Thursday, December 20, 2007

மாமு... மாமு... போலீஸ் மாமு....

நான் சென்னை சாலையெங்கும் பைக் ஓட்டி அலுவலகம் செல்ல ஆரம்பித்த புதிது.
எது ஒன் வே என்ன ஏது என்று தெரியாத புதிது.
காலை 8:45. பாண்டி பஜாரின் சந்து ஒன்றுக்குள் சென்று விட்டு மீண்டும் மெயின் ரோட்டை பிடித்து அலுவலகம் செல்ல திரும்பினேன்.
பிடிச்சாரு டிராபிக் போலீஸ்காரர்.
"நிறுத்து. நிறுத்து. இது ஒன் வே."
"சார். தெரியாது சார். போர்டு எதுவும் பார்க்கலையே." ஒன்வே போர்டு எதையும் நிஜமாகவே பார்க்கவில்லை நான்.
"போர்டு பார்க்கலைன்னா என்னா. இது ஒன்வேன்னு தெரியாதா."
"தெரியாது சார். நான் கொஞ்சம் புதுசு."
"சரி. சரி. ஐம்பது ரூபா கொடுத்துட்டு நகரு."
"ஃபைனா சார்.".
"ஆமா. கொடுத்துட்டு போயிட்டே இரு."
"சரி. சார். தர்றேன். ரிசிப்ட் கொடுப்பீங்களா."
"ரிசிப்டா..."
"ஆமா சார். நான் ஃபைன் கட்டுனதுக்கு ரிசிப்ட்."

அந்த டிராபிக் போலீஸ் என்னை வித்தியாசமாக பார்த்தார்.
"இன்ஸ்பெக்டர் ரவுண்ட்ஸ்ல இருக்காரு. அவர்தான் ரிசிப்ட் கொடுக்க முடியும். அவர் வர நேரமாகும். நீ ஃபைன கொடுத்துட்டு நகரு."
"பரவாயில்லை சார். நான் இருந்து ரிசிப்ட் வாங்கிகிட்டே போறேன்." யோசித்தார்.
"சரி. கொஞ்சம் நில்லு."
கொஞ்ச நேரம் கழித்து வந்தார். வண்டியின் பின் ஏறிக்கொண்டார். "பனகல் பார்க் பக்கத்துல இருக்கிற ஸ்டேஷனுக்கு விடு."

அந்த அலுவலகத்திற்கு வெளியே வண்டியை நிறுத்தி இருவருமாய் உள்ளே சென்றோம்.
இன்னொரு போலீஸ்காரரிடம் கொண்டு நிறுத்தினார்.
"என்னய்யா."
"சார். ஒன்வேயில வந்ததுக்காக பிடிச்சேன்."
"சரியா. இங்க ஏன் கூட்டி வந்த."
"ஒன்வேயில வந்ததுக்கு ஃபைன் கட்டணும்னு சொன்னேன். ரிசிப்டு கேக்கறாரு."
அவர் என்னை பார்த்தார்.
"என்ன நீங்க பிரஸ்ஸா."
"இல்லை சார். ஒன்வே. ஃபைன் கட்டுன்னு சார் சொன்னாரு. சரி ரிசிப்டு கொடுங்கன்னு கேட்டேன்."
"எங்க வேலை பார்க்கறீங்க."
சொன்னேன். மேற்கொண்டு என் அலுவலகம் எங்கே வீடு எங்கே என்ற விசாரணைகள்.
"இன்ஸ்பெக்டர் வெளியே போயிருக்காரு. அவருதான் ரிசிப்டு தரணும். சரி. இந்த பேப்பருல உங்க அட்ரஸ் வண்டி நம்பர் எழுதுங்க."
அவர் கொடுத்த வெள்ளைத்தாளில் எனது முகவரியும் வண்டி எண்ணையும் எழுதினேன்.
"சரி பணத்தை கொடுத்துட்டு போங்க. ஈவினிங் இந்த பக்கமாதானே போவீங்க. வந்து ரிசிப்டை வாங்கிட்டு போங்க."
ஐம்பது ரூபாயை கொடுத்தேன். "தாங்ஸ் சார்."
நேரத்தை பார்த்தேன். 10:15.

அச்சோ. அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது. அலுவலகம் சென்றதும் இருந்த ஆணிகளை பிடுங்கி கிளம்பும் போது இரவு 8:30.
இதற்கு மேல் எங்கே சென்று நான் ரிசிப்டு வாங்குவது. அப்புறம் அந்தப் பக்கம் நான் போகவே இல்லை.

இன்று வரை எனக்கு தெரியாத விஷயம். ஒன்வேயில் வந்தால் ஃபைன் இருக்கிறது என்றால் எவ்வளவு. அதற்கு ரிசிப்ட் உண்டா.
அப்படியானால் அதை தரும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது.

Wednesday, December 19, 2007

ஒரு போர்வீரனின் கதை..

எத்தனை யுகங்களாக நான் இவ்வாறு இருக்கிறேன். இது தூக்கமா இல்லை மரணமா. கண்கள் திறந்து பார்க்கிறேன்.
இது சொர்க்கமா. இத்துணை தேவதைகளும் தேவர்களும் எங்கிருந்து வந்தார்கள்.
இல்லை இது ஏதோ மடாலயமாக காண்கிறது.

இதோ இந்த வெண்தாடி பெரியவர் யார். எனக்கு இவர் ஏதோ குடிக்க தருகிறாரே. இது என்ன கசக்கிறது. மீண்டும் மயங்குகிறேன்.

இம்முறை கண்களை திறக்கிறேன். ஏதோ தெளிவாக உணர்கிறேன். சிரித்தபடி அந்தப் பெரியவர்.

"ஐயா. நான் யார். நீங்கள் யார். இது எந்த இடம்."

"பொறுமை தம்பி. மிகவும் களைத்திருக்கிறாய்.".

"இல்லை ஐயா. இப்போது மிகவும் தெம்பானவனாக உணர்கிறேன். தாங்களே என்னைக் காப்பாற்றி போஷித்தவர் என்று அறிகிறேன். ஆயின் எதுவும் நினைவில் இல்லை. தாங்கள் விளக்க முடியுமா."

"தம்பி. நீ நமது தேசத்தின் குதிரை வீரன். நானொரு சாதாரணத்துறவி. இன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு முன் நடந்த யுத்தத்தில் நீ காட்டிய வீரத்தை நினைத்தால் எனக்கு இப்போதும் மெய் சிலிர்க்கிறது."

"ஆம். ஐயா நினைவுக்கு வருகிறது. நமது பகையரசன் கிழக்கு கோட்டையில் இருக்கிறான் என்ற தகவல் கிடைத்ததும் நமது படைப்பிரிவு கிளம்பியது. குதிரைவீரர்களும் காலாட் படையினரும் பல எந்திரப் பொறிகளுடன் கிளம்பினோம். கோட்டையின் மதில் சுவரை தாக்கியழித்து கோட்டையை கைப்பற்ற யுத்தமும் துவங்கினோம். நினைவுக்கு வருகிறது. ஆயின் யுத்தம் என்னவானது. நாம் வென்றோமா ?"

"துரதிர்ஷ்ட வசமாக இல்லை தம்பி. மிகவும் உக்கிரமாக யுத்தம் நடந்தது. நமது வீரர்கள் மதிலை உடைத்து உள் போந்தார்கள். காயப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்ய நானும் உங்கள் உடனிருந்தேன். கோட்டையை முற்றுகையிட்டு எரியூட்டினோம். என்னமாய் போரிட்டாய் தம்பி நீ. கிட்டத்தட்ட வெல்லும் தருணத்தில் பகைவனின் வடதிசைப் படைகள் வந்து சேர்ந்தன. எண்ணிக்கையில் குறைவான நமது படை அழித்து தள்ளப்பட்டது. நான் பின் வாங்கினேன். போரில் காயம் பட்ட நீ மயங்கி விழுந்தாய். உனது குதிரை உன்னை நமது எல்லையில் கொண்டு வந்து சேர்த்தது. உன்னைக் காப்பாற்றி சிகிச்சையளித்தேன்."

"ஐயா. ஏன் அவ்வாறு செய்தீர்கள். புறமுதுகு காட்டியன் என்ற பழி எனக்கு தேவையா. அந்த யுத்தத்திலேயே நான் வீரமரணம் அடைந்திருக்கக்கூடாதா."

"தம்பி. தேசம் இன்று இருக்கும் நிலையில் ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது. அதை வீணில் போக்காதே. அந்த யுத்தத்தில் நாம் தோற்றிருக்கலாம். ஆனால் நமது சேதத்தை விட பகைவனின் சேதம் இருமடங்கு அதிகம். கிழக்குக் கோட்டையை முற்றிலும் எரியூட்டிவிட்டோம். பகையரசன் புலம் பெயர்ந்து இப்போது மேற்குக் கோட்டையில் இருக்கிறான். நமது அரசரும் மேற்குக் கோட்டை மீதான படையெடுப்புக்கு படைகளை திரட்டி வருகிறார்."

"நல்ல செய்தி ஐயா. நானும் படைப்பிரிவில் சென்று சேர விரும்புகிறேன்."

"மகிழ்ச்சி. அடுத்த ஐந்து தினங்களுக்கு ஊர்க்காவல் படையில் இரு. அரசரின் செய்தி வந்ததும் படையினருடன் சென்று சேர்வாய்."

"மிக்க நன்றி ஐயா."

--------

அடுத்த ஐந்து நாட்களும் ஊர்க்காவல் படையில் ஊரைச் சுற்றி வந்தேன். அந்த ஐந்து தினங்களும் ஐந்து மணித்துளிகளாய்ப் பறந்து மறைந்தன.

இந்த தேசத்தின் மக்கள்தான் இந்த போர்க்காலத்தில் எத்தனை சுறுசுறுப்பாய் இருக்கிறார்கள். வீரர்களுக்கு வேண்டிய தானியம் உழவர்களின் மிகுந்த உழைப்பில் தேவைக்கு அதிகமாகவே வந்து சேர்ந்து கொண்டிருந்தது.

போருக்கு தேவையான வண்டிகள் இயந்திர பொறிகள் செய்வதற்கு நாட்டின் தெற்குப்பகுதி காடுகள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. அங்கு நான் சென்ற போது நான் கண்ட காட்சிகள் என் கண்களை அகலத்திறப்பனவாய் இருந்தது.
கொல்லர்களின் உலைக்களத்தில் வால்களும் வேல்களும் வெகுவாக தயாராகிக் கொண்டிருந்தன. காட்டை ஒட்டிய துறைமுகத்தில் மரக்கலங்கள் கம்பீரமாக நின்றிருந்தன.

அந்தத் துறவியை அங்கு சந்தித்தேன்.
"தம்பி அந்த மரக்கலங்களை பார்த்தாயா. இந்த முறை யுத்தம் தரையிலல்ல கடலில்." புன்னகைத்தார்.
"கப்பல்களில் வீரர்கள் கிளம்புகிறோம். படைப்பிரிவு எதிரி பார்க்காத இடத்தில் கரையில் இறங்கி பகைவனின் கோட்டையை நோக்கி முன்னேறும். அதே நேரத்தில் கப்பல்கள் கடற்கரை பிரதேசங்களை தாக்கி அழிவு ஏற்படுத்தும். எதிரிப் படைகள் கடற்கரையை நோக்கி இழுக்கப்படும் போது காவல் அதிகமில்லாத கோட்டையை நம்படை மோதி கைப்பற்றும்."
"திட்டம் வெகு அருமை ஐயா."
"நம் அரசரை என்னவென்று நினைத்தாய்."

------------

எதிரியின் மண்ணில் வந்து இறங்கிகோட்டையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம். கப்பல் பயணம் அத்துனை சுகமானதாக இல்லை. இந்த நேரத்தில் நமது கப்பல் படை எதிரியின் கடலோர கிராமங்களை அலைகழித்துக் கொண்டிருக்கும். எதிர்பார்த்தது போல் எதிரி்ப் படைகள் கோட்டையை சுற்றி அதிகம் இல்லை.

கோட்டையைத் தாக்க துவங்கினோம். எந்திரப் பொறிகள் கோட்டையை நோக்கி கவண் கற்களையும் தீப்பந்தங்களையும் வீசின. வெளிப்போந்த வீரர்களை என்னுடனான குதிரைப்படை எதிர்கொண்டு மோதியது. தலைகளை வெட்டி வீசி முன்னேறிக் கொண்டிருந்தேன். கோட்டை எரியத் துவங்கியது. திட்டமிட்டபடி என் தலைமையிலான சிறு படைப்பிரிவு கோட்டையின் பின்வாசலை நோக்கி முன்னேறியது.

நினைத்தது சரியே. தப்பித்து வடக்குக் கோட்டைக்கு செல்வதற்காக பகையரசன் நான்கு மெய்க்காப்பாளர்களுடன் வெளியேறிக் கொண்டிருந்தான்.

"விடாதீர்கள். தாக்குங்கள்" பாய்ந்தோம்.

எனது வேல் பகையரசனின் மார்பில் பாய்ந்தது. வேகமாக குதிரையை செலுத்திக் கொண்டு வாளை சக்கரவாகமாக சுழற்றினேன்.
பகையரசனின் தலை கணத்தில் துண்டானது.

"வெற்றி. வெற்றி."

------------


"யூ ஆர் விக்டோரியஸ்" என்று என் கணினித் திரையில் ஒளிர்ந்த எழுத்துக்களை மிக்க மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

எட்டு மணி நேரமாக விளையாடிக் கொண்டிருந்த மைக்ரோசாஃப்டின் "ஏஜ் ஆஃப் எம்பரர்ஸ்" தந்த அலுப்புடன் தூங்கலாம் என்று முடிவு செய்தேன்.
தூக்கத்திலும் கனவு.

இம்முறை கப்பல் தலைவனாக "கலபதி"யாக பத்துக் கப்பல்களை வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறேன்.
எதிரியின் துறைமுகத்தையும் அதனருகில் இருக்கும் கோட்டையையும் அழித்து விட்டுத்தான் மறுவேலை.
"தளபதி கோட்டையின் சுவரிலிருந்து பீரங்கிகள் குண்டு மழை பொழிகின்றன. இரண்டு கப்பல்கள் ஏற்கனவே மூழ்கிவிட்டன. என்ன செய்வது."
என்ன செய்யலாம். தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன்.

Sunday, December 16, 2007

திருப்பதி - ஸ்ரீநிவாசனா ? முருகனா? - ஒரு சர்ச்சை

குன்று இருக்குமிடமெல்லாம் குமரனிருக்கும் இடம்.
"தமிழகத்தின் வடஎல்லையாக இருந்த திருவெங்கடமும் குமரனின் குன்றே. அது முருகன் ஆலயமே". என்று படிக்க நேர்ந்தது.

வாதங்களை பார்ப்போம்.

1. குன்று இருக்கும் இடமெல்லாம் குறிஞ்சிக் கடவுள் முருகனே இருக்கிறான். தமிழக பரப்பில் இருந்த திருப்பதி கோவில் தமிழ் மன்னன் ஒருவனால் கட்டப்பட்ட முருகன் கோவிலே. கோவில் கட்டியது குறித்த வரலாறு தெளிவாக இல்லை.

2. திரு + வேல் + இடம் = திருவேங்கடம்.

3. வேல் + உடைய + ஈஸ்வரன் = வெங்கடேஸ்வரன்.
வைணவ இறைவனின் பெயரில் ஈஸ்வரன் என்ற சைவப் பெயர் எப்படி வந்து ஒட்டியிருக்க முடியும்.

4. கோவிலின் அமைப்பு ஆகம முறைப்படி சைவ கோவிலாகவே அமைந்திருக்கிறது. கோவில் மதில்களில் வைணவக்கோவில்களில் இருப்பது போல் கருடாழ்வார் இல்லை.

5. மூலவர் என்றும் அலங்கரித்த நிலையிலேயே பார்வைக்கு வைக்கப்படுகிறார்.
நெற்றியில் நாமம் சார்த்தி கவசங்களாலும் ஆடை அணிகளாலும் மறைக்கப்பட்டு "பாலாஜி" ஆக்கப்பட்ட இறைவன் பதினாறுப் பிராயம் கொண்ட பாலானான முருகனே.

6. மூலவரின் இடது கை மேல் நோக்கிய வாகில் வேல் பிடிப்பதற்கு ஏதுவானதாக உள்ளது. (பார்க்க படம்). முருகனின் கை வேல் பறிக்கப்பட்டு கவசம் அணியப்பெற்று மாலவனாக மாற்றப்பட்டுள்ளது.

நான்கு கரமுடைய விஷ்ணு இரண்டு கரங்களோடு இருப்பதாக காட்டப்படுவதால். சங்கும் சக்கரமும் பிடிப்பதற்கு இரண்டு கரங்கள் இல்லாததால் தோளில் நிறுத்தப்பட்டுள்ளது.



