Wednesday, January 10, 2007

மெகாஆஆஆஆ லட்சுமி - இரண்டாவது வருட கதை....

மெகாலட்சுமி மொத்த குடும்பத்தோட மெட்றாஸ் வந்துட்டாங்க...

ஓட்டு வீடு ஒண்ணுல ஒட்டு மொத்த குடும்பமும் தங்குது..
விறகு அடுப்புல சமைச்சு மண்ணெண்ணை கூட இல்லாம கஷ்டப்படுறாங்க...
ஏற்கனவே ஸ்டாக் இருந்த பட்டு புடவைங்கள தெருத் தெருவா விக்கிறாங்க.. மெகா லட்சுமி...

ஒரு நாள் கார் ஒண்ணு பக்கத்துல வந்து நிக்குது...
"செல்வ லட்சுமி"..
"கனகாம்பரம்"..

ஆமா அது கனகாம்பரமேதான். பத்தாவது வரிக்கும் லட்சுமி கூட பர்மாவுல படிச்ச அதே கனகாம்பரம்.
ஸ்கூல் ரெக்கார்டுல லட்சுமி பேரு செல்வலட்சுமி. அப்போ எல்லோரும் செல்வின்னுதான் கூப்பிடுவாங்க.

கனகாம்பரம் செல்வலட்சுமிக்கு வேலை போட்டு தர்றாங்க..
குடும்பம் கொஞ்சம் நிமிருது...

கனகாம்பரம் புருஷன்தான் கே.கே. ஹோட்டல் பிஸினஸ். அவன் நல்லவனா கெட்டவனான்னு யாருக்குமே தெரியாது.

பர்மாவுல பத்தாவது படிக்கறப்ப லீவுக்கு இந்தியா வந்த செல்வலட்சுமி எக்சிபிஷன்ல தொலைஞ்சி போயிட்டாங்க...
அவங்களேதான் பதினைஞ்சி வருசம் கழிச்சி குணசேகர் கையில ராமேஸ்வரத்துல கிடைச்சாங்க...

நடுவுல பதினைஞ்சி வருஷம் எங்க இருந்தாங்க...

(இந்த கேள்விக்கு ப்ளாக் அண்டு வொயிட் நெகடிவ்ல.. டாங்கிங்க.. பேட்டில் ஃபீல்டு.. சோல்டர்ஸ்... சல்யூட் வெச்சிக்னு மார்ச் பண்ற ஆர்மி... மெகா/செல்வ லட்சுமியும் சல்யூட் பண்றாங்க. !!!!)

இதுல லட்சுமிய தொலைச்சிட்ட லட்சுமியோட பர்மா அப்பா லட்சுமிய தேடி வர்றாரு.
பர்மால பெரிய தேக்கு வியாபாரி...
இப்ப பாக்குக்கு கூட வழியில்லை...

அவரோட விரோதி சந்தன கருப்பன் அவரோட தேக்கு கொடெளன்ல ஒரு டப்பா முழுக்க செல் பூச்சிங்களை போட்டு மொத்த தேக்கும் செல்லரிச்சி போச்சி....
வேற வழியில்லாம தப்பிச்சு இந்தியா வர்றாரு...

அவரோட இரண்டாவது சம்சாரம் அதாவது லட்சுமியோட சின்னம்மாவும் தன்னோட இரண்டு பொண்ணு ஒரு மாப்பிள்ளை ஒரு புள்ளையோட லட்சுமியோட வீட்டுக்கு வந்துடறாங்க.
நல்ல வேளை கனகாம்பரம் புண்ணியத்துல லட்சுமி இப்ப கொஞ்சம் பெரிய பங்களா சைஸ் வீட்ல இருக்காங்க...


இப்ப அந்த வீட்ல குணசேகர் அப்புறம் அவரோட குழந்தைங்க... வித் லட்சுமியோட குழந்தை..
வில்லி மாயா அவங்க அம்மா தனசேகர்.. அப்புறம் அவங்க குழந்தை..
லட்சுமியோட பர்மா அப்பா.. சின்னம்மா அவங்க பசங்க...
மொத்தம் எத்தினி பேரு இருக்காங்க அப்படின்ற கணக்கு எனக்கே தெரியாது..
(யாராவது கதைய முழுசா படிச்சி எனக்கு எண்ணி சொன்னா ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்... நான கணக்குல வீக்கு.. ஹி.. ஹி..).

