Friday, November 17, 2006

நாம இங்க இன்னாத்துக்கு கீறோம்னா

எல்லாத்துக்கும் ஒரு கும்புடு வுட்டுக்கிறேன் நைனா...

எல்லாரும் நல்லா கீறிங்களா ?

எல்லாரும் ஏதேதோ எயுதுறீங்கோ..
அத்த எல்லாம் பட்சதுல நமக்கு ஒரே பீலிங்கா பூட்சி..

ஏண்டா சோமாறி, நீயுந்தான் கீறியே.. உன்னோட கருத்து கொளுகை எல்லாம் இந்த மாதிரி வெளியே சொல்லிக்கினியான்னு நம்ம மனசாட்சி கேட்குதுப்பா...
நான் யார்னு கேக்குறியா...நம்ப பாக்கியம் ராமசாமி அப்புசாமி கதைங்கல்ல நம்மளை பத்திசொல்லி இருப்பாரு..

அதான் நம்ப வாத்தியார் பாஷை அதாம்பா மெட்றஸ் பாஷை இது அழிஞ்சிக்குனு வருதுப்பா..


இப்பல்லாம யாரு நம்ம லங்குவேஜு பேசறாங்க..

நம்ம கமலு மட்டும் எப்பவாச்சும் பம்மல் கே சம்பந்தம் மாதிரி படத்துல அப்ப அப்ப பேசறாரு... குமுதத்துல நம்ப தோஸ்து அர்சு எப்பவாச்சும் குரல் கொடுக்கிறாரு....


அதனால முன்னால சொன்னா மாதிரி நம்ம ஹிஸ்டரி கர்த்து கொளுகை அததான் இங்க எயுத போறேன்...

அப்பப்ப வந்து கண்டுக்க நைனா.



4 comments:

said...

வாங்க வாங்க!!!
வெற்றிகரமாக தொடற வாழ்த்துக்கள்!!!



-------------------------------------------------------------------------------------------------------------
said...

Welcome 1/2 Blade !!!



-------------------------------------------------------------------------------------------------------------
said...

இலவசக்கொத்தனார் said...

இன்னா நைனா அப்டி சொல்டே? நம்ம எஸ்கே கீறாரே அவரு நம்ம பாசைல திருக்குறலே சொல்றாரு. அப்பாலிகா நாம அப்பப்ப சவுண்டு வுடறோம். எல்லாம் நம்ம ஆளுங்கதான். சும்மா வூடு கட்டி வெள்ளாடலாம். கெளம்பி வா மாமே....



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நிறைய எழுதுங்க பிளெடு, சுவாரஸ்யமா இருக்குது உங்க பதிவு படிக்க



-------------------------------------------------------------------------------------------------------------