பின்நவீனத்துவம் பிரியலை.. பிரியலைன்னு நெறைய பேரு சவுண்டு உடறாங்க.
சில பேருக்கு டவுசர் கிழியுது. சில பேரு பாயை பிரண்டறாங்க.
பின் நவீனத்துவத்துவ கவிதைய பார்த்து பின்னங்கால் பிடறிபட ஓட வேண்டிய தேவையில்லை.
அத எப்படி ஸ்ட்ரெயிட்டா ஃபேஸ் பண்றதுன்றதுக்கு எதோ நம்மால முடிஞ்ச டிப்ஸ்.
1. பேசிக் பாயிண்ட்:பின்நவீனத்துவம் புரியணும் அப்படின்னு நீங்க நினைச்சீங்கன்னா. நீங்க பேசிக் பாயிண்ட்லயே தப்பு பண்ணறீங்க அப்படின்னு அர்த்தம்.
பிரியாம இருக்கறதுதான் பின்நவீனம். பத்து தடவை என்ன பத்தாயிரம் தடவை படிச்சாலும் எந்த கவிதை புரியலையோ அது தான் பின் நவீன கவிதை.
இன்னும் சொல்லப் போனா ஒரு நல்ல ஸ்டாண்டர்டான பின் நவீன கவிதைன்னா அதை எழுதணவங்களுக்கே அது புரிய கூடாது.
ஏன்னா ஒரு உண்மையான கவிதை அப்படின்றது கவிஞனால எழுதப்படுவதில்லை. எந்த கவிதை கவிஞனை எழுதி போகுதோ அதுதான் கவிதை.
அதனால புரிஞ்சிக்கணும்ன்ற ஐடியாவை விடுங்க.
2. கட்டுடைத்தல்:
பின்நவீன கவிதைகள் கட்டுடைக்க வந்த கருவிகள்.
கட்டு்ன்னா கீரைக்கட்டு, விறகுகட்டு அப்படின்னு நினைச்சிடாதிங்க.
கட்டுன்றது இந்த சமுதாயத்தில இருக்கிற அடிமை விலங்குகள்.
சமூகத்தில் வியாதியாய் வியாபித்து விரவியிருக்கும் விலங்குகளை விலக்கியெறிந்து, விழிப்புணர்வை விடுதலையை விழையத்தருதலை கட்டுடைத்தல் என்கிறோம்.
இத்தகு கவிதைகளின் ஆற்றல் அளப்பரியது. ஹார்ஸ் பவரில் அளக்கப்படுவது.
3. கவிதையின் பின் நவீனத்துவ கூறுகள்.
ஒரு கவிதையை பின்நவீனத்துவ கவிதை என அடையாளம் காட்டக் கூடியவற்றைத்தான் பின் நவீனத்துக் கூறுகள் என்கிறோம்.
(அ) ஒலிக் கூறுகள்:ஒலி மூலமாக கவிதையின் பின்நவீனத்துவத்தை உணர்த்துதல்.
(எடுத்துக்காட்டு)
ஆஆஆஆஆஆஆஆஆஆஆ......
ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ.....
ஊஊஊஊஊஊஊஊஊஊ...
ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ...
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ...
(ஆ) வினைக்குறிப்புகள்:
அளவுக்கு அதிகமாக வினைச்சொற்களை பயன்படுத்துதல்.
(எ.கா) அதிர்ந்து உலாவி உழாவி உதிர்ந்து உரமான உன் நினைவுகள்.
திணறி திரிந்து திசைமாறி தடம்மாறி தவித்து தத்தளிக்கும் நான்.
(இ) அருஞ்சொல் கூறுகள்.
முன்னே எப்போதும் கேட்டோ படித்தோ இராத வார்த்ததைகளை பயன்படுத்துதல்.
இப்படிப்பட்ட வார்த்தைகள் கிடைக்காவிட்டால் இருக்கும் வார்ததைகளை புரியாதது போல் எழுதுதல்.
