(முன்குறிப்பு: இது சிறுவர்களுக்கான நீதி கதை. இதில் வரும் கதாபாத்திரங்கள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல)
அது ஒரு ஹோட்டல்.
அங்கு பல பலகாரங்கள் இருந்தன. தோசை, இட்லி, வடை, பஜ்ஜி, போண்டா, புட்டு, போளி, ஆப்பம் இன்னும் பல. தினமும் வரும் வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு பிடித்த எல்லா பண்டங்களையும் ஆர்டர் செய்தார்கள். இவற்றில் போண்டா வாடிக்கையாளர்களை கவர புரட்சிகரமான கோஷங்களை இட்டது. போண்டாவை பலர் ஆர்டர் செய்தனர்.
போண்டாவின் கோஷங்கள் போளியின் கொள்கைக்கு(!) முரணானவையாக இருந்தன. போண்டாவை எதிர்த்து போளி குரல் கொடுக்கத்துவங்கியது. போண்டாவின் சைட் டிஷ்கள் போண்டாவை ஆதரித்தன. போளியின் சைட் டிஷ்கள் போளியை ஆதரித்தன. போளி போண்டாவை எதிர்த்து போளி போண்டாவாக வேடமிட்டு போண்டாவிற்கு அவப்பெயர் ஏற்படுத்தப்பார்த்தது. போண்டாவும் அதை சமாளிக்க கீரைபோண்டா, கோதுமை போண்டா என வேடமிட்டு போளிக்கு எதிராக முழங்கியது.
இதனால் வாடிக்கையாளர்கள் போண்டாவையும் போளியையும் ஒதுக்க ஆரம்பித்தனர்.
இதனால் போண்டாவும் போளியும் ஒன்றையொன்று எதிர்த்து குரல் கொடுப்பதன் மூலமே வாடிக்கையாளர்களை கவர ஆரம்பித்தன.
போளி போண்டாவை ஆர்டர் செய்பவர்களை திட்ட ஆரம்பித்தது. சிலர் போளியின் ஆட்சேபணைக்கு பயந்து போண்டாவை ஆர்டர் செய்வதை நிறுத்தினர் அல்லது திருட்டுத்தனமாக போண்டா ஆர்டர் செய்தனர். போளி அனைவரையும் பகைக்க ஆரம்பித்தது. இதனால் போளிக்கு எதிரான குரல்கள் அதிகமாயின.
தோசை ஓசை எழுப்பியது. சர்வர்கள் கருத்துக்கணிப்பு நடத்தினர். நெருப்பு தணலாய் போளியை வறுத்தெடுக்க கிளம்பியது.
இவ்வாறாக பலகாரங்கள் தங்களுக்குள் சண்டையிடுவதை பார்த்த வாடிக்கையாளர்கள் விலக ஆரம்பித்தார்கள். முதன் முறையாக ஹோட்டலுக்கு வந்தவர்கள் தெரியாமல் போண்டாவையோ போளியையோ ஆர்டர் செய்தவர்கள் மறுமுறை ஹோட்டலுக்கு வரவே அஞ்சினர்.
ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் குறைந்தார்கள்.
பலகாரங்கள் தங்கள் தவறை உணர்ந்தன. தங்களுக்குள் எத்தனை வேற்றுமையிருந்தாலும் தங்களுக்குள் மோதிக் கொள்வது தங்களுக்குத்தான் அவமானம் என்பதை உணர்ந்தன. பலகாரங்கள் திருந்தியதால் முன்பு போல வாடிக்கையாளர்கள் வந்து பயமின்றி வேண்டியதை ஆர்டர் செய்தார்கள்.
பலகாரங்கள் ஒற்றுமையாய் மகிழ்ச்சியாய் இருந்தன.
நீதி: ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
Wednesday, August 29, 2007
பரங்கி மலையில் தெரிந்த ஜோதி
(இது பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்)
காட்சி 1:
இடம் : கல்லூரி மாணவர் விடுதி
பாத்திரங்கள்: மாணவர்கள் கல்யாணம், பாண்டி, நாகு, ரெட்டி.
