Tuesday, August 21, 2007

நினைவின் நதிக்கரை நீங்கி....



நீண்டு கொண்டிருக்கிறது என் உறக்கம்
விழித்தெழுந்து ஆவதென்ன...
தொடர்ந்து கொண்டிருக்கிறது என் கனவு...
கனவுகளை கலைக்க விரும்பாமல் நான்.
கண்விழித்த ஒருகணத்தில் பாய்ந்த ஒளிவெள்ளம்
கனவுகளை கவர்ந்து செல்ல முயல..
கண்களை இறுக்கி கனவுகளை தேக்கிக்கொண்டேன்.
நினைவின் நதிக்கரை நீங்கி
கனவின் காட்சிகளின் நீட்சியில் நிம்மதி பெறுகிறேன்.
கவிழ்ந்து கனவோடையில்
நீந்தி திளைக்கின்றேன் நான்.
நீடுதுயில் நீக்கவந்தவன் நீயெனில்
நீங்கிச் செல்.
என்னை என்கனவுகளில் களிக்கவிடு.
இதோ மீண்டும் கனவினில் மூழ்கிவிட்டேன்.

4 comments:

said...

ம்... கொடுத்து வைத்தவர்கள் நீங்க :)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

இந்த கவுஜையெல்லாம் எய்தி குட்துதான் அல்லாரையும் ஏத்தி விட்டுட்டீங்களா தல?? :-P



-------------------------------------------------------------------------------------------------------------
said...

கோபிநாத்...

//கொடுத்து வைத்தவர்கள் நீங்க//

கனவோடையில் நீந்த கொடுத்தெல்லாம் வைக்க வேண்டாம். தூங்கினால் போதும் :))



-------------------------------------------------------------------------------------------------------------
said...

சி.வி.ஆர்.

//இந்த கவுஜையெல்லாம் எய்தி குட்துதான் அல்லாரையும் ஏத்தி விட்டுட்டீங்களா//

இந்த கவிஜ யாரையும் ஏத்தி விட இல்லை. தூங்க வைக்க... கனவு காண வைக்க :)



-------------------------------------------------------------------------------------------------------------