(எ.கா) நிட்சிந்தையிலமென, உள்ளுறைபுயம்,
(ஈ) பிறமொழிக்கூறுகள்:பிறமொழிச்சொல்லை எடுத்தாளுதல்...
(எ.கா) அமானுஷ்யம், விஸ்தாரம், கம்பீரம், அசுவம், சாசுவதம்
அப்பாடா.... இப்படி இருக்கற மேல இருக்கற எல்லா கூறுகளையும்... கூறுகட்டி அடுக்கி நிறுத்தி வர்றதுதான் பின் நவீனத்துவக் கவிதை.
பின்நவீன கவிதையை எதிர்க்கொள்ள இரண்டே வழிதான் இருக்கு.
ஒண்ணு: கவிதைய படிக்காமலேயே நல்ல கவிதை... எப்படி உங்களால மட்டும் இப்படி முடியுதுன்னு சொல்லி தப்பிச்சிடறது.
இரண்டு: கவி்தைய படிக்கணும்னு முடிவு எடுத்துட்டா டிரவுசர் கிழியாம இருக்கறதுக்காக வேட்டி கட்டிக்கிட்டு படிக்கிறது.
அம்புட்டுதான்.
Friday, August 17, 2007
Thursday, August 16, 2007
டாக்டர்..... என்னை காப்பாத்துங்க......
ஆறு வேகமாக ஓடிக் கொண்டிருந்தது.
அமைதியான மதிய நேரம். அந்த ஆற்றை கடப்பதற்கான கயிற்று பாலம் சற்று பழையதாக இருந்தது.
நடக்கத் தொடங்கினேன் நான் இயற்கையை இரசித்த படி.
பாலத்தின் மையத்தை அடைந்து விட்டேன். திடீரென ஆற்றில் வெள்ளம்.
கயிற்று பாலத்தின் எதிர் நுனி கட்டியிருந்த கம்பம் உடைந்து விழுவதாக தோன்றியது.
ஓட துவங்கினேன். இல்லை.
பாலம் அறுந்து விழ துவங்கியது.
தலை குப்புற கீழே விழுந்து கொண்டிருந்தேன். தண்ணீரை நோக்கி....
"அம்மாஆஆஆஆஆஆஆஆஆஆ'....
கத்தியது நானில்லை.
....
சுரேஷ் என் அறை நண்பன்.
"அடப்பாவி... என் கை போச்சு"..
"என்னடா ஆச்சு".
"கட்டில்ல இருந்து எம்மேல விழுந்துட்டு கேள்வி வேற கேட்கிறியா ??".
"சாரிடா. பயங்கரமான கனவு".
இப்படித்தான் அது ஆரம்பித்தது.
---------------------------
காட்டில் நடந்து கொண்டிருந்தேன். அமேசான் காடு போலிருந்தது. உயரமான மரங்கள்.
மரத்தின் உச்சியிலிருந்து ஏதோ ஒன்று கீழே விழுந்து கொண்டிருந்தது.
நேரே வந்து என் மீது வந்து விழுந்தது.
அது....
அனகோன்டா !!!!!
"போ..." கையை வீசி தள்ளினேன்.
"டிங்... தட.. தட.. தட.. டிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்...."
---
கண் திறந்து பார்த்தால்.... காபி டபரா ஒரு புறமும்... காபி டம்ளர் ஒரு புறமுமாக விழுந்து கிடந்தது.
தரை முழுக்க காபி....
அதிர்ச்சி கலையாமல் அம்மா. அவள் கையிலிருந்த என் பெட் காபியை தட்டி விட்டுருக்கிறேன்....
"என்னடா ஆச்சு..."...
"ஒண்ணுமில்லம்மா ஒரு கனவு"....
விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த இடத்திலும் அது தொடர்ந்தது.
-----------------------
நான் குதிரையில்......
எதிரே மிகப்பெரிய கோட்டை..
குதிரையை விட்டு இறங்கி நடக்கிறேன்.
