Friday, January 12, 2007

பொங்கி வரும் கவிதை - பொங்கல் வாழ்த்துக்கள்.

பொங்க வச்சு போறவளே பொன்னம்மா..
என் மனசு கூட பொங்குறது என்னம்மா..

ஏங்க வச்சு போறியே நீ ஏத்தமா..
நீ செய்யுறது உனக்கேதான் நியாயமா..

போகி வந்து போச்சுதடி பொன்னம்மா..
ஆகி வந்த காதலத்தான் சொல்லம்மா..

மீதி வெச்ச மீன்குழம்பு வாசமா..
பாதி உசுர வாங்குறியே.. ஏனம்மா..

மாடுகண்ணு மேய்க்கற என் தங்கம்மா..
தளுக்கி நீநடந்தா எம்மனசு தாங்குமா..

மஞ்சளத்தான் அரைச்சி வச்ச மங்கம்மா..
கொஞ்சி வந்து பாக்குறியே ஏக்கமா..

கதிரடிச்சு குவிச்சு வெச்சேன் கண்ணம்மா..
சதிராடி நீயும் வாடி சின்னம்மா..

தவிக்க விட்டு நீயும் போனா தங்கம்மா..
தனியா கிடந்து என்மனசு தாங்குமா...

தைமாசம் வந்ததடி என்செல்லம்மா..
நாள்குறிக்க நானும் வந்தா வெக்கமா..

நெருங்கி தான் வருவேன் சொந்தமா..
பக்குவமா பாக்குமாத்த வேணாமா.


---------------------------------------



பொங்கல் வாழ்த்துக்கள்.
அரைபிளேடு.

8 comments:

said...

அருமையான கவிதை அரை பிளேடு.. எதுகை மோனையெல்லாம் எகிறி விளையாடுதுபா



-------------------------------------------------------------------------------------------------------------
said...

Super kavithai "araiblade".

Wish you a very happy pongal

- Unmai



-------------------------------------------------------------------------------------------------------------
said...

பொங்கல் வாழ்த்துக்கள் அரைபிளேடு.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி கார்த்திகேயன்...

தங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரை பிளேடு அண்ணாத்த

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

அழகாக பட்டெழுதும் சின்னய்யா - உனக்கு
அரைபிளேடு பேறுவந்தது ஏனய்யா?



-------------------------------------------------------------------------------------------------------------
said...

அரை, கலக்கல்!
இனிய தை திருநாள் நல் வாழ்த்துக்கள் :)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

அனானியாய் வந்த உண்மை
தங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.
நன்றி.



-------------------------------------------------------------------------------------------------------------