7. கவசங்களோ, நாமமோ இல்லாத சிலையை அபிஷேகம் செய்வது திரையிட்டே செய்யப்படுவதால் உண்மையான மூலவர் வடிவத்தை யாரும் பாராதது.
அலங்கரிக்கப்பட்ட இறைவனையே நாம் பார்க்கிறோம். அதுவும் ஒரு நிமிடத்திற்குள் "ஜருகண்டி" செய்யப்படுகிறொம்.

8. கோவில் மதில்களில் உள்ள தமிழ் எழுத்துக்கள். இவை வட்டெழுத்துக்களாக உள்ளன. பெரும்பாலான இடங்களில் சுண்ணம் பூசப்பட்டு மறைந்தே உள்ளன. இவற்றை ஆராய்ந்து அறிய நேர்ந்தால் கோவிலின் வரலாறு கிடைக்கலாம்.

9. பாலாஜி என்ற பெயரில் அலர்மேலு, பத்மாவதி என்ற இரண்டு மனைவிகளோடு இருப்பதாக உள்ள இறைவன் உண்மையில் வள்ளி, தெய்வானையோடு உள்ள முருகனே. (பார்க்க படம்)




10. துவாபரயுகத்தோடு ஒன்பதாவது அவதாரமான "கண்ணன்" அவதாரம் முடிந்து விட்ட நிலையில், கலியுகத்தில் கல்கி அவதாரம் மட்டுமே பாக்கியுள்ள நிலையில் இறைவன் "சீனுவாசனாக" பூமியில் இறங்கி வந்தது என்ன அவதாரம்.
இந்த அவதாரம் ஏன் கணக்கில் வரவில்லை.

11. தல வரலாற்றுப் புத்தகம் இராமாயணத்தையே மாறுபட்ட வடிவில் சொல்கிறது. சீதைக்கு பதிலாக பூமாதேவி (சத்யவதி என்ற பெயரில்) தானே இராவணனிடத்தில் இருந்ததாகவும் அவளே தீயில் இறங்கியதாகவும் சீதை பத்திரமாக இருந்ததாகவும்.
தீயில் இறங்கிய பின் இரண்டு சீதைகள் இருக்க.. பூமாதேவியாகிய சீதையை இராமன் தான் ஏக பத்தினி விரதன் என்பதால் மணக்க முடியாது என்று சொல்லி விட. அவளே பத்மாவதியாய் ஆகாச ராஜனுக்கு தோன்ற "சீனுவாசனாக" வந்து அவரை இறைவன் மணந்தார். லட்சுமியே தன் கணவனுக்கு பத்மாவதியை மணம் செய்வித்தார் என்பதாக போகிறது கதை. தல வரலாறு இதிகாச புராணங்களில் இருந்து பெருமளவில் திரிந்திருக்கிறது. இது கடவுளை மாற்றிய பிறகு இட்டுக் கட்டப் பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தை கிளப்புவது.

(படிக்க தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழியிலும் கிடைக்கும் திருப்பதி தல வரலாறு).

12. திருமுருக கிருபானந்த வாரியாரும் தமது கந்த புராண சொற்பொழிவுகளில் திருப்பதி குமரன் கோயிலாக இருக்கக் கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

எனக்கென்னவோ முருகன்தான் "சீனுவாசனாக" அவதாரம் எடுக்க வைக்கப்பட்டான் என்று தோன்றுகிறது.

முருகன் வள்ளி தெய்வானை என்று நினைத்து நான் வைத்திருந்த ஒரு படத்தை நண்பன் திருப்பதி வெங்கடாசலபதி என்று கண்டு பிடித்து சொன்னது நினைவுக்கு வருகிறது.
திருப்பதி சென்று ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அடுத்த முறை சென்றால் நன்கு உற்றுப் பார்க்க வேண்டும்.

"முருகனோ" இல்லை "சீனுவாசனோ"... டப்பு இச்சினவாடே தேவுடு. :)

"டா வின்சி கோட்"க்கு இணையான மர்மம் திருப்பதியிலும் இருக்கின்றதோ என்னவோ.

"டாவின்சி கோடில்" ஏசுவுக்கு மனைவியும் மகளும் உண்டு என்ற வாட்டிகன் ரகசியத்தை ஐசக் நியூட்டன் முதல் டாவின்சி வரை எல்லோரும் கட்டி காப்பாற்றியது போல்.... திருப்பதி ரகசியத்தை அந்த கால ஆழ்வார்கள் முதல் அன்னமாச்சார்யாக்கள் வரை கட்டி காப்பாற்றி வருகிறார்கள் போலும்.

Saturday, December 15, 2007

அவள் செத்தேயாக வேண்டும்

அவள் செத்தேயாக வேண்டும்.

ராஜேஷிற்கு தன் மனைவி ராதாவை கொன்றேயாக வேண்டும்.

"யோசி. யோசி.
இருக்கும் வெறியில் அவளை கத்தியால் பலமுறை குத்தி கண்ட துண்டமாக வெட்டி போட்டு கொலை செய்யலாம்.
வேண்டாம். என் கைகளுக்கு விலங்கு வருவதை நான் விரும்பவில்லை."

"யோசி. ராஜேஷ். கேஸ் அடுப்பு வெடிப்பது எல்லாம் பழைய டெக்னிக். உண்மையிலேயே அடுப்பு வெடித்தால் கூட வரதட்சணை கேஸ் என்று போலீஸ் முடிவு செய்துவிடுகிறது."

"அவள் வெளியே செல்லும் போது... ஒரு லாரி வைத்து மோதி ஆக்சிடெண்ட் என்று ஜோடித்து விடலாமா ?
வேண்டாம். நாளை விசாரணையில் லாரி டிரைவர் உளறிவிடக் கூடும்."

"அடியாள்கள் வைத்து கொலை செய்யலாம். ஆனால் நாளைக்கு அவர்களே நம்மை மீண்டும் பிளாக் மெயில் செய்தால்...."

"யோசி. பீ கிரியேடிவ். வேண்டியது ஒரு கொலையல்லாத கொலை."

"எத்தனை சினிமாக்கள்.... எத்தனையோ வழிகள் காட்டுகிறார்கள். ஆனால் எதுவும் வேலைக்காகாது...
ஆசையில் பிரகாஷ்ராஜ் ஒரு பிளாஸ்டிக் பையை வைத்து கொலை செய்வாரே... அந்த மாதிரி ஏதாவது."

"ரைட். இப்படி செய்தால் என்ன. அவள் தினமும் வழக்கமாய் சாப்பிடும் மாத்திரைகள்.
இந்த மாத்திரை எக்ஸ்பையர் ஆனா ரொம்ப டேஞ்சரஸ். உயிருக்கே கூட ஆபத்து என்று அவளுடைய மாத்திரையை பற்றி டாக்டர் சொன்னாரில்லையா...
எக்ஸ்பையர் ஆன மாத்திரைகளா மாற்றி வைத்தால்.
வாவ். கிரேட்.

எக்ஸ்பையர் ஆன மாத்திரை டப்பா ஒன்று இருக்கிறது.
மாற்றி வைத்தால்... தினமுமா எக்ஸ்பைரி டேட் பார்த்து விட்டு மாத்திரை சாப்பிடுவாள்.
நாளைக்கு போலீஸ் கேஸ் என்று வந்தால் எக்ஸ்பையரி ஆன மாத்திரை சாப்பிட்டதால் மரணம் என்று எளிதாக முடிந்துவிடும்.
அதுதான் சரி. ".

----------

"கிரேட் சார். வித்தியாசமா திங்க் பண்றீங்க. வில்லன் தன்னோட மனைவிய இந்த மாதிரி வித்தியாசமா கொல்றான்றது எடுபடும். பாருங்களேன் இந்த கான்செப்டுக்கே படம் நல்லா ஓடும்". புகழ் பெற்ற அந்த வில்லன் நடிகர் டைரக்டரை பாராட்டினார்.
"தாங்ஸ் சார்."
"ஸ்டார்ட் கேமரா."

"ராதா. நீ இன்னைக்கு மாத்திரை சாப்பிடலை."
"நல்ல வேளை நியாபகப் படுத்தினீங்க."
ராதா மாத்திரையை வாயில் போட்டு தண்ணீரை விழுங்கினாள்.
அவன் கண்களில் கொலைவெறி தெரிந்தது.

Wednesday, December 12, 2007

"நச்சு" பிடிச்ச கதை - ஜன்னல் வெச்ச ஜாக்கெட்காரி (அடல்ட்ஸ் ஒன்லி)



"சேகர். ஒரு ஐடியா வேணும்." கேட்ட ராஜனை பார்த்தான் சேகர்.

"சொல்லு ராஜன். எதுக்கு ஐடியா வேணும்."

"ஒரு ஜாக்கெட் போட்ட ஃபிகரை பிராக்கெட் போடணும்".

"இவ்வளவுதானா. மேட்டர சொல்லு. "

"மேட்டர் அவ்வளவு ஈஸி இல்லை. பொண்ணு கல்யாணம் ஆனவ."

"இவன் வேற. கல்யாணம் ஆன பொண்ணை கவுக்கறதுதாண்டா ஈஸி. நான் எத்தனை பேரை கவுத்திருக்கேன் தெரியுமா."

"தெரியும். அதனாலதான் உன்கிட்ட ஐடியா கேட்கிறேன்."

"சரி. மேல சொல்லு."

"பொண்ணு நாம இருக்கிற ஏரியாதான்."

"நான் பார்த்து இருக்கனா."

"நீ இந்த ஏரியாவுக்கு குடிவந்து ஒரு வாரம்தான் ஆகுது. பார்த்து இருப்பன்னுதான் நினைக்கிறேன். புருசன் குடிகாரன். அவளுக்கு இந்த கல்யாணத்துல அவ்வளவா இஷ்டம் இல்லைன்னு தெரியுது."

"மேட்டரு சுளுவாவும் போலதான் தெரியுது."

"பொண்ணு என்னை பாக்குற கண்ணுல ஏக்கம் தெரியுது. சிக்னல் கிடைக்குது. ஆனா எப்படி பிக்கப் பண்றதுன்னுதான் தெரியலை."

"பேசிப் பேசிதாண்டா மேட்டர முடிக்கணும். அந்த மாதிரி நான் எத்தனை மேட்டர் முடிச்சிருப்பேன் தெரியுமா."

"பேசிட்டேண்டா. வேலைக்கு ஆகலை. நீ எனக்கு புதுசா வாழ்க்கை தர்றதா இருந்தா சரி அப்படின்னு சொல்லுறா."

"வாழ்க்கை தரப்போறியா என்ன. தாகம் எடுக்குதுன்னா எவனாவது கிணறையே வாங்குவானா என்ன."

"அதேதாண்டா என் பிரச்சனை. தொடணும். ஆனா தொடரக்கூடாது."

"அவ்வளவுதான. வாழ்க்கை தரேன்னு சொல்லு. ஏன் கூட வா. உன்னை காலமெல்லாம் வச்சு காப்பாத்துறேன்னு கதை விடு. கிளப்பிக்கிட்டு ஊட்டி, கொடைக்கானல்னு ஒரு வாரம் சுத்திட்டு கழட்டி விட்டுடு."

"ஐடியா நல்லாதான் இருக்கு. ஒர்க் அவுட் ஆகுமா."

"கரெக்டா காயை நகர்த்து. எல்லாம் கரெக்டா நடக்கும். இப்ப இன்னொரு ரவுண்டு ஊத்து." சேகர் சிரித்தான்.

"சியர்ஸ்" இருவரும் சிரித்தார்கள்.

--------------

காலையில் எழுந்த சேகர் அருகிலிருந்த கடிதத்தை படித்தான்.
"அன்பில்லாத கணவருக்கு,
உங்கள் குடிப்பழக்கத்தாலும் கெட்ட சகவாசங்களாலும் தவறான நடத்தையாலும் உங்களை மிகவும் வெறுக்கிறேன்.
உங்கள் நண்பர் ராஜன் நல்லவர். எனக்கு நல்ல வாழ்க்கை தருவதாக உறுதியளித்திருக்கிறார்.
அவரோடு நான் போகிறேன்.
இனி எந்த காலத்திலும் உங்கள் முகத்திலும் விழிக்க விரும்பாத
சரோஜா."

"அடப்பாவி ராஜன்" அலறினான் சேகர்.

(கதை நச்சென்று முடிந்து விட்டது என்று நினைப்பவர்கள் இத்தோடு முடித்துக் கொள்ளவும்)

-----------------------------

அவள் சென்று ஏழாவது நாள். எழுபதாவது முறையாக கடிதத்தை படித்த சேகர் மீண்டும் அழத் தொடங்கினான்.

(விட்டு சென்ற காதலி/மனைவியின் கடிதத்தை ஒருவன் படித்து அழுவதுதான் "நச்" முடிவென்று நினைப்பவர்கள் இத்தோடு நிறுத்திக் கொள்ளவும்.)


--------------------------

எட்டாவது நாள்.....
காலிங் பெல் அடித்தது...

கதவைத் திறந்தான் சேகர்.
சரோஜாவும் ராஜனும்.

"நீ... நீ.... நீங்க."


"என்னை மன்னிச்சிடுங்க. அந்த கடிதம், நான் காணாமல் போனது எல்லாம் நாடகம்" - சரோஜா.

"என்ன... என்ன.. சொல்றே நீ..."

"நீங்க ஒழுக்கக் கேடா இருக்கறதும் அடுத்தவங்க வாழ்க்கையில விளையாடறதும் தப்புன்னு உங்களுக்கு புரிய வைக்கணும்னு நினைச்சேன்.
ராஜன் அண்ணா ஹெல்ப் பண்ணினார்."

"அண்ணனா."

"ஆமா. சேகர். உன்னை சொல்லித் திருத்த முடியலை. ஒரு ஷாக் ட்ரீட் மெண்ட் கொடுக்கணும்னு சரோஜா கொடுத்த ஐடியாதான் இது." - ராஜன்.

"அடுத்தவங்க குடும்பத்தை கெடுக்கிற உங்களுக்கு... உங்க வீட்டிலேயே இப்படின்னதும் தாங்க முடியலை இல்லையா. இப்பவாவது உணர்ந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்.
அதுக்காகத்தான் இந்த நாடகம்." - சரோஜா.

"இப்ப நான் புரிஞ்சிகிட்டேன். இனியும் தறிகெட்டு அலைய மாட்டேன்.
சரோஜா, என்னை மன்னிச்சிடு."

திருந்திய சேகரை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் சரோஜாவும் ராஜனும்.


(அப்பாடா. கதை உண்மையிலேயே நச்சுன்னு முடிஞ்சிச்சின்னு சொல்லுறவங்க, பெண்ணியவாதிகள் துணிச்சலான சரோஜாவை பாராட்டிவிட்டு கதையை இத்துடன் முடித்துக் கொள்ளவும்.)


------------------------------

"ஹல்லோ சரோஜா."

"ஹலோ ராஜன். எப்படி இருக்கீங்க. நேர்ல பார்க்க முடியலை. போன் மட்டும் பண்ணறீங்க."

"எனக்கும் பார்க்கணும் போல இருக்கு."

"நேர்ல வாங்களேன். எனக்கும் பார்க்கணும். அந்த ஒரு வாரம். என் வாழ்க்கையில மறக்க முடியாத வாரம். அவரும் நம்பிட்டாரு.".

"ஹா... ஹா.. இப்ப அநியாயத்துக்கு நல்லவனாயிட்டான்."

"உங்களை இனி பார்க்க முடியாதா."

"சே. சே. அப்படியெல்லாம் இல்லை. நம்ம கதை ஒரு வாரத்துல முடிஞ்சிடுற சிறுகதையா என்ன. தொடர்கதை... தொடரலாம்."

அவள் சிரித்தாள். அவனும்.


(இந்த "நச்சு" முடிவு போதும் என்பவர்கள் கதையை இத்துடன் நிறுத்திக் கொள்ளவும்.)

-----------------------------------------------------


அலறியடித்து எழுந்தான் சேகர்.
அத்தனையும் கனவா. "தான் ராஜனிடம் பேசியது. சரோஜாவின் கடிதம். அவள் திரும்பிவந்தது. தொலைபேசிப் பேச்சு" அத்தனையும் கனவா.
அருகில் தூங்கிக்கொண்டிருந்த சரோஜாவின் முகத்தைப் பார்த்தான். என் சரோஜா அப்படியெல்லாம் இல்லை. அவ்வளவும் கனவு.
நான்தான் தவறானவன்.
இனி இவளுக்கு ஒழுங்கானவனாக இருப்பேன் என்று முடிவெடுத்தான்.