கல்யாணம்: டேய் பாண்டி, நீ நாகு, ரெட்டி மூணு பேருமா எங்கயோ கிளம்பிட்டிருக்க மாதிரி இருக்கு.
பாண்டி: ஆமாடா, நீயும் வர்றியா.
கல்யாணம்: எங்க போறீங்க.
பாண்டி: பரங்கி மலை ஜோதி.
கல்யாணம்: திருவண்ணாமலை தீபம் தெரியும். அது என்ன பரங்கி மலை ஜோதி. பரங்கி மலையில தீபம் ஏத்துவாங்களா என்ன.
நாகு: ம்ம்ம்.. பரங்கிமலையில மெழுகுவத்திதான் ஏத்துவாங்க. ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி கேக்கிறான் பாரு. உனக்கு பரங்கி மலை ஜோதி தெரியாது?
கல்யாணம்: தெரியாதுடா.
பாண்டி: அது ஒரு புனிதத்தலம் உன்னை மாதிரி பக்திமான்கள் ஒரு தடவையாவது அதை விசிட் பண்ணனும்.
கல்யாணம்: அப்படியா.
நாகு: கலாய்க்காத பாண்டி. ஜோதின்றது அந்த மாதிரி படங்களை காட்டற தியேட்டர்.
கல்யாணம்: அந்த மாதிரின்னா..
பாண்டி: ஏய். யப்பா. நீ நல்லவந்தான். ஒத்துக்கறேன். ஓவரா ஆக்டு குடுக்காதடா. நீ பலான படமே பார்த்தது கிடையாது.
கல்யாணம்: ம்கூம். அதெல்லாம் தப்பு.
நாகு: ஏய்.. இவன் ரொம்ப நல்லவண்டா.
பாண்டி: களவும் கற்று மற அப்படின்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. எங்க கூட படத்துக்கு வர்றியாடா.
ரெட்டி: ரா. ரா. மஞ்சி ஃபிலிமு. "கலர்ஸ் ஆஃப் தி லைஃப்". கலர்ஃபுல் ஃபிலிமுரா.
நாகு: ரெட்டி ஏற்கனவே ரெண்டு தடவை பார்த்துட்டான். இது மூணாவது தடவை.
பாண்டி: ரெட்டி.. நீ ஜோதி தியேட்டர்க்கு சீசன் டிக்கட்டே வெச்சிருக்கியாமே.
ரெட்டி: லேதுரா. அந்த அபத்தம்.
பாண்டி: சரி. சரி. நம்பறேன்.. கல்யாணம் நீ வர்றியா இல்லையா.
கல்யாணம்: நான் வரமாட்டேன். இது நம்ம கலாச்சாரத்திற்கே விரோதம்.
பாண்டி: இங்க பார்றா நம்ம கலாச்சார காவலரை. உனக்கு பயம் அதனாலதான் வர மாட்டேங்கிற.
கல்யாணம்: பயமா... எனக்கா அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை.
பாண்டி: அப்ப உனக்கு பயம் இல்லைன்னு ப்ரூவ் பண்ணு.
கல்யாணம்: நான் ஏன் ப்ரூவ் பண்ணனும்.
பாண்டி: ஆம்பிளையா இருந்தா ப்ரூவ் பண்ணு. நூறு ரூபாய் பெட்.
கல்யாணம்: பெட்டெல்லாம் வேண்டாம்.
பாண்டி: அப்ப நீ பயப்படற. தோத்திட்ட. எடு நூறு ரூபாய்.
கல்யாணம்: அதெல்லாம் இல்லை.
பாண்டி: அப்ப வா. தியேட்டருக்கு. பெட்ல ஜெயிச்சினா உனக்கு நூறு ரூபாய்.
கல்யாணம்: (தயங்கியவாறு)... சரி வர்றேன்.
பாண்டி: அது வீரனுக்கு அழகு. உன் கற்பு எல்லாம் போகாது. நான் கியாரண்டி.
