Thursday, November 01, 2007

சாஃப்ட்வேரு இஞ்சினியர்கள் சமூகத்தை சீரழிக்கிறாங்களா.. ஒரு தீர்வு

சாஃப்ட்வேர் மக்களால் சமூக சீரழிவு - முதல்ல மறுத்து சில பாயிண்டுகள்.


1. சாஃப்டுவேரு இஞ்சினியருங்க சம்பளம் அதிகம் வாங்கனாலும் வாங்கறாங்க. வீடு விலை ஏறிபோச்சி, வாடகை ஏறிபோச்சி, ஹோட்டல பில்லு ஏறி போச்சி, பஸ் டிக்கட் ஏறிபோச்சி, தியேட்டர் டிக்கட்ல இருந்து பாப்கார்ன் வரிக்கும் எல்லாமே ஏறிபோச்சின்னு சமீபத்துல படிக்க முடிஞ்சது. (நன்றி வெட்டி, வசந்தம் ரவி.).

"இவன் கிட்ட நிறைய காசு இருக்கு. நாலு இடம் அலைஞ்சி எங்க பொருள் கம்மியா கிடைக்கும்னு தேட கூட இவனுக்கு நேரம் கிடையாது. கேட்ட விலைய கொடுத்துடுவான்டா இவன் ரொம்ப நல்லவன்டான்னு" ஆட்டோக்காரன்ல இருந்து வீட்டு புரோக்கர்ல இருந்து வீட்டு ஓனர் வரிக்கும் எல்லோரும் முடிஞ்ச அளவுக்கு விலை ஏத்தறாங்க.

புத்து லட்சத்துல வீட்ட கட்டிட்டு அதை இருபது லட்சத்துக்கு விக்கற ரியல் எஸ்டேட்காரன் சமூகத்தை சீரழிக்கிறானா.

இல்ல இருபத்தஞ்சாயிரம் சம்பளக்கார சாஃப்ட்வேர் இஞ்சினியர் அந்த வீட்டை லோன் போட்டு வாங்கிட்டு மாசம் பத்தாயிர ரூபா சுளையா வட்டியோட இருபது வருசத்துக்கு கட்டணுமேன்னு கவலையோட இருக்கானே அவன் சமூகத்தை சீரழிக்கிறானா.

ரியல் எஸ்டேட்காரங்க எல்லாம் சேர்ந்து எக்குதப்பா ஏத்திபுட்டு ஒரு வீடு 60 லட்சம்ன்றான். அட நாப்பாதாயிரம் வாங்குறவனுக்கு கூட இது கட்டுபடியாவதேப்பா.

2. காலை 5 மணிக்கு எழுந்து அரக்க பரக்க தயாராகி எங்கோ சென்னை புறநகரிலோ அல்லது பெங்களூர் புறநகரிலோ இருக்கும் ஆஃபிஸ் செல்ல பேருந்தை பிடித்து அதில் இரண்டு மணி நேரம் பயணம் செய்து.. பின்னர் பின்னிரவு வரை வேலை செய்து மீண்டும் எட்டு மணியோ பத்து மணியோ அதற்கு மேல் அலுவலகத்தில் இருந்து கிளம்பி பன்னிரண்டு மணிக்கு மேல் வீட்டுக்கு வந்து சேரும் சாஃப்ட்வேர் மக்களே இங்கு பெரும்பான்மை.
இவர்களுக்கு தன் குடும்ப உறுப்பினர்களை பார்க்கவே நேரம் இல்லாத போது சமூகத்தை சீரழிக்க நேரம் நிச்சயமாக கிடையாது.

வீக் எண்டுகளில் சிலர் உற்சாக பானங்களால் கவிழ்ந்து விடுவதால் எழுந்து நிற்கவே நேரம் இல்லாததால் வீக் எண்டுகளிலும் சமூகத்தை சீரழிக்க வாய்ப்பு கிடையாது.


3. ஹோட்டல்ல விலையேறிச்சின்னாலும் ஐட்டிக்காரன்தான் பொறுப்பா. சரவணபவன் எல்லா ஊர்லயுமே சாப்பாடு 40 ரூபா வைக்கிறானே இது எப்படி.
கமிட்மெண்ட் இல்லாத பேச்சிலர் சாஃப்டுவேர் இஞ்சினியர்க்கு வேணும்னா இது கட்டுப்படியாவலாம். குடும்பஸ்தனுக்கு எல்லாம் மாசம் ஒரு தடவை போனாலே பெரிய விஷயம்தான்.
"குந்தி தின்னா குன்றே மாளும்" இருபத்தஞ்சாயிரம் எந்த மூலைக்கு.

4. ஐபாட் வாங்கி பாட்டு கேட்டாலோ, இல்லை 8 மெகா பிக்சல் காமிரா வாங்கி படம் எடுத்தாலோ, பிராட்பாண்ட் இண்டர்நெட் கனெக்சன் வாங்கினாலோ சமூகம் சீரழியுமா என்ன.
காமெடி பண்ணாதீங்க.

5. பேச்சிலருக்கு வீடு கொடுக்கவே பத்து வருசத்துக்கு மின்னாடி யோசிச்ச மெட்றாஸ் இன்னிக்கு வீடு பேச்சிலருக்கு மட்டும்தான்னுது.

"அஞ்சி பேரா தங்கிக்கு தம்பி. பத்தாயிரம் கொடுங்க. ஆளுக்கு இரண்டாயிரம்தான் வருது.".

"சார். நானும் சாஃப்ட்வேர்தான். ஆனா ஃபேமிலி. மாசம் அஞ்சாயிரம் தர்றேன்."

"கட்டுபடியாவதுங்க. பேச்சிலர் பசங்க நாலு பேர் கேட்டிருக்காங்க. எட்டாயிரம் தர்றதா சொன்னாங்க. அவங்களுக்கே விட்டிடலாம்னு இருக்கேன்."

அய்யா தப்பு சாஃப்டுவேர் இஞ்சினியருங்க மேல இல்லை. பேராசைக்கார வீட்டுக்காரங்க மேலதான்.

6. ஆட்டோக்காரன் அதிகமா கேக்குறதுக்கு எல்லாம் சாஃப்ட்வேரு காரணமில்லைங்க.
நீங்க ஆட்டோவுல டைடல் பார்க்குல இருந்து கிளம்பி டைடல் பார்க்குக்கே போகணும்னா கூட 60 ரூபா ஆகும்னு தெரியுமா உங்களுக்கு.