(எப்படி எப்படியாவது கதையை எழுதி கடைசியில் அத்தனையும் கனவு என்று முடித்தால் இன்னொரு "நச்" சிறுகதை ரெடி...
எல்லாம் சேகரின் கனவு என்று சொல்லி விட்டதால் கதையை மேலும் வளர்க்க முடியாது என்பதால்... முற்றும்.)

--------------------------------------------------

Wednesday, December 05, 2007

அன்புள்ள ஸ்ரீராமருக்கு - பக்தன் அரைபிளேடு எழுதுவது

அன்புள்ள ஸ்ரீராமருக்கு,

பக்தன் அரைபிளேடு எழுதுவது.
நலம் நலமறிய ஆவல்.

அச்சச்சோ. தப்பா நினைச்சிடாதீங்க. இந்த கடுதாசி உங்க கோவிலை பத்தியோ இல்லை பாலத்தை பத்தியோ இல்லை.

இது பர்சனல் மேட்டர்.

அது வந்துங்க நமக்கு வேண்டப்பட்ட ஜோசியர் ஒருத்தர் நான் சாமியே கும்பிடறது இல்லை. அதனாலதான் வாழ்க்கையில கொஞ்சம் கஸ்டப்படறேன்னு சொன்னார்.
"ஸ்ரீராம ஜெயம்" ஆயிரத்து எட்டு தடவை எழுது நல்லது நடக்கும்னு சொன்னாரு.

சரி நல்லது நடக்கும்னா நாம ஏன் வேணாம்ன்றது.
எழுதுவோம்னு பார்த்தா 1008 தடவையா. நமக்கு அவ்வளவு பொறுமை கிடையாது.

அதனால ஒரு தடவை டைப் பண்ணி மிச்சம் 1007 தடவையும் காபி பேஸ்ட் செஞ்சிருக்கேன்.
டைம் ஈஸ் மணி. யூ நோ.
கீழே இருக்கு. கரெக்டா 1008 இருக்கான்னு எண்ணி பார்த்துக்கங்க.

அப்புறம் நீங்க செய்ய நினைக்கிற "நல்லதை" அமெரிக்கன் டாலர்ல செஞ்சீங்கன்னாலும் ஓக்கே. இண்டியன் ருப்பீல செஞ்சீங்கன்னாலும் ஓக்கே.

இல்லை இந்த ஆயிரத்தெட்டு பத்தாதுன்னு நீங்க ஃபீல் பண்ணீங்கன்னா ஒண்ணும் பிரச்சனை இல்லை.
காபி பேஸ்ட்தான். லட்சத்தி எட்டு தடவையோ, கோடியத்து எட்டு தடவையோ கூட போட்டுடலாம்.
இல்லாட்டி என்னோட கம்யூட்டரோட 120 ஜிபி யும் "ஸ்ரீராம ஜெயம்" காபி பேஸ்ட் பண்ணியே ஃபில் பண்ணி வைக்கிறேன்.

அப்புறம் நீங்க கடவுள். உங்களுக்கு என்னோட பேங்க் அக்கவுண்ட் நம்பர்லாம் தரவேண்டியதே இல்லை. உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.
ப்ளீஸ் தயவு செஞ்சி நீங்க செய்ய இருக்கற "நல்லதை" நீங்களே டைரக்டா டெப்பாஸிட் செஞ்சிருங்க.

தாங்யூ ஸ்ரீராம்.

அன்புள்ள பக்தன்,
அரைபிளேடு.

ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்

----------------------------------------------------------------

அன்பு பக்தன் அரைபிளேடுக்கு,

உனது பக்தியை மெச்சினோம்.
1008 தானா என்று எண்ணி பார்க்க எனக்கும் நேரமில்லை.
ஆனால் உனது பக்தியை ஏற்றுக்கொண்டு பதிலுக்கு பணம் தரமுடியாத பரிதாப நிலையில் நான் இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் வெங்கடாசலபதியாக வந்து குபேரனிடம் சங்க நிதி, பதும நிதியில் வாங்கிய கடனே இன்னும் கட்டி முடிக்கவில்லை.
(சங்க நிதி, பதும நிதி இரண்டிற்கும் கன்வர்ஷன் ரேட்டில் இண்டியன் ருப்பீயில் மதிப்பு வேறு ரொம்ப ரொம்ப அதிகம்.)

பக்திக்கு ஈடாய் பணம் என்ற டிராக்சாக்ஸனை நான் விட்டு ரொம்ப நாள் ஆகிறது. கட்டுப் படியாவதில்லை.

இருந்தாலும் உனது பக்திக்காக என்னால் முடிந்தது உனது வங்கிக் கணக்கில் ஒரு ரூபாயை டெபாசிட் செய்திருக்கிறேன்.
இதை உனது கணினியை உபயோகித்து 1008 ரூபாயாக காபி பேஸ்ட் செய்து கொள்ளவும்.
பத்தாது என்று நீ ஃபீல் பண்ணினால் இலட்சத்தியெட்டு ரூபாயாகவோ அல்லது கோடியத்தியெட்டு ரூபாயாகவோ கூட காபி பேஸ்ட் செய்து கொள்ளவும்.

உனக்கு என் ஆசியும் அன்பும் என்றும் உண்டு.

அன்புடன்,
ஸ்ரீராம்.

Thursday, November 29, 2007

பெண்ணுரிமை காக்க கிளம்பி வா ஆணினமே.

தாங்க முடியலை சாமி. நாட்டுல ஏன் இப்படி கொடுமை எல்லாம் நடக்குது.

பெண்கள் புகுந்த வீட்டுக்கு போய்த்தான் தீரவேண்டுமா.
பெண்கள் மாமியாரோடு வாழ்ந்துதான் தீர வேண்டுமா.

கணவனுக்காக தியாகம் செய்து பெண் வாழவேண்டுமா.
உப்புமாவை பெண்தான் கிண்ட வேண்டுமா. இது என்ன பெண் அடிமைத்தனம். ஆண் கிண்டினால் உப்புமா வராதா.

குடும்பம் என்ற அமைப்பிற்காக பெண் ஓடாய்த்தேய வேண்டுமா.
மாமியார் என்ற ராட்சசியிடம் பெண் ஏன் கஸ்டப்படவேணும். (மாமியார்ன்றவங்க பெண்தான்றத வசதியா மறந்துடுங்க. ப்ளீஸ்.)

ஒரு ஆணுக்கு மாமியார் வீட்டுக்கு போவது மானப்பிரச்சனைன்னா பொண்ணுக்கும் அது மானப்பிரச்சனைதான் இல்லையா.
ரொம்ப கரெக்ட். இன்னா பண்ணலாம்.
கல்யாணம் பண்ண கையோட ஆண் மானத்தோட தன்னோட வீட்ல மட்டும் வாழணும். அதே மாதிரி பெண்ணும் மானத்தோட தன்னோட வீட்ல வாழணும்.
இவங்க எதுக்கு ஒருத்தர் மானத்தை ஒருத்தர் விட்டுக்கொடுத்துட்டு அடுத்தவங்க வீட்ல போய் வாழணும்ன்றேன்.
கல்யாணம் பண்ண கையோட ஆணும் பெண்ணும் மானத்தோட தனித்தனியா வாழ்ந்துட்டா பிரச்சனை சால்வ்டு.

இல்லை சேர்ந்துதான் வாழணுமா. இன்னா பண்ணலாம்.
இந்த மாமியார்.. மாமனார் கொடுமை எல்லாம் பொண்ணுக்கு வரக்கூடாது.
பையன் கல்யாணம் ஆன கையோட "இந்தா நைனா. இந்தாம்மா. எதோ பெத்தீங்க. வளர்த்தீங்க. உங்க கடமை முடிஞ்சி போச்சி. செத்தீங்கன்னா செய்தி சொல்லுங்க. வந்து கொள்ளி போடறேன்"னு சொல்லிட்டு கிளம்பி வந்துடணும்.
அதே மாதிரி பொண்ணும் அவங்க அப்பா அம்மா கிட்ட சொல்லிட்டு வந்துடணும்.
அப்பாலிக்கா மானப் பிரச்சனை இல்லாம இரண்டு பேரும் வாழலாம்.


அப்பாலிக்கா டெர்ம்ஸ் அண்டு கண்டிசன்ஸ்.
ஆண் இருபதாயிரம் வாங்குறானா. பொண்ணு பத்தாயிரம் வாங்குதா. ஆண் ஒரு வேளை சமைக்க வேண்டியது. பொண்ணு இரண்டு வேளை சமைக்க வேண்டியது.
பொண்ணு இருபதாயிரம் வாங்குது. பையன் பத்தாயிரம் வாங்குறானா. பையன் இரண்டு வேளை சமைக்க வேண்டியது. பொண்ணு ஒரு வேளை சமைக்க வேண்டியது.
பையன் மட்டும்தான் வேலைக்கு போறான்னா பொண்ணு சமைக்க வேண்டியது.
பொண்ணு மட்டும்தான் வேலைக்கு போகுதுன்னா பையன் சமைக்க வேண்டியது.
ரிஜிஸ்டர் ஆஃபீசுல கையெழுத்து போடறதுக்கு மின்னாடியே இந்த அக்கரிமெண்டை கரீக்டா எழுதிக்கணும்.
சமத்துவத்தை கரீக்டா நிலை நாட்டணும் இல்லை.


இன்னாமோ சொல்றாங்களேப்பா. அன்பு, பாசம் அப்படின்னு இன்னான்னாமோ. அதெல்லாம் இன்னாத்துக்கு சொல்லு.
அன்பும் பாசமும் மட்டுமே இருந்துச்சின்னா அடுத்தவேளை சோறு வந்துடுமா இன்னா.
டப்புதான் எல்லாமே. இன்னான்ற.

குழந்தைங்களுக்கு கதைசொல்றதுக்காவது தாத்தா பாட்டி வோணும்னு கதையா விடுறீங்க.
டிவியை திருப்புனா நூறு சானல் வருது. இதுல சொல்லாத கதையா அவங்க சொல்ல போறாங்க.
கதை சொல்றதுக்காக இரண்டு கிழடு கட்டைங்கள வெச்சிக்கிட்டு வடிச்சுக் கொட்டிக்கினு இருக்க முடியாது. கரீட்டுதானே.

உலகம் எங்கியோ போய்க்கினு கீது. இன்னமும் "கூட்டு" குடும்பம் "பொறியல்" குடும்பம்ன்னு கிட்டு.
சின்ன குடும்பமா இருந்தா வசதியான "பீட்சா" குடும்பமா "கோக்" குடும்பமா இருக்கலாம் இல்லை.
புள்ள எல்லாம் பொறுமையா பெத்து போர்டிங் ஸ்கூல்ல சேர்த்து விட்டுட்டா போச்சு. வசதிதான் முக்கியம்.


சிந்தியுங்க. புருசன் பொண்டாட்டி இரண்டுபேரு மட்டும் சந்தோசமா இருக்கணும்னா அப்பா அம்மாவை அடிச்சு தொறத்தறது தப்பே இல்லை.
நம்ம வாழ்க்கை நம்ம சந்தோசந்தான் முக்கியம்.
அதைவிட பெண்ணுரிமை ரொம்ப ரொம்ப முக்கியம்.
பொண்ணுக்கு வாழ்க்கையில வரக்கூடாத பெரிய கஷ்டம் மாமியார் கஷ்டம். அதை அவங்களுக்கு கொடுத்துடாதீங்க.


யோசிங்க ஆண்களே. யோசிங்க.
பெண்ணுரிமைய கட்டிக் காப்பாத்த கிளம்பி வாங்க.

(பொண்ணு மாமியார் வூட்டுக்கு போவக்கூடாதுன்னு எயுதறதுதான் பெண்ணுரிமையாம்.
அடடா. நானும் ஒரு பெண்ணரிமை கட்டுரை எயுதிட்டேன்ல. :)))))


பின்குறிப்பு:

நாட்டுல நிறைய கல்யாணமாகாத ஆண்கள் இந்த ரேஞ்சுலதான் பெண்ணுரிமைய பத்தி எயுதி பதிவு போட்டுக்னு கீறாங்கோ.
இதெல்லாம் ஒரு வியாதி. அவ்வளவுதான்.
கல்யாணம் ஆனா எல்லாம் சரியாப் பூடும்.
கல்யாணம் ஆயிருச்சின்னா இந்த மாதிரி பதிவு போடுவாங்கன்றீங்க.
ஒண்ணு பதிவு போடக்கூட சுதந்திரம் இல்லாம பதிவுலக விட்டு காணாம போய்டுவாங்க.
இல்லாட்டி எதாவது ஒரு மூலையா இருந்து வைஃபாலஜி, லைஃபாலஜின்னு கதறிக்னு இருப்பாங்க.



Tuesday, November 27, 2007

விற்றது தமிழ்.....

"மூவுலகையும் ஓர் குடையின் கீழ் ஆளும் அரசே. ஆயிரம் யானைகளை தனியனாக நின்று வெட்டி வீழ்த்திய வீராதி வீரனே. இப்போரில் நீ பெற்ற வெற்றியை பாடலாய் பாட யான் வந்தேன்."

"பாடும் புலவரே. பாடும். ஒவ்வொரு பாடலுக்கும் நூறு பொன் பரிசு."

"மன்னா உன் கொடைத் தன்மையே தன்மை."

அன்றைய புலவன் விற்றது தமிழ்.

----------------

"கவிஞரே நல்ல சிச்சுவேசன். ஹீரோயின் கனவுல ஹீரோவும் கவர்ச்சி நடிகையும் ஆடுறாங்க."

"நல்லது. எப்படிப்பட்ட பாடல் வரிகள் வேண்டும் உங்களுக்கு."

"சும்மா ஜிவ்வுன்னு சூடு ஏறனும். பிரட்யூசர் இந்த பாட்டை ரொம்ப எதிர்பார்க்கிறார்."

"சரசமாக பாடும் பாடலில் சற்று விரசத்தை விரவ விட சொல்கிறீர். நானும் சற்று எதிர்பார்க்கிறேன்."

"நீங்க எதிர்பார்க்கறதை விட அதிகமாவே கிடைக்கும். பாட்டை ஜமாய்ச்சிடுங்க."

இன்றைய கவிஞன் விற்றது தமிழ்.

--------------

"தமிழகத்தில் தமிழ் கற்றுத் தராத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்".
செய்தித் தாளினை வைத்துக் கொண்டு தலைவனை பார்க்க ஓடி வந்திருந்தான் அவன்.

"என்ன தலைவரே. இப்படி சொல்லிட்டீங்க. உங்களுக்கு பினாமியா நான் நடத்துற பள்ளிக் கூடங்க நாலிலேயே தமிழ்ப் பாடம் கிடையாது. நம்ம பள்ளிக்கூடங்க என்ன ஆகிறது."

தலைவர் சிரித்தார்.

"ஆட்சிக்கு வந்தா தமிழுக்கு ஏதாவது செய்யணும்யா. நாளைக்கு ஒரு பய நம்மளை நீ என்ன செஞ்சன்னு கேள்வி கேட்க கூடாது பாரு."

"தலைவரே. ஆனா நம்ம பள்ளிக்கூடம் எல்லாம்."

"அரசாணையோட மூணாவது பக்கத்துல நாலாவது பத்தியில அரசின் சிறப்பு அனுமதி பெற்ற பள்ளிக்கூடங்களுக்கு விலக்கு அளிக்கப்படும்னு இருக்கு. நம்ம பள்ளிக்கூடம் எல்லாம் அதுல வரும்."

"தலைவரே. எங்கயோ போய்ட்டீங்க."

"அது மட்டும் இல்லையா. கிட்டத்தட்ட இந்த மாதிரி 1600 பள்ளிக் கூடம் இருக்கு. அத்தனை பயலும் அலறியடிச்சிட்டு வருவான். சிறப்பு அனுமதிக்கு ஒரு ரேட் போட்டு்ட்டோம்னு வை ஒரு கலக்சன் போட்டுடலாம் இல்லை."

"தெய்வமே எங்கயோ போய்ட்டீங்க." தலைவரின் காலில் விழுந்தான்.

அரசியல் விற்றது தமிழ்.

-------------

"சார். ரொம்ப நல்ல கதை சார். கேளுங்க சார்."

"சரி சொல்லுய்யா. "

"ஹீரோ ஒரு மாதிரி மன நிலை சரியில்லாத ஆளு. அவனுக்கு பிரியமானவங்க எல்லாம் செத்துடறாங்க. சின்ன வயசுலேயே அவங்க அம்மா. அப்புறமா அவனுக்கு பாடம் சொல்லி கொடுத்த வாத்தியாரு. அப்புறம் அவங்க அப்பா. யாருமே இல்லாத அனாதையா நிக்கிறான். "

"என்னய்யா கத இது."