(நால்வருமாக கிளம்புகிறார்கள்).
காட்சி 2:
-----------
(படம் பார்த்து முடித்துவிட்டு நான்கு நண்பர்களும் தியேட்டர் வெளியே..)
பாண்டி: கல்யாணம். படம் எப்படிடா இருந்தது.
கல்யாணம்: ம்ம்..
ரெட்டி: ஆக்சுவலி சீன்ஸ் கட். அந்த பாக லேது.
கல்யாணம்: தியேட்டர்ல ஒருத்தர் கால மிதிச்சிட்டேண்டா. அப்புறம் பார்த்தா அது நம்ம லெக்சரர்.
பாண்டி: ஹா.. ஹா..
கல்யாணம்: பார்த்திட்டார்னா தப்பா நினைச்சிக்க மாட்டாரு.
பாண்டி: நாம படம் பார்க்க வந்தோம். அவரு என்ன சாமி கும்பிடவா வந்தாரு. நாம அவரை கண்டுக்க கூடாது. அவரும் நம்மள கண்டுக்க மாட்டாரு. பயப்படாதே.
கல்யாணம்: ம்ம்..
பாண்டி: மந்திரிச்சு விட்ட கோழி மாதிரியே இருக்கியே. ஆமா. இப்ப உன் கலாச்சாராம் என்ன ஆச்சு.
கல்யாணம்: ஆக்சுவலி நாம பார்த்தது இங்லீஷ் படம். அதனால நம்ம கலாச்சாரத்துக்கு ஒண்ணும் இல்லை.
பாண்டி: யப்பா.. பெரிய ஆளுடா நீ.
கல்யாணம்: நீ பெட்ல தோத்துட்ட. உனக்குதான் நூறு ரூபாய் நஷ்டம்.
பாண்டி: நூறு ரூபாய் நஷ்டமா... ஹா. ஹா.. நூறு ரூபாய் லாபம்.
கல்யாணம்: எப்படி..
நாகு: நீ படத்துக்கு வரமாட்டேன்னு நான் பாண்டி கிட்ட இருநூறு ரூபாய் பெட் கட்டியிருந்தேன். கவுத்திட்டியேடா.
கல்யாணம்: அடப்பாவிகளா.
-------------------------------------------------
(ஜோதி தரிசனம் முடிந்தது)
காட்சி 1:
இடம் : கல்லூரி மாணவர் விடுதி
பாத்திரங்கள்: மாணவர்கள் கல்யாணம், பாண்டி, நாகு, ரெட்டி.
கல்யாணம்: டேய் பாண்டி, நீ நாகு, ரெட்டி மூணு பேருமா எங்கயோ கிளம்பிட்டிருக்க மாதிரி இருக்கு.
பாண்டி: ஆமாடா, நீயும் வர்றியா.
கல்யாணம்: எங்க போறீங்க.
பாண்டி: பரங்கி மலை ஜோதி.
கல்யாணம்: திருவண்ணாமலை தீபம் தெரியும். அது என்ன பரங்கி மலை ஜோதி. பரங்கி மலையில தீபம் ஏத்துவாங்களா என்ன.
நாகு: ம்ம்ம்.. பரங்கிமலையில மெழுகுவத்திதான் ஏத்துவாங்க. ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி கேக்கிறான் பாரு. உனக்கு பரங்கி மலை ஜோதி தெரியாது?
கல்யாணம்: தெரியாதுடா.
பாண்டி: அது ஒரு புனிதத்தலம் உன்னை மாதிரி பக்திமான்கள் ஒரு தடவையாவது அதை விசிட் பண்ணனும்.
கல்யாணம்: அப்படியா.
நாகு: கலாய்க்காத பாண்டி. ஜோதின்றது அந்த மாதிரி படங்களை காட்டற தியேட்டர்.
கல்யாணம்: அந்த மாதிரின்னா..