கனகாம்பரம் புருசன் கே.கே. க்கு இரண்டு தங்கச்சிங்க... (அப்படின்னா அவங்க வில்லிங்கன்னு நான் தனியா சொல்லணுமா என்ன).
கனகாம்பரத்துக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு. இவங்க இரண்டு பேருக்கும் அத்தைங்கள பிடிக்காது. செல்வலட்சுமியம்மாவதான் பிடிக்கும்.

இப்படி இருக்க சொல்ல ஒரு நாள் கோவில்ல கொடுத்த வாழைப்பழத்தை முழுங்க முடியாம கனகாம்பரம் கோமாவுக்கு போயிடறாங்க.

கனகாம்பரத்தோட அப்பா இருக்காரே.. (இவருக்கு இரண்டு பொண்டாட்டி... கனகாம்பரம் முதல் பொண்டாட்டியோட பொண்ணு.. இரண்டாவது பொண்டாட்டிக்கு இரண்டு பையனுங்க..)
அவரு இன்னா பண்றாருன்னா.. பேரன் பேத்திங்களுக்காக லட்சுமிய கே.கே. வுக்கு கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறாரு.

இத கேள்விப்பட்ட குணசேகர் தாங்க முடியாம இமய மலைக்கு போயிடறாரு...
லட்சுமி கே.கே. கல்யாணம் நடக்குது...

வில்லி மாயாவால இத பார்த்துகிட்டு சும்மா இருக்க முடியல. அவங்க தனசேகருக்கு விஷத்தை கொடுத்து சாகடிச்சிடுறாங்க.
கே.கே. வுக்கு ஹோட்டல்ல வந்த நஷ்டத்துக்கு காசு கொடுத்து வெத்து பேப்பர்ல கையெழுத்து வாங்கிடறாங்க... அப்புறம் கே.கே. வை என்னை கல்யாணம் பண்ணிக்கன்னு மிரட்டறாங்க...

கோமாவுல இருக்கற கனகாம்பரம்... குடும்பம் பிஸினஸ் அப்படின்னு மட்டும் இருக்கற லட்சுமி.. தன்னை கவனிச்சுக்கவும் யாராவது வேணும்னு கே.கே. வும் லட்சுமிக்கு தெரியாம மாயாவை கல்யாணம் பண்ணிக்கறாரு...

அப்பாலிக்கா கஞ்சாவுக்கு அடிமையான கங்காவோட பையன லட்சுமி காப்பாத்தறாங்க...
கங்கா பொண்ணை கையப்புடிச்சி இழுத்தவன தூக்கி போட்டு மிதிச்சு ஜெயில்ல தள்றாங்க..
பக்கத்து வீட்டு பொண்ணை பஞ்சர் ஒட்டுற பய ஏமாத்தி குழந்தை கொடுத்துட்டு ஓடி போக.. எப்பவுமே தன்னோட வீட்டை சுத்தி வர்ற சதுர வட்டை சதீஷ்க்கு அந்த பொண்ணை கல்யாணம் பண்ணி வெக்கறாங்க..
(இந்த சதுர வட்டை சதீஷ்.. யார்... யார்.....)

மாயா கே.கே. வோட இரண்டு தங்கச்சிங்க கூடவும் கூட்டு வைக்கிறாங்க... அதுவும் இல்லாம தன்னோட பையனை சின்னம்மாவுக்கு எதிரா வளர்க்கறாங்க..

குணசேகரோட முதல் மனைவி காவேரி பையன் காமேசு கொலைவெறியோட தீவிரவாதியா திரும்பி வர்றான்..

சந்தன கருப்பன் இப்ப இந்தியா வந்து இங்க சந்தன கட்டை கடத்துறான். சின்ன வயசுல அவன் தூக்கனப்ப எட்டி உதச்ச செல்வ லட்சுமிய பழி வாங்க அவனும் துடிச்சிக்னு இருக்கான்.
பஞ்சர் ஒட்டுற பய வேற ஆசிட் பாட்டிலோட அலையறான்...

ஒன்பதாவது படிக்கறப்ப செல்வலட்சுமி என்னைத்தான் லவ்வு பண்ணிச்சின்னு ஒருத்தன் கிளம்பி வர கே.கே. வுக்கும் லட்சுமி மேல பொறாமை.. என்ன பண்றதுன்னு பயங்கரமா யோசிக்கிறான்.

கனகாம்பரத்தோட இரண்டு சதிகார அண்ணனுங்க தனியா பிளான் பண்றாங்க..

சொந்த பர்மா சின்னம்மாவும் அவங்க மாப்பிள்ளையுமா சேர்ந்து வேற சொத்துங்கள அமுக்க சதி பின்றாங்க...