7. நடந்து போறவனுக்கு சைக்கிள் வேணும்னு ஆசை.
சைக்கிள்காரனுக்கு பைக் வேணும்னு ஆசை.
பைக் வெச்சிருக்கவனுக்கு கார் வாங்கணுன்னு ஆசை.
கார் வெச்சிருக்கவனுக்கு ஒசத்தியான வெளிநாட்டு கார் வாங்கணும்னு ஆசை.
வெளிநாட்டு கார் வெச்சிருக்கவனுக்கு இன்னும் நாலஞ்சி கார் வாங்கணும்னு ஆசை.
ஆசைகள் மட்டும் குறையவே குறையாது...

அதுக்காக சைக்கிளோ பைக்கோ காரோ இல்லாதவன் வெச்சிருக்கிறவன பாத்து நீ எப்படி இத வாங்கலாம். வாங்காதேன்னு சொல்ல முடியுமா.

இன்னமும் சாஃப்ட்வேர் இஞ்சினியர்ங்களாலதான் வெலைவாசி ஏறுது. சமூகம் சீரழியுதுன்னு நீங்க சொன்னா...
இந்த உலகமகா பிரச்சனைக்கு எங்கிட்ட தீர்வு இருக்கு:

பிரச்சனைக்கு காரணம் இன்னான்னா இருபத்தோரு இரபத்திரண்டு வயசுல சாஃப்ட்வேர் இஞ்சினியராவுற நிறைய பசங்க கையில கும்சா இருபபத்தஞ்சி கிடைச்சதும் அளவுக்கு அதிகமா செலவழிச்சு வெல வாசிய ஏத்திடறாங்கன்னு தெரியுது.

நிறைய சம்பளத்தோட வேலை கிடைச்ச கையோட கபால்னு அவங்களுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிப்போட்டம்னா பொறுப்பு வரும். வீண் செலவு இருக்காது.

கல்யாணம்னு ஆகிபோச்சின்னா இருபத்தஞ்சாயிரம் என்ன... லட்சலட்சமா சம்பாதிச்சாலும் பத்தாது.

அதனால கவர்ன்மெண்ட் ஒருத்தருக்கு இருபத்தஞ்சாயிரத்துக்கு மேல சம்பளம் கிடைச்சா மூணாவது சம்பளம் வாங்கறதுக்குள்ள கல்யாணம் பண்ணனும்னு சட்டம் போடணும்.

நம்ம சமூக பிரச்சனை ஆட்டோ மெட்டிக்கா தீர்ந்துடும்.

33 comments:

said...

//அதனால கவர்ன்மெண்ட் ஒருத்தருக்கு இருபத்தஞ்சாயிரத்துக்கு மேல சம்பளம் கிடைச்சா மூணாவது சம்பளம் வாங்கறதுக்குள்ள கல்யாணம் பண்ணனும்னு சட்டம் போடணும்.//

athu!



-------------------------------------------------------------------------------------------------------------
said...

// ரியல் எஸ்டேட்காரங்க எல்லாம் சேர்ந்து எக்குதப்பா ஏத்திபுட்டு ஒரு வீடு 60 லட்சம்ன்றான். அட நாப்பாதாயிரம் வாங்குறவனுக்கு கூட இது கட்டுபடியாவதேப்பா.//
இது உண்ம தானுங்க...கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கிறவங்கள விட ,அப்பா,தாத்தா வச்சிட்டு போன மனைய வச்சிட்டிருக்கிறவங்கள்,அத பொதயல் வெலக்கி வித்து பணக்காரங்களாயிட்டாய்ங்க...



-------------------------------------------------------------------------------------------------------------
said...
This comment has been removed by the author.


-------------------------------------------------------------------------------------------------------------
said...

// அதனால கவர்ன்மெண்ட் ஒருத்தருக்கு இருபத்தஞ்சாயிரத்துக்கு மேல சம்பளம் கிடைச்சா கல்யாணம் பண்ணனும்னு சட்டம் போடணும்.//
ஆஹா.. அப்ப கணக்குப்படி எனக்கு மூணரை கல்யாணங்கள் பண்ணனுமே..ஆனா எங்க வீட்டுல ஒத்துப்பாய்ங்களா?ன்னு தெரியலியே....ஹிஹி.......



-------------------------------------------------------------------------------------------------------------
said...

சும்மானாச்சும் சமூகம், சீரழிவு அப்படின்னு ஓட்டிட்டு இருகவனுக்கெல்லாம் உங்க தீர்வு ஒரு நெத்தியடி!! இனிமே எவனும் இதப்பத்தி பேசுவானா என்ன??

..ராம்



-------------------------------------------------------------------------------------------------------------
said...

// Comment deleted

This post has been removed by the author.//

அட நாந்தேன் பரிச்ச் பேப்பர திருத்த delete செஞ்சேன்.. ஆனாக்கா.." the author"இன்னு வருதே.. அரை பிளேடு சண்டைக்கு வரப்போராரு?..அப்ப நானில்லை.. நானில்லை..



-------------------------------------------------------------------------------------------------------------
said...

:)) corecta sonna thalivaa....



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி காசி.

ரசிகன்...

நீங்க சொன்ன மாதிரி சோளிங்க நல்லூர் தாண்டி ஓல்டு மகாபலிபுரம் ரோட்டுல பத்து வருசத்துக்கு முன்னாடி பத்தாயிரத்துக்கு மனை வாங்கி போட்டவன் இன்னிக்கு இருபது லட்சம் முப்பது லட்சம் சொல்றான். இத்தினிக்கும் சுத்து வட்டாரம் இரண்டு கி.மீ. டீக்கடை கூட கிடையாது.
:)

வாங்குற ஒவ்வொரு இருபத்தஞ்சாயிரத்துக்குமா கல்யாணம் பண்ணுவீங்க. மாசாமாசம் கல்யாணம் பண்ண வேண்டி வருமே !!! முதல்ல ஒரு கல்யாணம் பண்ணுங்க.
அதுலயே வழிக்கு வந்துடுவீங்க. :)))

நீங்க டெலீட் பண்ணா "deleted by Author".
நான் டெலீட் பண்ணா "deleted by administrator". :)))



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நீங்க இதை காமெடி பதிவா போட்டீங்களா இல்ல சீரியஸ் பதிவா போட்டீங்களானு தெரியாது ... நான் சீரியஸா எடுத்துகிட்டேன்...