என்ன இது மலர்ப்பாதை...
யாரிந்த கன்னிகள் இருபுறமும் மலர்த்தூவிய படி....
(வர்ணனைகள் சென்சார் செய்யபட்டுவிட்டது).... சொர்க்கம்.
"அரசே உங்கள் பூப்பாதங்களை இந்த தங்க தாம்பாளத்தில் வையுங்கள்."
எனது வலது காலை மெல்ல தூக்கி அந்த தாம்பாளத்தில் வைக்....
யாரது. என்னை பின்னிருந்து இழுப்பது.
...
"யோவ். அறிவிருக்கா... ஓடுற டிரயின்ல இருந்து வெளிய காலை எடுத்து வைக்க இருந்தியே..."
என்ன ஆச்சு... நான் எங்க இருக்கேன்.
இது டிரெயின்... என்னை இழுத்த அது டி.டி.ஆர்... சென்னைக்கு டிரெயினில் ஊரிலிருந்து திரும்பி கொண்டிருந்தேன்...
இன்னும் கொஞ்சம் இருந்தால் அடுத்த அடி சொர்க்கத்தில்தான் எடுத்து வைத்திருப்பேன்
----------------
"இதுதான் டாக்டர் நடந்தது...... என்னை காப்பாத்துங்க".
"இருங்க பயப்பட ஒண்ணுமில்லை...இது ஒரு இல்லுமினேஷன். எத்தனை நாளா உங்களுக்கு இந்த மாதிரி கனவு வருது."
"ஒரு மூணு மாசமா டாக்டர். அதுக்கு முந்தி நான் இப்படி இருந்ததே இல்லை.".
"ஐ சீ.... நீங்க பேசிக்கலா எதனாலயோ டிஸ்டர்ப்டா இருக்கீங்க...."
"அப்படி ஒண்ணுமில்லையே டாக்டர். நாலு வருஷமா சாஃப்ட்வேர் இஞ்சினியரா இருக்கேன். லைஃப்ல டிஸ்டர்ப்டா ஆகறமாதிரி எதுவுமில்லையே."
"இந்த மூணு மாசத்துல எதோ ஒண்ணு உங்களை பாதிச்சிருக்கு. வீடு எதாவது மாத்தினீங்களா."
"இல்லை டாக்டர்..."
"இந்த மூணு மாசத்துல நீங்க வழக்கமா செய்யற சில விஷயங்கள்ல இருந்து மாறி வித்தியாசமா எதாவது செய்யறீங்களா."
"அப்படி எதுவுமில்லை டாக்டர்... அதே ஆபீஸ். அதே வேலை. அதே ஃபிரண்ட்ஸ்...."
"எதாவது வித்தியாசமான பழக்கங்கள்...."
"இல்லை...."
"ஏதாவது ஒரு விஷயத்துக்கு நிறைய நேரம் செலவழிக்கிறீங்க.. இல்லை யோசிக்கிறீங்க அப்படி எதாவது..."
"எஸ். டாக்டர்..... என் ஃபிரண்டு ஒருத்தன் எனக்கு தமிழ் வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தினான்"
"வலைப்பதிவு ?".
"எஸ். டாக்டர். பிளாக்கிங். ஒரு நாளைக்கு மூணுல இருந்து நாலு மணி நேரம் அதுல ஸ்பெண்ட் பண்றேன்."
"ஐ காட் இட்".
"டாக்டர்.."
"நீங்க இதுல ஓவரா இன்வால்வ் ஆனதுதான் உங்க பிரச்சனைகளுக்கு காரணம். கொஞ்ச நாளைக்கு பிளாக்கிங்க விடுங்க".
"சரி. டாக்டர்".
இப்போதெல்லாம் அது தொடர்வதில்லை.
