டாய் தம்பி நீ.  கிட்டத்தட்ட வெல்லும் தருணத்தில் பகைவனின் வடதிசைப் படைகள் வந்து சேர்ந்தன.  எண்ணிக்கையில் குறைவான நமது படை அழித்து தள்ளப்பட்டது.   நான் பின் வாங்கினேன்.  போரில் காயம் பட்ட நீ மயங்கி விழுந்தாய்.  உனது குதிரை உன்னை நமது எல்லையில் கொண்டு வந்து சேர்த்தது.  உன்னைக் காப்பாற்றி சிகிச்சையளித்தேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயா. ஏன் அவ்வாறு செய்தீர்கள்.  புறமுதுகு காட்டியன் என்ற பழி எனக்கு தேவையா.  அந்த யுத்தத்திலேயே நான் வீரமரணம் அடைந்திருக்கக்கூடாதா."&lt;br /&gt;&lt;br /&gt;"தம்பி. தேசம் இன்று இருக்கும் நிலையில் ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது.  அதை வீணில் போக்காதே.  அந்த யுத்தத்தில் நாம் தோற்றிருக்கலாம்.  ஆனால் நமது சேதத்தை விட பகைவனின் சேதம் இருமடங்கு அதிகம்.  கிழக்குக் கோட்டையை முற்றிலும் எரியூட்டிவிட்டோம்.  பகையரசன் புலம் பெயர்ந்து இப்போது மேற்குக் கோட்டையில் இருக்கிறான்.  நமது அரசரும் மேற்குக் கோட்டை மீதான படையெடுப்புக்கு படைகளை திரட்டி வருகிறார்."&lt;br /&gt;&lt;br /&gt;"நல்ல செய்தி ஐயா.   நானும் படைப்பிரிவில் சென்று சேர விரும்புகிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"மகிழ்ச்சி.  அடுத்த ஐந்து தினங்களுக்கு ஊர்க்காவல் படையில் இரு.  அரசரின் செய்தி வந்ததும் படையினருடன் சென்று சேர்வாய்."&lt;br /&gt;&lt;br /&gt;"மிக்க நன்றி ஐயா."&lt;br /&gt;&lt;br /&gt;--------&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த ஐந்து நாட்களும் ஊர்க்காவல் படையில் ஊரைச் சுற்றி வந்தேன்.  அந்த ஐந்து தினங்களும் ஐந்து மணித்துளிகளாய்ப் பறந்து மறைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தேசத்தின் மக்கள்தான் இந்த போர்க்காலத்தில் எத்தனை சுறுசுறுப்பாய் இருக்கிறார்கள்.  வீரர்களுக்கு வேண்டிய தானியம்  உழவர்களின் மிகுந்த உழைப்பில் தேவைக்கு அதிகமாகவே வந்து சேர்ந்து கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;போருக்கு தேவையான வண்டிகள் இயந்திர பொறிகள் செய்வதற்கு நாட்டின் தெற்குப்பகுதி காடுகள் தேர்வு செய்யப்பட்டிருந்தன.  அங்கு நான் சென்ற போது நான் கண்ட காட்சிகள் என் கண்களை அகலத்திறப்பனவாய் இருந்தது.  &lt;br /&gt;கொல்லர்களின் உலைக்களத்தில் வால்களும் வேல்களும் வெகுவாக தயாராகிக் கொண்டிருந்தன.   காட்டை ஒட்டிய துறைமுகத்தில் மரக்கலங்கள் கம்பீரமாக நின்றிருந்தன.  &lt;br /&gt;&lt;br /&gt;அந்தத் துறவியை அங்கு சந்தித்தேன்.&lt;br /&gt;"தம்பி அந்த மரக்கலங்களை பார்த்தாயா.  இந்த முறை யுத்தம் தரையிலல்ல கடலில்."  புன்னகைத்தார்.&lt;br /&gt;"கப்பல்களில் வீரர்கள் கிளம்புகிறோம்.  படைப்பிரிவு எதிரி பார்க்காத இடத்தில் கரையில் இறங்கி பகைவனின் கோட்டையை நோக்கி முன்னேறும்.   அதே நேரத்தில் கப்பல்கள் கடற்கரை பிரதேசங்களை தாக்கி அழிவு ஏற்படுத்தும்.  எதிரிப் படைகள் கடற்கரையை நோக்கி இழுக்கப்படும் போது  காவல் அதிகமில்லாத கோட்டையை நம்படை மோதி கைப்பற்றும்."&lt;br /&gt;"திட்டம் வெகு அருமை ஐயா."&lt;br /&gt;"நம் அரசரை என்னவென்று நினைத்தாய்."&lt;br /&gt;&lt;br /&gt;------------&lt;br /&gt;&lt;br /&gt;எதிரியின் மண்ணில் வந்து இறங்கிகோட்டையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம். கப்பல் பயணம் அத்துனை சுகமானதாக இல்லை.  இந்த நேரத்தில் நமது கப்பல் படை எதிரியின் கடலோர கிராமங்களை அலைகழித்துக் கொண்டிருக்கும்.  எதிர்பார்த்தது போல் எதிரி்ப் படைகள் கோட்டையை சுற்றி அதிகம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கோட்டையைத் தாக்க துவங்கினோம்.  எந்திரப் பொறிகள் கோட்டையை நோக்கி கவண் கற்களையும் தீப்பந்தங்களையும் வீசின.  வெளிப்போந்த வீரர்களை என்னுடனான குதிரைப்படை எதிர்கொண்டு மோதியது.  தலைகளை வெட்டி வீசி முன்னேறிக் கொண்டிருந்தேன்.  கோட்டை எரியத் துவங்கியது. திட்டமிட்டபடி என் தலைமையிலான சிறு படைப்பிரிவு கோட்டையின் பின்வாசலை நோக்கி முன்னேறியது.&lt;br /&gt;&lt;br /&gt;நினைத்தது சரியே.  தப்பித்து வடக்குக் கோட்டைக்கு செல்வதற்காக பகையரசன் நான்கு மெய்க்காப்பாளர்களுடன் வெளியேறிக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"விடாதீர்கள்.  தாக்குங்கள்"  பாய்ந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது வேல் பகையரசனின் மார்பில் பாய்ந்தது.  வேகமாக குதிரையை செலுத்திக் கொண்டு வாளை சக்கரவாகமாக சுழற்றினேன்.&lt;br /&gt;பகையரசனின் தலை கணத்தில் துண்டானது.&lt;br /&gt;&lt;br /&gt;"வெற்றி.  வெற்றி."&lt;br /&gt;&lt;br /&gt;------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"யூ ஆர் விக்டோரியஸ்"  என்று என் கணினித் திரையில் ஒளிர்ந்த எழுத்துக்களை மிக்க மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எட்டு மணி நேரமாக விளையாடிக் கொண்டிருந்த மைக்ரோசாஃப்டின் "ஏஜ் ஆஃப் எம்பரர்ஸ்" தந்த அலுப்புடன் தூங்கலாம் என்று முடிவு செய்தேன்.&lt;br /&gt;தூக்கத்திலும் கனவு.&lt;br /&gt;&lt;br /&gt;இம்முறை கப்பல் தலைவனாக "கலபதி"யாக பத்துக் கப்பல்களை வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;எதிரியின் துறைமுகத்தையும் அதனருகில் இருக்கும் கோட்டையையும் அழித்து விட்டுத்தான் மறுவேலை.&lt;br /&gt;"தளபதி கோட்டையின் சுவரிலிருந்து பீரங்கிகள் குண்டு மழை பொழிகின்றன.  இரண்டு கப்பல்கள் ஏற்கனவே மூழ்கிவிட்டன.  என்ன செய்வது."&lt;br /&gt;என்ன செய்யலாம்.  தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-2671300186826365308?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/2671300186826365308/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=2671300186826365308' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/2671300186826365308'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/2671300186826365308'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2007/12/blog-post_19.html' title='ஒரு போர்வீரனின் கதை..'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-4471199780596493555</id><published>2007-12-16T15:51:00.000-08:00</published><updated>2008-08-27T17:03:13.687-07:00</updated><title type='text'>திருப்பதி - ஸ்ரீநிவாசனா ?  முருகனா?  - ஒரு சர்ச்சை</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;குன்று இருக்குமிடமெல்லாம் குமரனிருக்கும் இடம்.&lt;br /&gt;"தமிழகத்தின் வடஎல்லையாக இருந்த திருவெங்கடமும் குமரனின் குன்றே. அது முருகன் ஆலயமே". என்று படிக்க நேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வாதங்களை பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;1. குன்று இருக்கும் இடமெல்லாம் குறிஞ்சிக் கடவுள் முருகனே இருக்கிறான். தமிழக பரப்பில் இருந்த திருப்பதி கோவில் தமிழ் மன்னன் ஒருவனால் கட்டப்பட்ட முருகன் கோவிலே. கோவில் கட்டியது குறித்த வரலாறு தெளிவாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;2. திரு + வேல் + இடம் = திருவேங்கடம்.&lt;br /&gt;&lt;br /&gt;3. வேல் + உடைய + ஈஸ்வரன் = வெங்கடேஸ்வரன்.&lt;br /&gt;வைணவ இறைவனின் பெயரில் ஈஸ்வரன் என்ற சைவப் பெயர் எப்படி வந்து ஒட்டியிருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. கோவிலின் அமைப்பு ஆகம முறைப்படி சைவ கோவிலாகவே அமைந்திருக்கிறது. கோவில் மதில்களில் வைணவக்கோவில்களில் இருப்பது போல் கருடாழ்வார் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;5. மூலவர் என்றும் அலங்கரித்த நிலையிலேயே பார்வைக்கு வைக்கப்படுகிறார்.&lt;br /&gt;நெற்றியில் நாமம் சார்த்தி கவசங்களாலும் ஆடை அணிகளாலும் மறைக்கப்பட்டு "பாலாஜி" ஆக்கப்பட்ட இறைவன் பதினாறுப் பிராயம் கொண்ட பாலானான முருகனே.&lt;br /&gt;&lt;br /&gt;6. மூலவரின் இடது கை மேல் நோக்கிய வாகில் வேல் பிடிப்பதற்கு ஏதுவானதாக உள்ளது. (பார்க்க படம்). முருகனின் கை வேல் பறிக்கப்பட்டு கவசம் அணியப்பெற்று மாலவனாக மாற்றப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு கரமுடைய விஷ்ணு இரண்டு கரங்களோடு இருப்பதாக காட்டப்படுவதால். சங்கும் சக்கரமும் பிடிப்பதற்கு இரண்டு கரங்கள் இல்லாததால் தோளில் நிறுத்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp2.blogger.com/_uHlvUWLz62w/R2W-eYsWiWI/AAAAAAAAAE0/T0m4hMjBXsM/s1600-h/30940lord_balaji.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5144727578574489954" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_uHlvUWLz62w/R2W-eYsWiWI/AAAAAAAAAE0/T0m4hMjBXsM/s400/30940lord_balaji.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;7. கவசங்களோ, நாமமோ இல்லாத சிலையை அபிஷேகம் செய்வது திரையிட்டே செய்யப்படுவதால் உண்மையான மூலவர் வடிவத்தை யாரும் பாராதது.&lt;br /&gt;அலங்கரிக்கப்பட்ட இறைவனையே நாம் பார்க்கிறோம். அதுவும் ஒரு நிமிடத்திற்குள் "ஜருகண்டி" செய்யப்படுகிறொம்.&lt;br /&gt;&lt;br /&gt;8. கோவில் மதில்களில் உள்ள தமிழ் எழுத்துக்கள். இவை வட்டெழுத்துக்களாக உள்ளன. பெரும்பாலான இடங்களில் சுண்ணம் பூசப்பட்டு மறைந்தே உள்ளன. இவற்றை ஆராய்ந்து அறிய நேர்ந்தால் கோவிலின் வரலாறு கிடைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;9. பாலாஜி என்ற பெயரில் அலர்மேலு, பத்மாவதி என்ற இரண்டு மனைவிகளோடு இருப்பதாக உள்ள இறைவன் உண்மையில் வள்ளி, தெய்வானையோடு உள்ள முருகனே. (பார்க்க படம்)&lt;br /&gt;&lt;a href="http://bp1.blogger.com/_uHlvUWLz62w/R2W-sIsWiXI/AAAAAAAAAE8/lWbJpvb1uvw/s1600-h/venkateswara_murty_idols.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5144727814797691250" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp1.blogger.com/_uHlvUWLz62w/R2W-sIsWiXI/AAAAAAAAAE8/lWbJpvb1uvw/s400/venkateswara_murty_idols.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;10. துவாபரயுகத்தோடு ஒன்பதாவது அவதாரமான "கண்ணன்" அவதாரம் முடிந்து விட்ட நிலையில், கலியுகத்தில் கல்கி அவதாரம் மட்டுமே பாக்கியுள்ள நிலையில் இறைவன் "சீனுவாசனாக" பூமியில் இறங்கி வந்தது என்ன அவதாரம்.&lt;br /&gt;இந்த அவதாரம் ஏன் கணக்கில் வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;11. தல வரலாற்றுப் புத்தகம் இராமாயணத்தையே மாறுபட்ட வடிவில் சொல்கிறது. சீதைக்கு பதிலாக பூமாதேவி (சத்யவதி என்ற பெயரில்) தானே இராவணனிடத்தில் இருந்ததாகவும் அவளே தீயில் இறங்கியதாகவும் சீதை பத்திரமாக இருந்ததாகவும்.&lt;br /&gt;தீயில் இறங்கிய பின் இரண்டு சீதைகள் இருக்க.. பூமாதேவியாகிய சீதையை இராமன் தான் ஏக பத்தினி விரதன் என்பதால் மணக்க முடியாது என்று சொல்லி விட. அவளே பத்மாவதியாய் ஆகாச ராஜனுக்கு தோன்ற "சீனுவாசனாக" வந்து அவரை இறைவன் மணந்தார். லட்சுமியே தன் கணவனுக்கு பத்மாவதியை மணம் செய்வித்தார் என்பதாக போகிறது கதை. தல வரலாறு இதிகாச புராணங்களில் இருந்து பெருமளவில் திரிந்திருக்கிறது. இது கடவுளை மாற்றிய பிறகு இட்டுக் கட்டப் பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தை கிளப்புவது.&lt;br /&gt;&lt;br /&gt;(படிக்க தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழியிலும் கிடைக்கும் திருப்பதி தல வரலாறு).