"இருங்க சார் சொல்லி முடிக்கலை. சின்ன வயசுல ஹீரோ காதலிச்ச பொண்ணு கூட அவனை விட்டுட்டு எங்கயோ கண்காணாத தூரத்துல போயிடுது."

"சாதாரண கதையா இருக்கே."

"இல்லை சார். முக்கியமான திருப்பமே இப்பதான் வருது. போலீசால ஹீரோ பாதிக்கப்படுறான். தன்னுடைய இந்த நிலைக்கு சமுதாயம்தான் காரணம்னு ஹீரோ நினைக்கிறான். கொலை பண்ண ஆரம்பிக்கிறான். சார். ஒண்ணு இல்லை இரண்டு இல்லை. இருபத்தி மூணு கொலை. டிக்கெட் கொடுக்க மாட்டேன்னு சொன்ன ரயில்வே கிளார்க். டிரெயின்ல பார்த்த போலீஸ்காரன். பீச்ல இருந்த காதல் ஜோடி. எல்லாரையும் போட்டுத் தள்றான்."

"ஏன்யா. வாழைக் குலையாயா அவன் சீவி தள்ளுறதுக்கு. கதை சரி வரலையே."

"இருங்க சார். ஹீரோ ஏன் கொலை பண்றான்னு கேளுங்க. அங்கதான் சார் இருக்கு கதையோட முக்கியமான விஷயமே."

"என்னய்யா அது."

"ஹீரோ தமிழ் படிச்சான். தமிழ் நாட்டுல தமிழ் படிச்சவனுக்கு வேலை இல்லை. ஹீரோ தமிழுக்காக பாடுபடறான். தமிழோட இலக்கிய வளர்ச்சிக்காக பாடுபடறான். யாரும் மதிக்க மாட்டேங்கறாங்க."

"ம்..."

"இரண்டாயிரம் வருசத்து தமிழுக்கு மதிப்பில்லை. அவ்வளவுதான் சிவனா மாறுறான். அழிக்கிறான்."

"இது நல்லா இருக்குய்யா. நிச்சயமா ஓடும். வித்தியாசமா இருக்கு. இந்த கதையை கரெக்டா எடு. இன்னாமோ இலக்கிய வளர்ச்சி அது இதுன்னியே. அதெல்லாம் வேண்டாம். அதெல்லாம் சரிவராது. தூக்கிடு."

"சரி. சார்."

"பராவாயில்லையா. வித்தியாசமா யோசிக்கிறீங்க. நாம இந்த படத்தை எடுக்கலாம்."

"தாங்ஸ் சார்"

கற்றது தமிழ் - விற்றது தமிழ்.

-----------------------------------------------------


மறைந்த என் மனைவியின் நினைவாக..

என் அன்பு மனைவியே..

தேவதையாய் என் வாழ்வில் வந்த நீ இறந்து இன்று ஓராண்டு ஆகிறது. ஓரு யுகம் கடந்து போனதாய் உணர்கிறேன்.
உன் நினைவுகளை தொலைக்க முடியாதவனாய் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.
இதோ உன் கல்லறையில் நின்று கதறிக் கொண்டிருக்கிறேன்.

உனக்கு ரோஜா பிடிக்காது. மல்லிகைதான் பிடிக்கும்.
தினமும் வாங்கி வந்து உன் கூந்தலில் சூடி அழகு பார்ப்பேனே.
அந்த வாசத்தை முகர்கிறேன் என்று அருகே வரும்போது சிணுங்குவாயே. நினைவிருக்கிறதா.
உன் நினைவாக இதோ மல்லிகைப் பூ. ஆனால் இது உன் கூந்தலில் ஏறாது கல்லறையை அல்லவா அலங்கரிக்கிறது.
நம் வாழ்க்கையில் விதி ஏன் இப்படி விளையாடியது ?

அருமையாய் சமைத்திருந்த உன் கைப்பக்குவத்தில் மயங்கி சமைத்த கைகளுக்கு வைர வளையல் போட வேண்டும் என்று சொன்னேன் நான்.
வெறும் வாய் வார்த்தை என்றாய்.
மறுநாளே உன் கைகளில் வளையல் மாட்டி அழகு பார்த்தேன்.
பதில் பரிசாய் நீ கொடுத்த முத்தத்தின் ஈரம் இன்னும் என் கன்னத்தை விட்டுப் போகவில்லை.

நீச்சல் குளத்தில் நீந்த ஆசையென்றாய்.
தேடிச்சென்று நீந்தினோம். என் கைகளில் உனது பூ உடலின் எடையை நான் தாங்க நீ நீச்சல் பழகிய நினைவுகள்.
இன்னும் என் மனதில் நீ நீந்திக் கொண்டிருக்கிறாய்.

நீயும் நானும் கைகோர்த்து எங்கெல்லாம் சுற்றி வந்தோம்.
ஊட்டியில் அந்த மழையின் குளிரில் விரித்த அந்த குடையின் அடியில் சில்லென்று தொட்டு அணைத்து நடந்த உன் கைகளின் குளுமை.
இன்றும் என் இதயம் அந்த குளிர்கால மழையாய் உன் காதலை உணர்கிறது.

எனது உயிராகவும் உலகமாகவும் நீயே இருந்தாய்.
உனக்கென எதையும் மறுத்ததில்லை நான்.

நமது கனவு வீடு எப்படி இருக்க வேண்டும் என்று நீ சொன்னாய்.
பார்த்துப் பார்த்து உன் கனவிற்கு உருக் கொடுத்தேன் நான்.
நீ சொன்ன வண்ணத்தில் சுவர்கள், நீ தேர்ந்தெடுத்த கற்கள் பதித்த தரைகள்.
வீட்டின் ஒவ்வொரு மூலையும், ஒவ்வொரு பொருளும் உன் தேர்வு, கட்டில், மேஜை, நாற்காலிகள், தரைவிரிப்புகள், சன்னல் கதவு திரைகள்.
இன்று அந்த வீட்டில் தனியொருவனாக நான். வீட்டின் ஒவ்வொரு பொருளும் நீ எங்கே எங்கே என்று கேட்பதாய் உணர்கிறேன்.

எப்படி இது நேர்ந்தது. அன்று ஏன் கேஸ் அடுப்பு வெடித்தது.
உன் தளிர் மேனியை தீ ஏன் தின்றது.

உனக்கு தெரியுமா. நீ இறப்பதற்கு முன்னே நான் இறந்து விட்டேன் என்பது.
அன்று நான் அலுவலகம் விட்டு விரைவாக மதியப்பொழுதில் வீட்டிற்கு வந்திருக்க கூடாது.
கட்டிலில் அவன் அணைப்பில்.. அந்த கோலத்தில் நீ. அதை நான் பார்த்திருக்க கூடாது.
அந்த கணத்தில் நான் முதலில் இறந்து போனேன்.
நீ என்னை பார்க்கவில்லை. வந்த தடம் தெரியாமல் திரும்பி விட்டேன் நான்.
அன்று இரவுதான் அந்த அடுப்பு வெடித்தது. இத்தனை நாட்களாக நன்றாயிருந்த அடுப்பு அன்று ஏன் வெடித்தது என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.

தீ உன் துரோகங்களை எரித்து விட்டது.
மாசு மருவில்லாத மாறாத காதலுடன் நீ இன்னமும் என் மனதிற்குள் இருக்கிறாய்.
உன் மரணத்தின் முதலாண்டில் உன் மீது கொண்ட காதலால் கதறிக் கொண்டிருக்கிறேன் நான்.

Monday, November 26, 2007

அவன் சாமியார் ஆனது ஏன் ?

"பொன் வேண்டேன். பொருள் வேண்டேன். இவ்வையத்தொருமுறை பிறந்த பிறப்பும் தொலைக்கும் வழியறியேன். இறைவா. இன்னொருமுறை பிறவா வரம்தா".
இழுத்து நிறுத்திய குரலுக்குரியவனை பார்த்தேன்.

பரதேசிக்கோலம். இடுப்பில் காவி. எங்கோ நிலைத்த பார்வை.

இளைஞன் அவன். இருபத்தியெட்டு வயதுக்குள்தான் இருக்கும் என்று தோன்றியது.

இந்த சிறுவயதில் ஏனிந்த தவக்கோலம்.

எதைத்தேடுகிறான் இவன். "நான் யார்?" என்ற ஒற்றைக் கேள்வியை முன்னிறுத்திக் கிளம்பி ஞானம் தேடிய ரமணனின் புண்ணிய பூமியாம் இந்த அருணை மலையின் அடிவாரத்தில் இவன் தேடுவது என்ன.

ஞானமா ? மோட்சமா ? பிறப்பறுக்க கிளம்பி வந்தது ஏன் ?

அதோ அந்த களையான முகத்தில் மண்டிக் கிடக்கும் தாடியும், பரட்டைத் தலையும்.

"இவனா.." என்றான் உடன் வந்த நண்பன்.

"இந்த சாமியாரை உனக்கு தெரியுமா."

"எங்க ஊர்தான். நல்ல குடும்பம். அப்பா பிள்ளை இரண்டே பேரு. பெரிய மளிகை கடை. நல்ல வியாபாரம். அப்பாவுக்கு உதவியா கடையா பார்த்துக்கிட்டு இருந்தான். ஊரே திரண்டு வந்து கல்யாணமாச்சு இவனுக்கு".

எங்கோ பார்த்துக் கொண்டிருந்த சாமியார் எங்களை கவனிக்காதவனாய் பாட ஆரம்பித்தான்.
"அண்ணா மலையை சுற்று. சுற்று.
அறுந்து போகும் பற்று. பற்று."

"பாடுறான் பாரு. திடீர்னு ஒரு நாள் அப்பா மண்டைய போட, சுத்தி இருந்தவங்க ஏமாத்திட எல்லாம் கடன்ல போச்சு. கடை. வீடு எல்லாம்."

"அச்சச்சோ..."

"அப்புறம் என்ன. பொண்டாட்டி பிள்ளைய தூக்கிட்டு அம்மா வீட்டுக்கு போயிட்டா. பின்னாடியே போனான். மாமியார் வீட்டுல நாய் பாடு. பொண்டாட்டியும் மதிக்கலை. வெளிய வந்திட்டான்."

இல்லானை இல்லாளும் மதியாள் போலும். "அப்புறமா..."

"கொஞ்ச நாள் இங்க அங்க சுத்துனான். எதோ ஒரு கட்டத்துல சித்த பிரமை பிடிச்சவனா ஆயிட்டான். கொஞ்ச நாள்ல காணாம போனவன்தான். இதோ இங்க சுத்திக்கிட்டு இருக்கான்."


"அட. தகப்பன் போனான். பாட்டன் போனான். பிள்ளைகளும் அவன்பின்னாலே.
சுற்றி சுழன்றிடும் உலகத்திலே சுகத்தில் வாழ்பவர்கள் யாரும் இல்லே.
எதைஎதையோ சுற்றாதே.
பதைபதைத்து நிற்காதே.
அண்ணாமலையை சுற்று. சுற்று.
அறுந்து போகும் பற்று. பற்று" அவன் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தான்.

வாழ்க்கையில் ஏதோ ஒன்று எங்கேயே உடைந்த தருணத்தில் இப்படி ஆனான் போலும். தோற்ற அந்த கணத்தில் தோள்கொடுத்து தேற்றியிருக்க வேண்டியள் தள்ளி விட்டபின் வாழ்க்கையை தள்ளிவிட்டவன் இவன்.

"வெற்றி பெறுகிற ஆணுக்கு பின்னாடி பெண் இருக்கிறாளோ இல்லையோ தெரியாது. ஆனா இங்க இருக்கிற நிறைய சாமியார்ங்க பின்னாடி இரண்டு பெண்கள் இருக்கிறாங்க. ஒண்ணு அவனுடைய மனைவி. இன்னொன்னு அவனுடைய மாமியார்."

நண்பனின் அந்த நகைச்சுவையை என்னால் ரசிக்க முடியவில்லை.

"வெற்றுக் கைகளுடன் பிறந்து பலவகையில் பற்றுக்களை பிடித்தவரே.
மறுமுறை பிறப்பீரா. இல்லையொரு தனிவழிபோவீரா.
அண்ணாமலையை சுற்று சுற்று. அறுந்து போகும் பற்று".

அவன் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தான்.

Wednesday, November 21, 2007

மும்பை பெண்கள் அழகானவர்கள் !!!!

மும்பை பெண்கள் அழகானவர்கள்.
அவர்களுக்கு திறந்த மனது. எதையும் மறைக்கத் தெரியாது.
இந்த ஒரு வாரகாலத்தில் அலுவலக வேலையாய் மும்பையை சுற்றியதில் மும்பை பெண்களைப் பார்த்து வியந்து போனேன்.
எப்போது வேண்டுமானாலும் கழண்டு விழலாம் போல ஒரு ஜீன்ஸ். கவர்ச்சிகர வாசகங்கள் பொறித்த டாப்ஸ். இரண்டிற்கும் இடைப்பட்ட இடைப்பிரதேசத்தை காலியாக வைத்து மனதை காலிசெய்தார்கள்.
இன்றோடு அலுவலக வேலை முடிந்தது. சென்னை திரும்ப வேண்டும். சே..

தாதர் எக்ஸ்பிரஸ்ஸின் S7 கோச்சின் முன் நின்று கொண்டிருந்தேன் நான். வெளியே ஒட்டியிருந்த பெயர்ப்பட்டியலில் எனது சகபயணிகளை பார்க்க பார்வையை ஓட்டினேன்.
சென்னையிலிருந்து மும்பை வந்தபோது பெட்டிமுழுவதும் ஆண்கள். கடலை வாங்கி கொறித்துக்கொண்டு வந்தேன். இந்தமுறையாவது கடலை சாகுபடிக்கு வாய்ப்புகள் இருக்குமா.

53. நாராயண் ஸ்வாமி (ஆண் 27) - (நான்தான். 27 வயது நவநாகரீக இளைஞனின் பெயர் நாராயண் ஸ்வாமி. என்ன கொடுமை நாராயண்.)
54. ரங்காச்சாரி (ஆண் 55) - எவனாயிருந்தா எனக்கென்ன.
55. கோவிந்தன் (ஆண் 42) - இன்னொரு எவனாயிருந்தா எனக்கென்ன.
56. குமாரஸ்வாமி (ஆண் 46) - சே. நாட்டுல கொசுத்தொல்லை தாங்க முடியலைடா. மருந்தடிச்சு கொல்லுங்கப்பா.
57. பர்வதம்மாள் (பெண் 62) - பாட்டிங்க எல்லாம் மும்பையில இருந்து சென்னை போகணும்னு யாரு இங்க அழுதா.
58. அனுஷ்கா (பெண் 19) - வாவ் !!! ஜாக்பாட். அழகான பெயர். எனது அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள்.

அனுஷ்கா. எப்படி இருப்பாள் அந்த மும்பை தேவதை. பெட்டியில் ஏறி எனது இருக்கையை தேடினேன். மூன்று ஆண்கள் மட்டும் இருந்தார்கள். எங்கே அந்த பாட்டியும் பியூட்டியும்.

எனது சன்னலோர இருக்கையில் அமர்ந்து "ஸ்டார் டஸ்ட்" இதழை பிரித்தேன். அதோ அந்த பாட்டியும் பியூட்டியும். எனது அடிவயிற்றில் பறந்த பட்டாம் பூச்சிகள் சட்டென்று பாரதிராஜாவின் வெள்ளுடை தேவதைகளாக மாறி சுற்றி வருவதாக உணர்ந்தேன். அவள் அழகை.. என்ன சொல்வது. இந்த பெட்டியில் பயணிக்க இருப்பதன் மூலம் பிறவிப்பயன் அடையவிருப்பதாக உணர்ந்தேன்.

அவள் என் எதிர் சன்னலில் அமர்ந்தாள். என்னை கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். தொடர்ந்து "ஸ்டார் டஸ்ட்" படிப்பதாக காட்டிக்கொண்டேன்.

ரங்காச்சாரிதான் பேச்சை ஆரம்பித்தார். எங்கே போகிறீர்கள் என்று பாட்டியை கேட்டார்.

கதை ஆரம்பித்தது. பாட்டி சென்னையையே இதுவரை பார்க்காத தன் பேத்தியை சென்னைக்கு முதன்முறையாக அழைத்து செல்வதையும்.. பேத்தி படிக்கும் கல்லூரியின் கோடைவிடுமுறை காலம் என்பதையும் சொல்ல..

ரங்காச்சாரி தமது கவர்ண்மெண்ட உத்யோக விஷயமாக மும்பை வந்ததை சொல்ல... மற்ற இருவரும் பேச்சில் ஈடுபட அவர்களும் கவர்மெண்ட் உத்யோகஸ்தர்கள் என தெரியவந்தது. (சே. மீண்டும் கொசுத்தொல்லை).