---------------------------------
பி.கு: (இது கற்பனைக் கதை. இதற்கும் நான் சில மாதங்களாக காணாமல் போனதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - அரைபிளேடு)
அமைதியான மதிய நேரம். அந்த ஆற்றை கடப்பதற்கான கயிற்று பாலம் சற்று பழையதாக இருந்தது.
நடக்கத் தொடங்கினேன் நான் இயற்கையை இரசித்த படி.
பாலத்தின் மையத்தை அடைந்து விட்டேன். திடீரென ஆற்றில் வெள்ளம்.
கயிற்று பாலத்தின் எதிர் நுனி கட்டியிருந்த கம்பம் உடைந்து விழுவதாக தோன்றியது.
ஓட துவங்கினேன். இல்லை.
பாலம் அறுந்து விழ துவங்கியது.
தலை குப்புற கீழே விழுந்து கொண்டிருந்தேன். தண்ணீரை நோக்கி....
"அம்மாஆஆஆஆஆஆஆஆஆஆ'....
கத்தியது நானில்லை.
....
சுரேஷ் என் அறை நண்பன்.
"அடப்பாவி... என் கை போச்சு"..
"என்னடா ஆச்சு".
"கட்டில்ல இருந்து எம்மேல விழுந்துட்டு கேள்வி வேற கேட்கிறியா ??".
"சாரிடா. பயங்கரமான கனவு".
இப்படித்தான் அது ஆரம்பித்தது.
---------------------------
காட்டில் நடந்து கொண்டிருந்தேன். அமேசான் காடு போலிருந்தது. உயரமான மரங்கள்.
மரத்தின் உச்சியிலிருந்து ஏதோ ஒன்று கீழே விழுந்து கொண்டிருந்தது.
நேரே வந்து என் மீது வந்து விழுந்தது.
அது....
அனகோன்டா !!!!!
"போ..." கையை வீசி தள்ளினேன்.
"டிங்... தட.. தட.. தட.. டிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்...."
---
கண் திறந்து பார்த்தால்.... காபி டபரா ஒரு புறமும்... காபி டம்ளர் ஒரு புறமுமாக விழுந்து கிடந்தது.
தரை முழுக்க காபி....
அதிர்ச்சி கலையாமல் அம்மா. அவள் கையிலிருந்த என் பெட் காபியை தட்டி விட்டுருக்கிறேன்....
"என்னடா ஆச்சு..."...
"ஒண்ணுமில்லம்மா ஒரு கனவு"....
விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த இடத்திலும் அது தொடர்ந்தது.
-----------------------
நான் குதிரையில்......
எதிரே மிகப்பெரிய கோட்டை..
குதிரையை விட்டு இறங்கி நடக்கிறேன்.
என்ன இது மலர்ப்பாதை...
யாரிந்த கன்னிகள் இருபுறமும் மலர்த்தூவிய படி....
(வர்ணனைகள் சென்சார் செய்யபட்டுவிட்டது).... சொர்க்கம்.
"அரசே உங்கள் பூப்பாதங்களை இந்த தங்க தாம்பாளத்தில் வையுங்கள்."
எனது வலது காலை மெல்ல தூக்கி அந்த தாம்பாளத்தில் வைக்....
யாரது. என்னை பின்னிருந்து இழுப்பது.
...
"யோவ். அறிவிருக்கா... ஓடுற டிரயின்ல இருந்து வெளிய காலை எடுத்து வைக்க இருந்தியே..."
என்ன ஆச்சு... நான் எங்க இருக்கேன்.
இது டிரெயின்... என்னை இழுத்த அது டி.டி.ஆர்... சென்னைக்கு டிரெயினில் ஊரிலிருந்து திரும்பி கொண்டிருந்தேன்...
இன்னும் கொஞ்சம் இருந்தால் அடுத்த அடி சொர்க்கத்தில்தான் எடுத்து வைத்திருப்பேன்
----------------
"இதுதான் டாக்டர் நடந்தது...... என்னை காப்பாத்துங்க".