&lt;br /&gt;&lt;br /&gt;12. திருமுருக கிருபானந்த வாரியாரும் தமது கந்த புராண சொற்பொழிவுகளில் திருப்பதி குமரன் கோயிலாக இருக்கக் கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கென்னவோ முருகன்தான் "சீனுவாசனாக" அவதாரம் எடுக்க வைக்கப்பட்டான் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முருகன் வள்ளி தெய்வானை என்று நினைத்து நான் வைத்திருந்த ஒரு படத்தை நண்பன் திருப்பதி வெங்கடாசலபதி என்று கண்டு பிடித்து சொன்னது நினைவுக்கு வருகிறது.&lt;br /&gt;திருப்பதி சென்று ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அடுத்த முறை சென்றால் நன்கு உற்றுப் பார்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;"முருகனோ" இல்லை "சீனுவாசனோ"... டப்பு இச்சினவாடே தேவுடு. :)&lt;br /&gt;&lt;br /&gt;"டா வின்சி கோட்"க்கு இணையான மர்மம் திருப்பதியிலும் இருக்கின்றதோ என்னவோ.&lt;br /&gt;&lt;br /&gt;"டாவின்சி கோடில்" ஏசுவுக்கு மனைவியும் மகளும் உண்டு என்ற வாட்டிகன் ரகசியத்தை ஐசக் நியூட்டன் முதல் டாவின்சி வரை எல்லோரும் கட்டி காப்பாற்றியது போல்.... திருப்பதி ரகசியத்தை அந்த கால ஆழ்வார்கள் முதல் அன்னமாச்சார்யாக்கள் வரை கட்டி காப்பாற்றி வருகிறார்கள் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-4471199780596493555?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/4471199780596493555/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=4471199780596493555' title='44 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/4471199780596493555'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/4471199780596493555'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2007/12/blog-post_16.html' title='திருப்பதி - ஸ்ரீநிவாசனா ?  முருகனா?  - ஒரு சர்ச்சை'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp2.blogger.com/_uHlvUWLz62w/R2W-eYsWiWI/AAAAAAAAAE0/T0m4hMjBXsM/s72-c/30940lord_balaji.jpg' height='72' width='72'/><thr:total>44</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-4310537161718851182</id><published>2007-12-15T10:40:00.000-08:00</published><updated>2007-12-15T10:42:15.371-08:00</updated><title type='text'>அவள் செத்தேயாக வேண்டும்</title><content type='html'>அவள் செத்தேயாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜேஷிற்கு தன் மனைவி ராதாவை கொன்றேயாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;"யோசி. யோசி.&lt;br /&gt;இருக்கும் வெறியில் அவளை கத்தியால் பலமுறை குத்தி கண்ட துண்டமாக வெட்டி போட்டு கொலை செய்யலாம்.&lt;br /&gt;வேண்டாம்.  என் கைகளுக்கு விலங்கு வருவதை நான் விரும்பவில்லை."&lt;br /&gt;&lt;br /&gt;"யோசி.  ராஜேஷ்.  கேஸ் அடுப்பு வெடிப்பது எல்லாம் பழைய டெக்னிக்.  உண்மையிலேயே அடுப்பு வெடித்தால் கூட வரதட்சணை கேஸ் என்று போலீஸ் முடிவு செய்துவிடுகிறது."&lt;br /&gt;&lt;br /&gt;"அவள் வெளியே செல்லும் போது... ஒரு லாரி வைத்து மோதி ஆக்சிடெண்ட் என்று ஜோடித்து விடலாமா ?&lt;br /&gt;வேண்டாம்.  நாளை விசாரணையில் லாரி டிரைவர் உளறிவிடக் கூடும்."&lt;br /&gt;&lt;br /&gt;"அடியாள்கள் வைத்து கொலை செய்யலாம்.  ஆனால் நாளைக்கு அவர்களே நம்மை மீண்டும் பிளாக் மெயில் செய்தால்...."&lt;br /&gt;&lt;br /&gt;"யோசி.  பீ கிரியேடிவ்.  வேண்டியது ஒரு கொலையல்லாத கொலை."&lt;br /&gt;&lt;br /&gt;"எத்தனை சினிமாக்கள்....   எத்தனையோ வழிகள் காட்டுகிறார்கள்.  ஆனால் எதுவும் வேலைக்காகாது...&lt;br /&gt;ஆசையில் பிரகாஷ்ராஜ் ஒரு பிளாஸ்டிக் பையை வைத்து கொலை செய்வாரே...  அந்த மாதிரி ஏதாவது."&lt;br /&gt;&lt;br /&gt;"ரைட்.  இப்படி செய்தால் என்ன.  அவள் தினமும் வழக்கமாய் சாப்பிடும் மாத்திரைகள்.&lt;br /&gt;இந்த மாத்திரை எக்ஸ்பையர் ஆனா ரொம்ப டேஞ்சரஸ்.  உயிருக்கே கூட ஆபத்து என்று அவளுடைய மாத்திரையை பற்றி டாக்டர் சொன்னாரில்லையா...&lt;br /&gt;எக்ஸ்பையர் ஆன மாத்திரைகளா மாற்றி வைத்தால்.&lt;br /&gt;வாவ்.  கிரேட்.  &lt;br /&gt;&lt;br /&gt;எக்ஸ்பையர் ஆன மாத்திரை டப்பா ஒன்று இருக்கிறது.&lt;br /&gt;மாற்றி வைத்தால்... தினமுமா எக்ஸ்பைரி டேட் பார்த்து விட்டு மாத்திரை சாப்பிடுவாள்.&lt;br /&gt;நாளைக்கு போலீஸ் கேஸ் என்று வந்தால் எக்ஸ்பையரி ஆன மாத்திரை சாப்பிட்டதால் மரணம் என்று எளிதாக முடிந்துவிடும்.&lt;br /&gt;அதுதான் சரி. ".&lt;br /&gt;&lt;br /&gt;----------&lt;br /&gt;&lt;br /&gt;"கிரேட்  சார்.  வித்தியாசமா திங்க் பண்றீங்க.  வில்லன் தன்னோட மனைவிய இந்த மாதிரி வித்தியாசமா கொல்றான்றது எடுபடும்.  பாருங்களேன் இந்த கான்செப்டுக்கே படம் நல்லா ஓடும்".  புகழ் பெற்ற அந்த வில்லன் நடிகர் டைரக்டரை பாராட்டினார்.&lt;br /&gt;"தாங்ஸ் சார்."&lt;br /&gt;"ஸ்டார்ட் கேமரா."&lt;br /&gt;&lt;br /&gt;"ராதா. நீ இன்னைக்கு மாத்திரை சாப்பிடலை."&lt;br /&gt;"நல்ல வேளை நியாபகப் படுத்தினீங்க."&lt;br /&gt;ராதா மாத்திரையை வாயில் போட்டு தண்ணீரை விழுங்கினாள்.&lt;br /&gt;அவன் கண்களில் கொலைவெறி தெரிந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-4310537161718851182?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/4310537161718851182/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=4310537161718851182' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/4310537161718851182'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/4310537161718851182'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2007/12/blog-post_15.html' title='அவள் செத்தேயாக வேண்டும்'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-5216000045707038202</id><published>2007-12-12T19:50:00.000-08:00</published><updated>2007-12-12T19:58:54.694-08:00</updated><title type='text'>"நச்சு" பிடிச்ச கதை - ஜன்னல் வெச்ச ஜாக்கெட்காரி (அடல்ட்ஸ் ஒன்லி)</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;"சேகர். ஒரு ஐடியா வேணும்." கேட்ட ராஜனை பார்த்தான் சேகர்.&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லு ராஜன். எதுக்கு ஐடியா வேணும்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு ஜாக்கெட் போட்ட ஃபிகரை பிராக்கெட் போடணும்".&lt;br /&gt;&lt;br /&gt;"இவ்வளவுதானா. மேட்டர சொல்லு. "&lt;br /&gt;&lt;br /&gt;"மேட்டர் அவ்வளவு ஈஸி இல்லை. பொண்ணு கல்யாணம் ஆனவ."&lt;br /&gt;&lt;br /&gt;"இவன் வேற. கல்யாணம் ஆன பொண்ணை கவுக்கறதுதாண்டா ஈஸி. நான் எத்தனை பேரை கவுத்திருக்கேன் தெரியுமா."&lt;br /&gt;&lt;br /&gt;"தெரியும். அதனாலதான் உன்கிட்ட ஐடியா கேட்கிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி. மேல சொல்லு."&lt;br /&gt;&lt;br /&gt;"பொண்ணு நாம இருக்கிற ஏரியாதான்."&lt;br /&gt;&lt;br /&gt;"நான் பார்த்து இருக்கனா."&lt;br /&gt;&lt;br /&gt;"நீ இந்த ஏரியாவுக்கு குடிவந்து ஒரு வாரம்தான் ஆகுது. பார்த்து இருப்பன்னுதான் நினைக்கிறேன். புருசன் குடிகாரன். அவளுக்கு இந்த கல்யாணத்துல அவ்வளவா இஷ்டம் இல்லைன்னு தெரியுது."&lt;br /&gt;&lt;br /&gt;"மேட்டரு சுளுவாவும் போலதான் தெரியுது."&lt;br /&gt;&lt;br /&gt;"பொண்ணு என்னை பாக்குற கண்ணுல ஏக்கம் தெரியுது. சிக்னல் கிடைக்குது. ஆனா எப்படி பிக்கப் பண்றதுன்னுதான் தெரியலை."&lt;br /&gt;&lt;br /&gt;"பேசிப் பேசிதாண்டா மேட்டர முடிக்கணும். அந்த மாதிரி நான் எத்தனை மேட்டர் முடிச்சிருப்பேன் தெரியுமா."&lt;br /&gt;&lt;br /&gt;"பேசிட்டேண்டா. வேலைக்கு ஆகலை. நீ எனக்கு புதுசா வாழ்க்கை தர்றதா இருந்தா சரி அப்படின்னு சொல்லுறா."&lt;br /&gt;&lt;br /&gt;"வாழ்க்கை தரப்போறியா என்ன. தாகம் எடுக்குதுன்னா எவனாவது கிணறையே வாங்குவானா என்ன."&lt;br /&gt;&lt;br /&gt;"அதேதாண்டா என் பிரச்சனை. தொடணும். ஆனா தொடரக்கூடாது."&lt;br /&gt;&lt;br /&gt;"அவ்வளவுதான. வாழ்க்கை தரேன்னு சொல்லு. ஏன் கூட வா. உன்னை காலமெல்லாம் வச்சு காப்பாத்துறேன்னு கதை விடு. கிளப்பிக்கிட்டு ஊட்டி, கொடைக்கானல்னு ஒரு வாரம் சுத்திட்டு கழட்டி விட்டுடு."&lt;br /&gt;&lt;br /&gt;"ஐடியா நல்லாதான் இருக்கு. ஒர்க் அவுட் ஆகுமா."&lt;br /&gt;&lt;br /&gt;"கரெக்டா காயை நகர்த்து. எல்லாம் கரெக்டா நடக்கும். இப்ப இன்னொரு ரவுண்டு ஊத்து." சேகர் சிரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"சியர்ஸ்" இருவரும் சிரித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;--------------&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் எழுந்த சேகர் அருகிலிருந்த கடிதத்தை படித்தான்.&lt;br /&gt;"அன்பில்லாத கணவருக்கு,&lt;br /&gt;உங்கள் குடிப்பழக்கத்தாலும் கெட்ட சகவாசங்களாலும் தவறான நடத்தையாலும் உங்களை மிகவும் வெறுக்கிறேன்.&lt;br /&gt;உங்கள் நண்பர் ராஜன் நல்லவர். எனக்கு நல்ல வாழ்க்கை தருவதாக உறுதியளித்திருக்கிறார்.&lt;br /&gt;அவரோடு நான் போகிறேன்.&lt;br /&gt;இனி எந்த காலத்திலும் உங்கள் முகத்திலும் விழிக்க விரும்பாத&lt;br /&gt;சரோஜா."&lt;br /&gt;&lt;br /&gt;"அடப்பாவி ராஜன்" அலறினான் சேகர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#330099;"&gt;(கதை நச்சென்று முடிந்து விட்டது என்று நினைப்பவர்கள் இத்தோடு முடித்துக் கொள்ளவும்)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;-----------------------------&lt;br /&gt;&lt;br /&gt;அவள் சென்று ஏழாவது நாள். எழுபதாவது முறையாக கடிதத்தை படித்த சேகர் மீண்டும் அழத் தொடங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#330099;"&gt;(விட்டு சென்ற காதலி/மனைவியின் கடிதத்தை ஒருவன் படித்து அழுவதுதான் "நச்" முடிவென்று நினைப்பவர்கள் இத்தோடு நிறுத்திக் கொள்ளவும்.)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--------------------------&lt;br /&gt;&lt;br /&gt;எட்டாவது நாள்.....&lt;br /&gt;காலிங் பெல் அடித்தது...&lt;br /&gt;&lt;br /&gt;கதவைத் திறந்தான் சேகர்.&lt;br /&gt;சரோஜாவும் ராஜனும்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ... நீ.... நீங்க."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"என்னை மன்னிச்சிடுங்க. அந்த கடிதம், நான் காணாமல் போனது எல்லாம் நாடகம்" - சரோஜா.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன... என்ன.. சொல்றே நீ..."&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க ஒழுக்கக் கேடா இருக்கறதும் அடுத்தவங்க வாழ்க்கையில விளையாடறதும் தப்புன்னு உங்களுக்கு புரிய வைக்கணும்னு நினைச்சேன்.&lt;br /&gt;ராஜன் அண்ணா ஹெல்ப் பண்ணினார்."&lt;br /&gt;&lt;br /&gt;"அண்ணனா."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா. சேகர். உன்னை சொல்லித் திருத்த முடியலை. ஒரு ஷாக் ட்ரீட் மெண்ட் கொடுக்கணும்னு சரோஜா கொடுத்த ஐடியாதான் இது." - ராஜன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அடுத்தவங்க குடும்பத்தை கெடுக்கிற உங்களுக்கு... உங்க வீட்டிலேயே இப்படின்னதும் தாங்க முடியலை இல்லையா. இப்பவாவது உணர்ந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்.&lt;br /&gt;அதுக்காகத்தான் இந்த நாடகம்." - சரோஜா.&lt;br /&gt;&lt;br /&gt;"இப்ப நான் புரிஞ்சிகிட்டேன். இனியும் தறிகெட்டு அலைய மாட்டேன்.&lt;br /&gt;சரோஜா, என்னை மன்னிச்சிடு."&lt;br /&gt;&lt;br /&gt;திருந்திய சேகரை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் சரோஜாவும் ராஜனும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#330099;"&gt;(அப்பாடா. கதை உண்மையிலேயே நச்சுன்னு முடிஞ்சிச்சின்னு சொல்லுறவங்க, பெண்ணியவாதிகள் துணிச்சலான சரோஜாவை பாராட்டிவிட்டு கதையை இத்துடன் முடித்துக் கொள்ளவும்.)