அந்த பெண் வாயைத் திறக்கவில்லை. நானும்.. அவள் தன் கடைக்கண்ணால் என்னை அவ்வப்போது பார்ப்பது போன்ற உணர்வு. ரயில் ஆகாயத்தில் பறந்து செல்வது போல் உணர்ந்தேன்.

எப்படி இவளிடம் பேச்சை ஆரம்பிப்பது. தவறாக நினைப்பாளோ. சே. சே. மும்பை பார்ன் அண்டு பிராட் அப்.... பிராட் மைண்டட் பீப்பிள் யூ நோ. பேச ஆரம்பிக்க வேண்டியதுதான்.

ஸ்டார் டஸ்ட்டை மூடி வைத்தேன். பேச்சை ஆரம்பிப்பதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தேன்.

"அங்கிள். அந்த மேகசினை தர்றீங்களா."

"என்னது".

"ஸ்டார் டஸ்ட். தர்றீங்களா. படிச்சிட்டு தர்றேன்."

கொடுத்தேன். மேலேறி எனது அப்பர் பர்த்தில் படுத்துக் கொண்டேன் "அங்கிளாம். அங்கிள்.".

ஆங். அப்புறம் என்ன சொல்ல வந்தேன்.
மும்பை பெண்கள் அழகானவர்கள்.
ஆனால் நாகரீகம் தெரியாதவர்கள்.

Tuesday, November 20, 2007

ஒற்றை வரியில் மனிதகுல வரலாறு




ஆணாகிய நீ என்னை உன் தேவைகளுக்காக அடிமைப்படுத்தி இத்தோட்டத்தில் ஆடை அணிகலன்கள் கூட இல்லாதவளாய் இருக்க வைத்து வெளியுலகை காட்டாமல் கொடுமைப்படுத்தி இருக்கிறாய் என்று பெண்ணியம் பேசிய அவளை எச்சில் ஆப்பிளின் மீதத்தை சாப்பிட மறந்தவனாக பார்த்துக்கொண்டிருந்தான் ஆதாம்.








என் மனைவியின் காதலன்..................

எனக்கு தெரியாது என்று அவள் எண்ணிக் கொண்டிருக்கிறாள். சில நாட்களாக அவளிடம் காணும் மாற்றங்கள் நான் அறியாதது இல்லை. மகிழ்ச்சியாக இருக்கிறாள். எப்போதையும் விட என் மீது அதிகப் பிரியமாக இருக்கிறாள். எனக்கு பிடித்த உணவுப் பொருட்களாக சமைக்கிறாள். நான் அலுவலகம் செல்லும்போது ஆவலோடு கதவு வரை வந்து வழியனுப்புகிறாள். இந்த மாற்றங்களை நான் கவனித்துக் கொண்டுதானிருக்கிறேன்.

சில நேரங்களில் தொலைபேசி அழைப்பு வருவதும் நான் அப்புறம் பேசுகிறேன் என்று சொல்லி விட்டு அவள் வைத்துவிடுவதும், அழைத்த தோழியிடம் தான் பிறகு பேசுவதாக சொல்வதும்.

இணையத்தில் அதிக நேரம் மூழ்கி இருக்கிறாள். எனக்கு தெரிந்திருந்த அவளுடைய மின்னஞ்சலின் பாஸ்வேர்டை மாற்றிவிட்டாள். ஆயிரம்தான் கணவன் மனைவியாக இருந்தாலும் மின்னஞ்சலில் ஒரு பிரைவசி வேண்டும் என்று அவள் சொன்னபோது தலையாட்டினேன்.

என்னுடைய மின்னஞ்சலின் அவள் அறிந்த பாஸ்வேர்டை நான் மாற்றவில்லை. அவளுடைய மாற்றங்கள் ஆச்சரியமளித்தன.


அன்று. வெளியே செல்வதற்கு தயாராக அவள் குளிக்க சென்றாள். எனது மின்னஞ்சலை பார்க்க கணிணியில் அமர்ந்தேன் நான். அவளது மின்னஞ்சல் கணக்கு லாக் அவுட் செய்யப்படாமல் அப்படியே இருந்தது. லாக் அவுட் செய்யப்போந்தவனை அந்த மின்னஞ்சலின் தலைப்பு இழுத்து நிறுத்தியது. "வித் கிஸ்ஸஸ்".

எனது மனைவி தன் கைப்பட அனுப்பிய மின்னஞ்சல். முகவரியை பார்த்தேன் எனக்கு முற்றிலும் தெரியாத பெயர்.

ஏகப்பட்ட மின்னஞ்சல்கள்... பதில் மின்னஞ்சல்கள்.. "எப்படியிருக்கிறாய் கண்ணா.." .. "நீ அனுப்பிய உனது புகைப்படங்களில் நீ அழகாக இருக்கிறாய்.".. "அச்சச்சோ தனிமையில் ரொம்ப கஷ்டப்படுகிறாய் போலும்"..... "நான் உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன்.." "உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்." "உம்ம்ம்ம்ம்ம்மாாாாாா"... "வித் கிஸ்ஸஸ்"...

ஒன்றிரண்டு படிக்கவும் வெலவெலத்துப் போனேன். என் அன்பு மனைவியா இப்படி. உன் அன்பு எல்லாம் வேஷமா..

எது உன்னை இவ்வாறு செலுத்தியது. அமைதியாக கணினியை விட்டு விலகினேன். அவள் குளித்து ஒப்பனை முடித்து வந்தாள். நான் எதுவும் பேசவில்லை. வெளியே சென்றோம். உயர்ந்த நட்சத்திர ஓட்டலில் உணவருந்தினோம். மகிழ்ச்சியாக இருந்தாள். உள்ளுக்குள் நான் நொறுங்கியிருந்தேன். வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. எனது மகிழ்ச்சி தொலைந்திருந்தது.

அடுத்த சில நாட்களில் தனியார் துப்பறியும் நிறுவனம். தொலை பேசி எண்களை சரிபார்த்தேன். ஒரு குறிப்பிட்ட எண்ணிற்கு அதிக அளவு தொலைபேசப்பட்டிருந்தது. அந்த எண்ணின் உரிமையாளனின் பெயர் மின்னஞ்சலின் அதே பெயர்.

துப்பறியும் நிறுவனத்தின் முழுவிவரம் வந்தது. அவர்கள் இருவருமாய் சிரித்தபடி இருந்த புகைப்படங்கள். அவன் என் மனைவியின் காதலன் கல்லூரி காலத்தில் இருந்து. கல்லூரி முடித்து அவனுக்கு வேலை கிடைக்காத நிலையில் வீட்டினர் காதலை எதிர்த்த நிலையில் அவனை உதறி என்னை மணந்திருந்தாள். இது எனக்கு தெரியாதது. இன்று அவன் வாழ்க்கையில் சற்று உயர, எங்கள் தனிக்குடித்தனம் சகல வசதிகளையும் தர, அவள் வாழ்வில் மீண்டும் அவன்.

மொத்தமாய் நொறுங்கியிருந்தேன். ஆத்திரம் வந்தது. ஆனால் என்ன செய்ய.

1. அவளை அடிக்கலாம். நொறுக்கலாம். வழிக்கு கொண்டு வரலாம். சே. ஒரு எறும்பை கூட மிதித்திராத எனக்கு இப்படி ஒரு எண்ணமா.
2. அன்பாய் பேசி வழிக்கு கொண்டு வரலாம். இத்துணை நாள் நான் செலுத்திய அன்பு நம்பிக்கை அனைத்தும் உடைந்த நிலையில்............. மேலும் அன்புக்கு எங்கு செல்வேன்.
3. எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லி அவளை விலக்கி என் வாழ்க்கைப் பாதையை பார்த்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கலாம். ஆனால் அவள் மேல் நான் கொண்ட அன்பால் அவளில்லாத வாழ்க்கையை நினைத்தும் பார்க்க இயலவில்லை. அவளை பிரிவதை என்னால் தாங்க முடியாது.
4. பேசாமல் நான் இறந்து விடலாம். அவளிற்கு என் மீது அன்பு இல்லை என்ற நிலையில் நான் வாழ்வதில் பயனில்லை.

ஒரு மூலையாக நின்று பார்த்துக் கொண்டிருந்தேன் நான். என் சடலத்தின் மீது மாலைகள் குவிந்திருந்தன. அவள் அழுது கொண்டிருப்பதாக தோன்றியது. யார் யாரோ வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருந்தார்கள்.

அதோ அது அவன்தான். சந்தேகமில்லை. அவள் முகத்தில் ஒரு புன்னகை. அவன் முகத்திலும். இருவருடைய பார்வையில் இருப்பது... சீ... சீ... இது நிச்சயமாய் காதலில்லை.

மேற்கொண்டு என்னால் பார்க்கமுடியவில்லை.

வெளியேறிக்கொண்டிருந்தேன் பெரும் சூன்ய வெளியை நோக்கி மிதந்தவாறு.

Sunday, November 18, 2007

கோடம்பாக்கத்தில் மிஸ்டர் ஷெர்லாக் ஹோம்ஸ்...

நல்ல மத்தியான நேரம். கோடம்பாக்கம் ரயில்நிலையம். கிளம்பவிருந்த ரயிலில் ஓடிவந்து ஏறினாள் அவள். மதியநேரம் காலியாக இருந்த அந்த ரயில் பெட்டியில் ஒரே ஒரு இளைஞன் மட்டும் இருந்தான்.

அவன் தன்னையே பார்ப்பதாக தோன்றியது அவளுக்கு. அவனது பார்வை பல இடங்களிலும் ஓடுவதாக உணர்ந்தாள். அமைதியாக ஒரு சன்னலோர இருக்கையில் அமர்ந்தாள். சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த இளைஞனை பார்த்தாள். அவன் தொடர்ந்து அவளையே பார்த்து கொண்டிருந்தான். நல்ல உயரம். மாநிறம். பார்க்க நல்லவிதமாய்த் தோன்றினாலும் அவன் பார்வை சரியில்லை என்று நினைத்தாள்.

அவன் தனது இருக்கையை விட்டு எழுந்து வந்து அவளுக்கு எதிரில் அமர்ந்தான்.

"எங்க படிக்கிறீங்க. கோடம்பாக்கம் மீனாட்சி லேடீஸ் காலேஜா."

"ஆமா. எப்படித் தெரியும்."

"கோடம்பாக்கம் ஸ்டேசன்ல ஏறியிருக்கீங்க. ஸ்டூடண்ட் மாதிரி இருக்கீங்க. பக்கத்துல இருக்கிற பெண்கள் காலேஜ்னா மீனாட்சி காலேஜ்தான். அதை வெச்சுத்தான் கண்டுபிடிச்சேன்."

"ரயிலில ஏறுற பொண்ணுங்க எல்லாம் எந்த காலேஜ்னு கண்டு பிடிச்சு சொல்லுறதுதான் உங்க வேலையா."

"சே. சே. அப்படியில்லை. நீங்க என்ன தப்பா புரிஞ்சிகிட்டீங்க. நான் ஒரு துப்பறியும் நிபுணன். உங்களுக்கு ஷெர்லாக் ஹோம்ஸ் தெரியுமில்லையா. அந்த மாதிரி."

'ரியலி".

"எஸ். பவர் ஆஃப் டிடக்சன். சூழ்நிலைகள ஆராய்ஞ்சு கிடைக்கிற தடங்களை வெச்சு ஒருத்தரை பத்தி கரெக்டா சொல்லிடலாம். உதாரணத்துக்கு நீங்க கெமிஸ்ட்ரி ஃபைனல் இயர் படிக்கிறீங்க. கரெக்டா."

"கரெக்ட். என் புத்தகத்தை பார்த்து சொல்லியிருப்பீங்க."

"ஆமா. நீங்க தாம்பரம் போறீங்க. சரியா."

"எப்படி சொல்றீங்க."

"உங்க சீசன் டிக்கட்டை பார்த்தேன்."

"அவ்வளவு தூரத்துல இருந்து என் சீசன் டிக்கட்டை எப்படி படிக்க முடிஞ்சது."

"ஒரு துப்பறியும் நிபுணனுக்கு ரொம்ப தேவையானது பார்வைத் திறன். தட்ஸ் இட். இன்னிக்கு கெமிஸ்ட்ரி பிராக்டிகல் எக்சாம் முடிச்சிட்டு வர்றீங்க. கரெக்டா."

"அமேசிங். எப்படி கண்டுபிடிச்சீங்க."

"உங்க கிட்ட இருந்து வர்ற கந்தக அமிலத்தோட வாசனை. அது நீங்க கெமிஸ்ட்ரி லேப்ல இருந்து வர்றீங்கன்னு சொல்லுது. இது எக்சாம் டைம். காலேஜ் டைமுக்கு முன்னாடியே வீட்டுக்கு திரும்பறீங்கன்னா பிராக்டிகல் எக்சாமாத்தான் இருக்கணும்."

"வாவ்".

"உங்களுக்கு அப்பா மட்டும்தான் இருக்காரு. அம்மா கிடையாது. அப்பாவுக்கு கவர்ன்மெண்ட் வேலை. ஸ்கூல் போகிற ஒரு தம்பியோ இல்லை தங்கச்சியோ இருக்காங்க".

"தம்பியும் அப்பாவுந்தான் இருக்காங்க. அம்மா இல்லை. ஆனா எப்படி கண்டு பிடிச்சீங்க".

" உங்க வலது கையில இருக்கிற சூடு சமைக்கறப்ப வச்சிகிட்டதா இருக்கணும். எக்சாம் டைம்லயும் நீங்க சமைக்கறீங்கண்ணா... அப்புறம் உங்க கண்ணுல இருக்க அந்த சோகம். உங்க அம்மா சமீபத்திலதான் தவறியிருக்கணும்னு நினைக்கிறேன்."

"ஆமா." கொஞ்சம் சோகமானவள் "கவர்ண்மென்ட் வேலையில அப்பா, ஸ்கூல் போற தம்பி எல்லாம் எப்படி கரெக்டா சொன்னீங்க."

"நீங்க வெச்சிருக்கிற நோட் புக், பேனா இரண்டும் கவர்ண்மென்ட் ஆஃபீசுல பார்த்திருக்கேன். இதை நீங்க யூஸ் பண்றீங்கண்ணா.. அப்பா கவர்மெண்ட் வேலையில இருக்கணும்."

சிரித்தாள்.

"அப்புறம் உங்க இடது கைவிரல்கள்ல கண்ணு மூக்கு வச்சு பொம்மை வரைஞ்சிருக்கு. காலேஜ் போற பொண்ணு கையில இப்படி எதாவது இருக்குன்னா, இந்த மாதிரி வரைஞ்சிவிட ஸ்கூல் போகிற மாதிரி தம்பியோ தங்கச்சியோ இருக்கணும்.".

"வாவ். எல்லாமே கரெக்ட். நீங்க நிஜமாவே துப்பறியும் ஜீனியஸ்."

"தாங்ஸ்".

"உங்களைப் பத்தி நான் சொல்லவா. யூஸிங் த சேம் பவர் ஆஃப் டிடக்சன்".

"ரியலி. சொல்லுங்க பார்ப்போம்.".

"முதல்ல நீங்க ஒரு துப்பறியும் நிபுணர் இல்லை. இரண்டாவது நீங்க அசோக் நகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர். மூணாவது நீங்க எங்க அப்பா எனக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளை".

"எப்படி கண்டுபிடிச்சீங்க. உங்க போட்டோவைதான் உங்க அப்பா கொடுத்தாரே தவிர என்னோட போட்டோவை நான் தரவேயில்லையே."

"அசோக் நகர் எஸ்.ஐ. அப்படின்னு அப்பா சொன்னதும் நான் என் ஃபிரண்ஸோட நேத்தே உங்களை நோட்டம் விட்டாச்சு. நீங்கதான் லேட்."

சிரித்தான். "உங்க அப்பா உன்னை பத்தி எல்லாமே சொன்னாரு. ஷெர்லாக் ஹோம்ஸ் மாதிரி துப்பறியும் கதைகள் உனக்கு பிடிக்கும்னு சொன்னார்".

"அதையெல்லாம் வச்சிக்கிட்டுதான் புதுசா கண்டுபிடிச்சா மாதிரி கதை விட்டீங்களாக்கும். நீங்க இன்னைக்கு காலையில இருந்து என்னை ஃபாலோ பண்ணிக்கிட்டிருக்கிறது எனக்கு தெரியும்."

சிரித்தான் "உன்னை எனக்கு பிடிச்சிருக்கு. உனக்கு என்னை பிடிச்சிருக்கா."