இவ்ளோ சதியிலிருந்தும் மெகா செல்வ லட்சுமி எப்படி தப்பிக்கறாங்க... அது மூணாவது வருஷ கதைங்கோ...

இரண்டு வருடமா இந்த கதைய தொடர்ந்து பார்த்துக்கிட்டு வர்ற கேணையர்கள்... சாரி.. நேயர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

உங்களுக்கு ஒரு போட்டி...

இன்னிக்கு எபிசோட்ல மெகா செல்வ லட்சுமி போட்டிருந்த பச்சை கலர் ஜாக்கெட்டோட கலர் என்ன ?

நாலு ரூபா கார்டுல நீங்க உங்க விடைய அனுப்ப வேண்டிய முகவரி:
மெகாஆஆஆ லட்சுமி....
போஸ்ட் பாக்ஸ்: மைனஸ் 12..
செல்வ லட்சுமி தெரு.
பர்மா.

11 comments:

said...

இன்னா சரே, ரொம்பதான் டைம் இருக்கு போல உருபடியான(?!) வேலைக்கு வாழ்த்துக்கள்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஸ்ஸ்ஸ்ஸ்.... இப்பவே கண்ணக் கட்டுதே...



-------------------------------------------------------------------------------------------------------------
said...

வருக சோமி...

நாம முப்பது நிமிசத்துல எயுதுன கதையிது...

இந்த மாதிரி கதைய வருசக்கணக்கா பார்த்துக்னு இருக்கற மக்களுக்கு எவ்ளோ டைம் இருக்கும்..

அவங்க நேரம் எவ்ளோ உருப்படியா போகுது இல்லை.

வாழ்த்துக்கு தாங்ஸ்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

இதுக்கு கண்ணை கட்டுதா ஜி அவர்களே..

டெய்லி அஞ்சி மணிநேரம் மெகா சீரியல் பாக்குறவங்க எல்லாம் இருக்காங்க...
:))))



-------------------------------------------------------------------------------------------------------------
said...

அய்யோ...சாமி....
எப்பா...போதும் .....போதும்ப்ப
யாரு யாரை கல்யாணம் பண்ணங்க, யாரு யாருக்கு சதி பின்றாங்கன்னு ஒன்னும் புரியால சாமி...:(((



-------------------------------------------------------------------------------------------------------------
said...

//கோபிநாத் சொன்னது இன்னான்னா...

அய்யோ...சாமி....
எப்பா...போதும் .....போதும்ப்ப
யாரு யாரை கல்யாணம் பண்ணங்க, யாரு யாருக்கு சதி பின்றாங்கன்னு ஒன்னும் புரியால சாமி...:(((//

இதுக்கு இப்டி ரியாக்ஷன் உட்டா எப்டி கோபி. இன்னும் மூனு வருச கத வந்துக்கிட்டே இருக்குதாம் :)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க கோபிநாத்து..

யார் யாரை கல்யாணம் பண்ணாங்கன்றது பாக்குற நமக்கு தெரியலன்னா கூட பரவாயில்லைங்க.. இவங்க கல்யாணம் பண்ற ரேஞ்சில யாரு யாரை கல்யாணம் பண்ணாங்கன்றது சம்பந்த பட்ட கேரக்டருக்கே தெரியாம போயிடுச்சின்னா இன்னா பண்றது...



-------------------------------------------------------------------------------------------------------------
said...

டுவிஸ்டு கதயில இருக்கலாம் ஆனா கதயே டுவிஸ்டா இருக்ககூடாது.
நூல் எது வால் எதுன்னு தெரியாம குழப்பமா இருக்கு.

ஆனாலும் ரொம்ப நல்லா எய்திருகீன்க



-------------------------------------------------------------------------------------------------------------
said...

யேவ் நீ மட்டும் என் கையான்ட மாட்டுனேனு வச்சுக்கோமே. கொன்னுடேன்.
தலையும் புரியல காலும் புரியல.

//இப்ப அந்த வீட்ல குணசேகர் அப்புறம் அவரோட குழந்தைங்க... வித் லட்சுமியோட குழந்தை..//

லட்சுமிக்கு ஏற்கனவே குழந்தை இருக்குறது தனி பிளாச்பேக்கா?..



-------------------------------------------------------------------------------------------------------------
said...

மிகவும் ரசித்தேன்...!!!!!!1



-------------------------------------------------------------------------------------------------------------
said...

வருக பாபு அவர்களே..

இது வந்து கதை சுருக்கம்தான்..

விரிவான கதை சின்னத் திரையில் வெகு விரைவில்..

ரொம்ப தாங்ஸ்..



-------------------------------------------------------------------------------------------------------------