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;"ஹல்லோ சரோஜா."&lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ ராஜன். எப்படி இருக்கீங்க. நேர்ல பார்க்க முடியலை. போன் மட்டும் பண்ணறீங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கும் பார்க்கணும் போல இருக்கு."&lt;br /&gt;&lt;br /&gt;"நேர்ல வாங்களேன். எனக்கும் பார்க்கணும். அந்த ஒரு வாரம். என் வாழ்க்கையில மறக்க முடியாத வாரம். அவரும் நம்பிட்டாரு.".&lt;br /&gt;&lt;br /&gt;"ஹா... ஹா.. இப்ப அநியாயத்துக்கு நல்லவனாயிட்டான்."&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களை இனி பார்க்க முடியாதா."&lt;br /&gt;&lt;br /&gt;"சே. சே. அப்படியெல்லாம் இல்லை. நம்ம கதை ஒரு வாரத்துல முடிஞ்சிடுற சிறுகதையா என்ன.  தொடர்கதை... தொடரலாம்."&lt;br /&gt;&lt;br /&gt;அவள் சிரித்தாள். அவனும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#330099;"&gt;(இந்த "நச்சு" முடிவு போதும் என்பவர்கள் கதையை இத்துடன் நிறுத்திக் கொள்ளவும்.)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;-----------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அலறியடித்து எழுந்தான் சேகர்.&lt;br /&gt;அத்தனையும் கனவா. "தான் ராஜனிடம் பேசியது. சரோஜாவின் கடிதம். அவள் திரும்பிவந்தது. தொலைபேசிப் பேச்சு" அத்தனையும் கனவா.&lt;br /&gt;அருகில் தூங்கிக்கொண்டிருந்த சரோஜாவின் முகத்தைப் பார்த்தான். என் சரோஜா அப்படியெல்லாம் இல்லை. அவ்வளவும் கனவு.&lt;br /&gt;நான்தான் தவறானவன்.&lt;br /&gt;இனி இவளுக்கு ஒழுங்கானவனாக இருப்பேன் என்று முடிவெடுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#330099;"&gt;(எப்படி எப்படியாவது கதையை எழுதி கடைசியில் அத்தனையும் கனவு என்று முடித்தால் இன்னொரு "நச்" சிறுகதை ரெடி...&lt;br /&gt;எல்லாம் சேகரின் கனவு என்று சொல்லி விட்டதால் கதையை மேலும் வளர்க்க முடியாது என்பதால்... முற்றும்.)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;--------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-5216000045707038202?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/5216000045707038202/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=5216000045707038202' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/5216000045707038202'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/5216000045707038202'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2007/12/blog-post_12.html' title='&quot;நச்சு&quot; பிடிச்ச கதை - ஜன்னல் வெச்ச ஜாக்கெட்காரி (அடல்ட்ஸ் ஒன்லி)'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-2093341525806125281</id><published>2007-12-05T08:21:00.000-08:00</published><updated>2007-12-05T08:23:01.291-08:00</updated><title type='text'>அன்புள்ள ஸ்ரீராமருக்கு - பக்தன் அரைபிளேடு எழுதுவது</title><content type='html'>அன்புள்ள ஸ்ரீராமருக்கு, &lt;br /&gt;&lt;br /&gt;பக்தன் அரைபிளேடு எழுதுவது.&lt;br /&gt;நலம் நலமறிய ஆவல்.&lt;br /&gt;&lt;br /&gt;அச்சச்சோ. தப்பா நினைச்சிடாதீங்க.  இந்த கடுதாசி உங்க கோவிலை பத்தியோ இல்லை பாலத்தை பத்தியோ இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இது பர்சனல் மேட்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;அது வந்துங்க நமக்கு வேண்டப்பட்ட ஜோசியர் ஒருத்தர் நான் சாமியே கும்பிடறது இல்லை.  அதனாலதான் வாழ்க்கையில கொஞ்சம் கஸ்டப்படறேன்னு சொன்னார்.&lt;br /&gt;"ஸ்ரீராம ஜெயம்"  ஆயிரத்து எட்டு தடவை எழுது நல்லது நடக்கும்னு சொன்னாரு.&lt;br /&gt;&lt;br /&gt;சரி நல்லது நடக்கும்னா நாம ஏன் வேணாம்ன்றது.&lt;br /&gt;எழுதுவோம்னு பார்த்தா 1008 தடவையா.  நமக்கு அவ்வளவு பொறுமை கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால ஒரு தடவை டைப் பண்ணி மிச்சம் 1007 தடவையும் காபி பேஸ்ட் செஞ்சிருக்கேன்.&lt;br /&gt;டைம் ஈஸ் மணி. யூ நோ.&lt;br /&gt;கீழே இருக்கு.  கரெக்டா 1008 இருக்கான்னு எண்ணி பார்த்துக்கங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் நீங்க செய்ய நினைக்கிற "நல்லதை" அமெரிக்கன் டாலர்ல செஞ்சீங்கன்னாலும் ஓக்கே.  இண்டியன் ருப்பீல செஞ்சீங்கன்னாலும் ஓக்கே.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை இந்த ஆயிரத்தெட்டு பத்தாதுன்னு நீங்க ஃபீல் பண்ணீங்கன்னா ஒண்ணும் பிரச்சனை இல்லை.&lt;br /&gt;காபி பேஸ்ட்தான்.  லட்சத்தி எட்டு தடவையோ,  கோடியத்து எட்டு தடவையோ கூட போட்டுடலாம்.&lt;br /&gt;இல்லாட்டி என்னோட கம்யூட்டரோட 120 ஜிபி யும் "ஸ்ரீராம ஜெயம்"  காபி பேஸ்ட் பண்ணியே ஃபில் பண்ணி வைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் நீங்க கடவுள்.  உங்களுக்கு என்னோட பேங்க் அக்கவுண்ட் நம்பர்லாம் தரவேண்டியதே இல்லை.  உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.&lt;br /&gt;ப்ளீஸ் தயவு செஞ்சி நீங்க செய்ய இருக்கற "நல்லதை" நீங்களே டைரக்டா டெப்பாஸிட் செஞ்சிருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;தாங்யூ ஸ்ரீராம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள பக்தன்,&lt;br /&gt;அரைபிளேடு.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;ஸ்ரீராம ஜெயம்&lt;br /&gt;&lt;br /&gt;----------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;அன்பு பக்தன் அரைபிளேடுக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;உனது பக்தியை மெச்சினோம்.&lt;br /&gt;1008 தானா என்று எண்ணி பார்க்க எனக்கும் நேரமில்லை.&lt;br /&gt;ஆனால் உனது பக்தியை ஏற்றுக்கொண்டு பதிலுக்கு பணம் தரமுடியாத பரிதாப நிலையில் நான் இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;நான் வெங்கடாசலபதியாக வந்து குபேரனிடம் சங்க நிதி, பதும நிதியில் வாங்கிய கடனே இன்னும் கட்டி முடிக்கவில்லை.&lt;br /&gt;(சங்க நிதி, பதும நிதி  இரண்டிற்கும் கன்வர்ஷன் ரேட்டில் இண்டியன் ருப்பீயில் மதிப்பு வேறு ரொம்ப ரொம்ப அதிகம்.)&lt;br /&gt;&lt;br /&gt;பக்திக்கு ஈடாய் பணம் என்ற டிராக்சாக்ஸனை நான் விட்டு ரொம்ப நாள் ஆகிறது.  கட்டுப் படியாவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் உனது பக்திக்காக என்னால் முடிந்தது உனது வங்கிக் கணக்கில் ஒரு ரூபாயை டெபாசிட் செய்திருக்கிறேன்.&lt;br /&gt;இதை உனது கணினியை உபயோகித்து 1008 ரூபாயாக காபி பேஸ்ட் செய்து கொள்ளவும்.&lt;br /&gt;பத்தாது என்று நீ ஃபீல் பண்ணினால் இலட்சத்தியெட்டு ரூபாயாகவோ அல்லது கோடியத்தியெட்டு ரூபாயாகவோ கூட காபி பேஸ்ட் செய்து கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு என் ஆசியும் அன்பும் என்றும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;ஸ்ரீராம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-2093341525806125281?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/2093341525806125281/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=2093341525806125281' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/2093341525806125281'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/2093341525806125281'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2007/12/blog-post.html' title='அன்புள்ள ஸ்ரீராமருக்கு - பக்தன் அரைபிளேடு எழுதுவது'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-3028025237680923403</id><published>2007-11-29T00:19:00.000-08:00</published><updated>2007-11-29T00:26:40.403-08:00</updated><title type='text'>பெண்ணுரிமை காக்க கிளம்பி வா ஆணினமே.</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;தாங்க முடியலை சாமி. நாட்டுல ஏன் இப்படி கொடுமை எல்லாம் நடக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் புகுந்த வீட்டுக்கு போய்த்தான் தீரவேண்டுமா.&lt;br /&gt;பெண்கள் மாமியாரோடு வாழ்ந்துதான் தீர வேண்டுமா.&lt;br /&gt;&lt;br /&gt;கணவனுக்காக தியாகம் செய்து பெண் வாழவேண்டுமா.&lt;br /&gt;உப்புமாவை பெண்தான் கிண்ட வேண்டுமா. இது என்ன பெண் அடிமைத்தனம். ஆண் கிண்டினால் உப்புமா வராதா.&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பம் என்ற அமைப்பிற்காக பெண் ஓடாய்த்தேய வேண்டுமா.&lt;br /&gt;மாமியார் என்ற ராட்சசியிடம் பெண் ஏன் கஸ்டப்படவேணும். (மாமியார்ன்றவங்க பெண்தான்றத வசதியா மறந்துடுங்க. ப்ளீஸ்.)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஆணுக்கு மாமியார் வீட்டுக்கு போவது மானப்பிரச்சனைன்னா பொண்ணுக்கும் அது மானப்பிரச்சனைதான் இல்லையா.&lt;br /&gt;ரொம்ப கரெக்ட். இன்னா பண்ணலாம்.&lt;br /&gt;கல்யாணம் பண்ண கையோட ஆண் மானத்தோட தன்னோட வீட்ல மட்டும் வாழணும். அதே மாதிரி பெண்ணும் மானத்தோட தன்னோட வீட்ல வாழணும்.&lt;br /&gt;இவங்க எதுக்கு ஒருத்தர் மானத்தை ஒருத்தர் விட்டுக்கொடுத்துட்டு அடுத்தவங்க வீட்ல போய் வாழணும்ன்றேன்.&lt;br /&gt;கல்யாணம் பண்ண கையோட ஆணும் பெண்ணும் மானத்தோட தனித்தனியா வாழ்ந்துட்டா பிரச்சனை சால்வ்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை சேர்ந்துதான் வாழணுமா. இன்னா பண்ணலாம்.&lt;br /&gt;இந்த மாமியார்.. மாமனார் கொடுமை எல்லாம் பொண்ணுக்கு வரக்கூடாது.&lt;br /&gt;பையன் கல்யாணம் ஆன கையோட "இந்தா நைனா. இந்தாம்மா. எதோ பெத்தீங்க. வளர்த்தீங்க. உங்க கடமை முடிஞ்சி போச்சி. செத்தீங்கன்னா செய்தி சொல்லுங்க. வந்து கொள்ளி போடறேன்"னு சொல்லிட்டு கிளம்பி வந்துடணும்.&lt;br /&gt;அதே மாதிரி பொண்ணும் அவங்க அப்பா அம்மா கிட்ட சொல்லிட்டு வந்துடணும்.&lt;br /&gt;அப்பாலிக்கா மானப் பிரச்சனை இல்லாம இரண்டு பேரும் வாழலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாலிக்கா டெர்ம்ஸ் அண்டு கண்டிசன்ஸ்.&lt;br /&gt;ஆண் இருபதாயிரம் வாங்குறானா. பொண்ணு பத்தாயிரம் வாங்குதா. ஆண் ஒரு வேளை சமைக்க வேண்டியது. பொண்ணு இரண்டு வேளை சமைக்க வேண்டியது.&lt;br /&gt;பொண்ணு இருபதாயிரம் வாங்குது. பையன் பத்தாயிரம் வாங்குறானா. பையன் இரண்டு வேளை சமைக்க வேண்டியது. பொண்ணு ஒரு வேளை சமைக்க வேண்டியது.&lt;br /&gt;பையன் மட்டும்தான் வேலைக்கு போறான்னா பொண்ணு சமைக்க வேண்டியது.&lt;br /&gt;பொண்ணு மட்டும்தான் வேலைக்கு போகுதுன்னா பையன் சமைக்க வேண்டியது.&lt;br /&gt;ரிஜிஸ்டர் ஆஃபீசுல கையெழுத்து போடறதுக்கு மின்னாடியே இந்த அக்கரிமெண்டை கரீக்டா எழுதிக்கணும்.&lt;br /&gt;சமத்துவத்தை கரீக்டா நிலை நாட்டணும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னாமோ சொல்றாங்களேப்பா. அன்பு, பாசம் அப்படின்னு இன்னான்னாமோ. அதெல்லாம் இன்னாத்துக்கு சொல்லு.&lt;br /&gt;அன்பும் பாசமும் மட்டுமே இருந்துச்சின்னா அடுத்தவேளை சோறு வந்துடுமா இன்னா.&lt;br /&gt;டப்புதான் எல்லாமே. இன்னான்ற.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைங்களுக்கு கதைசொல்றதுக்காவது தாத்தா பாட்டி வோணும்னு கதையா விடுறீங்க.&lt;br /&gt;டிவியை திருப்புனா நூறு சானல் வருது. இதுல சொல்லாத கதையா அவங்க சொல்ல போறாங்க.&lt;br /&gt;கதை சொல்றதுக்காக இரண்டு கிழடு கட்டைங்கள வெச்சிக்கிட்டு வடிச்சுக் கொட்டிக்கினு இருக்க முடியாது. கரீட்டுதானே.&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் எங்கியோ போய்க்கினு கீது. இன்னமும் "கூட்டு" குடும்பம் "பொறியல்" குடும்பம்ன்னு கிட்டு.&lt;br /&gt;சின்ன குடும்பமா இருந்தா வசதியான "பீட்சா" குடும்பமா "கோக்" குடும்பமா இருக்கலாம் இல்லை.