இவ்வளவு நேரம் படபடவென பேசிக் கொண்டிருந்தவளிடம் மெளனம். தலைகுனிந்தவாறு சொன்னாள் "பிடிச்சிருக்கு.."

அவன் சிரித்தான். அவளும். ரயில் இந்த காதல் நாடகத்தை பாராதது போல் ஓடிக்கொண்டிருந்தது.

Thursday, November 15, 2007

ஆஃபீசா இல்லை ஜெயிலா.. எது சிறந்தது?

சிறைச்சாலை மற்றும் அலுவலகம். ஒரு ஒப்பீடு.

ஜெயில் என்பது பெரும்பாலும் 8 x 10 அடியாவது உள்ள அறை.
அலுவலகம் என்பது 6 x 8 அடி மட்டுமே உள்ள க்யூபிக்கிள். (தடுப்பு)

ஜெயிலில் மூன்று வேளை சாப்பாடு கிடைக்கும்.
ஆஃபீசில் ஒரே ஒரு உணவு இடைவேளை. அந்த உணவுக்கும் நாம்தான் காசு தரவேண்டும்.

ஜெயிலில் நன்னடத்தைக்கு ஜெயில் காலம் குறைக்கப்படும்.
ஆஃபீசில் நன்னடத்தைக்கு அதிக வேலைநேரம் கிடைக்கும்.

ஜெயிலில் காவலாளிகள் நமக்காக கதவுகளை திறப்பர். பூட்டுவர்.
ஆஃபீசில் கழுத்தில் ஒரு அட்டையை தொங்க விட்டுக்கொண்டு கதவுகளை நாம்தான் திறக்கவேண்டும்.

ஜெயிலில் டிவி பார்க்கலாம். விளையாடலாம்.
ஆஃபீசில் டிவி பார்த்தாலோ விளையாடினாலோ வெளியேற்றப்படுவோம்.

சிறையில் ஒவ்வொரு செல்லிலும் தனிக் கழிப்பிட வசதி.
ஆஃபீசில் பொதுகழிப்பிடம்தான்.

சிறையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் நம்மை பார்க்க வரலாம்.
அலுவலகத்தில் குடும்பத்தினரோ நண்பர்களோ நம்மை வந்து பார்க்கமுடியாது.

சிறையில் நமக்கு ஆகும் செலவுகளை வரிகட்டுவோர் ஏற்றுக் கொள்வர்.
அலுவலகத்தில் அலுவலகம் செல்ல ஆகும் அனைத்து செலவையும் நாமே ஏற்பதோடு, யாரோ சிறையில் அனுபவிப்பதற்காக நாம் வரியும் கட்டுகிறோம்.

சிறையில் நமக்கு எது நடந்தாலும் கேள்வி கேட்க மனித உரிமைக் குழுக்கள் இருக்கின்றன.
அலுவலகத்தில் 14 மணிநேரம் உழைத்தாலும் கேள்வி கேட்க யாரும் கிடையாது.


சிறையில் "பார்" கம்பிகளுக்கு உள்ளிருந்து கொண்டு எப்போது வெளியே போவோம் என்று யோசிப்போம்.
அலுவலகத்தில் பெரும்பாலான நேரம் "பாருக்குள்" செல்வதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்போம்.

சிறையில் சாடிச மனப்பான்மை உள்ள வார்டன்கள் இருப்பார்கள்.
அலுவலகத்திலும் இது போல சிலர் இருப்பார்கள். அவர்களுக்கு டேமேஜர், சாரி மேனேஜர் என்று பெயர். :)))


முடிவு செய்யுங்கள். எது சிறந்தது. அலுவலகமா? சிறைச்சாலையா ?

Wednesday, November 14, 2007

நாம பிரிஞ்சிடலாம்...

"நாம பிரிஞ்சிடலாம்" சொன்னவளை பார்த்து சிலையாக உட்கார்ந்திருந்தான் அவன்.

"ஐ யம் சீரியஸ். எனக்கு உங்ககூட தொடர்ந்து வாழ்ந்து குப்பை கொட்ட முடியும்னு தோணலை."

"ஏன். நாம லவ்பண்ணிதான கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஐ ஸ்டில் லவ் யூ."

"எஸ். லவ் பண்ணினோம். கல்யாணத்துக்கு முன்னே நான் பார்த்த நீங்க வேற. இப்ப நான் பார்க்கிற நீங்க வேற.".

"அப்படியெல்லாம் இல்லை. நான் எப்பவும் ஒரே மாதிரிதான் இருக்கேன்."

"யூ ஆர் ரைட். கல்யாணத்துக்கு முன்னாடியும் கவிதை எழுதினீங்க. என் மேல இருக்க காதலாலதான் கவிதை எழுதறீங்கன்னு நினைச்சேன். ஆனா கவிதை மேல இருக்கிற காதலாலதான் கவிதை எழுதறீங்கன்னு கல்யாணத்துக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது".

"பிரச்சனை அதுதானா. நான் கவிதை எழுதறதையே விட்டுடறேன்."

"பிரச்சனை அது இல்லை. நீங்கதான்."

"நானா. கல்யாணமாகி இந்த ஆறு மாசத்தில எப்பவாவது உன்னை எதாவது சொல்லியிருப்பனா. நீ சொல்ற மாதிரிதானே கேட்டுக்கறேன்."

"பிரச்சனையே அதுதான். நீங்க சொல்லி நான் கேட்கணும். இங்க தலைகீழா இருக்கு. நான் சொல்றதை எல்லாம் நீங்க கேட்டுக்கறீங்க."

"அதுல என்ன தப்பு. அதுதானே பெண்சுதந்திரம்."

"சுதந்திரம்னா என்னோட கருத்தை நீங்க கேட்டுக்கணும். உங்க கருத்தையும் சொல்லணும். இரண்டுல எது நல்லதோ அதை நீங்க செய்யணும். யூ நீட் டு கைட் மி."

"நீ சொல்றது வித்தியாசமா இருக்கு. நான் எப்பவாவது உன்னை அதிர்ந்து எதாவது சொல்லியிருக்கனா. இன்ஃபேக்ட் நீதான் ஒரு சில சமயங்கள்ல என்னை திட்டியிருக்க. அப்ப கூட நான் அமைதியாதான் இருந்திருக்கேன்.".

"நான் ஏதாவது தப்பு பண்ணினா நீங்க சொல்லணும்ன்றதுதான் நான் எதிர்பார்க்கிறது. இந்த ஆறு மாத வாழ்க்கையில என் எதிர்பார்ப்புகள் எல்லாம் பொய்யாயிருக்கு."

"நான் என்ன தப்பு செய்யறேன். நீ கேட்கறது எல்லாம் வாங்கி தர்றேன். அப்பப்ப வெளியில போய் சாப்பிடறோம். நேத்து கூட வெளிய போனோம்.".

"சரிதான். இல்லைன்னு சொல்லலை. நேத்து நாம வெளிய போனப்ப நான் போட்டிருந்த டிரஸ் கலர் சொல்லுங்க பார்ப்போம்."

"...."

"சொல்ல மாட்டீங்க. கவனிக்கலை. நான் என்னை நீங்க வெளிய கூட்டிட்டு போகணும்னு விரும்பலை. என்னை கவனிக்கனும்னுதான் விரும்பறேன்."

"நியாபகம் இல்லாதது தப்பா."

"நியாபகம் இல்லாததுன்னு இல்லை. எதையும் கவனிச்சு பார்த்தா மறக்காது. நீங்க.. உங்க வேலை. உங்க இலக்கியங்கள்... உங்க உலகம் தனி. இதுல நான் தேவையில்லாம இருக்கேன்னு தோணுது."

"அப்படியெல்லாம் இல்லை. என் உலகமே நீதான்."

"பொய். உங்களுக்கு நான் தேவையில்லை.".

"நான் அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன். தண்ணியடிக்கிறேனா.. இல்லை கண்டபடி ஊர் சுத்தறேனா."

"அப்படியிருந்தா கூட பரவாயில்லையே. திருத்திடலாம். நீங்க தனிரகம். நீங்க நல்லவர்தான். இல்லைன்ல. ஓவர் நல்லவராயிருக்கீங்க. அதுதான் பிரச்சனை. கெட்டவனை திருத்திடலாம். நல்லவனை திருத்தமுடியாது."

"....."

"நீங்க சாஃப்ட்ன்றதாலதான் உங்களை பிடிச்சிருந்தது. ஆனா இவ்வளவு ஓவர் சாஃப்டான ஆளா இருப்பீங்கன்னு நினைச்சு கூட பார்க்கலை. இப்படி இருந்தீங்கன்னா நீங்க வாழ்க்கையில முன்னேறவும் மாட்டீங்க."

"என்னதான் சொல்ல வர்ற.."

"உங்க கூட தொடர்ந்து வாழ விரும்பலை. நாம பிரிஞ்சிடலாம்".

அவர்கள் பிரிந்து போனார்கள். அவன் இப்போது கூட அதிர்ந்து பேசமுடியாதவனாக உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தான்.

Monday, November 12, 2007

அஜால் குஜால் கவிதை

நேரம் பொழுதாச்சி.
கருக்கல் கவிழ்ந்தாச்சி.
ஓலைக் குடிசையது
ஒருத்தன் தட்டி நின்னான்.

"மாரி மரிக்கொழுந்தே
மச்சான் வந்திருக்கேன்.
கதவை திறந்திடடி.
கால்கடுக்க நின்னிருக்கேன்."

"வெளக்கு வெச்சு
வெகுநேரம் ஆயிருச்சு.
காலையில போனதுதான்.
காத்திருந்து காத்திருந்து
கண்ணு பூத்து போனதுதான்.
கடை தேடி போனாயோ.
கண்டதையும் குடிச்சாயோ.
கதவை திறக்க மாட்டேன்."

"கோவம் அதுதானா.
குடிச்சா குடலழிஞ்சி போகுமின்னு
நீ சொன்ன கேட்டுக்கிட்டேன்.
சத்தியமா குடிக்கலை நான்.
குலதெய்வம் மேல சத்தியம்தான்."

"எத்தனை சத்தியம்தான்
நாளும் நாளும் நான்கேட்பேன்.
நிச்சயமா நம்ப மாட்டேன்."

"நிசத்ததான் நான் சொன்னேன்.
நம்பிடடி என் தங்கம்.
காலையில ஆயாகடையில
வாங்கி துன்ன ஆப்பம்.
இன்னம் வருது பாரு ஏப்பம்.
வேற எதுவும் இறங்கலியே.
வெறும்வயிறாத்தான் வந்திருக்கேன்."

"பின்ன ஏன் பொழுதாச்சு.
கண்ட காவாளி பயகூட
சகவாசம் வச்சு
சீட்டாடி வந்தாயா."

"அச்சச்சோ. அப்படி ஏதுமில்லை.
தொட்டு தாலி கட்டுன பின்னாடி
கெட்ட சகவாசம் விட்டாச்சு."

"பின்ன வேறென்ன.
இம்புட்டு நேரம் நீயும்
இருந்ததெங்க."

"பட்ட உழைப்புக்குத்தான்
கூலி பணமா கிடைச்சுதடி.
பத்து கடையேறி
பதமா பார்த்து பார்த்து
பாதாம் அல்வா வாங்கி வந்தேன்"

"நிசமாவா".

"அதுமட்டும் இல்லையடி.
முத்து முத்து முல்லைப்பூவும்
முழங்கணக்கில் வாங்கி வந்தேன்.
அதனால நேரமாச்சு.
கதவை திறந்திடடி".

"அப்படியா?".

கதவும் திறந்திடுச்சி.
திறந்த கதவு மூடிருச்சி.
விளக்கும் அணைஞ்சிருச்சி.
வானத்து நட்சத்திரமே,
எதைப்பார்த்து கண்ணடிச்சே.

Thursday, November 01, 2007

சாஃப்ட்வேரு இஞ்சினியர்கள் சமூகத்தை சீரழிக்கிறாங்களா.. ஒரு தீர்வு

சாஃப்ட்வேர் மக்களால் சமூக சீரழிவு - முதல்ல மறுத்து சில பாயிண்டுகள்.


1. சாஃப்டுவேரு இஞ்சினியருங்க சம்பளம் அதிகம் வாங்கனாலும் வாங்கறாங்க. வீடு விலை ஏறிபோச்சி, வாடகை ஏறிபோச்சி, ஹோட்டல பில்லு ஏறி போச்சி, பஸ் டிக்கட் ஏறிபோச்சி, தியேட்டர் டிக்கட்ல இருந்து பாப்கார்ன் வரிக்கும் எல்லாமே ஏறிபோச்சின்னு சமீபத்துல படிக்க முடிஞ்சது. (நன்றி வெட்டி, வசந்தம் ரவி.).

"இவன் கிட்ட நிறைய காசு இருக்கு. நாலு இடம் அலைஞ்சி எங்க பொருள் கம்மியா கிடைக்கும்னு தேட கூட இவனுக்கு நேரம் கிடையாது. கேட்ட விலைய கொடுத்துடுவான்டா இவன் ரொம்ப நல்லவன்டான்னு" ஆட்டோக்காரன்ல இருந்து வீட்டு புரோக்கர்ல இருந்து வீட்டு ஓனர் வரிக்கும் எல்லோரும் முடிஞ்ச அளவுக்கு விலை ஏத்தறாங்க.

புத்து லட்சத்துல வீட்ட கட்டிட்டு அதை இருபது லட்சத்துக்கு விக்கற ரியல் எஸ்டேட்காரன் சமூகத்தை சீரழிக்கிறானா.

இல்ல இருபத்தஞ்சாயிரம் சம்பளக்கார சாஃப்ட்வேர் இஞ்சினியர் அந்த வீட்டை லோன் போட்டு வாங்கிட்டு மாசம் பத்தாயிர ரூபா சுளையா வட்டியோட இருபது வருசத்துக்கு கட்டணுமேன்னு கவலையோட இருக்கானே அவன் சமூகத்தை சீரழிக்கிறானா.

ரியல் எஸ்டேட்காரங்க எல்லாம் சேர்ந்து எக்குதப்பா ஏத்திபுட்டு ஒரு வீடு 60 லட்சம்ன்றான். அட நாப்பாதாயிரம் வாங்குறவனுக்கு கூட இது கட்டுபடியாவதேப்பா.

2. காலை 5 மணிக்கு எழுந்து அரக்க பரக்க தயாராகி எங்கோ சென்னை புறநகரிலோ அல்லது பெங்களூர் புறநகரிலோ இருக்கும் ஆஃபிஸ் செல்ல பேருந்தை பிடித்து அதில் இரண்டு மணி நேரம் பயணம் செய்து.. பின்னர் பின்னிரவு வரை வேலை செய்து மீண்டும் எட்டு மணியோ பத்து மணியோ அதற்கு மேல் அலுவலகத்தில் இருந்து கிளம்பி பன்னிரண்டு மணிக்கு மேல் வீட்டுக்கு வந்து சேரும் சாஃப்ட்வேர் மக்களே இங்கு பெரும்பான்மை.
இவர்களுக்கு தன் குடும்ப உறுப்பினர்களை பார்க்கவே நேரம் இல்லாத போது சமூகத்தை சீரழிக்க நேரம் நிச்சயமாக கிடையாது.

வீக் எண்டுகளில் சிலர் உற்சாக பானங்களால் கவிழ்ந்து விடுவதால் எழுந்து நிற்கவே நேரம் இல்லாததால் வீக் எண்டுகளிலும் சமூகத்தை சீரழிக்க வாய்ப்பு கிடையாது.


3. ஹோட்டல்ல விலையேறிச்சின்னாலும் ஐட்டிக்காரன்தான் பொறுப்பா. சரவணபவன் எல்லா ஊர்லயுமே சாப்பாடு 40 ரூபா வைக்கிறானே இது எப்படி.
கமிட்மெண்ட் இல்லாத பேச்சிலர் சாஃப்டுவேர் இஞ்சினியர்க்கு வேணும்னா இது கட்டுப்படியாவலாம். குடும்பஸ்தனுக்கு எல்லாம் மாசம் ஒரு தடவை போனாலே பெரிய விஷயம்தான்.
"குந்தி தின்னா குன்றே மாளும்" இருபத்தஞ்சாயிரம் எந்த மூலைக்கு.

4. ஐபாட் வாங்கி பாட்டு கேட்டாலோ, இல்லை 8 மெகா பிக்சல் காமிரா வாங்கி படம் எடுத்தாலோ, பிராட்பாண்ட் இண்டர்நெட் கனெக்சன் வாங்கினாலோ சமூகம் சீரழியுமா என்ன.
காமெடி பண்ணாதீங்க.

5. பேச்சிலருக்கு வீடு கொடுக்கவே பத்து வருசத்துக்கு மின்னாடி யோசிச்ச மெட்றாஸ் இன்னிக்கு வீடு பேச்சிலருக்கு மட்டும்தான்னுது.