உண்மையில், ஐடி மக்களால் தான் பிரச்சனையே... ஆனால் அவர்கள் வேண்டுமென்றே செய்யவில்லை..

நான் சம்பாதிக்கிறேன் வசதியா இருக்கனும்னு நினக்கிறேன்..செலவு செய்றேன் என்ற மனோபாவம் தான் பிறரை இன்னலுக்குள்ளாக்குகிறது...

ஒரு சின்ன எ.கா... தாம்பரத்தில் என் நண்வர் ஒருவர் ஒர் வீட்டு மனை வாங்க இருந்தார்.. அவர் ஒரு கார்மென்ட்ஸ் கம்பெனியில் அக்கவுண்ட்டன்ட்.. என்ன ஒரு 10-13 ஆயிரம் சம்பாதிப்பார்..சிறுக சிறுக சேர்த்து ஒரு வீட்டுமனை 8 இலட்ச ரூபாய்க்கு பேசினார்... சரி இருட்டி விட்டதே என் மறுநாள் மாலை டோக்கன் அட்வன்ஸ் தருவதாக சொல்லிவிட்டு வந்தார்.. மறுநாள் சென்றால் ஒரு ஐ.டி மனிதர் பார்த்த ஒரே மணி நேரத்தில் ஓனர் சொன்ன 10 இலட்சத்திற்கு ஒப்புக் கொண்டு அட்வான்ஸ் கொடுத்திருந்தார்..

இது அந்த இடத்தின் மார்கெட் விலையை விட அதிகம்... அவரை பொறுத்தவரை நான் சம்பாதிக்கிறேன் எனக்கு வேண்டும், 2 இலட்சம் அதிகமானால் என்ன... இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு..இதை எல்லாவிசயத்திற்கும் பொறுத்தி பார்க்கலாம்...

ஏன் வடக்கு பெங்களூரை விட தெற்கு பெங்களூரில் வாடகை பல மடங்கு அதிகம்.. ஏன் வடசென்னையை விட தென்சென்னையை விடுங்க.. தாம்பரம்-வெளச்சேரி சாலையில் வாடகை அதிகம்..

இது தான் இந்தியாவின் பிரச்சனை ஐ.டி அப்பர் மிடில்கிளாஸை ஹையர் கிளாசாகவும்.. மிடில் மிடில் கிளாசை அப்பர் மிடில்கிளாசாகவும் மாற்றியுள்ளாது.. அது கூட ஒரு குறிப்பிட்ட சதவீதம் தான்... பெரும் சதவீதம் அப்படியே உள்ளார்கள்..

லோயர் கிளாஸுக்கு ஐ.டியால் பிரயோசனமே இல்லை... இந்த இடைவெளி அபாயகரமான நிலையை அடைந்து விட்டது.. ஐ.டியால் வரும் பணம் மீண்டும் பணக்காரர்களிடமே போகிறாது... கார், மொபைல், சிகெரட், தண்ணி, ஹோட்டல், சினிமா, காஸ்ட்லி துணி என இவர்கள் வாங்கு எல்லாமே, கடைசியில் பணக்காரர்களிடம் தான் போய் சேர்கிறது...

நாளையே.. அமெரிக்காவில் ஏதாவது நடந்தாலோ.. அல்லது சைனா ஐ.டி யில் பின்னி பெடலெடுத்தாலோ.. அதாவது இந்தியாவில் ஐ.டி விழுந்தது என்றால் இடி விழப்போவது ஐ.டி மக்கள் தலையில்தான்... இவ்வளவு பணம் பார்த்து பழகிய இவர்களால் பணமில்லாத வாழ்க்கையை பார்க்க முடியபோவதில்லை...

அமெரிக்காவில் வீட்டு கடனுக்கு மாதத்தவணை செலுத்த முடியாமல் forecloseure செய்வது என்பது மிகப் பரவலாக நடப்பது.. அது போன்ற விசயங்கள் இந்தியாவில் இது வரை அரிது... ஆனால் இன்னும் 20/30 வருடங்களுக்கு இதே போல் சம்பளம் வரும் என்ற நம்பிக்கையில் 30-40 இலட்சம் கடன் வாங்கி இருப்பவர்களுக்கு கடவுள் கருணையில் அவர்கள் நம்பிக்கை வீண் போககூடாது..

அமெரிக்காவில் 2001-2002 ல் நடந்தது போல்(பல்லாயிரம் பேர் வேலை இழந்தனர்) இந்தியாவில நடந்தால் நம்மால் சமாளிக்க முடியாது..அமெரிக்கர் அது போன்ற நிலைக்கு பழக்கப்பட்டவர்கள். இது போன்ற சூழ்நிலை அவர்கள் அடிக்கடி எதிர் கொள்பவர்கள்.. அவர்களே அப்போது நிலைகுலைந்து போனார்கள் என்றால்... வேலை நீக்கம் என்பதையே பார்த்திராத நாம் எப்படி சமாளிப்போம்..

சரி எதையோ சொல்ல வந்து எதோதோ சொல்லி விட்டேன்.. கற்றது தமிழ் படத்தின் பல விஷயங்களை நான் ஏற்றுக் கொள்கிறேன்..

எனவே ஐ.டி மக்களே.. தேவையறிந்து செலவு செய்யவும்.. முடிந்தாம் குறைந்த சம்பள்ம் வாங்கும்/வாங்கிய உங்கள் அப்பாவை கலந்தாலோசிக்கவும்.. அவர் நிச்ச்யம் உங்களை நன்றாக வழிநடத்துவார்...

டிஸ்கி:- நான் ஒரு ஐ.டி மனிதன்+குடும்பஸ்தன்...



-------------------------------------------------------------------------------------------------------------
said...

சும்மா நச்சுன்னு ஒரு பதிவு.....