பாண்டி: ஏய். யப்பா. நீ நல்லவந்தான். ஒத்துக்கறேன். ஓவரா ஆக்டு குடுக்காதடா. நீ பலான படமே பார்த்தது கிடையாது.
கல்யாணம்: ம்கூம். அதெல்லாம் தப்பு.
நாகு: ஏய்.. இவன் ரொம்ப நல்லவண்டா.
பாண்டி: களவும் கற்று மற அப்படின்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. எங்க கூட படத்துக்கு வர்றியாடா.
ரெட்டி: ரா. ரா. மஞ்சி ஃபிலிமு. "கலர்ஸ் ஆஃப் தி லைஃப்". கலர்ஃபுல் ஃபிலிமுரா.
நாகு: ரெட்டி ஏற்கனவே ரெண்டு தடவை பார்த்துட்டான். இது மூணாவது தடவை.
பாண்டி: ரெட்டி.. நீ ஜோதி தியேட்டர்க்கு சீசன் டிக்கட்டே வெச்சிருக்கியாமே.
ரெட்டி: லேதுரா. அந்த அபத்தம்.
பாண்டி: சரி. சரி. நம்பறேன்.. கல்யாணம் நீ வர்றியா இல்லையா.
கல்யாணம்: நான் வரமாட்டேன். இது நம்ம கலாச்சாரத்திற்கே விரோதம்.
பாண்டி: இங்க பார்றா நம்ம கலாச்சார காவலரை. உனக்கு பயம் அதனாலதான் வர மாட்டேங்கிற.
கல்யாணம்: பயமா... எனக்கா அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை.
பாண்டி: அப்ப உனக்கு பயம் இல்லைன்னு ப்ரூவ் பண்ணு.
கல்யாணம்: நான் ஏன் ப்ரூவ் பண்ணனும்.
பாண்டி: ஆம்பிளையா இருந்தா ப்ரூவ் பண்ணு. நூறு ரூபாய் பெட்.
கல்யாணம்: பெட்டெல்லாம் வேண்டாம்.
பாண்டி: அப்ப நீ பயப்படற. தோத்திட்ட. எடு நூறு ரூபாய்.
கல்யாணம்: அதெல்லாம் இல்லை.
பாண்டி: அப்ப வா. தியேட்டருக்கு. பெட்ல ஜெயிச்சினா உனக்கு நூறு ரூபாய்.
கல்யாணம்: (தயங்கியவாறு)... சரி வர்றேன்.
பாண்டி: அது வீரனுக்கு அழகு. உன் கற்பு எல்லாம் போகாது. நான் கியாரண்டி.
(நால்வருமாக கிளம்புகிறார்கள்).
காட்சி 2:
-----------
(படம் பார்த்து முடித்துவிட்டு நான்கு நண்பர்களும் தியேட்டர் வெளியே..)
பாண்டி: கல்யாணம். படம் எப்படிடா இருந்தது.
கல்யாணம்: ம்ம்..
ரெட்டி: ஆக்சுவலி சீன்ஸ் கட். அந்த பாக லேது.
கல்யாணம்: தியேட்டர்ல ஒருத்தர் கால மிதிச்சிட்டேண்டா. அப்புறம் பார்த்தா அது நம்ம லெக்சரர்.
பாண்டி: ஹா.. ஹா..
கல்யாணம்: பார்த்திட்டார்னா தப்பா நினைச்சிக்க மாட்டாரு.
பாண்டி: நாம படம் பார்க்க வந்தோம். அவரு என்ன சாமி கும்பிடவா வந்தாரு. நாம அவரை கண்டுக்க கூடாது. அவரும் நம்மள கண்டுக்க மாட்டாரு. பயப்படாதே.
கல்யாணம்: ம்ம்..
பாண்டி: மந்திரிச்சு விட்ட கோழி மாதிரியே இருக்கியே. ஆமா. இப்ப உன் கலாச்சாராம் என்ன ஆச்சு.
கல்யாணம்: ஆக்சுவலி நாம பார்த்தது இங்லீஷ் படம். அதனால நம்ம கலாச்சாரத்துக்கு ஒண்ணும் இல்லை.