&lt;br /&gt;புள்ள எல்லாம் பொறுமையா பெத்து போர்டிங் ஸ்கூல்ல சேர்த்து விட்டுட்டா போச்சு. வசதிதான் முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிந்தியுங்க. புருசன் பொண்டாட்டி இரண்டுபேரு மட்டும் சந்தோசமா இருக்கணும்னா அப்பா அம்மாவை அடிச்சு தொறத்தறது தப்பே இல்லை.&lt;br /&gt;நம்ம வாழ்க்கை நம்ம சந்தோசந்தான் முக்கியம்.&lt;br /&gt;அதைவிட பெண்ணுரிமை ரொம்ப ரொம்ப முக்கியம்.&lt;br /&gt;பொண்ணுக்கு வாழ்க்கையில வரக்கூடாத பெரிய கஷ்டம் மாமியார் கஷ்டம். அதை அவங்களுக்கு கொடுத்துடாதீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யோசிங்க ஆண்களே. யோசிங்க.&lt;br /&gt;பெண்ணுரிமைய கட்டிக் காப்பாத்த கிளம்பி வாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;(பொண்ணு மாமியார் வூட்டுக்கு போவக்கூடாதுன்னு எயுதறதுதான் பெண்ணுரிமையாம்.&lt;br /&gt;அடடா. நானும் ஒரு பெண்ணரிமை கட்டுரை எயுதிட்டேன்ல. :)))))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டுல நிறைய கல்யாணமாகாத ஆண்கள் இந்த ரேஞ்சுலதான் பெண்ணுரிமைய பத்தி எயுதி பதிவு போட்டுக்னு கீறாங்கோ.&lt;br /&gt;இதெல்லாம் ஒரு வியாதி. அவ்வளவுதான்.&lt;br /&gt;கல்யாணம் ஆனா எல்லாம் சரியாப் பூடும்.&lt;br /&gt;கல்யாணம் ஆயிருச்சின்னா இந்த மாதிரி பதிவு போடுவாங்கன்றீங்க.&lt;br /&gt;ஒண்ணு பதிவு போடக்கூட சுதந்திரம் இல்லாம பதிவுலக விட்டு காணாம போய்டுவாங்க.&lt;br /&gt;இல்லாட்டி எதாவது ஒரு மூலையா இருந்து வைஃபாலஜி, லைஃபாலஜின்னு கதறிக்னு இருப்பாங்க. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-3028025237680923403?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/3028025237680923403/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=3028025237680923403' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/3028025237680923403'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/3028025237680923403'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2007/11/blog-post_29.html' title='பெண்ணுரிமை காக்க கிளம்பி வா ஆணினமே.'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-4845646365525018843</id><published>2007-11-27T22:00:00.000-08:00</published><updated>2007-11-27T22:02:00.920-08:00</updated><title type='text'>விற்றது தமிழ்.....</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;"மூவுலகையும் ஓர் குடையின் கீழ் ஆளும் அரசே. ஆயிரம் யானைகளை தனியனாக நின்று வெட்டி வீழ்த்திய வீராதி வீரனே. இப்போரில் நீ பெற்ற வெற்றியை பாடலாய் பாட யான் வந்தேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"பாடும் புலவரே. பாடும். ஒவ்வொரு பாடலுக்கும் நூறு பொன் பரிசு."&lt;br /&gt;&lt;br /&gt;"மன்னா உன் கொடைத் தன்மையே தன்மை."&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய புலவன் விற்றது தமிழ்.&lt;br /&gt;&lt;br /&gt;----------------&lt;br /&gt;&lt;br /&gt;"கவிஞரே நல்ல சிச்சுவேசன். ஹீரோயின் கனவுல ஹீரோவும் கவர்ச்சி நடிகையும் ஆடுறாங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"நல்லது. எப்படிப்பட்ட பாடல் வரிகள் வேண்டும் உங்களுக்கு."&lt;br /&gt;&lt;br /&gt;"சும்மா ஜிவ்வுன்னு சூடு ஏறனும். பிரட்யூசர் இந்த பாட்டை ரொம்ப எதிர்பார்க்கிறார்."&lt;br /&gt;&lt;br /&gt;"சரசமாக பாடும் பாடலில் சற்று விரசத்தை விரவ விட சொல்கிறீர். நானும் சற்று எதிர்பார்க்கிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க எதிர்பார்க்கறதை விட அதிகமாவே கிடைக்கும். பாட்டை ஜமாய்ச்சிடுங்க."&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய கவிஞன் விற்றது தமிழ்.&lt;br /&gt;&lt;br /&gt;--------------&lt;br /&gt;&lt;br /&gt;"தமிழகத்தில் தமிழ் கற்றுத் தராத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்".&lt;br /&gt;செய்தித் தாளினை வைத்துக் கொண்டு தலைவனை பார்க்க ஓடி வந்திருந்தான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன தலைவரே. இப்படி சொல்லிட்டீங்க. உங்களுக்கு பினாமியா நான் நடத்துற பள்ளிக் கூடங்க நாலிலேயே தமிழ்ப் பாடம் கிடையாது. நம்ம பள்ளிக்கூடங்க என்ன ஆகிறது."&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர் சிரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆட்சிக்கு வந்தா தமிழுக்கு ஏதாவது செய்யணும்யா. நாளைக்கு ஒரு பய நம்மளை நீ என்ன செஞ்சன்னு கேள்வி கேட்க கூடாது பாரு."&lt;br /&gt;&lt;br /&gt;"தலைவரே. ஆனா நம்ம பள்ளிக்கூடம் எல்லாம்."&lt;br /&gt;&lt;br /&gt;"அரசாணையோட மூணாவது பக்கத்துல நாலாவது பத்தியில அரசின் சிறப்பு அனுமதி பெற்ற பள்ளிக்கூடங்களுக்கு விலக்கு அளிக்கப்படும்னு இருக்கு. நம்ம பள்ளிக்கூடம் எல்லாம் அதுல வரும்."&lt;br /&gt;&lt;br /&gt;"தலைவரே. எங்கயோ போய்ட்டீங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"அது மட்டும் இல்லையா. கிட்டத்தட்ட இந்த மாதிரி 1600 பள்ளிக் கூடம் இருக்கு. அத்தனை பயலும் அலறியடிச்சிட்டு வருவான். சிறப்பு அனுமதிக்கு ஒரு ரேட் போட்டு்ட்டோம்னு வை ஒரு கலக்சன் போட்டுடலாம் இல்லை."&lt;br /&gt;&lt;br /&gt;"தெய்வமே எங்கயோ போய்ட்டீங்க." தலைவரின் காலில் விழுந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் விற்றது தமிழ்.&lt;br /&gt;&lt;br /&gt;-------------&lt;br /&gt;&lt;br /&gt;"சார். ரொம்ப நல்ல கதை சார். கேளுங்க சார்."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி சொல்லுய்யா. "&lt;br /&gt;&lt;br /&gt;"ஹீரோ ஒரு மாதிரி மன நிலை சரியில்லாத ஆளு. அவனுக்கு பிரியமானவங்க எல்லாம் செத்துடறாங்க. சின்ன வயசுலேயே அவங்க அம்மா. அப்புறமா அவனுக்கு பாடம் சொல்லி கொடுத்த வாத்தியாரு. அப்புறம் அவங்க அப்பா. யாருமே இல்லாத அனாதையா நிக்கிறான். "&lt;br /&gt;&lt;br /&gt;"என்னய்யா கத இது."&lt;br /&gt;&lt;br /&gt;"இருங்க சார் சொல்லி முடிக்கலை. சின்ன வயசுல ஹீரோ காதலிச்ச பொண்ணு கூட அவனை விட்டுட்டு எங்கயோ கண்காணாத தூரத்துல போயிடுது."&lt;br /&gt;&lt;br /&gt;"சாதாரண கதையா இருக்கே."&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை சார். முக்கியமான திருப்பமே இப்பதான் வருது. போலீசால ஹீரோ பாதிக்கப்படுறான். தன்னுடைய இந்த நிலைக்கு சமுதாயம்தான் காரணம்னு ஹீரோ நினைக்கிறான். கொலை பண்ண ஆரம்பிக்கிறான். சார். ஒண்ணு இல்லை இரண்டு இல்லை. இருபத்தி மூணு கொலை. டிக்கெட் கொடுக்க மாட்டேன்னு சொன்ன ரயில்வே கிளார்க். டிரெயின்ல பார்த்த போலீஸ்காரன். பீச்ல இருந்த காதல் ஜோடி. எல்லாரையும் போட்டுத் தள்றான்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்யா. வாழைக் குலையாயா அவன் சீவி தள்ளுறதுக்கு. கதை சரி வரலையே."&lt;br /&gt;&lt;br /&gt;"இருங்க சார். ஹீரோ ஏன் கொலை பண்றான்னு கேளுங்க. அங்கதான் சார் இருக்கு கதையோட முக்கியமான விஷயமே."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னய்யா அது."&lt;br /&gt;&lt;br /&gt;"ஹீரோ தமிழ் படிச்சான். தமிழ் நாட்டுல தமிழ் படிச்சவனுக்கு வேலை இல்லை. ஹீரோ தமிழுக்காக பாடுபடறான். தமிழோட இலக்கிய வளர்ச்சிக்காக பாடுபடறான். யாரும் மதிக்க மாட்டேங்கறாங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"ம்..."&lt;br /&gt;&lt;br /&gt;"இரண்டாயிரம் வருசத்து தமிழுக்கு மதிப்பில்லை. அவ்வளவுதான் சிவனா மாறுறான். அழிக்கிறான்."&lt;br /&gt;&lt;br /&gt;"இது நல்லா இருக்குய்யா. நிச்சயமா ஓடும். வித்தியாசமா இருக்கு. இந்த கதையை கரெக்டா எடு. இன்னாமோ இலக்கிய வளர்ச்சி அது இதுன்னியே. அதெல்லாம் வேண்டாம். அதெல்லாம் சரிவராது. தூக்கிடு."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி. சார்."&lt;br /&gt;&lt;br /&gt;"பராவாயில்லையா. வித்தியாசமா யோசிக்கிறீங்க. நாம இந்த படத்தை எடுக்கலாம்."&lt;br /&gt;&lt;br /&gt;"தாங்ஸ் சார்"&lt;br /&gt;&lt;br /&gt;கற்றது தமிழ் - விற்றது தமிழ்.&lt;br /&gt;&lt;br /&gt;-----------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-4845646365525018843?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/4845646365525018843/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=4845646365525018843' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/4845646365525018843'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/4845646365525018843'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2007/11/blog-post_2264.html' title='விற்றது தமிழ்.....'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-4759304650333655431</id><published>2007-11-27T17:07:00.000-08:00</published><updated>2007-11-27T17:12:29.316-08:00</updated><title type='text'>மறைந்த என் மனைவியின் நினைவாக..</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;என் அன்பு மனைவியே..&lt;br /&gt;&lt;br /&gt;தேவதையாய் என் வாழ்வில் வந்த நீ இறந்து இன்று ஓராண்டு ஆகிறது. ஓரு யுகம் கடந்து போனதாய் உணர்கிறேன்.&lt;br /&gt;உன் நினைவுகளை தொலைக்க முடியாதவனாய் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;இதோ உன் கல்லறையில் நின்று கதறிக் கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு ரோஜா பிடிக்காது. மல்லிகைதான் பிடிக்கும்.&lt;br /&gt;தினமும் வாங்கி வந்து உன் கூந்தலில் சூடி அழகு பார்ப்பேனே.&lt;br /&gt;அந்த வாசத்தை முகர்கிறேன் என்று அருகே வரும்போது சிணுங்குவாயே. நினைவிருக்கிறதா.&lt;br /&gt;உன் நினைவாக இதோ மல்லிகைப் பூ. ஆனால் இது உன் கூந்தலில் ஏறாது கல்லறையை அல்லவா அலங்கரிக்கிறது.&lt;br /&gt;நம் வாழ்க்கையில் விதி ஏன் இப்படி விளையாடியது ?&lt;br /&gt;&lt;br /&gt;அருமையாய் சமைத்திருந்த உன் கைப்பக்குவத்தில் மயங்கி சமைத்த கைகளுக்கு வைர வளையல் போட வேண்டும் என்று சொன்னேன் நான்.&lt;br /&gt;வெறும் வாய் வார்த்தை என்றாய்.&lt;br /&gt;மறுநாளே உன் கைகளில் வளையல் மாட்டி அழகு பார்த்தேன்.&lt;br /&gt;பதில் பரிசாய் நீ கொடுத்த முத்தத்தின் ஈரம் இன்னும் என் கன்னத்தை விட்டுப் போகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நீச்சல் குளத்தில் நீந்த ஆசையென்றாய்.&lt;br /&gt;தேடிச்சென்று நீந்தினோம். என் கைகளில் உனது பூ உடலின் எடையை நான் தாங்க நீ நீச்சல் பழகிய நினைவுகள்.&lt;br /&gt;இன்னும் என் மனதில் நீ நீந்திக் கொண்டிருக்கிறாய்.&lt;br /&gt;&lt;br /&gt;நீயும் நானும் கைகோர்த்து எங்கெல்லாம் சுற்றி வந்தோம்.&lt;br /&gt;ஊட்டியில் அந்த மழையின் குளிரில் விரித்த அந்த குடையின் அடியில் சில்லென்று தொட்டு அணைத்து நடந்த உன் கைகளின் குளுமை.&lt;br /&gt;இன்றும் என் இதயம் அந்த குளிர்கால மழையாய் உன் காதலை உணர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனது உயிராகவும் உலகமாகவும் நீயே இருந்தாய்.&lt;br /&gt;உனக்கென எதையும் மறுத்ததில்லை நான்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது கனவு வீடு எப்படி இருக்க வேண்டும் என்று நீ சொன்னாய்.&lt;br /&gt;பார்த்துப் பார்த்து உன் கனவிற்கு உருக் கொடுத்தேன் நான்.&lt;br /&gt;நீ சொன்ன வண்ணத்தில் சுவர்கள், நீ தேர்ந்தெடுத்த கற்கள் பதித்த தரைகள்.&lt;br /&gt;வீட்டின் ஒவ்வொரு மூலையும், ஒவ்வொரு பொருளும் உன் தேர்வு, கட்டில், மேஜை, நாற்காலிகள், தரைவிரிப்புகள், சன்னல் கதவு திரைகள்.