"அஞ்சி பேரா தங்கிக்கு தம்பி. பத்தாயிரம் கொடுங்க. ஆளுக்கு இரண்டாயிரம்தான் வருது.".

"சார். நானும் சாஃப்ட்வேர்தான். ஆனா ஃபேமிலி. மாசம் அஞ்சாயிரம் தர்றேன்."

"கட்டுபடியாவதுங்க. பேச்சிலர் பசங்க நாலு பேர் கேட்டிருக்காங்க. எட்டாயிரம் தர்றதா சொன்னாங்க. அவங்களுக்கே விட்டிடலாம்னு இருக்கேன்."

அய்யா தப்பு சாஃப்டுவேர் இஞ்சினியருங்க மேல இல்லை. பேராசைக்கார வீட்டுக்காரங்க மேலதான்.

6. ஆட்டோக்காரன் அதிகமா கேக்குறதுக்கு எல்லாம் சாஃப்ட்வேரு காரணமில்லைங்க.
நீங்க ஆட்டோவுல டைடல் பார்க்குல இருந்து கிளம்பி டைடல் பார்க்குக்கே போகணும்னா கூட 60 ரூபா ஆகும்னு தெரியுமா உங்களுக்கு.

7. நடந்து போறவனுக்கு சைக்கிள் வேணும்னு ஆசை.
சைக்கிள்காரனுக்கு பைக் வேணும்னு ஆசை.
பைக் வெச்சிருக்கவனுக்கு கார் வாங்கணுன்னு ஆசை.
கார் வெச்சிருக்கவனுக்கு ஒசத்தியான வெளிநாட்டு கார் வாங்கணும்னு ஆசை.
வெளிநாட்டு கார் வெச்சிருக்கவனுக்கு இன்னும் நாலஞ்சி கார் வாங்கணும்னு ஆசை.
ஆசைகள் மட்டும் குறையவே குறையாது...

அதுக்காக சைக்கிளோ பைக்கோ காரோ இல்லாதவன் வெச்சிருக்கிறவன பாத்து நீ எப்படி இத வாங்கலாம். வாங்காதேன்னு சொல்ல முடியுமா.

இன்னமும் சாஃப்ட்வேர் இஞ்சினியர்ங்களாலதான் வெலைவாசி ஏறுது. சமூகம் சீரழியுதுன்னு நீங்க சொன்னா...
இந்த உலகமகா பிரச்சனைக்கு எங்கிட்ட தீர்வு இருக்கு:

பிரச்சனைக்கு காரணம் இன்னான்னா இருபத்தோரு இரபத்திரண்டு வயசுல சாஃப்ட்வேர் இஞ்சினியராவுற நிறைய பசங்க கையில கும்சா இருபபத்தஞ்சி கிடைச்சதும் அளவுக்கு அதிகமா செலவழிச்சு வெல வாசிய ஏத்திடறாங்கன்னு தெரியுது.

நிறைய சம்பளத்தோட வேலை கிடைச்ச கையோட கபால்னு அவங்களுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிப்போட்டம்னா பொறுப்பு வரும். வீண் செலவு இருக்காது.

கல்யாணம்னு ஆகிபோச்சின்னா இருபத்தஞ்சாயிரம் என்ன... லட்சலட்சமா சம்பாதிச்சாலும் பத்தாது.

அதனால கவர்ன்மெண்ட் ஒருத்தருக்கு இருபத்தஞ்சாயிரத்துக்கு மேல சம்பளம் கிடைச்சா மூணாவது சம்பளம் வாங்கறதுக்குள்ள கல்யாணம் பண்ணனும்னு சட்டம் போடணும்.

நம்ம சமூக பிரச்சனை ஆட்டோ மெட்டிக்கா தீர்ந்துடும்.

Friday, October 26, 2007

பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசம்.

காதலையும் காதல் பெரு கல்யாண வாழ்வையும் வாழ்த்திப்பாடிய அடிமைப் புலவர்களே... ஓதுங்குங்கள்... இதோ பட்டினத்தான் வருகிறான்...
பெண்ணைப் பெரும் பொருள் என்று கொண்டு வாழ்நாள் முழுதும் அவளுக்கு அடிமையாகி அல்லல் பெறும் மானிடர்காள்...
பெண்தான் வாழ்வின் பெரும் பொருளா ? வாழ்வின் பயனோ ? இவளின்றி இங்கு வாழ்வு இல்லையா...
இங்கு அடிமைப்பட்டவன் ஆண்.. பெண்ணடிமைப்பட்டாள் என்ற பொய்மையைக் காட்டி மேலும் மேலும் வதைக்கப் படுபவனும் ஆண்.
பெண்ணிடம் அழகு கண்டு பின்னலைந்து தன் வாழ்வு தொலைந்து, வாழ்வு முழுமையும் பின்னலைவதையே தொழிலாகக் கொண்டு, பின்னலைந்திடுவோன் எனப் பழியுமேற்று வாழும் வாழ்வுமோர் வாழ்வோ ?
பெண்ணின் பெரிதும் உண்டோ.... உண்டு... உணர்வீர்... உணர்வு கொள்வீர்...
இதோ பட்டினத்தான் சொல்வான்....


மலமும் சலமும் வழும்புந் திரையும்
அலையும் வயிற்றை யாலிலை யென்றும்
சிலந்தி போலக் கிளைந்துமுன் மெழுந்து
திரண்டு விம்மிச் சீப்பாய்ந் தேறி
உகிராற் கீற வுலர்ந்துள் ளுருகி

நகுவார்க் கிடமாய் நான்று வற்றும்
முலையயைப் பார்த்து முளரிமொட் டென்றும்
குலையுங் காமக் குருடர்க் குரைப்பேன்
நீட்டவு முடக்கவு நெடும்பொருள் வாங்கவும்
ஊட்டவும் பிசையவு முதவியிங் கியற்றும்

அங்கையைப் பார்த்துக் காந்தளென் றுரைத்தும்
வேர்வையு மழுக்கு மேவிய கழுத்தைப்
பாரினி லினிய கமுகெனப் பகர்ந்தும்
வெப்பு முத்தையு மேவிய வாயைத்
துப்பு முருக்கின் தூய்மல ரென்றும்

அன்னமுங் கறியு மசைவிட் டிறக்கும்
முன்னிய பல்லை முத்தென மொழிந்தும்
நீருஞ் சளியு நின்றுநின் றொழுகும்
கூரிய மூக்கைக் குமிழெனக் கூறியும்
தண்ணீர் பீளை தவிரா தொழுகும்

கண்ணைப் பார்த்துக் கழுநீ ரென்றும்
உள்ளுங் குறும்பி யொழுகுங் காதை
வள்ளைத் தண்டின் வளமென வாழ்த்தியும்
கையு மெண்ணெயுங் கலவா தொழியில்
வெய்ய வதரும் பேனும் விளையத்

தக்க தலையோட் டின்முளைத் தெழுந்த
சிக்கின் மயிரைத் திரண்முகி லென்றும்
சொற்பல பேசித் துதித்து நீங்கள்
நச்சிச் செல்லு நரக வாயில்

இதற்கு பிறகு பட்டினத்தார் சொல்பவை சென்சாரில் காணாமல் போகின்றன....

மேலும் சில பாடல்களில் சொல்வார்...

சீறும்வினையது பெண்ணுரு வாகித் திரண்டுருண்டு
கூறுமுலையு மிறைச்சி மாகிக் கொடுமையினால்
பீறுமலமு முதிரமுஞ் சாயும் பெருங்குழிவிட்டு
ஏறுங்கரைகண்டி லேன்இ இறைவாஇ கச்சியேகம்பனே.

பெண்ணாகி வந்ததொரு மாயப்பி சாசும் பிடித்திட்டென்னைக்
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக் கடிதடத்துப்
புண்ணாங் குழியிடைத் தள்ளி என்போதப்பொருள் பறிக்க
எண்ணா துனைமறந் தேனிறைவா ! கச்சியேகம்பனே.

பெண் மாயப்பிசாசம் என்பதை கண்டு சொன்னவன் பட்டினத்தான்.
பட்டு தெரிந்ததால் அவன் பட்டினத்தான்.
அவன் வார்த்தைகளின் உண்மை உணர்ந்தும் ஊமையாய் இருக்குமென் மனமே உன்னை என் செய்ய...

குழியில் விழும் அனைவராலும் வெளியேற முடிவதில்லை சில பட்டினத்தான்களைத் தவிர.

சேறு என்று தெரிந்தும் மூழ்கி சுகங்கண்டு அதிலேயே வாழும் எருமையின் வாழ்வோ நம் வாழ்வு. எருமையாய் இருப்பதால்தான் அனைத்துத் தாக்குதல்களையுந்தாங்கி பொறுமையாய் இருக்கிறோமோ.?

விளக்கில் விழும் விட்டில் பூச்சியின் வாழ்க்கைதான் ஆணின் வாழ்க்கை போலும். :)

Thursday, October 11, 2007

புரட்டுஆசி மாதமும் சிக்கன் பிரியாணியும்

புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என்று எந்த சாத்திரம் சொல்லுகிறது என்று தெரியவில்லை.

புரட்டாசி மாதத்தில் நம்ம ஊரில் கறிகடைகளில் வியாபாரம் மந்தம்தான்.

புரட்டாசி மாதம் வெங்கடாசலபதிக்கு விசேசம். அதுவும் சனிக்கிழமைகள் இன்னும் விசேசம். நாமம் போட்டு நாலு வீட்டில் அரிசி வாங்கி சமைத்து வெங்கடாசலபதியை வணங்குவதை பார்க்கலாம்.

நண்பர் ஒருவர் அவர் வீட்டுக்கு சனிக்கிழமை விருந்திற்கு தொலைபேசியில் அழைத்தார். "நீங்க என்ன சாப்பிடுவீங்க" என்று கேட்டவரிடம் "நான் வெஜிடேரியன்தான்" என்று சொன்னேன்.

நானும் இன்னொரு நண்பருமாக விருந்திற்கு சென்றோம். அங்கு சென்று பார்த்தால் நம்மை அழைத்த நண்பரோ சிக்கன் பிரியாணியும் ஆம்லேட்டும் வெஜிட்டபிள் பிரியாணியும் செய்திருந்தார்.

"நீங்க நான்-வெஜிட்டேரியன்னு சொன்னீங்க இல்ல. அதுதான் ஸ்பெசலாய் செய்தோம்,"

"அச்சச்சோ. நான் வந்து நான் வெஜிட்டேரியன்னுதான் சொன்னேன். நான் சிக்கன் சாப்பிடுறது இல்லை."

"ஓ. புரட்டாசி மாசம். நாங்களும் சாப்பிட மாட்டோம். உங்களுக்காகத்தான் செய்தோம். ஒரு வேளை நீங்களும் புரட்டாசின்றதால சாப்பிட மாட்டீங்களா."

"இது புரட்டாசி மாசம்னு நீங்க சொல்லிதான் எனக்கே தெரியும். நான் எப்பவுமே சிக்கன் சாப்பிடறதில்லை. முட்டை மட்டும் சாப்பிடுவேன்". - நான்.

"நீங்க ஏன் சாப்பிடறது இல்லை. வீட்டுல சாப்பிட மாட்டாங்களா." - நண்பர்

"சே. சே.. வீட்டுல எல்லோரும் நல்லா சாப்பிடுவாங்க. என்னோட தாத்தா சாப்பிட ஆரம்பிச்சாருன்னா முழு கோழிப்பண்ணையையே சாப்பிட்டு முடிச்சிடுவாரு. நான் மட்டும்தான் சாப்பிடமாட்டேன்." - நான்.

"ஏன் நீங்க மட்டும்"

"அது என்னமோ தெரியலை. அசைவம் சாப்பிட்டா ஒரு உயிரை கொல்கிறோம் அப்படின்ற எண்ணமா இருக்கலாம். நம்ம வயிறு ஒரு கோழியையோ இல்லை ஆட்டையோ புதைக்கிற கல்லறை இல்லை அப்படின்னு எங்கயோ சின்ன வயசுல படிச்சது. சின்ன வயசுல இருந்தே சாப்பிடறது இல்லை"

"அதென்ன முட்டை மட்டும்."

"நான் வந்து சைவமும் இல்லை. அசைவமும் இல்லை. "முசைவம்". அதாவது முட்டை மட்டும் சாப்பிடற சைவம். இங்லீஷ்ல சொல்லனும்ணா எக்டேரியன். முட்டைன்றது இன்னும் உயிர் வராத ஒண்ணுன்றதால அதை சைவத்துலயே சேத்துக்கலாம்". - நான்.

"நீங்க புரட்டாசி பார்ப்பீங்களா"

"வீட்டுல பார்ப்பாங்க. நான் பார்க்கிறது இல்லை. சிக்கன் சாப்பிடலைன்னாலும் நான் ஆம்லேட் சாப்பிடறேன். "

அழைத்த நண்பர் சைவம் மட்டும் சாப்பிட, நான் முசைவம் சாப்பிட, உடன் வந்த நண்பர் மட்டும் அசைவம் சாப்பிட்டார்.

"பீர் குடிக்கிறீர்களா?" நண்பர் கேட்டார்.

"நான் குடிக்கிறதில்லை. ஆமா பீருக்கு புரட்டாசி கிடையாதா ?" நான்.

"பீரை கூல்டிரிங்ஸ்ல சேர்த்துட்டாங்களே. உங்களுக்கு தெரியாதா ?"

"அப்படியா... எப்ப ?"

"நீங்க முட்டைய சைவத்துல சேர்த்தாங்கன்னீங்களே அப்பவேதான்" நண்பர் சிரித்தார்.

இப்படியாக எங்கள் புரட்டாசி சனிக்கிழமை விருந்து முடிந்தது.

Wednesday, October 10, 2007

தமிழக பொற்கோவில் - புகைப்படங்கள்

இடம்: வேலூர் மாவட்டம். அரியூர் - மலைக்கோடி. இப்போது புதியபெயர் "ஸ்ரீபுரம்"

கோவில்: மகாலட்சுமி கோவில். 1000 கிலோ தங்கம். செலவு ரூ. 300 கோடி. 400 பொற்கொல்லர்களின் உழைப்பு.

சாமியார்: ஸ்ரீ நாராயணி பீடம் சக்தி அம்மா (இன்னொரு அம்மா!! சாமியார் )




Tuesday, October 09, 2007

எனது பிராமண நண்பன்

இது எனது நண்பனை பற்றிய கதை மட்டுமில்லை. எனக்கு கல்யாணமான கதையும் கூட.

எந்த கவலையும் இல்லாம சுத்திக்கிட்டிருந்த இந்த கடங்காரனுக்கு கால்கட்டு போடனும்னு எங்க வீட்டுல பெருங்கவலை.
வீட்டுல என்னுடைய ஜாதகத்தோட சாதக பாதகங்களை பார்த்து வரிகள் (வரனுக்கு பெண்பால்) எல்லாம் தள்ளி போக இந்த வகையிலயாவது ஜாதகம் நமக்கு சாதகமா இருக்கேன்னு நானும் சந்தோஷமாத்தான் இருந்தேன்.

என்னோட ஜாதக கட்டங்கள்ள சுடோகு போட்டு பார்த்த ஜோசியர் இந்த புள்ளையாண்டான் துர்கை கோயிலுக்கு போய் விளக்கு ஏத்துனாதான் கல்யாணம் ஆகும்னு அடிச்சு சொல்லிட்டார்.

என்னது கோவிலுக்கு நானா. இந்த பகுத்தறிவு ஆண் சிங்கத்தை கோவிலுக்கு, அதுவும் ஒரு பொம்பளை சாமியோட கோவிலுக்கு போய் விளக்கேத்த சொல்லுறதா.

என்ன இருந்தாலும் பெற்ற தாய் கண்கண்ட தெய்வமில்லையா. அவங்களுக்காக கோவிலுக்கு போக கடைசியாக ஒத்துக் கொண்டேன்.

கோவிலில் வரிசையில் இந்த ஐயரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று யோசித்தபடி நின்று கொண்டிருந்தேன்.

"சாமி. பையனுக்கு கல்யாணம் ஆகணும்னு ஒரு அர்ச்சனை."- அம்மா.

"பேர். நட்சத்திரம் ராசி சொல்லுங்கோ" - ஐயர்

"பிரபு. கேட்டை நட்சத்திரம். விருச்சிக ராசி."

அர்ச்சனை முடிந்தது.
"இந்தாடா இதை ஐயர் தட்டுல போடு." - அம்மா
பத்து ரூபாயை தட்டில் போட்டேன்.

"விவாக பிராப்திரஸ்து" சொல்லி ஐயர் எலுமிச்சம்பழம் தர வாங்கி கொண்டேன்.