பாண்டி: யப்பா.. பெரிய ஆளுடா நீ.
கல்யாணம்: நீ பெட்ல தோத்துட்ட. உனக்குதான் நூறு ரூபாய் நஷ்டம்.
பாண்டி: நூறு ரூபாய் நஷ்டமா... ஹா. ஹா.. நூறு ரூபாய் லாபம்.
கல்யாணம்: எப்படி..
நாகு: நீ படத்துக்கு வரமாட்டேன்னு நான் பாண்டி கிட்ட இருநூறு ரூபாய் பெட் கட்டியிருந்தேன். கவுத்திட்டியேடா.
கல்யாணம்: அடப்பாவிகளா.
-------------------------------------------------
(ஜோதி தரிசனம் முடிந்தது)
Tuesday, August 28, 2007
டாக்டர் விஜய்.. வாழ்க... வாழ்க...
செய்தி:- சென்னை மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் நடிகர் விஜய்க்கு டாக்டர் பட்டம் வழங்குகிறது. நடிப்புத்திறன், வாழ்வியல் பண்பாடு, சமூக சிந்தனை ஆகியவற்றுக்காக இந்த பட்டம் அவருக்கு வழங்கப்படுகிறது.
------------------
நடிப்புத்திறன்
நடிகர் விஜயின் நடிப்புத்திறனை ஒரு வரியில் சொல்லமுடியாது. இரண்டு வரியில் சொல்லி விடலாம்.
"அண்ணா. ஏனுங்கண்ணா."
தமிழ் சினிமா கண்டெடுத்த மிகச்சிறந்த நடிகர் அவர். முகபாவங்களை வெளிப்படுத்துவதில் அவரைப்போல் மற்றொருவரை காண முடியாது.
அவரது நடிப்புத்திறனை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்பதிலிருந்தே அவர் எத்தனை சிறந்த நடிகர் என்பது தெள்ளென விளங்கும்.
வாழ்வியல் பண்பாடு:
அதிகம் பேசாதவர். பேசத்தெரியாது என்பது காரணமில்லை. அடக்கம்தான் காரணம். இது அவரது வாழ்வியல் பண்பாடு.
படத்திற்கு மூன்றிலிருந்து நான்கு கோடி வரை வாங்கும் அசாதாரண நடிகரான இவர் தமது சம்பாத்தியத்தை நல்ல முறைகளில் முதலீடு செய்யும் வாழ்வியல் நெறியுடையவர்.
இவரது வாழ்வியல் முறை: நடிகருக்கு தேவையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகள் மேற்கொள்கிறார்.
இத்தகு இவரது வாழ்வியல் பண்பாடு தமிழ் சமுதாயத்திற்கே வழிகாட்டியாக உள்ளது என்றால் அது மிகையாகாது.
சமூக சிந்தனை:
இவரது சமூக சிந்தனைபற்றி நாளெல்லாம் சொல்லலாம்.
குறிப்பிட்ட சமூகம் மட்டுமே பயன்படுத்தி வந்த வடுமாங்காய் மற்றும் தயிர்சாதத்தை ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கும் அறிமுகப்படுத்திய இவரது அரும்பணி இங்கு குறிப்பிடத்தக்கது.
தலைசிறந்த சமுதாய நோக்கு உள்ள படங்கள் பலவற்றில் இவர் தொடர்ந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழன் என்ற ஒரு திரைப்படத்தில் இவரை பாராட்டி தபால் தலையே வெளியிடப்பட்டது.
இவரது திரைப்பாடல்கள் கமர்கட், பர்பி என்று தமிழர்கள் மறந்து போன அவர்களது தின்பண்டங்களை அவர்களுக்கு மறு அறிமுகம் செய்தவை.
இவரது திருப்பாச்சி என்ற படத்தின் மூலம் சென்னையின் அனைத்து ரவுடிகளையும் அழித்து சென்னையை அமைதிப்பூங்காவாக்கியவர்.