&lt;br /&gt;இன்று அந்த வீட்டில் தனியொருவனாக நான். வீட்டின் ஒவ்வொரு பொருளும் நீ எங்கே எங்கே என்று கேட்பதாய் உணர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி இது நேர்ந்தது. அன்று ஏன் கேஸ் அடுப்பு வெடித்தது.&lt;br /&gt;உன் தளிர் மேனியை தீ ஏன் தின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு தெரியுமா. நீ இறப்பதற்கு முன்னே நான் இறந்து விட்டேன் என்பது.&lt;br /&gt;அன்று நான் அலுவலகம் விட்டு விரைவாக மதியப்பொழுதில் வீட்டிற்கு வந்திருக்க கூடாது.&lt;br /&gt;கட்டிலில் அவன் அணைப்பில்.. அந்த கோலத்தில் நீ. அதை நான் பார்த்திருக்க கூடாது.&lt;br /&gt;அந்த கணத்தில் நான் முதலில் இறந்து போனேன்.&lt;br /&gt;நீ என்னை பார்க்கவில்லை. வந்த தடம் தெரியாமல் திரும்பி விட்டேன் நான்.&lt;br /&gt;அன்று இரவுதான் அந்த அடுப்பு வெடித்தது. இத்தனை நாட்களாக நன்றாயிருந்த அடுப்பு அன்று ஏன் வெடித்தது என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;தீ உன் துரோகங்களை எரித்து விட்டது.&lt;br /&gt;மாசு மருவில்லாத மாறாத காதலுடன் நீ இன்னமும் என் மனதிற்குள் இருக்கிறாய்.&lt;br /&gt;உன் மரணத்தின் முதலாண்டில் உன் மீது கொண்ட காதலால் கதறிக் கொண்டிருக்கிறேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-4759304650333655431?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/4759304650333655431/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=4759304650333655431' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/4759304650333655431'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/4759304650333655431'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2007/11/blog-post_27.html' title='மறைந்த என் மனைவியின் நினைவாக..'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-1084438863115392717</id><published>2007-11-26T21:23:00.000-08:00</published><updated>2007-11-26T21:31:10.366-08:00</updated><title type='text'>அவன் சாமியார் ஆனது ஏன் ?</title><content type='html'>"பொன் வேண்டேன்.  பொருள் வேண்டேன்.  இவ்வையத்தொருமுறை பிறந்த பிறப்பும் தொலைக்கும் வழியறியேன்.  இறைவா.  இன்னொருமுறை பிறவா வரம்தா".&lt;br /&gt;இழுத்து நிறுத்திய குரலுக்குரியவனை பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பரதேசிக்கோலம்.  இடுப்பில் காவி.  எங்கோ நிலைத்த பார்வை.&lt;br /&gt;&lt;br /&gt;இளைஞன் அவன்.  இருபத்தியெட்டு வயதுக்குள்தான் இருக்கும் என்று தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சிறுவயதில் ஏனிந்த தவக்கோலம்.&lt;br /&gt;&lt;br /&gt;எதைத்தேடுகிறான் இவன்.   "நான் யார்?"  என்ற ஒற்றைக் கேள்வியை முன்னிறுத்திக் கிளம்பி ஞானம் தேடிய ரமணனின் புண்ணிய பூமியாம் இந்த அருணை மலையின் அடிவாரத்தில் இவன் தேடுவது என்ன.&lt;br /&gt;&lt;br /&gt;ஞானமா ?  மோட்சமா ?  பிறப்பறுக்க கிளம்பி வந்தது ஏன் ?&lt;br /&gt;&lt;br /&gt;அதோ அந்த களையான முகத்தில் மண்டிக் கிடக்கும் தாடியும், பரட்டைத் தலையும்.  &lt;br /&gt;&lt;br /&gt;"இவனா.."  என்றான் உடன் வந்த நண்பன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த சாமியாரை உனக்கு தெரியுமா."&lt;br /&gt;&lt;br /&gt;"எங்க ஊர்தான்.  நல்ல குடும்பம். அப்பா பிள்ளை இரண்டே பேரு.  பெரிய மளிகை கடை. நல்ல வியாபாரம்.  அப்பாவுக்கு உதவியா கடையா பார்த்துக்கிட்டு இருந்தான். ஊரே  திரண்டு வந்து கல்யாணமாச்சு இவனுக்கு".&lt;br /&gt;&lt;br /&gt;எங்கோ பார்த்துக் கொண்டிருந்த சாமியார் எங்களை கவனிக்காதவனாய் பாட ஆரம்பித்தான்.&lt;br /&gt;"அண்ணா மலையை சுற்று. சுற்று.&lt;br /&gt;அறுந்து போகும் பற்று. பற்று."&lt;br /&gt;&lt;br /&gt;"பாடுறான் பாரு.  திடீர்னு ஒரு நாள் அப்பா மண்டைய போட, சுத்தி இருந்தவங்க ஏமாத்திட எல்லாம் கடன்ல போச்சு.  கடை. வீடு எல்லாம்."&lt;br /&gt;&lt;br /&gt;"அச்சச்சோ..."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்புறம் என்ன.  பொண்டாட்டி பிள்ளைய தூக்கிட்டு அம்மா வீட்டுக்கு போயிட்டா.  பின்னாடியே போனான்.  மாமியார் வீட்டுல நாய் பாடு. பொண்டாட்டியும் மதிக்கலை.  வெளிய வந்திட்டான்."&lt;br /&gt;&lt;br /&gt;இல்லானை இல்லாளும் மதியாள் போலும்.  "அப்புறமா..." &lt;br /&gt;&lt;br /&gt;"கொஞ்ச நாள் இங்க அங்க சுத்துனான்.  எதோ ஒரு கட்டத்துல சித்த பிரமை பிடிச்சவனா ஆயிட்டான். கொஞ்ச நாள்ல காணாம போனவன்தான்.  இதோ இங்க சுத்திக்கிட்டு இருக்கான்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அட. தகப்பன் போனான். பாட்டன் போனான். பிள்ளைகளும் அவன்பின்னாலே.&lt;br /&gt;சுற்றி சுழன்றிடும் உலகத்திலே சுகத்தில் வாழ்பவர்கள் யாரும் இல்லே.&lt;br /&gt;எதைஎதையோ சுற்றாதே.&lt;br /&gt;பதைபதைத்து நிற்காதே.&lt;br /&gt;அண்ணாமலையை சுற்று. சுற்று.&lt;br /&gt;அறுந்து போகும் பற்று. பற்று"  அவன் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையில் ஏதோ ஒன்று எங்கேயே உடைந்த தருணத்தில் இப்படி ஆனான் போலும்.  தோற்ற அந்த கணத்தில் தோள்கொடுத்து தேற்றியிருக்க வேண்டியள் தள்ளி விட்டபின் வாழ்க்கையை தள்ளிவிட்டவன் இவன்.&lt;br /&gt;&lt;br /&gt;"வெற்றி பெறுகிற ஆணுக்கு பின்னாடி பெண் இருக்கிறாளோ இல்லையோ தெரியாது.  ஆனா இங்க இருக்கிற நிறைய சாமியார்ங்க பின்னாடி இரண்டு பெண்கள் இருக்கிறாங்க.  ஒண்ணு அவனுடைய மனைவி. இன்னொன்னு அவனுடைய மாமியார்."&lt;br /&gt;&lt;br /&gt;நண்பனின் அந்த நகைச்சுவையை என்னால் ரசிக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"வெற்றுக் கைகளுடன் பிறந்து பலவகையில் பற்றுக்களை பிடித்தவரே.  &lt;br /&gt;மறுமுறை பிறப்பீரா. இல்லையொரு தனிவழிபோவீரா.&lt;br /&gt;அண்ணாமலையை சுற்று சுற்று. அறுந்து போகும் பற்று".&lt;br /&gt;&lt;br /&gt;அவன் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-1084438863115392717?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/1084438863115392717/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=1084438863115392717' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/1084438863115392717'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/1084438863115392717'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2007/11/blog-post_26.html' title='அவன் சாமியார் ஆனது ஏன் ?'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-780539099107232493</id><published>2007-11-21T09:41:00.000-08:00</published><updated>2007-11-21T09:44:17.075-08:00</updated><title type='text'>மும்பை பெண்கள் அழகானவர்கள்  !!!!</title><content type='html'>மும்பை பெண்கள் அழகானவர்கள். &lt;br /&gt;அவர்களுக்கு திறந்த மனது.  எதையும் மறைக்கத் தெரியாது.&lt;br /&gt;இந்த ஒரு வாரகாலத்தில் அலுவலக வேலையாய் மும்பையை சுற்றியதில் மும்பை பெண்களைப் பார்த்து வியந்து போனேன்.&lt;br /&gt;எப்போது வேண்டுமானாலும் கழண்டு விழலாம் போல ஒரு ஜீன்ஸ்.  கவர்ச்சிகர வாசகங்கள் பொறித்த டாப்ஸ்.  இரண்டிற்கும் இடைப்பட்ட இடைப்பிரதேசத்தை காலியாக வைத்து மனதை காலிசெய்தார்கள்.&lt;br /&gt;இன்றோடு அலுவலக வேலை முடிந்தது. சென்னை திரும்ப வேண்டும்.  சே..&lt;br /&gt;&lt;br /&gt;தாதர் எக்ஸ்பிரஸ்ஸின் S7 கோச்சின் முன் நின்று கொண்டிருந்தேன் நான்.  வெளியே ஒட்டியிருந்த பெயர்ப்பட்டியலில் எனது சகபயணிகளை பார்க்க பார்வையை ஓட்டினேன்.&lt;br /&gt;சென்னையிலிருந்து மும்பை வந்தபோது பெட்டிமுழுவதும் ஆண்கள்.  கடலை வாங்கி கொறித்துக்கொண்டு வந்தேன்.  இந்தமுறையாவது கடலை சாகுபடிக்கு வாய்ப்புகள் இருக்குமா.&lt;br /&gt;&lt;br /&gt;53.  நாராயண் ஸ்வாமி  (ஆண்  27)  -  (நான்தான். 27 வயது நவநாகரீக இளைஞனின் பெயர் நாராயண் ஸ்வாமி.  என்ன கொடுமை நாராயண்.)&lt;br /&gt;54.  ரங்காச்சாரி         (ஆண் 55)   - எவனாயிருந்தா எனக்கென்ன.&lt;br /&gt;55. கோவிந்தன்         (ஆண் 42)   - இன்னொரு எவனாயிருந்தா எனக்கென்ன.&lt;br /&gt;56.  குமாரஸ்வாமி     (ஆண் 46)  -  சே. நாட்டுல கொசுத்தொல்லை தாங்க முடியலைடா. மருந்தடிச்சு கொல்லுங்கப்பா.&lt;br /&gt;57.  பர்வதம்மாள்    (பெண் 62) -  பாட்டிங்க எல்லாம் மும்பையில இருந்து சென்னை போகணும்னு யாரு இங்க அழுதா.&lt;br /&gt;58.  அனுஷ்கா    (பெண் 19) -  வாவ் !!!  ஜாக்பாட். அழகான பெயர். எனது அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அனுஷ்கா. எப்படி இருப்பாள் அந்த மும்பை தேவதை.  பெட்டியில் ஏறி எனது இருக்கையை தேடினேன்.  மூன்று ஆண்கள் மட்டும் இருந்தார்கள்.  எங்கே அந்த பாட்டியும் பியூட்டியும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது சன்னலோர இருக்கையில் அமர்ந்து "ஸ்டார் டஸ்ட்" இதழை பிரித்தேன்.  அதோ அந்த பாட்டியும் பியூட்டியும்.  எனது அடிவயிற்றில் பறந்த பட்டாம் பூச்சிகள் சட்டென்று பாரதிராஜாவின் வெள்ளுடை தேவதைகளாக மாறி சுற்றி வருவதாக உணர்ந்தேன்.  அவள் அழகை.. என்ன சொல்வது.  இந்த பெட்டியில் பயணிக்க இருப்பதன் மூலம் பிறவிப்பயன் அடையவிருப்பதாக உணர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் என் எதிர் சன்னலில் அமர்ந்தாள்.  என்னை கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.  தொடர்ந்து "ஸ்டார் டஸ்ட்" படிப்பதாக காட்டிக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ரங்காச்சாரிதான் பேச்சை ஆரம்பித்தார்.  எங்கே போகிறீர்கள் என்று பாட்டியை கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கதை ஆரம்பித்தது.  பாட்டி சென்னையையே இதுவரை பார்க்காத தன் பேத்தியை சென்னைக்கு முதன்முறையாக அழைத்து செல்வதையும்..  பேத்தி படிக்கும் கல்லூரியின் கோடைவிடுமுறை காலம் என்பதையும் சொல்ல..&lt;br /&gt;&lt;br /&gt;ரங்காச்சாரி தமது கவர்ண்மெண்ட உத்யோக விஷயமாக மும்பை வந்ததை சொல்ல... மற்ற இருவரும் பேச்சில் ஈடுபட அவர்களும் கவர்மெண்ட் உத்யோகஸ்தர்கள் என தெரியவந்தது.   (சே. மீண்டும் கொசுத்தொல்லை).&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பெண் வாயைத் திறக்கவில்லை.  நானும்..  அவள் தன் கடைக்கண்ணால் என்னை அவ்வப்போது பார்ப்பது போன்ற உணர்வு.   ரயில் ஆகாயத்தில் பறந்து செல்வது போல் உணர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி இவளிடம் பேச்சை ஆரம்பிப்பது.  தவறாக நினைப்பாளோ.  சே.  சே.  மும்பை பார்ன் அண்டு பிராட் அப்....   பிராட் மைண்டட் பீப்பிள் யூ நோ.  பேச ஆரம்பிக்க வேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டார் டஸ்ட்டை மூடி வைத்தேன்.  பேச்சை ஆரம்பிப்பதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அங்கிள்.  அந்த  மேகசினை தர்றீங்களா."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னது".&lt;br /&gt;&lt;br /&gt;"ஸ்டார் டஸ்ட்.  தர்றீங்களா.  படிச்சிட்டு தர்றேன்."&lt;br /&gt;&lt;br /&gt;கொடுத்தேன்.   மேலேறி எனது அப்பர் பர்த்தில் படுத்துக் கொண்டேன்  "அங்கிளாம்.  அங்கிள்.".&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்.  அப்புறம் என்ன சொல்ல வந்தேன்.&lt;br /&gt;மும்பை பெண்கள் அழகானவர்கள்.&lt;br /&gt;ஆனால் நாகரீகம் தெரியாதவர்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-780539099107232493?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/780539099107232493/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=780539099107232493' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/780539099107232493'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/780539099107232493'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2007/11/blog-post_21.html' title='மும்பை பெண்கள் அழகானவர்கள்  !!!!'