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நம்புற மாதிரி என்னமா பாயிண்ட் பாயிண்ட் ஆ எடுத்து வச்சிருக்கீங்க ......என்னோட பதிவு'லயும் பாதி உண்மை தான் இருக்கு ..புரியுது , ஆனா நீங்க நையாண்டி பண்ணி முழு பூசனிகாய மறைக்க முடியுமா ?
tasmac ல எத்தனை டிகிரி ஹோல்டேர் வேலைல இருக்கிறான் தெரியுமா?
பலசரக்கு கடை, பெட்ரோல் பல்க்.......இங்க எல்லாம் எத்தனை பேரு கஷ்டபடுறான் தெரியுமா? இவங்களுக்கு எல்லாம் வேலைல நேரம் கலாம் கிடையாது.
இவங்க வாழ்கைய ஒரு நாள் கூட உங்களால் வாழ்ந்து பார்க்க முடியாது.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி ஜி..

நன்றி நக்கீரன்..

உண்மைகள் சிலநேரம் காமெடியானவை. உண்மையான காரணம் டிமாண்ட் அண்டு சப்ளைதான். ஒரு குறிப்பிட்ட பகுதியிலேயே எல்லோரும் வீடு வாங்க வாடகைக்கு எடுக்க முயற்சிக்கும் போது மதிப்பு ஏறுகிறது. உண்மையான தீர்வு நகர் விரிவாக்கம் விலைகளை அரசு மட்டுப்படுத்துதலில் இருக்கிறது. அதே நேரத்தில் இந்த பொருளுக்கு ஏன் விலையேற்றம் என்று வாங்குபவர்களும் கேள்வியெழுப்ப வேண்டும். நீங்கள் சொன்ன உதாரணத்தில் 8 லட்சம் இடத்தை 10 லட்சத்திற்கு வாங்கியவர் எதிர்காலத்தில் அதன் மதிப்பு மேலும் ஏறும் என்ற நம்பிக்கையில்தான் வாங்குகிறார். அதை திரும்ப விற்கும்போது அதன் மதிப்பு 8 லட்சமாகத்தான் இருக்கும் என்றால் அதை ஏன் அவர் 10 லட்சத்திற்கு வாங்க போகிறார். டிமாண்ட் ஏற்படும் என்ற அவருடைய கணிப்புதானே அவரை அதிக விலைக்கு வாங்க வைக்கிறது. டிமாண்டை தவிர்க்கும் முறைகளை ஆராய வேண்டியது அரசின் கடமை.

ஐந்து லட்சரூபாய் இடத்தை வாங்கி ஒரே ஆண்டில் 15 லட்சத்திற்கு விற்ற புரோக்கர்களை நானறிவேன். இவர்களைப்போல் தேவையில்லாமல் இடத்தின் மதிப்பை கூட்டுபவர்களை என்ன செய்ய.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

வசந்தம் ரவி..

நன்றி.

//வேலைல இருக்கிறான் தெரியுமா?
பலசரக்கு கடை, பெட்ரோல் பல்க்.......இங்க எல்லாம் எத்தனை பேரு கஷ்டபடுறான் தெரியுமா? இவங்களுக்கு எல்லாம் வேலைல நேரம் கலாம் கிடையாது.
இவங்க வாழ்கைய ஒரு நாள் கூட உங்களால் வாழ்ந்து பார்க்க முடியாது.
//

நிஜம். ஆனால் இவர்களுடைய வேலையையோ அல்லது ஊதியத்தையோ சாஃப்ட்வேர் துறை பாதிக்கவில்லை. சில வழிகளில் இவர்களுடைய வேலைவாய்ப்பு மற்றும் ஊதிய உயர்வுக்கு மறைமுகமாக உதவி மட்டுமே செய்துள்ளது.

என்ன முன்பு படித்தவர்களில் அரசாங்க வேலையும் ஒரு சில வேலைகளையும் தவிர மற்ற எல்லோருமே இத்தகு வேலைகளை மட்டுமே செய்ய வேண்டி வந்தது.


இன்று சற்று சுற்றிப்பாருங்கள்... பல்வேறு புதியவேலைவாய்ப்புக்ள இன்று உருவாகியிருக்க காணலாம்.... (எ.கா) ஏர்டெல், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களில் முகவர்கள். கூரியர் சர்வீஸ்கள்... இன்னும் பல வேலைவாய்ப்புகள்... தொழில்கள் பெருக சமூக முன்னேற்றமும் அதை சுற்றி நடக்கிறது.

புதிய வாய்ப்புகளை திறந்து விடுவதுதான் முன்னேற வழி.

உண்மையான முன்னேற்றம் என்பது புதியவாய்ப்புகளை உருவாக்கி பெட்ரோல் பங்கில் வேலைசெய்பவனுக்கு அதை அளிப்பதில்தான் இருக்கமுடியும்.

பெட்ரோல் பங்கில் இருப்பவனை தொடர்ந்து அங்கேயே இருக்க செய்து மற்றவர்களை இவனைப்போலவே நீங்களும் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதாக இருக்க முடியாது.

நன்றி.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நச் பதிவு :-)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை....தூங்குபவரை எழுப்பலாம்...தூங்குவது போல் நடிப்பவரை எப்படி எழுப்ப முடியும்?



-------------------------------------------------------------------------------------------------------------
said...

வசந்தம் ரவி அவர்களே..

யாரும் தூங்கவோ.. தூங்கறமாதிரி நடிக்கவோ இல்லை. எல்லோரும் அவங்க அவங்க பிழைப்பை பார்த்துக்கிட்டு இருக்கோம் :)

சாஃப்ட்வேர் துறையால் மிகக்குறைந்த அளவிலான மக்கள் பொருளாதார அளவில் தன்னிறைவு பெற்றிருக்கிறார்கள். அவ்வளவே.

இதனால் பெருமளவு மாற்றம் தமிழகமெங்கும் நிகழ்ந்துவிடவில்லை சென்னையின் குறிப்பிட்ட பகுதிகளில் ரியல் எஸ்டேட் விலை ஏறியதை தவிர.

வெல்த் ஜெனரேஷன் தனியொருவனுக்கு மட்டுமல்ல சமூகத்துக்கும் பயன்தரக்கூடிய ஒன்று. அதை சானலைஸ் செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

Save the IT People from Debts
Tags:



--------------------------------------------------------------------------------



Hi,
(below email "Save the IT People from Debts" was wonderful and we should go through it and also forward to all our friends)

Real Estate price hike is known open robbery from IT guys by brokers / whoever it is and it's not only Flats / Real Estate, IT guys undergo open robbery from all rich shop owners / a person who wanted to become rich as fast as possible...