"இருங்க பயப்பட ஒண்ணுமில்லை...இது ஒரு இல்லுமினேஷன். எத்தனை நாளா உங்களுக்கு இந்த மாதிரி கனவு வருது."
"ஒரு மூணு மாசமா டாக்டர். அதுக்கு முந்தி நான் இப்படி இருந்ததே இல்லை.".
"ஐ சீ.... நீங்க பேசிக்கலா எதனாலயோ டிஸ்டர்ப்டா இருக்கீங்க...."
"அப்படி ஒண்ணுமில்லையே டாக்டர். நாலு வருஷமா சாஃப்ட்வேர் இஞ்சினியரா இருக்கேன். லைஃப்ல டிஸ்டர்ப்டா ஆகறமாதிரி எதுவுமில்லையே."
"இந்த மூணு மாசத்துல எதோ ஒண்ணு உங்களை பாதிச்சிருக்கு. வீடு எதாவது மாத்தினீங்களா."
"இல்லை டாக்டர்..."
"இந்த மூணு மாசத்துல நீங்க வழக்கமா செய்யற சில விஷயங்கள்ல இருந்து மாறி வித்தியாசமா எதாவது செய்யறீங்களா."
"அப்படி எதுவுமில்லை டாக்டர்... அதே ஆபீஸ். அதே வேலை. அதே ஃபிரண்ட்ஸ்...."
"எதாவது வித்தியாசமான பழக்கங்கள்...."
"இல்லை...."
"ஏதாவது ஒரு விஷயத்துக்கு நிறைய நேரம் செலவழிக்கிறீங்க.. இல்லை யோசிக்கிறீங்க அப்படி எதாவது..."
"எஸ். டாக்டர்..... என் ஃபிரண்டு ஒருத்தன் எனக்கு தமிழ் வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தினான்"
"வலைப்பதிவு ?".
"எஸ். டாக்டர். பிளாக்கிங். ஒரு நாளைக்கு மூணுல இருந்து நாலு மணி நேரம் அதுல ஸ்பெண்ட் பண்றேன்."
"ஐ காட் இட்".
"டாக்டர்.."
"நீங்க இதுல ஓவரா இன்வால்வ் ஆனதுதான் உங்க பிரச்சனைகளுக்கு காரணம். கொஞ்ச நாளைக்கு பிளாக்கிங்க விடுங்க".
"சரி. டாக்டர்".
இப்போதெல்லாம் அது தொடர்வதில்லை.
---------------------------------
பி.கு: (இது கற்பனைக் கதை. இதற்கும் நான் சில மாதங்களாக காணாமல் போனதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - அரைபிளேடு)
Tuesday, August 14, 2007
கொலையின் விலை:
1.
"பஸ்ல வேற யாராவது டிக்கட் எடுக்கணுமா."
காயத்ரியை கண்டக்டரின் குரல் எழுப்பியது.
நல்ல கனவு. கனவில் சிவா. அவர்களுடைய நாளைய நல்வாழ்வு கனவாக விரிகையில் கண்டக்டரின் குரல் அதை கலைத்திருந்தது.
சிவா சொன்னது போல் தாம்பரத்தில் காத்திருப்பான். சென்னையில் ஏதேனும் ஒரு கோவிலில் கல்யாணம் செய்து கொள்ளலாம்.
2.
அவன் ஸ்கூட்டரை ஸ்டாண்டினான்.
வயது இருபத்தைந்து. இந்திப்பட கதாநாயகன் போல் இருந்தான்.
ஆளரவமற்ற அந்த பங்களாவை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான்.
"இங்கதான இருந்தா. எங்க போனா ?".
3.
"வேகமா ஓட்டுடா. ". சான்ட்ரோ பறந்து கொண்டு இருந்தது.
"சும்மா இருடா. எனக்கே கை கால் எல்லாம் நடுங்குது. வண்டியில ஒரு பிணம் வேற இருக்குது." .