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-7690542122792990359</id><published>2007-11-20T23:25:00.000-08:00</published><updated>2007-11-20T23:42:16.663-08:00</updated><title type='text'>ஒற்றை வரியில் மனிதகுல வரலாறு</title><content type='html'>&lt;span style="color:#000066;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆணாகிய நீ என்னை உன் தேவைகளுக்காக அடிமைப்படுத்தி இத்தோட்டத்தில் ஆடை அணிகலன்கள் கூட இல்லாதவளாய் இருக்க வைத்து வெளியுலகை காட்டாமல் கொடுமைப்படுத்தி இருக்கிறாய் என்று பெண்ணியம் பேசிய அவளை எச்சில் ஆப்பிளின் மீதத்தை சாப்பிட மறந்தவனாக பார்த்துக்கொண்டிருந்தான் ஆதாம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-7690542122792990359?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/7690542122792990359/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=7690542122792990359' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/7690542122792990359'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/7690542122792990359'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2007/11/blog-post_6370.html' title='ஒற்றை வரியில் மனிதகுல வரலாறு'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-5723829833490862920</id><published>2007-11-20T20:10:00.000-08:00</published><updated>2007-11-20T20:30:10.250-08:00</updated><title type='text'>என் மனைவியின் காதலன்..................</title><content type='html'>எனக்கு தெரியாது என்று அவள் எண்ணிக் கொண்டிருக்கிறாள்.  சில நாட்களாக அவளிடம் காணும் மாற்றங்கள் நான் அறியாதது இல்லை.  மகிழ்ச்சியாக இருக்கிறாள்.  எப்போதையும் விட என் மீது அதிகப் பிரியமாக இருக்கிறாள். எனக்கு பிடித்த உணவுப் பொருட்களாக சமைக்கிறாள்.  நான் அலுவலகம் செல்லும்போது ஆவலோடு கதவு வரை வந்து வழியனுப்புகிறாள்.  இந்த மாற்றங்களை நான் கவனித்துக் கொண்டுதானிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நேரங்களில் தொலைபேசி அழைப்பு வருவதும் நான் அப்புறம் பேசுகிறேன் என்று சொல்லி விட்டு அவள் வைத்துவிடுவதும்,  அழைத்த தோழியிடம் தான் பிறகு பேசுவதாக சொல்வதும்.&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் அதிக நேரம் மூழ்கி இருக்கிறாள்.  எனக்கு தெரிந்திருந்த அவளுடைய மின்னஞ்சலின் பாஸ்வேர்டை மாற்றிவிட்டாள்.  ஆயிரம்தான் கணவன் மனைவியாக இருந்தாலும் மின்னஞ்சலில் ஒரு பிரைவசி வேண்டும் என்று அவள் சொன்னபோது தலையாட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய மின்னஞ்சலின் அவள் அறிந்த பாஸ்வேர்டை நான் மாற்றவில்லை.  அவளுடைய மாற்றங்கள் ஆச்சரியமளித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்று.  வெளியே செல்வதற்கு தயாராக அவள் குளிக்க சென்றாள்.  எனது மின்னஞ்சலை பார்க்க கணிணியில் அமர்ந்தேன் நான்.  அவளது மின்னஞ்சல் கணக்கு லாக் அவுட் செய்யப்படாமல் அப்படியே இருந்தது.  லாக் அவுட் செய்யப்போந்தவனை அந்த மின்னஞ்சலின் தலைப்பு இழுத்து நிறுத்தியது.  "வித் கிஸ்ஸஸ்".&lt;br /&gt;&lt;br /&gt;எனது மனைவி தன் கைப்பட அனுப்பிய மின்னஞ்சல்.  முகவரியை பார்த்தேன் எனக்கு முற்றிலும் தெரியாத பெயர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏகப்பட்ட மின்னஞ்சல்கள்... பதில் மின்னஞ்சல்கள்..  "எப்படியிருக்கிறாய் கண்ணா.." ..  "நீ அனுப்பிய உனது புகைப்படங்களில் நீ அழகாக இருக்கிறாய்."..  "அச்சச்சோ தனிமையில் ரொம்ப கஷ்டப்படுகிறாய் போலும்"..... "நான் உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன்.."  "உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்."  "உம்ம்ம்ம்ம்ம்மாாாாாா"...  "வித் கிஸ்ஸஸ்"...&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றிரண்டு படிக்கவும் வெலவெலத்துப் போனேன்.   என் அன்பு மனைவியா இப்படி.  உன் அன்பு எல்லாம் வேஷமா..&lt;br /&gt;&lt;br /&gt;எது உன்னை இவ்வாறு செலுத்தியது.  அமைதியாக கணினியை விட்டு விலகினேன்.   அவள் குளித்து ஒப்பனை முடித்து வந்தாள்.  நான் எதுவும் பேசவில்லை.  வெளியே சென்றோம்.  உயர்ந்த நட்சத்திர ஓட்டலில் உணவருந்தினோம்.  மகிழ்ச்சியாக இருந்தாள்.  உள்ளுக்குள் நான் நொறுங்கியிருந்தேன். வெளிக் காட்டிக் கொள்ளவில்லை.  எனது மகிழ்ச்சி தொலைந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த சில நாட்களில் தனியார் துப்பறியும் நிறுவனம்.   தொலை பேசி எண்களை சரிபார்த்தேன். ஒரு குறிப்பிட்ட எண்ணிற்கு அதிக அளவு தொலைபேசப்பட்டிருந்தது.  அந்த எண்ணின் உரிமையாளனின் பெயர் மின்னஞ்சலின் அதே பெயர்.&lt;br /&gt;&lt;br /&gt;துப்பறியும் நிறுவனத்தின் முழுவிவரம் வந்தது.  அவர்கள் இருவருமாய் சிரித்தபடி இருந்த புகைப்படங்கள். அவன் என் மனைவியின் காதலன் கல்லூரி காலத்தில் இருந்து.  கல்லூரி  முடித்து அவனுக்கு வேலை கிடைக்காத நிலையில் வீட்டினர் காதலை எதிர்த்த நிலையில் அவனை உதறி என்னை மணந்திருந்தாள். இது எனக்கு தெரியாதது.  இன்று அவன் வாழ்க்கையில் சற்று உயர, எங்கள் தனிக்குடித்தனம் சகல வசதிகளையும் தர, அவள் வாழ்வில் மீண்டும் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தமாய் நொறுங்கியிருந்தேன்.  ஆத்திரம் வந்தது.  ஆனால் என்ன செய்ய.&lt;br /&gt;&lt;br /&gt;1. அவளை அடிக்கலாம்.  நொறுக்கலாம்.  வழிக்கு கொண்டு வரலாம்.  சே.  ஒரு எறும்பை கூட மிதித்திராத எனக்கு இப்படி ஒரு எண்ணமா.  &lt;br /&gt;2. அன்பாய் பேசி வழிக்கு கொண்டு வரலாம்.  இத்துணை நாள் நான் செலுத்திய அன்பு நம்பிக்கை அனைத்தும் உடைந்த நிலையில்.............  மேலும் அன்புக்கு எங்கு செல்வேன். &lt;br /&gt;3. எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லி அவளை விலக்கி என் வாழ்க்கைப் பாதையை பார்த்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கலாம்.  ஆனால் அவள் மேல் நான் கொண்ட அன்பால் அவளில்லாத வாழ்க்கையை நினைத்தும் பார்க்க இயலவில்லை.  அவளை பிரிவதை என்னால் தாங்க முடியாது.  &lt;br /&gt;4. பேசாமல் நான் இறந்து விடலாம்.  அவளிற்கு என் மீது அன்பு இல்லை என்ற நிலையில் நான் வாழ்வதில் பயனில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மூலையாக நின்று பார்த்துக் கொண்டிருந்தேன் நான்.  என் சடலத்தின் மீது மாலைகள் குவிந்திருந்தன.  அவள் அழுது கொண்டிருப்பதாக தோன்றியது.  யார் யாரோ வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதோ அது அவன்தான்.  சந்தேகமில்லை.  அவள் முகத்தில் ஒரு புன்னகை.  அவன் முகத்திலும்.  இருவருடைய பார்வையில் இருப்பது... சீ... சீ... இது நிச்சயமாய் காதலில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கொண்டு என்னால் பார்க்கமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியேறிக்கொண்டிருந்தேன் பெரும் சூன்ய வெளியை நோக்கி மிதந்தவாறு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-5723829833490862920?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/5723829833490862920/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=5723829833490862920' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/5723829833490862920'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/5723829833490862920'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2007/11/blog-post_20.html' title='என் மனைவியின் காதலன்..................'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-9036311097428577612</id><published>2007-11-18T14:04:00.000-08:00</published><updated>2007-11-18T17:22:07.955-08:00</updated><title type='text'>கோடம்பாக்கத்தில் மிஸ்டர் ஷெர்லாக் ஹோம்ஸ்...</title><content type='html'>நல்ல மத்தியான நேரம்.  கோடம்பாக்கம் ரயில்நிலையம்.  கிளம்பவிருந்த ரயிலில் ஓடிவந்து ஏறினாள் அவள்.  மதியநேரம் காலியாக இருந்த அந்த ரயில் பெட்டியில் ஒரே ஒரு இளைஞன் மட்டும் இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் தன்னையே பார்ப்பதாக தோன்றியது அவளுக்கு.  அவனது பார்வை பல இடங்களிலும் ஓடுவதாக உணர்ந்தாள்.  அமைதியாக ஒரு சன்னலோர இருக்கையில் அமர்ந்தாள். சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த இளைஞனை பார்த்தாள்.  அவன் தொடர்ந்து அவளையே பார்த்து கொண்டிருந்தான்.  நல்ல உயரம். மாநிறம். பார்க்க நல்லவிதமாய்த் தோன்றினாலும் அவன் பார்வை சரியில்லை என்று நினைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் தனது இருக்கையை விட்டு எழுந்து வந்து அவளுக்கு எதிரில் அமர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"எங்க படிக்கிறீங்க.  கோடம்பாக்கம் மீனாட்சி லேடீஸ் காலேஜா."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா.  எப்படித் தெரியும்."&lt;br /&gt;&lt;br /&gt;"கோடம்பாக்கம் ஸ்டேசன்ல ஏறியிருக்கீங்க. ஸ்டூடண்ட் மாதிரி இருக்கீங்க.  பக்கத்துல இருக்கிற பெண்கள் காலேஜ்னா மீனாட்சி காலேஜ்தான். அதை வெச்சுத்தான் கண்டுபிடிச்சேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"ரயிலில ஏறுற பொண்ணுங்க எல்லாம் எந்த காலேஜ்னு கண்டு பிடிச்சு சொல்லுறதுதான் உங்க வேலையா."&lt;br /&gt;&lt;br /&gt;"சே. சே. அப்படியில்லை.  நீங்க என்ன தப்பா புரிஞ்சிகிட்டீங்க.  நான் ஒரு துப்பறியும் நிபுணன்.  உங்களுக்கு ஷெர்லாக் ஹோம்ஸ் தெரியுமில்லையா. அந்த மாதிரி."&lt;br /&gt;&lt;br /&gt;'ரியலி".&lt;br /&gt;&lt;br /&gt;"எஸ்.  பவர் ஆஃப் டிடக்சன்.  சூழ்நிலைகள ஆராய்ஞ்சு கிடைக்கிற தடங்களை வெச்சு ஒருத்தரை பத்தி கரெக்டா சொல்லிடலாம். உதாரணத்துக்கு நீங்க கெமிஸ்ட்ரி ஃபைனல் இயர் படிக்கிறீங்க. கரெக்டா."&lt;br /&gt;&lt;br /&gt;"கரெக்ட். என் புத்தகத்தை பார்த்து சொல்லியிருப்பீங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா. நீங்க தாம்பரம் போறீங்க. சரியா."&lt;br /&gt;&lt;br /&gt;"எப்படி சொல்றீங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க சீசன் டிக்கட்டை பார்த்தேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"அவ்வளவு தூரத்துல இருந்து என் சீசன் டிக்கட்டை எப்படி படிக்க முடிஞ்சது."&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு துப்பறியும் நிபுணனுக்கு ரொம்ப தேவையானது பார்வைத் திறன். தட்ஸ் இட்.  இன்னிக்கு கெமிஸ்ட்ரி பிராக்டிகல் எக்சாம் முடிச்சிட்டு வர்றீங்க. கரெக்டா."&lt;br /&gt;&lt;br /&gt;"அமேசிங். எப்படி கண்டுபிடிச்சீங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க கிட்ட இருந்து வர்ற கந்தக அமிலத்தோட வாசனை.  அது நீங்க கெமிஸ்ட்ரி லேப்ல இருந்து வர்றீங்கன்னு சொல்லுது.   இது எக்சாம் டைம்.  காலேஜ் டைமுக்கு முன்னாடியே வீட்டுக்கு திரும்பறீங்கன்னா பிராக்டிகல் எக்சாமாத்தான் இருக்கணும்."&lt;br /&gt;&lt;br /&gt;"வாவ்".&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுக்கு அப்பா மட்டும்தான் இருக்காரு.  அம்மா கிடையாது.   அப்பாவுக்கு கவர்ன்மெண்ட் வேலை.   ஸ்கூல் போகிற ஒரு தம்பியோ இல்லை தங்கச்சியோ இருக்காங்க".&lt;br /&gt;&lt;br /&gt;"தம்பியும் அப்பாவுந்தான் இருக்காங்க. அம்மா இல்லை.  ஆனா எப்படி கண்டு பிடிச்சீங்க".&lt;br /&gt;&lt;br /&gt;" உங்க வலது கையில இருக்கிற சூடு சமைக்கறப்ப வச்சிகிட்டதா இருக்கணும்.  எக்சாம் டைம்லயும் நீங்க சமைக்கறீங்கண்ணா...  