Tuesday, August 21, 2007

அகோ கேளும் பிள்ளாய் - வியாசரின் மசாலா கதை.

"வியாசரே. ஒரு சூப்பர் கதை வேணும்"
"எழுதிடலாம்".
"இது வரைக்கும் இப்படி ஒரு கதை வந்ததே இல்லை அப்படின்ற மாதிரி இருக்கணும். கதையில மசாலா, வயலென்ஸ், செண்டிமெண்ட், கவர்ச்சி எல்லாமே தூக்கலா இருக்கணும்."
"அவ்வளவுதான. கதைய கேளுங்க."

---------------------

சந்தனு ராஜா கங்கைக்கு போனார். ஒரு அழகான பொண்ணை பார்த்தார்.
"என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா" வழிந்தார்.
"நான் ஃப்ரீ டைப். என்ன நீங்க கொஸ்டின் எதுவும் பண்ணமாட்டீங்கன்னாதான் எனக்கு ஓக்கே".
ராஜா சான்சை மிஸ் பண்ண விரும்பவில்லை. "சரி. அப்படியே."

ஒண்ணு இல்ல ஏழு குழந்தைங்க பிறந்து எல்லாவற்றையும் கங்கையில தூக்கி போட்டு அந்த பெண் கொல்ல எட்டாவது குழந்தைய தூக்கி போடறப்ப ராஜா அப்ஜெக்ட் பண்ணார்.
"ஆக்சுவலி நான் கங்கா. என்னோட ஃப்ரீடம்ல நீங்க குறுக்கிட்டிட்டீங்க. இந்தாங்க உங்க குழுந்தை". கங்கை போயேவிட்டாள்.
குழந்தை பீஷ்மன் பெரியவனானான்.

சேம் கங்கா ரிவர். சேம் ராஜா. இப்ப வேற பொண்ணு. சத்யவதி.
"என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா" மீண்டும் வழிந்தார்.
"ஓ. ஓக்கே. ஆனா என்னோட குழந்தைங்கதான் நாளைக்கு ராஜாவாவணும். உங்க பெரிய பையன் கிடையாது. இந்த கண்டிஷன் உங்களுக்கு ஓக்கேன்னா எனக்கு ஓக்கே."
அகெய்ன் கண்டிசன். ராஜா சோகத்தோடு திரும்பினார்.

அப்பாவுக்காக பிள்ளை பீஷ்மர் கல்யாணமே செய்யாமல் விட்டு கொடுக்க.. அப்பாவுக்கு கல்யாணம் நடக்க... இரண்டு பிள்ளை பிறக்க... அப்பாவும் ஒரு பிள்ளையும் போய் சேர...

பீஷ்மர் தம்பிக்கு கல்யாணம் செய்ய மூணு பொண்ணுங்கள கடத்தறாரு. அம்பா அம்பிகா அம்பாலிகா.
அம்பாவை லவ் ஃபெயிலியர்னு சொல்லி டீல்ல விட்டுட்டு தம்பி மத்த இரண்டு பொண்ணுங்களையும் கல்யாணம் பண்ண.....
கொஞ்ச நாளிலே தம்பி அல்பாயுசுல போக... அடுத்த வாரிசு. பிக் கொஸ்டின்... ????

சத்யவதி பீஷ்மர் கிட்ட சொன்னாங்க.
"மகனே. கல்யாணம் ஆகுறதுக்கு மின்னாடி பராசரரும் நானும் ஒரு போட்ல தனியாயிருக்கப்ப அவர் எனக்கு ஒரு குழந்தையை (!!) கொடுத்தாரு. அதுதான் வியாசன்.
அவனை கூட்டி வந்து அம்பிகாவுக்கும் அம்பாலிகாவுக்கும் குழந்தை கொடுக்க சொல்லலாம். தீர்ந்தது வாரிசுப் பிரச்சனை."

வியாசர் வந்தார். கொஞ்சம் பார்க்க அசிங்கமா இருந்தாருன்னு அம்பிகா கண்ணை மூடிக்க கண்ணில்லாத திருதராஸ்டிரனை கொழந்தையா கொடுத்தாரு.

அவரை பார்த்து பயத்துல வெளுத்துப்போன அம்பாலிகாவுக்கு வெளுத்துப்போன பாண்டுவை குழந்தையா கொடுத்தாரு.

"மகனே. இரண்டு கொழந்தையிலும் டிஃபக்ட் இருக்கு. அம்பிகாவுக்கு இன்னொரு குழந்தை"

அம்பிகா தனக்கு பதிலா வேலைக்காரிய அனுப்ப வேலைக்காரிக்கு விதுரனை குழந்தையா கொடுத்தாரு வியாசர்.

"அம்மா. அவ்வளவுதான். இதுக்கு மேல என்ன தப்பு பண்ண சொல்லாத" வியாசர் கிளம்பி போயிட்டார்.
கிடைச்ச வாரிசுங்கள பீஷ்மர் பராமரிச்சு வளர்க்க ஆரம்பிச்சாரு.