"பயப்படாதடா. அந்த பிணத்தை இதே ஈ.சி. ஆர். ரோட்டுல இருக்கிற பாழும் கிணத்துல தள்ளிடலாம். "
"நம்ப மேல ஒரு பிரச்சனையும் வராது இல்லை."
"ஒரு பிரச்சனையும் இல்லை. இந்த பாடியை யாருக்கும் தெரியாம டிஸ்போஸ் பண்ணிடுவோம்"
"லாரி. பார்த்துடா."
4.
"வண்டியில மூணு பேர் வந்திருக்காங்க சார். இரண்டு பையனுங்க ஒரு பொண்ணு. பையனுங்க குடிச்சிருக்கானுங்க. டிரங்க் அண்டு டிரைவ். "
5.
"சார். என்னோட காயத்ரியை எப்படியாவது கண்டு பிடிச்சு கொடுத்துடுங்க சார்."
"சிவா. முழு தகவலும் சொல்லுங்க".
"காயத்ரிக்கும் எனக்கும் நேத்துதான் வட பழனி கோயில்ல கல்யாணம் ஆச்சு சார். லவ் மேரேஜ். அவ எனக்காக அவங்க வீட்டை விட்டு வந்துட்டா. திருட்டுத்தனமாத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். பைக்ல மகாபலிபுரம் போலாம்னு ஓல்டு மகாபலிபுரம் ரோட்ல போயிட்டிருந்தோம். சோழிங்க நல்லூர் தாண்டி வண்டி கிளட்ச் ஒயர் அறுந்துட்டது. அங்கயே ஒரு பங்களா காம்பவுண்டு பக்கம் மர நிழல்ல அவளை நிக்க சொல்லிட்டுநான் வண்டியை தள்ளிக்கிட்டு மெக்கானிக் ஷாப் வரைக்கும் போய் சரி பண்ணிக்கிட்டு வந்தா காயத்ரியை காணலை சார்."
6.
"ஆமா சார். நீங்க சொல்லுற மாதிரி அந்த சிவப்பு சுடிதார் போட்ட பொண்ணு இங்க தான் ரோட்டு பக்கத்துலயே நின்னுட்டு இருந்தது சார்.
ஒரு சிவப்பு சாண்ட்ரோ கார் தாறுமாறா வந்து அந்த பொண்ண இடிச்சிருச்சி.
நான் தூரத்துல இருந்து ஓடி வர்றதுக்குள்ள அந்த பொண்ண கார்ல இருந்த இரண்டு பேருமா சேர்ந்து பின் சீட்ல போட்டுக்னு கிளம்பிட்டாங்க. சார்".
இளநீர் கடைக்காரர் சொல்லிக்கொண்டிருந்தார்.
7. "சாரி. சிவா. உங்க காயத்ரியை அவங்க கார்ல இடிச்சதுல காயத்ரி அந்த இடத்துலேயே இறந்திருக்காங்க.
பாடியை யாருக்கும் தெரியாம டிஸ்போஸ் பண்ணிடலாம்ன்ற மோட்டிவோட அவங்க மகாபலிபுரம் பக்கமா பறந்திருக்காங்க.
ஆனா லாரில மோதி அந்த இரண்டு பசங்களும் கூட.......... சாரி...".
சிவா தாங்க முடியாதவனாய் அழுது கொண்டிருந்தான்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"பஸ்ல வேற யாராவது டிக்கட் எடுக்கணுமா."
காயத்ரியை கண்டக்டரின் குரல் எழுப்பியது.
நல்ல கனவு. கனவில் சிவா. அவர்களுடைய நாளைய நல்வாழ்வு கனவாக விரிகையில் கண்டக்டரின் குரல் அதை கலைத்திருந்தது.
சிவா சொன்னது போல் தாம்பரத்தில் காத்திருப்பான். சென்னையில் ஏதேனும் ஒரு கோவிலில் கல்யாணம் செய்து கொள்ளலாம்.
2.
அவன் ஸ்கூட்டரை ஸ்டாண்டினான்.