The salary whatever we get, it's our hard-earned money, most of the times sitting in the night, away from family functions, friends, etc...but all our money or most of the money are going to someone who just takes advantage of our stressful life (both mentally and physically) and our new western life style.

I do not find anything wrong in having a US / UK life style, but many open thieves (starting from Ministers to our local Restaurant owner) just swindling all our "legal money" and as we do not have any other choice becoming poor / debtor day by day.

Well most of the price hikes are just unbelievable and there is absolutely no justification (few examples given below).

Chicken Biriyani (Karaikudi 3 weeks back) - Rs. 65

Today (since last 2 weeks) same Karaikudi Chicken Biriyani (believe me, there is absolutely no change) - Rs. 78, there is no justification for such a big increase.

Pop Corn (Sathyam Complex) previously (month and half back) - Rs. 20

Today (almost the same quantity) - Rs. 30 (again, i do not find any justification)

Corn in Garuda Mall previously (month back) - Rs20 Small, Rs 30 Medium and Rs 40 High

Now, No "actual" small and real small has become 35 now and 45 for high... [Are they the farmers who have given their blood to grow this ]

(In Sathyam complex, many price hikes are really too much for no reason...)

Chips packet (Gangotree) previously (three months back) - Rs. 15

Since last two Months the same packet costs - Rs. 20 (again, I do not find any justification)

Room Clean (just once) - Rs. 200, that's bcos they cleaned IT guys room.

(The moment you say that you are from Software company, the price automatically increases...)

We guys already pays big taxes from our salaries and goes on paying other taxes too (starting from Hotel Sangeetha "Vadai" to Scotch in a bar), it's time to think and pledge ourselves that we stop spending just for one month...

Reason(s) why we should stop spending alteast for a month:

1. 70% of the IT guys occupies the restaurants.

2. 80-90% of the IT guys goes to coffee shop, hang around places, bakeries, etc.

3. Most of the IT guys goes to Sathyam complex, Movies

If we stop going / spending just for a month, their business automatically goes down and they would have no other choice except to bring down the price, that's what happened when IT industry was down three years back.

Somehow directly or indirectly we are responsible for this unjust price hike and now, only we could prevent this open robberies, please add your comments or experiences and keep forwarding this email to all your known people, I am sure even if 25% of us realizes and acts accordingly, it could and would make lot of difference to us.

(let's try and prevent unjust price hike)
----------------------------------

Save the IT People from Debts

* Property market in Year 2001 -2004 was quiet Ok , People were able to buy Flats in reasonable rates ..

*Year 2005 -2006 , Some of the well known builders started the rates boom , flat which was at the cost of Rs.900 Sq Ft now became 2200 to 2800

Q: Are there any additional facilities ?

--> No Same Scheme/Area , Flat sold at 10 Lacks Now selling at 25 Lacks .

Q: Why Property increased so High ?

--> IT people competition to buy sweet home ..

Q: Who is going to Benfit from this Property Boom ?

--> Only Builders and some of the Politicians

Q: How is the Bank's support on Home Loans ?

--> Last Year , Bank gave the loan's at flexible mimimum rate,Now Banks has sufficient number of customers ,

(Trap) Slowly Banker's increasing interst at % 0.5 every month .

IT People Who bought house for 22 Lacks for 20 Yrs , Now became 23 Yrs with raise of 0.5 %

Q. How some IT people can face the problems in Future ?

--> Companies are Project Based , If Projects are not there then People will not be there .

Q. IT salaries are high in Market , How much actually IT-people getting in Hand ?

--> People, Who bought house of 22 Lacks to 40 Lacks They need to pay EMI

15,000 to 35,000 for 20 Yrs. If Bank keeps same interst rates .

Suppose Salary is 35- 40 K Per Month, 20K will be the EmI

Q. Is there any "Terms & Condition or Processes to increase rates" ?

--> No , Depends on Buiders Greediness . Every builder follows the different strategies

Builder sold one flat 1500 Per Sqft in Morning and 1800 Per Sqft in the Evening ,

There are no records maitained ..

Q. Who made builders smart & greedy ?

--> Greedy IT people ..

No body is asking , Flat was sold at 12 Lacks , Why now 24 Lacks ?

Q. Is Corporation water & MESB available to all schemes ?

--> Some of the area don't have the Corporation water at all , People surviving on Water Tankers.

** MESB .. Under Table ,can be managed easily .

Q. What will be the condition If We are not able to Clear the Loan ?

--> Depends on individual capabilities

Q. What wiil be the actual 'area of living' or carpet area if the builder proposes 1000 sft?

....> The actual carpet area will be 800-850 sft only. The common area is also included in the proposal.

If two flats are in the same floor, then the builder cheats both the residents by collecting

How do Builders cheat buyers? ... Let us see with a simple example

Builder XXXX proposes a flat in a decent residential area.

Rate ( Unit Price ) - Rs. 3500 sft.

Registration - Rs. 40 per sft.

EB and drainage - Rs. 50,000

Covered Car park - Rs. 1,25,000

Corpus fund - Rs. 50000.

For a 1000 sft flat ( 850 sft carpet area ), the approximate cost will be Rs.37,65,000. In the same plot area ( measuring 2 grounds) the builder would have constructed 8 or 10 flats.

Let us see how a builder earns his profit

Total sales for the builder - 37, 65,000 *10 = 3, 76, 50000 ( 3.76 crores)

Cost of the land - Rs. 40 laks per ground

1) Total cost of the land - 80 lakhs for two ground ------- A

Total builtup area for 10 flats - 10*1000 sft = 10,000 sft

Construction cost per sft ( for normal specification) = Rs. 900 per sft

2) Total construction cost - 10,000 * 900 = Rs. 90,00,000 -------------- B

3) Other expenses for the builder - Rs. 20 per sft = Rs. 2,00,000 ................. C

Total expenses for the builder = A+ B+C

= Rs. 80,00,000 + Rs.90,00,000 + Rs. 2,00,00

= Rs. 1,72,00,000 ( 1.72 crores approx)

Total Sales = Rs. 3.76 crores - Rs. 1.72 crores

Total profit of the builder = Rs. 2.04 crores.

Let us see the share of each resident

1. Cost of land = Divided share among the other 10 residents

= Rs. 80,00,000 / 10

= Rs. 8,00,000

2. Construction cost = Rs. 900 * 1000

= Rs. 9,00,000

3. Other expenses = Rs. 2,00,000 ( approx)

Total = Rs. 19,00,000 ( Nineteen lakhs)

The total share for each resident is Rs. 19,00,000 ( Nineteen lakhs only )

but he pays Rs. 37.5 laks for the flat.