திருதராஷ்டிரனை காந்தாரி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.

பாண்டு குந்தி, மாதரின்னு இரண்டு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.

பாண்டு காட்டுக்கு வேட்டைக்கு போனார். அங்க மேடிங் பண்ணிக்கிட்டிருந்த மான்கள் மேல அம்படிக்க ஆக்சுவலா மானா மாறி ஏதோ டிஃப்ரண்டா டிரை பண்ணிக்கிட்டிருந்த முனிவருக்கு கோபம் வந்து..
"அந்த மாதிரி எண்ணத்தோட நீ உன்னோட மனைவியை டச் பண்ணினா அவுட்" அப்படின்னு சாபம் கொடுத்துட்டாரு.

இனி எனக்கு பிள்ளை குட்டியே பிறக்காதா அப்படின்னு சோகமா இருந்த பாண்டு கிட்ட குந்தி ஒரு பிளாஷ் பேக் சொன்னாங்க.

---

குந்தியோட கவனிப்புல மகிழ்ந்த துர்வாசர் குந்திக்கு ஒரு மந்திரம் சொல்றாரு. அந்த மந்திரத்தை சொல்லி எந்த கடவுளை கூப்பிடறமோ அந்த கடவுள் வந்து ஒரு குழந்தைய கொடுத்துட்டு போவாரு.

குந்தி அதை டெஸ்ட் பண்ண சூரியனை கூப்பிடறாங்க. சூரியன் வந்து ஒரு குழந்தைய கொடுத்துடறாரு.
"அச்சச்சோ எனக்கு கல்யாணமே ஆகலையே. குழந்தைய கொடுத்துட்டீங்களே.".
"குழந்தை பெற்றாலும் நீ கன்னியே." அப்படின்னு சூரியன் சொல்லிட்டு போயிடறாரு.
கன்னி குந்தி குழந்தை கர்ணனை ஆத்தோட போட்டுடறாங்க.
----

பிளாஷ்பேக்கல குழந்தை பிறந்து கதைய மறச்சிட்டு வரம்கிடைச்ச கதைய மட்டும் பாண்டு கிட்ட குந்தி சொல்ல சந்தோஷமான பாண்டு மந்திரம் சொல்லி குழந்தை வர வைக்க சொல்றாரு.
குந்தி மந்திரம் சொல்றாங்க.
தர்மதேவனான எமன் வந்து குழந்தை கொடுக்கறாரு. யுதிஷ்டிரன்.
வாயு வந்து குழந்தை கொடுக்கறாரு. பீமன்.
இந்திரன் வந்து குழந்தை கொடுக்கறாரு. அர்ச்சுனன்.
"அக்கா. எனக்கும் குழந்தை" மாதரி கேட்க மாதரிக்கு மந்திரம் சொல்றாங்க குந்தி.
மாதரி அசுவினி தேவர்களை கூப்பிட நகுல சகாதேவர்கள் கிடைக்கிறாங்க.

இதே டைம்ல மண்பானையில பிறக்கறாங்க துரியோதன், துச்சாதனன் உள்ளிட்ட நூறு கெளரவர்கள்.

பாண்டு சாபத்தை மறந்து மாதரியை அந்த மாதிரி எண்ணத்தோட டச் பண்ண செத்து போறாரு. கூடவே மாதரியும்.

----

எல்லா குழந்தைகளும் வளருது. துரோணாச்சாரியார் கிட்ட சண்டை படிக்குது.

பெரிதானதும் யுதிஷ்டிரன ராஜாவாக்குறாங்க. துரியோதனன் சதி பண்ண அஞ்சு பேரும் தப்பிக்கிறாங்க.

அர்ச்சுனன் ஒரு போட்டியில திரெளபதிய ஜெயிக்க அஞ்சு பேருமா அவளை வீட்டுக்கு கொண்டு வர்றாங்க.
"அம்மா. நாங்க என்ன கொண்டு வந்திருக்கோம் பாரு." யுதிஷ்டிரன்.
"எதை கொண்டு வந்தாலும் அஞ்சு பேருமா ஆளுக்கு கொஞ்சம் எடுத்துக்கங்க". குந்தி பார்க்காமலேயே சொல்லிடறாங்க.
"அர்ச்சுனா. அம்மாவே சொல்லிட்டாங்க. அவங்க வார்த்தைய நாம மீற கூடாது. திரெளபதிய அஞ்சு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்" யுதிஷ்டிரன்.
அர்ச்சுனன் சரி அப்படின்றான்.

