Monday, August 13, 2007

கஞ்சப் பய கதை..

ஒரு ஊர்ல ஒரு கஞ்சப் பய இருந்தானாம்.

படு கஞ்சன். ஒரு வேளதான் சாப்பிடுவான்.

கண்ணாலம் கட்டிக்கிட்டா செலவுன்னு கல்யாணமே கட்டிக்கல அவன்.

தன்ன விட பெரிய ஒரு கஞ்சன் பக்கத்து ஊர்ல இருக்கான்னு கேள்விப்பட்டான் அவன். அட நம்மள விட கஞ்சனா.... பாத்து கொஞ்சம் டிப்ஸ் வாங்கலாம்னு நினைச்சான்.

கிளம்பி பக்கத்து ஊர்ல அவன் வீட்டுக்கு போய் சேருறப்ப இராத்திரி எட்டு ஆயி இருட்டிருச்சி. அந்த கஞ்சனை பார்த்து ஐயா. நீங்க ரொம்ப கஞ்சம்னு கேள்விப்பட்டேன். உங்க கிட்ட பேசி கொஞ்சம் கஞ்சத்தனத்தை கத்துக்கலாம்னு வந்தேன்னு இவன் சொல்ல..

அதுக்கு அவன்.... பேச்சுதானே காசா... பணமா. உள்ள வா. ஆனா காபி தண்ணி தரமாட்டேன்னு சொல்ல... இவனும் சரின்னு வீட்டுக்குள்ளாற போனாம்.

பேச ஆரம்பிச்சாங்க. வீட்டுக்காரன் எழுந்து விளக்கை அணைச்சான். நாம பேசதான செய்யறோம். விளக்கு எதுக்கு. தேவையில்லாத கரண்டு செலவு பாருங்க அப்படின்னான்.

இவனும் சரிதான்னாம். பேசுனாங்க. பேசுனாங்க. ஒரு மணி நேரம் பேசுனாங்க. இவன் கிளம்புறேன்னாம்.

சரி நான் விளக்க போடுறேன்னு வீட்டுக்காரன் எழுந்தான்.

இவன் இருங்க ஒரு நிமிடம். வேட்டிய கட்டிக்கறேன்னாம்.

வீட்டுக்காரன் என்னது வேட்டிய கட்டலையான்னு கேட்க.... இவன் விளக்குதான் இல்லையே. இருட்டுல வேட்டி எதுக்கு. அப்புறம் அழுக்கு ஆகும். துவைக்கணும் அப்படின்னு செலவு பாருங்க அப்படின்னான்.

பக்கத்து ஊர்க்காரன் ஐயா. நான் கஞ்சன்னா நீங்க உலக மகா கஞ்சன்னு சொல்லி தொபுக்கடீர்னு இவன் கால்ல விழுந்துட்டானாம். நம்ம பய நமுட்டு சிரிப்போட கிளம்பி வந்தானாம்.

-----------------------------------
(எப்பவோ கேட்ட கதை...)
உங்களுக்கு இவனை விட பெரிய கஞ்சன் யாரையாச்சும் தெரிஞ்சா சொல்லுங்களேன்.

--------------------------

7 comments:

said...

ithu pazaya surili rajan padathiyile vantha joke kathai.. :-)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நல்ல தமாஷ்!

நன்றி அரை பிளேடு.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

அனானி... மாந்தோப்புக் குயிலே என்ற படத்தில் சுருளிராஜன் கஞ்சனாக நடித்திருப்பார். இதுபோன்ற காட்சியை பார்த்ததாக நினைவில்லை.

விசிறி வீசினால் வீணாகி விடுமென்று ஒருவரை பிடித்துக் கொள்ள சொல்லி விட்டு காற்றுக்காக உடலை ஆட்டுவார். சரியான காமடி. :)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி மாசிலா :)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

அது மாந்தோப்பு கிளியே



-------------------------------------------------------------------------------------------------------------
said...

----அது மாந்தோப்பு கிளியே----
நன்றி. வெட்டி. :)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

;-))



-------------------------------------------------------------------------------------------------------------