வயது இருபத்தைந்து. இந்திப்பட கதாநாயகன் போல் இருந்தான்.
ஆளரவமற்ற அந்த பங்களாவை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான்.
"இங்கதான இருந்தா. எங்க போனா ?".
3.
"வேகமா ஓட்டுடா. ". சான்ட்ரோ பறந்து கொண்டு இருந்தது.
"சும்மா இருடா. எனக்கே கை கால் எல்லாம் நடுங்குது. வண்டியில ஒரு பிணம் வேற இருக்குது." .
"பயப்படாதடா. அந்த பிணத்தை இதே ஈ.சி. ஆர். ரோட்டுல இருக்கிற பாழும் கிணத்துல தள்ளிடலாம். "
"நம்ப மேல ஒரு பிரச்சனையும் வராது இல்லை."
"ஒரு பிரச்சனையும் இல்லை. இந்த பாடியை யாருக்கும் தெரியாம டிஸ்போஸ் பண்ணிடுவோம்"
"லாரி. பார்த்துடா."
4.
"வண்டியில மூணு பேர் வந்திருக்காங்க சார். இரண்டு பையனுங்க ஒரு பொண்ணு. பையனுங்க குடிச்சிருக்கானுங்க. டிரங்க் அண்டு டிரைவ். "
5.
"சார். என்னோட காயத்ரியை எப்படியாவது கண்டு பிடிச்சு கொடுத்துடுங்க சார்."
"சிவா. முழு தகவலும் சொல்லுங்க".
"காயத்ரிக்கும் எனக்கும் நேத்துதான் வட பழனி கோயில்ல கல்யாணம் ஆச்சு சார். லவ் மேரேஜ். அவ எனக்காக அவங்க வீட்டை விட்டு வந்துட்டா. திருட்டுத்தனமாத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். பைக்ல மகாபலிபுரம் போலாம்னு ஓல்டு மகாபலிபுரம் ரோட்ல போயிட்டிருந்தோம். சோழிங்க நல்லூர் தாண்டி வண்டி கிளட்ச் ஒயர் அறுந்துட்டது. அங்கயே ஒரு பங்களா காம்பவுண்டு பக்கம் மர நிழல்ல அவளை நிக்க சொல்லிட்டுநான் வண்டியை தள்ளிக்கிட்டு மெக்கானிக் ஷாப் வரைக்கும் போய் சரி பண்ணிக்கிட்டு வந்தா காயத்ரியை காணலை சார்."
6.
"ஆமா சார். நீங்க சொல்லுற மாதிரி அந்த சிவப்பு சுடிதார் போட்ட பொண்ணு இங்க தான் ரோட்டு பக்கத்துலயே நின்னுட்டு இருந்தது சார்.
ஒரு சிவப்பு சாண்ட்ரோ கார் தாறுமாறா வந்து அந்த பொண்ண இடிச்சிருச்சி.
நான் தூரத்துல இருந்து ஓடி வர்றதுக்குள்ள அந்த பொண்ண கார்ல இருந்த இரண்டு பேருமா சேர்ந்து பின் சீட்ல போட்டுக்னு கிளம்பிட்டாங்க. சார்".
இளநீர் கடைக்காரர் சொல்லிக்கொண்டிருந்தார்.
7. "சாரி. சிவா. உங்க காயத்ரியை அவங்க கார்ல இடிச்சதுல காயத்ரி அந்த இடத்துலேயே இறந்திருக்காங்க.
பாடியை யாருக்கும் தெரியாம டிஸ்போஸ் பண்ணிடலாம்ன்ற மோட்டிவோட அவங்க மகாபலிபுரம் பக்கமா பறந்திருக்காங்க.
ஆனா லாரில மோதி அந்த இரண்டு பசங்களும் கூட.......... சாரி...".
சிவா தாங்க முடியாதவனாய் அழுது கொண்டிருந்தான்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Subscribe to:
Posts (Atom)