இவரது சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
இத்தகு சிறந்த நடிப்புத்திறன், சீரிய வாழ்வியல் பண்பாடு, சீர்மிகு சிந்தனைகள் கொண்ட இவர் டாக்டர் பட்டம் பெற்றது அந்த டாக்டர் பட்டத்திற்கே கிடைத்த பெருமையாகும்.
வாழ்க டாக்டர் விஜய்.
வாழ்க அவருக்கு பட்டம் கொடுத்த பல்கலைக்கழகம் மற்றும் ரசிகர்கள்.
வாழ்க ! வாழ்க !
------------------
நடிப்புத்திறன்
நடிகர் விஜயின் நடிப்புத்திறனை ஒரு வரியில் சொல்லமுடியாது. இரண்டு வரியில் சொல்லி விடலாம்.
"அண்ணா. ஏனுங்கண்ணா."
தமிழ் சினிமா கண்டெடுத்த மிகச்சிறந்த நடிகர் அவர். முகபாவங்களை வெளிப்படுத்துவதில் அவரைப்போல் மற்றொருவரை காண முடியாது.
அவரது நடிப்புத்திறனை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்பதிலிருந்தே அவர் எத்தனை சிறந்த நடிகர் என்பது தெள்ளென விளங்கும்.
வாழ்வியல் பண்பாடு:
அதிகம் பேசாதவர். பேசத்தெரியாது என்பது காரணமில்லை. அடக்கம்தான் காரணம். இது அவரது வாழ்வியல் பண்பாடு.
படத்திற்கு மூன்றிலிருந்து நான்கு கோடி வரை வாங்கும் அசாதாரண நடிகரான இவர் தமது சம்பாத்தியத்தை நல்ல முறைகளில் முதலீடு செய்யும் வாழ்வியல் நெறியுடையவர்.
இவரது வாழ்வியல் முறை: நடிகருக்கு தேவையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகள் மேற்கொள்கிறார்.
இத்தகு இவரது வாழ்வியல் பண்பாடு தமிழ் சமுதாயத்திற்கே வழிகாட்டியாக உள்ளது என்றால் அது மிகையாகாது.
சமூக சிந்தனை:
இவரது சமூக சிந்தனைபற்றி நாளெல்லாம் சொல்லலாம்.
குறிப்பிட்ட சமூகம் மட்டுமே பயன்படுத்தி வந்த வடுமாங்காய் மற்றும் தயிர்சாதத்தை ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கும் அறிமுகப்படுத்திய இவரது அரும்பணி இங்கு குறிப்பிடத்தக்கது.
தலைசிறந்த சமுதாய நோக்கு உள்ள படங்கள் பலவற்றில் இவர் தொடர்ந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழன் என்ற ஒரு திரைப்படத்தில் இவரை பாராட்டி தபால் தலையே வெளியிடப்பட்டது.
இவரது திரைப்பாடல்கள் கமர்கட், பர்பி என்று தமிழர்கள் மறந்து போன அவர்களது தின்பண்டங்களை அவர்களுக்கு மறு அறிமுகம் செய்தவை.
இவரது திருப்பாச்சி என்ற படத்தின் மூலம் சென்னையின் அனைத்து ரவுடிகளையும் அழித்து சென்னையை அமைதிப்பூங்காவாக்கியவர்.
இவரது சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
இத்தகு சிறந்த நடிப்புத்திறன், சீரிய வாழ்வியல் பண்பாடு, சீர்மிகு சிந்தனைகள் கொண்ட இவர் டாக்டர் பட்டம் பெற்றது அந்த டாக்டர் பட்டத்திற்கே கிடைத்த பெருமையாகும்.
வாழ்க டாக்டர் விஜய்.
வாழ்க அவருக்கு பட்டம் கொடுத்த பல்கலைக்கழகம் மற்றும் ரசிகர்கள்.
வாழ்க ! வாழ்க !
Subscribe to:
Posts (Atom)