அப்புறம் உங்க கண்ணுல இருக்க அந்த சோகம்.  உங்க அம்மா சமீபத்திலதான் தவறியிருக்கணும்னு நினைக்கிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா."  கொஞ்சம் சோகமானவள் "கவர்ண்மென்ட் வேலையில அப்பா, ஸ்கூல் போற தம்பி எல்லாம் எப்படி கரெக்டா சொன்னீங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க வெச்சிருக்கிற நோட் புக், பேனா இரண்டும் கவர்ண்மென்ட் ஆஃபீசுல பார்த்திருக்கேன்.  இதை நீங்க யூஸ் பண்றீங்கண்ணா..  அப்பா கவர்மெண்ட் வேலையில இருக்கணும்."&lt;br /&gt;&lt;br /&gt;சிரித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்புறம் உங்க இடது கைவிரல்கள்ல கண்ணு மூக்கு வச்சு பொம்மை வரைஞ்சிருக்கு.  காலேஜ் போற பொண்ணு கையில இப்படி எதாவது இருக்குன்னா, இந்த மாதிரி வரைஞ்சிவிட ஸ்கூல் போகிற மாதிரி தம்பியோ தங்கச்சியோ இருக்கணும்.".&lt;br /&gt;&lt;br /&gt;"வாவ்.  எல்லாமே கரெக்ட்.  நீங்க நிஜமாவே துப்பறியும் ஜீனியஸ்."&lt;br /&gt;&lt;br /&gt;"தாங்ஸ்".&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களைப் பத்தி நான் சொல்லவா.  யூஸிங் த சேம் பவர் ஆஃப் டிடக்சன்".&lt;br /&gt;&lt;br /&gt;"ரியலி. சொல்லுங்க பார்ப்போம்.".&lt;br /&gt;&lt;br /&gt;"முதல்ல நீங்க ஒரு துப்பறியும் நிபுணர் இல்லை.  இரண்டாவது நீங்க அசோக் நகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர்.  மூணாவது நீங்க எங்க அப்பா எனக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளை".&lt;br /&gt;&lt;br /&gt;"எப்படி கண்டுபிடிச்சீங்க.  உங்க போட்டோவைதான் உங்க அப்பா கொடுத்தாரே தவிர என்னோட போட்டோவை நான் தரவேயில்லையே."&lt;br /&gt;&lt;br /&gt;"அசோக் நகர் எஸ்.ஐ.  அப்படின்னு அப்பா சொன்னதும் நான் என் ஃபிரண்ஸோட நேத்தே உங்களை நோட்டம் விட்டாச்சு.  நீங்கதான் லேட்."&lt;br /&gt;&lt;br /&gt;சிரித்தான்.   "உங்க அப்பா உன்னை பத்தி எல்லாமே சொன்னாரு.  ஷெர்லாக் ஹோம்ஸ் மாதிரி துப்பறியும் கதைகள் உனக்கு பிடிக்கும்னு சொன்னார்".&lt;br /&gt;&lt;br /&gt;"அதையெல்லாம் வச்சிக்கிட்டுதான் புதுசா கண்டுபிடிச்சா மாதிரி கதை விட்டீங்களாக்கும். நீங்க இன்னைக்கு காலையில இருந்து என்னை ஃபாலோ பண்ணிக்கிட்டிருக்கிறது எனக்கு தெரியும்."&lt;br /&gt;&lt;br /&gt;சிரித்தான்  "உன்னை எனக்கு பிடிச்சிருக்கு.   உனக்கு என்னை பிடிச்சிருக்கா."&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு நேரம் படபடவென பேசிக் கொண்டிருந்தவளிடம் மெளனம்.  தலைகுனிந்தவாறு சொன்னாள்  "பிடிச்சிருக்கு.."&lt;br /&gt;&lt;br /&gt;அவன் சிரித்தான்.  அவளும்.  ரயில் இந்த காதல் நாடகத்தை பாராதது போல் ஓடிக்கொண்டிருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-9036311097428577612?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/9036311097428577612/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=9036311097428577612' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/9036311097428577612'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/9036311097428577612'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2007/11/blog-post_18.html' title='கோடம்பாக்கத்தில் மிஸ்டர் ஷெர்லாக் ஹோம்ஸ்...'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-5225796476932479112</id><published>2007-11-15T19:38:00.000-08:00</published><updated>2007-11-15T19:48:20.441-08:00</updated><title type='text'>ஆஃபீசா  இல்லை ஜெயிலா..  எது சிறந்தது?</title><content type='html'>சிறைச்சாலை மற்றும் அலுவலகம்.  ஒரு ஒப்பீடு.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயில் என்பது பெரும்பாலும் 8 x 10 அடியாவது உள்ள அறை.&lt;br /&gt;அலுவலகம் என்பது 6 x 8 அடி மட்டுமே உள்ள க்யூபிக்கிள். (தடுப்பு)&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயிலில் மூன்று வேளை சாப்பாடு கிடைக்கும்.&lt;br /&gt;ஆஃபீசில் ஒரே ஒரு உணவு இடைவேளை.  அந்த உணவுக்கும் நாம்தான் காசு தரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயிலில் நன்னடத்தைக்கு ஜெயில் காலம் குறைக்கப்படும்.&lt;br /&gt;ஆஃபீசில் நன்னடத்தைக்கு அதிக வேலைநேரம் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயிலில் காவலாளிகள் நமக்காக கதவுகளை திறப்பர். பூட்டுவர்.&lt;br /&gt;ஆஃபீசில் கழுத்தில் ஒரு அட்டையை தொங்க விட்டுக்கொண்டு கதவுகளை நாம்தான் திறக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயிலில் டிவி பார்க்கலாம்.  விளையாடலாம்.&lt;br /&gt;ஆஃபீசில் டிவி பார்த்தாலோ விளையாடினாலோ வெளியேற்றப்படுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறையில் ஒவ்வொரு செல்லிலும் தனிக் கழிப்பிட வசதி.&lt;br /&gt;ஆஃபீசில் பொதுகழிப்பிடம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் நம்மை பார்க்க வரலாம்.&lt;br /&gt;அலுவலகத்தில் குடும்பத்தினரோ நண்பர்களோ நம்மை வந்து பார்க்கமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறையில் நமக்கு ஆகும் செலவுகளை வரிகட்டுவோர் ஏற்றுக் கொள்வர்.&lt;br /&gt;அலுவலகத்தில் அலுவலகம் செல்ல ஆகும் அனைத்து செலவையும் நாமே ஏற்பதோடு, யாரோ சிறையில் அனுபவிப்பதற்காக நாம் வரியும் கட்டுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறையில் நமக்கு எது நடந்தாலும் கேள்வி கேட்க மனித உரிமைக் குழுக்கள் இருக்கின்றன.&lt;br /&gt;அலுவலகத்தில் 14 மணிநேரம் உழைத்தாலும் கேள்வி கேட்க யாரும் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறையில் "பார்" கம்பிகளுக்கு உள்ளிருந்து கொண்டு எப்போது வெளியே போவோம் என்று யோசிப்போம்.&lt;br /&gt;அலுவலகத்தில் பெரும்பாலான நேரம் "பாருக்குள்" செல்வதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறையில் சாடிச மனப்பான்மை உள்ள வார்டன்கள் இருப்பார்கள்.&lt;br /&gt;அலுவலகத்திலும் இது போல சிலர் இருப்பார்கள். அவர்களுக்கு டேமேஜர், சாரி மேனேஜர் என்று பெயர்.   :)))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முடிவு செய்யுங்கள்.  எது சிறந்தது.  அலுவலகமா?  சிறைச்சாலையா ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-5225796476932479112?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/5225796476932479112/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=5225796476932479112' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/5225796476932479112'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/5225796476932479112'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2007/11/blog-post_15.html' title='ஆஃபீசா  இல்லை ஜெயிலா..  எது சிறந்தது?'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-8546919218235158808</id><published>2007-11-14T15:10:00.001-08:00</published><updated>2007-11-14T15:10:48.415-08:00</updated><title type='text'>நாம பிரிஞ்சிடலாம்...</title><content type='html'>"நாம பிரிஞ்சிடலாம்"  சொன்னவளை பார்த்து சிலையாக உட்கார்ந்திருந்தான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐ யம் சீரியஸ்.  எனக்கு உங்ககூட தொடர்ந்து வாழ்ந்து குப்பை கொட்ட முடியும்னு தோணலை."&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்.  நாம லவ்பண்ணிதான கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஐ ஸ்டில் லவ் யூ."&lt;br /&gt;&lt;br /&gt;"எஸ். லவ் பண்ணினோம்.  கல்யாணத்துக்கு முன்னே நான் பார்த்த நீங்க வேற.  இப்ப நான் பார்க்கிற நீங்க வேற.".&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியெல்லாம் இல்லை.  நான் எப்பவும் ஒரே மாதிரிதான் இருக்கேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"யூ ஆர் ரைட்.  கல்யாணத்துக்கு முன்னாடியும் கவிதை எழுதினீங்க.  என் மேல இருக்க காதலாலதான் கவிதை எழுதறீங்கன்னு நினைச்சேன்.  ஆனா கவிதை மேல இருக்கிற காதலாலதான் கவிதை எழுதறீங்கன்னு கல்யாணத்துக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது".&lt;br /&gt;&lt;br /&gt;"பிரச்சனை அதுதானா.  நான் கவிதை எழுதறதையே விட்டுடறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"பிரச்சனை அது இல்லை. நீங்கதான்."&lt;br /&gt;&lt;br /&gt;"நானா.  கல்யாணமாகி இந்த ஆறு மாசத்தில எப்பவாவது உன்னை எதாவது சொல்லியிருப்பனா.  நீ சொல்ற மாதிரிதானே கேட்டுக்கறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"பிரச்சனையே அதுதான்.   நீங்க சொல்லி நான் கேட்கணும்.  இங்க தலைகீழா இருக்கு.  நான் சொல்றதை எல்லாம் நீங்க கேட்டுக்கறீங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"அதுல என்ன தப்பு.  அதுதானே பெண்சுதந்திரம்."&lt;br /&gt;&lt;br /&gt;"சுதந்திரம்னா என்னோட கருத்தை நீங்க கேட்டுக்கணும்.  உங்க கருத்தையும் சொல்லணும்.  இரண்டுல எது நல்லதோ அதை நீங்க செய்யணும்.  யூ நீட் டு கைட் மி."&lt;br /&gt;&lt;br /&gt;"நீ சொல்றது வித்தியாசமா இருக்கு.   நான் எப்பவாவது உன்னை அதிர்ந்து எதாவது சொல்லியிருக்கனா.  இன்ஃபேக்ட் நீதான் ஒரு சில சமயங்கள்ல என்னை திட்டியிருக்க.  அப்ப கூட நான் அமைதியாதான் இருந்திருக்கேன்.".&lt;br /&gt;&lt;br /&gt;"நான் ஏதாவது தப்பு பண்ணினா நீங்க சொல்லணும்ன்றதுதான் நான் எதிர்பார்க்கிறது.  இந்த ஆறு மாத வாழ்க்கையில என் எதிர்பார்ப்புகள் எல்லாம் பொய்யாயிருக்கு."&lt;br /&gt;&lt;br /&gt;"நான் என்ன தப்பு செய்யறேன்.  நீ கேட்கறது எல்லாம் வாங்கி தர்றேன்.  அப்பப்ப வெளியில போய் சாப்பிடறோம். நேத்து கூட வெளிய போனோம்.".&lt;br /&gt;&lt;br /&gt;"சரிதான். இல்லைன்னு சொல்லலை.   நேத்து நாம வெளிய போனப்ப நான் போட்டிருந்த டிரஸ் கலர் சொல்லுங்க பார்ப்போம்."&lt;br /&gt;&lt;br /&gt;"...."&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்ல மாட்டீங்க. கவனிக்கலை.  நான் என்னை நீங்க வெளிய கூட்டிட்டு போகணும்னு விரும்பலை.  என்னை கவனிக்கனும்னுதான் விரும்பறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"நியாபகம் இல்லாதது தப்பா."&lt;br /&gt;&lt;br /&gt;"நியாபகம் இல்லாததுன்னு இல்லை.  எதையும் கவனிச்சு பார்த்தா மறக்காது.   நீங்க.. உங்க வேலை.  உங்க இலக்கியங்கள்...  உங்க உலகம் தனி.  இதுல நான் தேவையில்லாம இருக்கேன்னு தோணுது."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியெல்லாம் இல்லை.  என் உலகமே நீதான்."&lt;br /&gt;&lt;br /&gt;"பொய்.  உங்களுக்கு நான் தேவையில்லை.".&lt;br /&gt;&lt;br /&gt;"நான் அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்.  தண்ணியடிக்கிறேனா.. இல்லை கண்டபடி ஊர் சுத்தறேனா."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியிருந்தா கூட பரவாயில்லையே.  திருத்திடலாம்.  நீங்க தனிரகம்.  நீங்க நல்லவர்தான்.  இல்லைன்ல.  ஓவர் நல்லவராயிருக்கீங்க. அதுதான் பிரச்சனை.  கெட்டவனை திருத்திடலாம்.  நல்லவனை திருத்தமுடியாது."&lt;br /&gt;&lt;br /&gt;"....."&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க சாஃப்ட்ன்றதாலதான் உங்களை பிடிச்சிருந்தது.  ஆனா இவ்வளவு ஓவர் சாஃப்டான ஆளா இருப்பீங்கன்னு நினைச்சு கூட பார்க்கலை.  இப்படி இருந்தீங்கன்னா நீங்க வாழ்க்கையில முன்னேறவும் மாட்டீங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னதான் சொல்ல வர்ற.."&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க கூட தொடர்ந்து வாழ விரும்பலை.  நாம பிரிஞ்சிடலாம்".