Q. How We can stop Builders -Property Boom ?

1) IT People should think about buying flats for atleast next 1-2 Yrs .

2) Onces rates are reasonable , With some legal process get the Booking .

3) Check Facilities, Convince, Road Approach, schools & Mainly co-operation water

4) Ask Questions If I buy 1/2 BHK at 12 to 30 Lacks , Do I get reasale value in future?

5) Today you are capable for paying 1000 -3000 maintains per month ? Will will be the same case

after 20-30yrs after retirement .

6) In All, Don't stretch more to get the more & more loans other wise it will create unnecessary

pressure and tension .

7) Read the above mentioned calculation carefully, when you are about to buy a flat pls keep this in mind.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

கடைசி பதிவுக்கு ரெம்ப நன்றிஇங்கனா!



-------------------------------------------------------------------------------------------------------------
said...

news from dinamalar:
மும்பை: தகவல் தொழில் நுட்ப நிறுவனங் கள், தங்கள் ஊழியர்களுக்கு இனியும் சம்பளத்தை அள்ளித்தரப் போவது இல்லை.

கம்ப்யூட்டர் நிறுவனங்களில் வேலை பார்த்தால் எக்கச்சக்கமாக சம்பளம் கிடைக்கும் என்பது கடந்த காலமாகப் போகிறது. `ஐ.டி.,' என்று அழைக்கப் படும் கம்ப்யூட்டர் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு சம்பளம் அள்ளி வழங்கப்பட்டு வந்தது. அதில் பெருந்தொகை, சம்பளமாக நிறுவனத்திற்கு செலவாகி வந்தது. ஆனால், சம்பள அளவும் விகிதமும் அதிகபட்ச அளவுக்கு சென்றதால் இனியும் சம்பளச் சுமையை நிர்வாகம் சுமக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பணிகளை இங்கிருந்தே செய்யும் `அவுட் சோர்சிங்' முறையில் முன்பு கிடைத்த லாபம் நிறுவனங்களுக்கு கிடைக் காது என்ற நிலை ஏற்பட்டிருக் கிறது. அன்னியச் செலாவணிச் சந்தையில் ரூபாய் மதிப்பின் உயர்வு காரணமாக விற்பனையில் வரும் லாபமும் குறைகிறது. இதை சரிக்கட்ட அதிக சம்பளம் அளிப்பதை நிறுத்த கம்ப்யூட்டர் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

\\அதுக்காக சைக்கிளோ பைக்கோ காரோ இல்லாதவன் வெச்சிருக்கிறவன பாத்து நீ எப்படி இத வாங்கலாம். வாங்காதேன்னு சொல்ல முடியுமா.\\

சூப்பரான, நச்சென்ற பதிவு அரை பிளேடு!!



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நாலு பேர் பேசறாங்க என்ற ஒரே காரணத்துக்காக பலரை படுகுழியில் தள்ளும் இந்த சதித்திட்டத்தை தீட்டிய அரைபிளேடுக்கு என் கண்டனங்கள்!



-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஐட்டிக்காரர்கள் அதிகமா ஆனதுல, ஏழைங்களுக்கும் பணக்காரங்களுக்கும் இருந்த இடைவெளி இன்னும் அதிகமானது என்னவோ உண்மைதான்.

கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறான்னு ஐட்டிய சொல்றது, ஆரம்ப காலத்தில் மட்டும்தான். அமெரிக்காவுல இருக்கிற ஐட்டி எல்லாம் முக்காவாசி நேரம், குமுதம், ஆவி, தமிழ்மணம் படிக்குறதுலேதான் செலவு பன்றாங்க(டிசிஎஸ், விப்ரோ போன்றவற்றில் பணிபுரிபவர்களைத் தவிர்த்து!)

அதிகமா சம்பளம் வருதுனு, அளவுக்கு மீறி செலவு செய்றதும், கடன் அட்டை கழுத்து வரை மூழ்கி கிடப்பதும், ஃபோர்குளோசர்கள் அதிக அளவில் நடப்பவைதான்.

மொத்தத்தில், சுயக் கட்டுப்பாடு இல்லைனா எல்லாத் துறையில் அதிகமா வாங்குறவங்களும் கெட்டுப் போக வாய்ப்பு அதிகம். என்னோட சொந்தக் கருத்து, ஐட்டிக்கு கொஞ்சம் அளவுக்கு அதிகமாவே சம்பளம் குடுக்குறாங்க என்பதுதான். இது இன்னும் கொஞ்ச நாளில் மாறலாம். ஐட்டிக்கும் அழிவு வரலாம்.

நம்ம மக்கள் செம்மறியாட்டுக் கூட்டத்தைப் போன்றவர்கள். சாஞ்சா ஒரே பக்கம் சாய்வாங்க, இப்போ பங்கு வர்த்தகத்தை ஒரு வழி பண்ணிக்கிட்டு இருக்குற மாதிரி!!

உபதகவல்: நானும் ஐட்டிக்காரந்தான். ஒரு மனைவி, இரு குழந்தைகள் :)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

//நாலு பேர் பேசறாங்க என்ற ஒரே காரணத்துக்காக பலரை படுகுழியில் தள்ளும் இந்த சதித்திட்டத்தை தீட்டிய அரைபிளேடுக்கு என் கண்டனங்கள்!//

நானும் கன்னாபின்னாவென கண்மூடித்தனமாக கண்டிக்கிறேன் :)))



-------------------------------------------------------------------------------------------------------------
said...

//சாஃப்ட்வேரு இஞ்சினியர்கள் சமூகத்தை சீரழிக்கிறாங்களா.. //

இல்லை.

அவர்களே அவர்களை அறியாமல் செய்யும் செயல்களால்தான்

சிக்கனம் பன்னுங்க
கஞ்சத்தனமா இருக்காதீங்க

செலவு பன்னுங்க
ஊதாரித்தனம் பன்னாதீங்க

காற்றுள்ள போதே தூற்றிக் கொள். இல்லைனா பிற்காலத்தில வருத்தப்படுவீங்க.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

The Best Solution for this to use the manpower that we have. Instead of loading lots of work on a single person and ask him to work for 12-15 hrs a day, the work can be shared 2-3 persons and all(Salary, work Time) can be shared. In detail, instead of one person doing the work for 15 hrs, three person can do the work in say 7 hrs. In this way, there is no stress on a single person and there is no talk of high salary and this and that. The only problem in this model would be place for the three person and systems for three persons. But it won't be a problem.