"பிரபு.. நோக்கு என்னை நியாபகம் இருக்கா..." கேள்வி கேட்ட ஐயரை உற்றுப் பார்த்தேன்.

"டேய்... சங்கர்... நீ இங்க...."

"சித்த இரு. இவாளை எல்லாம் அனுப்பிண்டு வந்துர்றேன்."

சித்தவே அவனது வருகைக்காக இருந்த நேரத்தில் சித்தத்தில் சங்கரின் பழைய நினைவுகள் சுழன்றது.

சங்கர் என்னுடன் பத்தாம் வகுப்பு வரை படித்தவன்.

ஒரு முறை தமிழ் வகுப்பி்ல் அவன் ஏதோ குறும்பு செய்ய.... நான் அவனை வயிற்றில் ஓங்கி குத்த... அவன் "ஆ" என்று அலர... எங்கள் தமிழாசிரியை இருவரையும் பெஞ்சில் ஏற்றினார்.

"சங்கர். ஐயர் பையனா இருந்துக்கிட்டு என்னடா அட்டகாசம். அப்பா அர்ச்சகர்ன்றதால நீயும் குருக்களா போயிடலாம்னு படிக்காம இருக்கியா. ஏண்டா பிரபு.. உனக்கு என்ன வந்தது கேடு. அவனாவது படிக்கலைன்னாலும் அர்ச்சகரா போயிடுவான். நீ என்ன பண்ணுவ. இரண்டு பேரும் கிளாஸ் முடியர வரைக்கும் பெஞ்சிலயே நில்லுங்க".

பெஞ்சில் இருவருமாய் நின்ற காலமும்... எங்கள் தமிழாசிரியையின் தீர்க்க தரிசனம் நிஜமானதும் நினைவில் வர சங்கர் வந்து சேர்ந்தான்.

"சங்கர்.. நீ என்னடா இந்த கோவில்ல ஐயரா.. "

"ஆமா"

"என் கையால அடிவாங்கினவன்... இன்னிக்கு என்னைப்பார்த்து விவாக பிராப்தி கொஸ்து... சாம்பார்னு சொல்லுற.."

"அது பிராப்திரஸ்து"

"சரி. ஏதோ ஒண்ணு. நீ பத்தாவது முடிச்சிட்டு பாலிடெக்னிக்தானா சேர்ந்த.. இங்க எப்படி ஐயரா.."

"என்னோட தோப்பனாருக்கு நான் பாலிடெக்னிக் படிச்சு நல்ல வேலைல சேரணும்னுதான் ஆசை. அவரை மாதிரி நான் கோவில்ல தட்டு தூக்கி ஜீவனம் பண்ண கூடாதுன்னு நினைச்சார்.
ஆனா.. விதி... நான் பாலிடெக்னிக் இரண்டாம் வருடம் படிக்கறச்சே தோப்பனார் காலமாயிட்டார்... வேற வருமானமில்லாத குடும்பம்.. அம்மா.. தங்கைன்னு இரண்டு ஜீவன்...
கடைசியில நான் படிப்பை நிறுத்திட்டு தட்டு தூக்கிட்டேன்... தட்டுல விழுந்த வருமானத்துலய தங்கை கல்யாணம் நடந்துட்டது. வாழ்க்கை போயிட்டிருக்கு" சிரித்தான்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வெறுமையாய் சிரித்தேன். பிறகு சற்று நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்பினேன்.

"வர்றேன் சங்கர்"

"அடிக்கடி இந்த பக்கம் வாடா."

"சரி." சற்று கனத்த மனத்துடன் கிளம்பினேன்.

காலம் ஓடியது. எனக்கு கல்யாணம் ஆனது.
எனக்கு கல்யாணம் ஆனது நான் துர்க்கை கோவிலுக்கு போனதால்தான் என்று அம்மா நம்பினார்.
எனக்கும் டவுட்டுதான். ஒரு வேளை கோவில்ல கொடுத்த எலுமிச்சம் பழத்தை ஜுஸ் போட்டு குடிச்சதாலதான் எனக்கு கல்யாணம் நடந்திருக்குமோ.

எனி வே. மேரேஜ் ஈஸ் என் ஐ ஓப்பனர். அது எனது நாத்திக கண்ணைத் திறந்தது.

கல்யாணத்திற்கு பிறகு நானும் விதியை நம்பத் துவங்கினேன்.

Monday, September 24, 2007

ராமர் பாலம் - இடிக்காதிருக்க சூப்பர் மாற்று வழி

ராமர் - பாலம்.. இந்த இரண்டு வார்த்தை ஒரு பெரிய திட்டத்தையே ஸ்டாப் பண்ண பார்க்குது.

செண்டரல் கவர்ண்மென்ட் ராமர் பாலத்தை இடிக்காம மாற்று வழியை யோசிக்கிறேன்னு மூணு மாசம் வாங்கியிருக்கு.

நாமளும் கொஞ்சம் மாற்று வழியை யோசிக்கலாம்னு மண்டையை உடைச்சிக்கிட்டு திங்க் பண்றோம்.

இப்ப இந்த சேது சமுத்திர திட்டம் எதுக்கு ?
தூத்துக்குடியில இருந்து ஒரு கப்பல் சென்னைக்கு போவணும்னா இலங்கையை ஒரு சுத்து சுத்தி போவணும்.
அதுக்கு பதிலா தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் நடுவுல இருக்கிற ஆடம்ஸ் பிரிட்ஜை ஆழம் பண்ணா போதும்ன்றதுதான் சேதுசமுத்திர ஐடியா.

இதனால
1. மீனு திமிங்கலமெல்லாம் செத்துப் போகுது.
2. ராமர் பிரிட்ஜ் டேமேஜ் ஆவுது.

அதனால மாற்றுத் திட்டம் தேவை.

அதனால நாம சூப்பரா யோசிச்சு புதுசா ஒரு கால்வாய் வெட்ட பிளான் ஒண்ணு கீழே போட்டிருக்கிறோம்.
இதும்படி கால்வாயை கடல்ல வெட்டாம ஊருக்குள்ள வெட்டலாம்.





தூத்துக்குடியில இருந்து கால்வாய் வெட்ட ஆரம்பிச்சு மதுரை, திருச்சி, தஞ்சாவூர் வழியா திரும்பி நாகப்பட்டணத்துல ஜாயின் பண்ணலாம்.

இதனால...
1. நாட்டுக்குள்ள வெட்டறதால மீன் எதுவும் சாகாது.
2. ராமர் பிரிட்ஜ், டேமேஜ் பிரிட்ஜ் ஆவாது.
3. லோக்கல் கவர்ன்மெண்ட் கப்பல் டிரான்ஸ்போர்ட். மதுரையில இருந்தும் திருச்சியில இருந்தும் சென்னைக்கு கப்பல்ல போகலாம்.. நினைச்சி பார்த்தாலே சூப்பரா இருக்கு இல்லை.

Friday, September 21, 2007

நாம எதுக்கு திரும்பி வரோம்ணா...

வாழ்க்கை ஒரு வட்டம். நாம எங்க இருந்து வுட்டு போறமோ அங்கேயேதான் திரும்பி வரோம். நானும் வாரேன்னு கிளம்பிட்டு பார்த்தா திரும்பி இங்கயேதான் வந்து நிக்கிறேன்.

நாம எதுக்கு போறோம்னு முதல்ல இங்கதான் சொல்லியிருந்தேன். அரைகுறையா எழுதிக்கிட்டிருக்கோம்னு ஃபீல் பண்ணி கொஞ்ச நாள் பதிவு போடாம ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைக்கறேன்னுதான் அங்க சொல்லியிருந்தேன்.
நிறைய புஸ்தகம் படிச்சு அரைபிளேடு அறிவாளி பிளேடு ஆக போறேன்னு ஒரு ஸ்டேட்மெண்ட் வேற விட்டுருந்தேன். அது நம்மால ஆவறது இல்லைன்னு தெரிஞ்சு போச்சு.
வலைப்பதிவுல எழுதறதுக்கு தமிழ் படிக்க டைப் அடிக்க தெரிஞ்ச அரைபிளேடே போதும். அரிஸ்டாடில் தேவையில்லைன்ற ஞானோதயம் நமக்கு லேட்டாதான் வந்துச்சு.

நம்ம முற்றும் பதிவுக்கு வந்த அனானி பி்ன்னூட்டம் இந்த "பகுத்தறிவு சிங்கத்தை" பார்த்து "ஆன்மீக ஆனை" ன்னு சொன்னதால இந்த சிங்கம் இங்க சவுண்டு வுட்டுட்டு சைலண்டாயிடுச்சு.
நாம சவுண்டு வுட காரணம் பதிவாளனை அவன் எழுத்தை வச்சு சாதி கண்டுபுடிக்க பார்க்காதீங்கன்றதுதான். ஆனா அந்த சவுண்ட வெச்சே நாம இந்த சாதிதான்னு நிறைய பேரு நினைச்சுக்னதுதான் படா தமாஷ்.


திரும்பி வந்து பார்த்தா அனானி ஒருத்தர் நம்மளை அயிருன்னு சொல்லி திட்டிட்டாருன்னுதான் நான் ஜகா வாங்கிட்டேன்ற மாதிரி இங்க பேச்சு அடிபடறமாதிரி தெரியுது.
இந்த மறத்தமிழனுக்கு இப்படிபட்ட தப்பபிப்ராயத்தோட திரும்பி போக மனசு இல்லை.
பின்னூட்டமொன்றில் அன்பு தம்பி லக்கியார் "அரைபிளேடு போன்றவர்களின் முகமூடி அவ்வப்போதாவது வெளிப்பட்டு விடுகிறது" என்று சொல்லியிருந்தார். அருமை அண்ணன் முகமூடி அவர்களும் அரைபிளேடு அயிரா என்று தன்பதிவில் கேள்வி எழுப்பி இருந்தார்.

நமக்கு தெரியாமலேயே "அரைபிளேடு அயிரா?, அயிரை மீனா?" என்ற மாபெரும் கேள்வியை கிளப்பியிருக்கிறோம் என்று தெரிகிறது.

இதற்கு பதில் சொல்ல வேண்டிய மாபெரும் பொறுப்பு (!) நமக்கிருப்பதை உணர்கிறோம்.
நாம ஏற்கனவே சொன்ன மாதிரி நாம மனுச சாதிதான் என்பதை மீண்டுமொருமுறை பதிவு செய்கிறோம்.

போரடிக்கும் பக்தி பஜனைகளோ, சலித்துப் போன நாத்திக வாதங்களோ இரண்டிலிருந்தும் விலகி நின்று வாழ்க்கையை வாழ்க்கைக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் சராசரித் தமிழன் நான்.

யாராச்சும் இரண்டு பேர் கொள்கைன்ற (!!) பேர்ல அடிச்சிக்கிறீங்களா. ஒரு எண்டர்டெயின்மெண்ட் வேல்யூக்காக வேடிக்கை பார்க்கலாம். என்கிட்ட வந்தீங்கன்னா எந்த கொள்கையையும் கட்டி காப்பாத்த வேண்டிய தேவை நமக்கு இல்லை.
அப்பாவி பொதுமக்களுக்கு அன்றைய பிழைப்பை பார்ப்பதை தவிர வேறு கொள்கைகளுக்கு நேரமேது.
வீண் வாத விவாதங்களால் பயனில்லை. நேரமுமில்லை. பொழைப்ப பார்க்க போகணும் சாமிங்களா..

மிஞ்சிப் போனா ஐநூறு இன்டலக்சுவல்ஸ் படிக்கிற எடத்துல என்னை மாதிரி அரைவேக்காடு ஆளு எயுதி பெரிய கொள்கை புரட்சியெல்லாம (!!) செய்ய முடியாது அப்படின்னு நமக்கு தெளிவா தெரியும். நாம இங்க சும்மா ஜாலியான பதிவுங்களை படிச்சுக்னு ஜாலியா பதிவு எழுதிக்னு இருக்கலாம்னுதான் இருக்கோம்.

நம்மள மாதிரி அரைவேக்காடுக்கெல்லாம் இது இடமில்லையோன்னு நினைச்சு நாம ஜகா வாங்க... போட்டாரு நம்ம சர்வேசனார் ஒரு சர்வே.

அதுல திரும்பி வரணும்னு மெஜாரிட்டி ஓட்டுக்கள (56.64%) வாங்கி உங்களோட அன்பு கட்டி இழுக்க மீண்டும் வந்து எனது பதிவுலக ஆட்சி பீடத்தில் அமருகிறேன்.

என்னாது. போங்க.. போங்கன்னு 30.09% ஓட்டு போட்டு இருக்காங்களேன்றீங்களா. ஜனநாயகத்துல ஆட்சியமைக்க மெஜாரிட்டிதான் முக்கியம்.. எதிர்த்து விழுந்த ஓட்டெல்லாம் கணக்குல வராதுன்ற அடிப்படை கூட தெரியாமலா இருப்பீங்க.

ஆங்.. அப்ப நிறைய மொக்கை பதிவுகள் வரும் அப்படின்னு எதிர்பார்க்குறீங்களா...

ஆதரித்து அன்பால் என்னை கட்டிப்போட்ட என் வாசக பெருமக்களே.. தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் தங்களுக்காக கடமையாற்ற டெல்லி செல்வதால் நேரம் கிடைக்கும் போது மாதம் ஒருமுறையோ அல்லது இருமுறையோ தொகுதி பக்கம் வந்து பதிவு சேவை ஆற்றுவேன் என்று வாக்குறுதியளிக்கிறேன்.

தேர்தல் அதிகாரி சர்வேசனார் அவர்களுக்கும், வாக்களித்த பெருமக்களுக்கும் பின்னூட்டி கடமையாற்ற திரும்பி வா என்று அழைத்த நண்பர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

நன்றி.

Tuesday, September 11, 2007

கடைசியாய் சில வார்த்தைகள்

கடைசியாய் சில வார்த்தைகள்


பெரியாரின் சமூக பணிகளுக்காக பெரிதும் கடன்பட்ட தமிழர்களில் ஒருவனான நான் பெரியார் திருக்குறளை மலம் என்று சொன்னார் என்றதும் தமிழுணர்வு மேலோங்கி நான் ஒரு பதிவிட்டதும்

தமிழனுக்கு காலமெல்லாம் பாடுபட்ட பெரியார் தமிழின் உன்னத இலக்கியத்தை ஏனப்படி சொன்னார் என்று கேள்வியெழுப்பியதும்

பெரியார் தமிழ் என்ற இரண்டு குறிச்சொற்களை கொண்டு கூகுளிய போது பெரியார் தமிழுக்கு எதிரான சொன்னவை மட்டுமே கிடைத்தன பாராட்டி சொன்னவை ஒன்றுமே கிடைக்கவில்லையென்பதும்

பெரியாரின் புகழ்பாடும் நூற்றுக்கணக்கானவர்கள் நிறைந்த வலையுலகில் ஆவணங்கள் கிடைக்காத நிலையில் பெரியார் தமிழ்ப்பணியே ஆற்றவில்லையா அல்லது பெரியாரின் தமிழ்ப்பணிகளை யாருமே ஆவணப்படுத்தவில்லையா என்ற ஆதங்கம் என்னுள் எழுந்தது

பெரியாரை விமர்சித்தவுடன் எனது பின்னணியை ஆராய்ந்து கண்டுபிடித்த (!!!!) சில அனானி பின்னூட்டங்கள் இதோ




எனது சாதியை கண்டுபிடித்த அனானி(கள்) வாழ்க

வலையுலகில் எதையும் விமர்சிக்க வேண்டுமெனில் சாதிப்பெயரை சொல்லிவிட்டுதான் விமர்சிக்க வேண்டுமெனில்

எனது சாதி மனித சாதி

மீண்டும் வரலாம் என்று எனக்கு இருந்த கடைசி ஆசையையும் துறந்து

இந்த வலைப்பூவை சாதிக்கு தின்னக்கொடுத்து

குறைந்த பட்சம் பின்னூட்டிய அனானி(கள்)யாவது எனது வெளியேற்றத்தில் மகிழ்வார் என்ற மகிழ்வோடு மொத்தமாய் விடை பெறுகிறேன்

பின்னூட்டப் பெட்டியை மட்டுறுக்காமல் திறந்து விட்டேன்
அனானி(கள்) வந்து ஆசைதீர வேண்டிய சாதி பெயரை சொல்லி திட்டிக்கொள்ளவும்

(எனது கடைசி முற்றுப்புள்ளியை போன முற்றும் பதிவிலேயே போட்டு விட்டதால் இந்த பதிவில் முற்றுப்புள்ளிகள் இல்லை)


நன்றிகளுடன் மொத்தமாய் விடைபெறும்
அரைபிளேடு