&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் பிரிந்து போனார்கள்.  அவன் இப்போது கூட அதிர்ந்து பேசமுடியாதவனாக உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-8546919218235158808?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/8546919218235158808/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=8546919218235158808' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/8546919218235158808'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/8546919218235158808'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2007/11/blog-post_14.html' title='நாம பிரிஞ்சிடலாம்...'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-8416116975486414087</id><published>2007-11-12T13:01:00.000-08:00</published><updated>2007-11-12T13:02:12.507-08:00</updated><title type='text'>அஜால் குஜால் கவிதை</title><content type='html'>நேரம் பொழுதாச்சி.&lt;br /&gt;கருக்கல் கவிழ்ந்தாச்சி.&lt;br /&gt;ஓலைக் குடிசையது&lt;br /&gt;ஒருத்தன் தட்டி நின்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;"மாரி மரிக்கொழுந்தே&lt;br /&gt;மச்சான் வந்திருக்கேன்.&lt;br /&gt;கதவை திறந்திடடி.&lt;br /&gt;கால்கடுக்க நின்னிருக்கேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"வெளக்கு வெச்சு&lt;br /&gt;வெகுநேரம் ஆயிருச்சு.&lt;br /&gt;காலையில போனதுதான்.&lt;br /&gt;காத்திருந்து காத்திருந்து&lt;br /&gt;கண்ணு பூத்து போனதுதான்.&lt;br /&gt;கடை தேடி போனாயோ.&lt;br /&gt;கண்டதையும் குடிச்சாயோ.&lt;br /&gt;கதவை திறக்க மாட்டேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"கோவம் அதுதானா.&lt;br /&gt;குடிச்சா குடலழிஞ்சி போகுமின்னு&lt;br /&gt;நீ சொன்ன கேட்டுக்கிட்டேன்.&lt;br /&gt;சத்தியமா குடிக்கலை நான்.&lt;br /&gt;குலதெய்வம் மேல சத்தியம்தான்."&lt;br /&gt;&lt;br /&gt;"எத்தனை சத்தியம்தான்&lt;br /&gt;நாளும் நாளும் நான்கேட்பேன்.&lt;br /&gt;நிச்சயமா நம்ப மாட்டேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"நிசத்ததான் நான் சொன்னேன்.&lt;br /&gt;நம்பிடடி என் தங்கம்.&lt;br /&gt;காலையில ஆயாகடையில&lt;br /&gt;வாங்கி துன்ன ஆப்பம்.&lt;br /&gt;இன்னம் வருது பாரு ஏப்பம்.&lt;br /&gt;வேற எதுவும் இறங்கலியே.&lt;br /&gt;வெறும்வயிறாத்தான் வந்திருக்கேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"பின்ன ஏன் பொழுதாச்சு.&lt;br /&gt;கண்ட காவாளி பயகூட&lt;br /&gt;சகவாசம் வச்சு&lt;br /&gt;சீட்டாடி வந்தாயா."&lt;br /&gt;&lt;br /&gt;"அச்சச்சோ. அப்படி ஏதுமில்லை.&lt;br /&gt;தொட்டு தாலி கட்டுன பின்னாடி&lt;br /&gt;கெட்ட சகவாசம் விட்டாச்சு."&lt;br /&gt;&lt;br /&gt;"பின்ன வேறென்ன.&lt;br /&gt;இம்புட்டு நேரம் நீயும்&lt;br /&gt;இருந்ததெங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"பட்ட உழைப்புக்குத்தான்&lt;br /&gt;கூலி பணமா கிடைச்சுதடி.&lt;br /&gt;பத்து கடையேறி&lt;br /&gt;பதமா பார்த்து பார்த்து&lt;br /&gt;பாதாம் அல்வா வாங்கி வந்தேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"நிசமாவா".&lt;br /&gt;&lt;br /&gt;"அதுமட்டும் இல்லையடி.&lt;br /&gt;முத்து முத்து முல்லைப்பூவும்&lt;br /&gt;முழங்கணக்கில் வாங்கி வந்தேன்.&lt;br /&gt;அதனால நேரமாச்சு.&lt;br /&gt;கதவை திறந்திடடி".&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியா?".&lt;br /&gt;&lt;br /&gt;கதவும் திறந்திடுச்சி.&lt;br /&gt;திறந்த கதவு மூடிருச்சி.&lt;br /&gt;விளக்கும் அணைஞ்சிருச்சி.&lt;br /&gt;வானத்து நட்சத்திரமே,&lt;br /&gt;எதைப்பார்த்து கண்ணடிச்சே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-8416116975486414087?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/8416116975486414087/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=37661078&amp;postID=8416116975486414087' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/8416116975486414087'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/37661078/posts/default/8416116975486414087'/><link rel='alternate' type='text/html' href='http://araiblade.blogspot.com/2007/11/blog-post_12.html' title='அஜால் குஜால் கவிதை'/><author><name>அரை பிளேடு</name><uri>http://www.blogger.com/profile/13765454368744590237</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://bp0.blogger.com/_uHlvUWLz62w/RalQ1f8Aq_I/AAAAAAAAAAc/tQOi8_zUjxs/s320/arainew.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-37661078.post-1400082671015155679</id><published>2007-11-01T08:30:00.000-07:00</published><updated>2007-11-01T08:41:34.905-07:00</updated><title type='text'>சாஃப்ட்வேரு இஞ்சினியர்கள் சமூகத்தை சீரழிக்கிறாங்களா..  ஒரு தீர்வு</title><content type='html'>சாஃப்ட்வேர் மக்களால் சமூக சீரழிவு - முதல்ல மறுத்து சில பாயிண்டுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. சாஃப்டுவேரு இஞ்சினியருங்க சம்பளம் அதிகம் வாங்கனாலும் வாங்கறாங்க. வீடு விலை ஏறிபோச்சி, வாடகை ஏறிபோச்சி, ஹோட்டல பில்லு ஏறி போச்சி, பஸ் டிக்கட் ஏறிபோச்சி, தியேட்டர் டிக்கட்ல இருந்து பாப்கார்ன் வரிக்கும் எல்லாமே ஏறிபோச்சின்னு சமீபத்துல படிக்க முடிஞ்சது. (நன்றி வெட்டி, வசந்தம் ரவி.).&lt;br /&gt;&lt;br /&gt;"இவன் கிட்ட நிறைய காசு இருக்கு. நாலு இடம் அலைஞ்சி எங்க பொருள் கம்மியா கிடைக்கும்னு தேட கூட இவனுக்கு நேரம் கிடையாது. கேட்ட விலைய கொடுத்துடுவான்டா இவன் ரொம்ப நல்லவன்டான்னு" ஆட்டோக்காரன்ல இருந்து வீட்டு புரோக்கர்ல இருந்து வீட்டு ஓனர் வரிக்கும் எல்லோரும் முடிஞ்ச அளவுக்கு விலை ஏத்தறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;புத்து லட்சத்துல வீட்ட கட்டிட்டு அதை இருபது லட்சத்துக்கு விக்கற ரியல் எஸ்டேட்காரன் சமூகத்தை சீரழிக்கிறானா.&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல இருபத்தஞ்சாயிரம் சம்பளக்கார சாஃப்ட்வேர் இஞ்சினியர் அந்த வீட்டை லோன் போட்டு வாங்கிட்டு மாசம் பத்தாயிர ரூபா சுளையா வட்டியோட இருபது வருசத்துக்கு கட்டணுமேன்னு கவலையோட இருக்கானே அவன் சமூகத்தை சீரழிக்கிறானா.&lt;br /&gt;&lt;br /&gt;ரியல் எஸ்டேட்காரங்க எல்லாம் சேர்ந்து எக்குதப்பா ஏத்திபுட்டு ஒரு வீடு 60 லட்சம்ன்றான். அட நாப்பாதாயிரம் வாங்குறவனுக்கு கூட இது கட்டுபடியாவதேப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;2. காலை 5 மணிக்கு எழுந்து அரக்க பரக்க தயாராகி எங்கோ சென்னை புறநகரிலோ அல்லது பெங்களூர் புறநகரிலோ இருக்கும் ஆஃபிஸ் செல்ல பேருந்தை பிடித்து அதில் இரண்டு மணி நேரம் பயணம் செய்து.. பின்னர் பின்னிரவு வரை வேலை செய்து மீண்டும் எட்டு மணியோ பத்து மணியோ அதற்கு மேல் அலுவலகத்தில் இருந்து கிளம்பி பன்னிரண்டு மணிக்கு மேல் வீட்டுக்கு வந்து சேரும் சாஃப்ட்வேர் மக்களே இங்கு பெரும்பான்மை.&lt;br /&gt;இவர்களுக்கு தன் குடும்ப உறுப்பினர்களை பார்க்கவே நேரம் இல்லாத போது சமூகத்தை சீரழிக்க நேரம் நிச்சயமாக கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;வீக் எண்டுகளில் சிலர் உற்சாக பானங்களால் கவிழ்ந்து விடுவதால் எழுந்து நிற்கவே நேரம் இல்லாததால் வீக் எண்டுகளிலும் சமூகத்தை சீரழிக்க வாய்ப்பு கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. ஹோட்டல்ல விலையேறிச்சின்னாலும் ஐட்டிக்காரன்தான் பொறுப்பா. சரவணபவன் எல்லா ஊர்லயுமே சாப்பாடு 40 ரூபா வைக்கிறானே இது எப்படி.&lt;br /&gt;கமிட்மெண்ட் இல்லாத பேச்சிலர் சாஃப்டுவேர் இஞ்சினியர்க்கு வேணும்னா இது கட்டுப்படியாவலாம். குடும்பஸ்தனுக்கு எல்லாம் மாசம் ஒரு தடவை போனாலே பெரிய விஷயம்தான்.&lt;br /&gt;"குந்தி தின்னா குன்றே மாளும்" இருபத்தஞ்சாயிரம் எந்த மூலைக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;4. ஐபாட் வாங்கி பாட்டு கேட்டாலோ, இல்லை 8 மெகா பிக்சல் காமிரா வாங்கி படம் எடுத்தாலோ, பிராட்பாண்ட் இண்டர்நெட் கனெக்சன் வாங்கினாலோ சமூகம் சீரழியுமா என்ன.&lt;br /&gt;காமெடி பண்ணாதீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;5. பேச்சிலருக்கு வீடு கொடுக்கவே பத்து வருசத்துக்கு மின்னாடி யோசிச்ச மெட்றாஸ் இன்னிக்கு வீடு பேச்சிலருக்கு மட்டும்தான்னுது.&lt;br /&gt;&lt;br /&gt;"அஞ்சி பேரா தங்கிக்கு தம்பி. பத்தாயிரம் கொடுங்க. ஆளுக்கு இரண்டாயிரம்தான் வருது.".&lt;br /&gt;&lt;br /&gt;"சார். நானும் சாஃப்ட்வேர்தான். ஆனா ஃபேமிலி. மாசம் அஞ்சாயிரம் தர்றேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"கட்டுபடியாவதுங்க. பேச்சிலர் பசங்க நாலு பேர் கேட்டிருக்காங்க. எட்டாயிரம் தர்றதா சொன்னாங்க. அவங்களுக்கே விட்டிடலாம்னு இருக்கேன்."&lt;br /&gt;&lt;br /&gt;அய்யா தப்பு சாஃப்டுவேர் இஞ்சினியருங்க மேல இல்லை. பேராசைக்கார வீட்டுக்காரங்க மேலதான்.&lt;br /&gt;&lt;br /&gt;6. ஆட்டோக்காரன் அதிகமா கேக்குறதுக்கு எல்லாம் சாஃப்ட்வேரு காரணமில்லைங்க.&lt;br /&gt;நீங்க ஆட்டோவுல டைடல் பார்க்குல இருந்து கிளம்பி டைடல் பார்க்குக்கே போகணும்னா கூட 60 ரூபா ஆகும்னு தெரியுமா உங்களுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;7. நடந்து போறவனுக்கு சைக்கிள் வேணும்னு ஆசை.&lt;br /&gt;சைக்கிள்காரனுக்கு பைக் வேணும்னு ஆசை.&lt;br /&gt;பைக் வெச்சிருக்கவனுக்கு கார் வாங்கணுன்னு ஆசை.&lt;br /&gt;கார் வெச்சிருக்கவனுக்கு ஒசத்தியான வெளிநாட்டு கார் வாங்கணும்னு ஆசை.&lt;br /&gt;வெளிநாட்டு கார் வெச்சிருக்கவனுக்கு இன்னும் நாலஞ்சி கார் வாங்கணும்னு ஆசை.&lt;br /&gt;ஆசைகள் மட்டும் குறையவே குறையாது...&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்காக சைக்கிளோ பைக்கோ காரோ இல்லாதவன் வெச்சிருக்கிறவன பாத்து நீ எப்படி இத வாங்கலாம். வாங்காதேன்னு சொல்ல முடியுமா.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னமும் சாஃப்ட்வேர் இஞ்சினியர்ங்களாலதான் வெலைவாசி ஏறுது. சமூகம் சீரழியுதுன்னு நீங்க சொன்னா...&lt;br /&gt;இந்த உலகமகா பிரச்சனைக்கு எங்கிட்ட தீர்வு இருக்கு:&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்சனைக்கு காரணம் இன்னான்னா இருபத்தோரு இரபத்திரண்டு வயசுல சாஃப்ட்வேர் இஞ்சினியராவுற நிறைய பசங்க கையில கும்சா இருபபத்தஞ்சி கிடைச்சதும் அளவுக்கு அதிகமா செலவழிச்சு வெல வாசிய ஏத்திடறாங்கன்னு தெரியுது.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய சம்பளத்தோட வேலை கிடைச்ச கையோட கபால்னு அவங்களுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிப்போட்டம்னா பொறுப்பு வரும். வீண் செலவு இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணம்னு ஆகிபோச்சின்னா இருபத்தஞ்சாயிரம் என்ன... லட்சலட்சமா சம்பாதிச்சாலும் பத்தாது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால கவர்ன்மெண்ட் ஒருத்தருக்கு இருபத்தஞ்சாயிரத்துக்கு மேல சம்பளம் கிடைச்சா மூணாவது சம்பளம் வாங்கறதுக்குள்ள கல்யாணம் பண்ணனும்னு சட்டம் போடணும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம சமூக பிரச்சனை ஆட்டோ மெட்டிக்கா தீர்ந்துடும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/37661078-1400082671015155679?l=araiblade.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://araiblade.blogspot.com/feeds/1400082671015155679/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://ww