Another mainthing in this is the high salary is possible only due to dollar Rupee conversion. Now Rupee getting stronger, this can also lower the salary



-------------------------------------------------------------------------------------------------------------
said...

:-))))



-------------------------------------------------------------------------------------------------------------
said...

//சின்ன எ.கா... தாம்பரத்தில் என் நண்வர் ஒருவர் ஒர் வீட்டு மனை வாங்க இருந்தார்.. அவர் ஒரு கார்மென்ட்ஸ் கம்பெனியில் அக்கவுண்ட்டன்ட்.. என்ன ஒரு 10-13 ஆயிரம் சம்பாதிப்பார்..சிறுக சிறுக சேர்த்து ஒரு வீட்டுமனை 8 இலட்ச ரூபாய்க்கு பேசினார்... சரி இருட்டி விட்டதே என் மறுநாள் மாலை டோக்கன் அட்வன்ஸ் தருவதாக சொல்லிவிட்டு வந்தார்.. மறுநாள் சென்றால் ஒரு ஐ.டி மனிதர் பார்த்த ஒரே மணி நேரத்தில் ஓனர் சொன்ன 10 இலட்சத்திற்கு //



நக்கிரன் சார்...

இதுக்கு ஒரு ஐ டி காரன் தான் என்று இல்லைங்க.. ஒரு டாக்டர், ஒரு அரசியல் வாதி, ஒரு பிசினஸ் மேன். ஒரு ரியல் எஸ்டேட்கரண் .. யார் வேண்டுமானாலும் செய்யலாம்...



-------------------------------------------------------------------------------------------------------------
said...

//அதுக்காக சைக்கிளோ பைக்கோ காரோ இல்லாதவன் வெச்சிருக்கிறவன பாத்து நீ எப்படி இத வாங்கலாம். வாங்காதேன்னு சொல்ல முடியுமா.//

அது...!



-------------------------------------------------------------------------------------------------------------
said...

கொத்தனார், கப்பி...

நாலு பேருக்கு நல்லது நடக்கனும்னா எதுவுமே தப்பு இல்லை :))))



-------------------------------------------------------------------------------------------------------------
said...

பினாத்தல் சுரேஷ் அவர்களுக்கு இட்ட பின்னூட்டம்
---------------------------------------------------------------------

//மன அழுத்தம் வரும் அளவுக்கு நிலைமை இருப்பது உண்மைதான். நானும் சில வேளைகளில் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால், நம் கையில் இல்லாத விஷயங்களுக்கு கவலைப்பட்டு பிரயோஜனமில்லை :-) இதைச் சொன்னாலே, பொறாமை என்று கருதப்படும் சூழலில்தான் வாழ்கிறோம்.//

மன அழுத்தம் என்பது சாஃப்ட்வேர் துறையில் இருப்பவரை வரை பார்த்து மற்றவருக்கு வருவதை விட அதே துறையில் ஒருவருக்கு மற்றவரைப் பார்த்து வரும் வாய்ப்பு அதிகம்.

இத்துறையில் அனைவருக்கும் அதிக சம்பளம் கிடைப்பதில்லை. அதிக சம்பளம் பெறுவோரின் சதவீதம் குறைவே.

"உனது நண்பன் இரண்டே வருடத்தில் அமெரிக்கா போய் மாசம் லட்சம் ரூபாய் அனுப்புகிறான். உன்னை உனது கம்பெனி ஏன் அனுப்பவில்லை" என்று தந்தை கேட்டபோது என்னிடத்தில் விடை இல்லை.

"என் தங்கச்சிக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளை உங்கள மாதிரி இல்லை. அவரும் சாஃப்ட்வேர் இஞ்சினியர். உங்களை விட சின்ன வயசு. ஆனா சம்பளம் டபுள். நீங்களும் இருக்கீங்களே" என்று மனைவி சொன்ன போது வாழ்க்கையை வெறுத்திருக்கிறேன்.

நான்கு ஆண்டு எக்ஸ்பீரின்ஸிற்கு பிறகு எனக்கு கிடைத்த சம்பளத்தை விட புதிதாய் வந்தவனுக்கு நிறுவனம் அதிகம் வழங்கியபோது எனக்கும் மனஅழுத்தம் வந்தது.

இதனை பொறாமை இல்லை என்று சொல்லமாட்டேன். மனித மனம் :)

இரண்டு ஆண்டிற்குள் சாஃப்ட்வேர் இஞ்சினியர்கள் நாலு கம்பெனிகள் மாறுவது எதற்காக. பணத்திற்காகத்தானே.

நிறுவனங்களும் அந்தநேரத்திற்கு ஆள்தேவை என்று அந்த நேரத்திற்கு அள்ளி விடுகின்றன.

இங்கு சம்பளமோ வேலையோ எதுவும் நிலையில்லை. "ஆடும் வரை ஆட்டம்" .

இந்த சம்பளங்கள் அளவுகோள்கள் ஒரு அதிர்ஷ்டத்தை பொறுத்தது என்று தோன்றுவதுண்டு.

இங்கு எல்லா வேலைகளும் ஒரே தரத்தவையும் அல்ல. எல்லோருடைய சம்பளங்களும் அதிகமானவையும் அல்ல.

அடிக்கிற காற்றில் பறக்கிற இலவம் பஞ்சுகள். காற்று அடிக்கும் வரைதான் எல்லாம்.

ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன் 8 லட்சத்தில் ஒரு பிளாட் கிடைக்கும் என்ற நிலையில் கணித்துறையில் சேர்ந்த நான் நான்காண்டுகளில் கஷ்டப்பட்டு நான்கு லட்சத்தை சேர்த்து விட்டு நிமிர்ந்து பாரக்கும் போது அந்த வீட நாற்பது லட்சமாக இருக்கிறது.
:(

"கண்ணா. இந்த உடம்புல உயிரே வாடகைக்குத்தான் இருக்கு. வீடு வாடகையா இருந்தா என்ன" அப்படின்னு மனசைத் தேத்திக்கொண்டேன்.

மாசம் இருபதாயிரம்னு இருபது வருடத்துக்கு கட்டணும்னு தைரியமா வீடு வாங்கி போடற அளவுக்கு சிலருக்கு இருக்கிற நம்பிக்கை எனக்கு இந்த துறைமேல இல்லை.

என்னை பொறுத்த வரைக்கும் இரண்டாவது மாடியில 1200 சதுர அடிவீடுன்றது 40 லட்சம் பொறுமானமான ஒன்றே இல்லை. இதுக்கு 40 லட்சம்ன்றது அக்கிரமம். கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறோம்.

யாராக இருந்தாலும் சரி தேவையில்லாத அளவுகோள்களின் முன் நின்று தன்னை அளந்து சுயபச்சாதாபம் கொள்வது தவறு.

என்னை பொறுத்தவரை தேவையானது பணம் அல்ல. நிம்மதி.

இந்த சமூகம் (முக்கியமாக உறவினர்கள்) தேவையற்ற ஒப்பீடுகளை தந்து கொண்டுதான் இருப்பார்கள். அசட்டை செய்து நமது வழியை பார்த்து சென்று கொண்டிருப்பதுதான் சிறந்த வழி்.

//நம் கையில் இல்லாத விஷயங்களுக்கு கவலைப்பட்டு பிரயோஜனமில்லை :-) // ரொம்ப கரெக்ட்.

வள்ளுவர்தான் நியாபகத்துக்கு வருகிறார்..

வலியார்முன் தம்மை நினைக்கதாம் தம்மின்
மெலியார்மேற் செல்லு மிடத்து

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

//யாராக இருந்தாலும் சரி தேவையில்லாத அளவுகோள்களின் முன் நின்று தன்னை அளந்து சுயபச்சாதாபம் கொள்வது தவறு.

என்னை பொறுத்தவரை தேவையானது பணம் அல்ல. நிம்மதி.

இந்த சமூகம் (முக்கியமாக உறவினர்கள்) தேவையற்ற ஒப்பீடுகளை தந்து கொண்டுதான் இருப்பார்கள். அசட்டை செய்து நமது வழியை பார்த்து சென்று கொண்டிருப்பதுதான் சிறந்த வழி்.//well said.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரை பிளேடு..
உங்களுக்கும் ,குடும்பத்தாருக்கும். எனது அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

வணக்கம்,
இங்கு அலை கடலென கூடி இருக்கும் ஆன்றோர் மற்றும் சான்றோர்களே......
இன்று நான் மேடை ஏறி இருப்பது ஏன்? கூறப்போவது என்ன?

இன்று நாட்டில் I.T துறையை சார்ந்த நண்பர்களை கண்டால் பல பேருக்கு பொறாமை தான். வயிற்றெரிச்சல் தான்.ஏன் என்றால் அவர்களின் இயலாமைதான். I.T.நண்பர்கள் அந்த இடத்தை அடைய கொடுத்த தியாகங்கள் உங்களுக்கு தெரியுமா?அவர்களின் உழைப்பு தெரியுமா? அவர்களின் போராட்டம் தெரியுமா? இன்னும் அந்த துறையில் தங்களை நிலை நிறுத்திக்கொள்வதற்கு அவர்கள் தினமும் தங்களை தயார் படுத்திக்கொள்கிறார்களேஅந்த முயற்சி தெரியுமா?

அவர்கள் ஒன்றும் உயர் தர கல்வி நிலயங்களில் கற்று அந்த நிலையை அடையவில்லை, ( ஒரு சிலரை தவிர ). வீடு, மனை, ஆடு, மாடு, தோப்பு, துறவு அனைத்தையும் விற்று படித்து, சில இடங்களில் வேலை பார்த்து பின்னரே இந்த நிலை. அவர்களுக்காக அனைத்தையும் இழந்து நிற்கும் பெற்றோருக்கு, அவர்கள் ஏதேனும் செய்ய வேண்டாமா? ஏன் இந்த பொறாமை?

வாய்ப்பை பயன் படுத்தினால் உங்களுக்கு ஏன் வருகிறது பொறாமை? ஆம், இது வாய்ப்பே....கணினி படித்தால் வேலை மற்றும் பணம். அதனாலேயே அதனை ( அரை குறை ஆங்கில அறிவுடன் ) படித்து வாய்ப்பை பயன்படுத்துகிறார்கள்.

இன்று ஒரு படம் வந்துள்ளது, பெயர் "கற்றது தமிழ்". தமிழ் படித்தால் வேலை இல்லையாம்..இது தான் அதன் கதையாம்.தமிழ் என்ன? ஆங்கிலம் மட்டுமே தெரிந்து கொண்டாலும் வேலை இல்லை. ஜெர்மன் மட்டுமே படித்தாலும் வேலை இல்லை. மொழி அறிவு தேவைதான். அதனை மறுக்க வில்லை. ஆனால் மற்ற திறமைகள் அவசியம். எல்லாருக்கும் தான் தமிழ் எழுத படிக்க தெரிகிறது. அப்படி இருக்க சில பேருக்கு மட்டும் எப்படி வளைந்து வருகிறது காவியமாய், கவிதையாய், வசனமாய், உரை நடையாய். அது திறமை. அதனை வைத்து யாரும் சம்பாதிக்க வில்லையா?

இறுதியாக, "கற்றது தமிழ்" என்ற படம் முழுக்க, முழுக்க தமிழ் மட்டும் தெரிந்தவர்களை வைத்து எடுக்க பட்ட படமா?

நடிகர் : XXXX . M.A
நடிகை: XXXX . M.A
இயக்குநர்:XXXX . M.A
ஒளி/ஒலி பதிவர்: XXXX . M.A
வெட்டி-ஒட்டி கோர்வையாளர் அது தாங்க நம்ம எடிடர்:XXXX . M.A
இன்ன பிற தொழில்நுட்ப வல்லுநர்கள்: XXXX . M.A

ஒண்ணும் வேண் டாம்: அந்த பட கதாநாயகியை அந்த படத்தை பற்றி ஒரு 10 நிமிடம் பேச சொல்லுங்கள் (தமிழில்) போதும்.

( எப்பா.... சோடா கொண்டு வாடா சீக்கிரம்.....)

it is available in my blog http://golisodagoyindan.blogspot.com



-------------------------------------------------------------------------------------------------------------