அஞ்சு பேருமா கல்யாணம் பண்ணி திரெளபதிய பஞ்சாலியாக்கி ராஜ்யத்தையும் ஆளுறாங்க.
நாரதர் இந்த கல்யாணம் மூலமா உங்களுக்கு பிரச்சனை வரக்கூடாது. ஆளுக்கு ஒரு வருடம் அப்படின்னு சைக்ளிக் ரொட்டேசன்ல வாழ்க்கை நடத்துங்கன்னு அட்வைஸ் பண்றாரு.
சரின்னு இப்படி ஒரு அக்ரிமெண்ட் போட்டுக்கிட்டு, இந்த அக்ரிமெண்ட மீறுனா நாடுகடத்தல் அப்படின்னு பேசி வச்சிக்கிறாங்க.
யுதிஷ்டிரனுடைய வருடத்துல தெரியாம டிஸ்டர்ப் பண்ணிட்டதுக்காக அர்ச்சுனன் அக்ரிமண்ட் படி தன்னுடைய தப்புக்கு கொஞ்சநாள் நாட்டை விட்டு போறேன்னு சொல்லி கிளம்புறான்.
அர்ச்சுனன் ஊரை சுத்தி வந்து அல்லி, நாக கன்னிகை, சுபத்ரா... எக்சட்ரா எக்சட்ரான்னு கல்யாணமா பண்ணிக்கிட்டே போறான்.
பீமனும் தம் பங்குக்கு இடும்பின்ற ராட்சசியை கல்யாணம் பண்றான்.

நாட்டை பிரிச்சு கொடுத்தாலும் சந்தோஷப்படாத துரியோதனன் தர்மனை சூதுக்கு கூப்பிட...
ஹிஸ்டரியில இல்லாத அளவுக்கு தருமனும் மனைவியை வெச்சு சூதாடுறான்.
சூதுல ஜெயிச்ச துரியோதன் பாஞ்சாலியை இழுத்து வர சொல்ல...
அஞ்சு பேருக்கு மனைவியான பாஞ்சாலி இனி நூறு பேருக்கு பணிப்பெண்ணா இருக்கட்டும்னு கர்ணன் சொல்ல....
துச்சாதணன் சபை நடுவுல வெச்சு ஸ்டிரிப் டீஸ் அட்டெம்ட் பண்றான்.
கரெக்டா டைமுக்கு வந்து கிருஷ்ணர் காப்பாத்துறாரு.

அப்புறமா பாண்டவர்ங்க கேமோட ரூல் படி 13 வருடம் கழிச்சி வந்து நாட்டை கேக்கிறாங்க.
துரியோதனன் தர மாட்டேன்னு சொன்னதும் சண்டை போட்டு கோடிக்கணக்கான பேரை கொன்னு கடைசியா ஆட்சிய புடிக்கிறாங்க.

----------------------------------------

"கதையோட அவட்லைன் எப்படி" வியாசர் கேட்கிறார்.
"சூப்பர். பின்னிட்டீங்க."
இதுதான் வியாசரின் சூப்பர் ஹிட்டான மகாபாரத கதை.

---------------------

நினைவின் நதிக்கரை நீங்கி....



நீண்டு கொண்டிருக்கிறது என் உறக்கம்
விழித்தெழுந்து ஆவதென்ன...
தொடர்ந்து கொண்டிருக்கிறது என் கனவு...
கனவுகளை கலைக்க விரும்பாமல் நான்.
கண்விழித்த ஒருகணத்தில் பாய்ந்த ஒளிவெள்ளம்
கனவுகளை கவர்ந்து செல்ல முயல..
கண்களை இறுக்கி கனவுகளை தேக்கிக்கொண்டேன்.
நினைவின் நதிக்கரை நீங்கி
கனவின் காட்சிகளின் நீட்சியில் நிம்மதி பெறுகிறேன்.
கவிழ்ந்து கனவோடையில்
நீந்தி திளைக்கின்றேன் நான்.
நீடுதுயில் நீக்கவந்தவன் நீயெனில்
நீங்கிச் செல்.
என்னை என்கனவுகளில் களிக்கவிடு.
இதோ மீண்டும் கனவினில் மூழ்கிவிட்டேன்.

Monday, August 20, 2007

ஒரு தொண்டன் தலீவனான கதை....

"தலீவா..." மோகன்ராஜ் என்னை எப்பவுமே இப்படித்தான் கூப்பிடுவான்.

"தலீவா.. நம்ப காலேஜ் ஆனுவல் டேக்கு ஒரு கவியரங்கம் நடக்குது. எனக்கு ஒரு கவிதை வேணுமே.".

"கவியரங்கத்துக்கு நீயே சொந்தமா கவிதை எழுதிட்டு போயேன் மோகன்ராஜ்".

"என்ன தலீவா. உன்னோட கவிதை ஒன்னை படிக்கலாம்னு நினைச்சேன். நீ யாரு. வாக்கிங் அண்டு டாக்கிங் டமில் டிக்ஸனரி்".

"ஓட்டாதே. நீ தலையில வைக்கிற ஐஸ்னால எனக்கு ஜன்னியே வந்துடும் போல இருக்கு." கவிதை எழுதி கொடுத்தேன்.

நல்ல குரல் அவனுக்கு. ஏற்ற இறக்கத்தோடு வாசித்து கைத்தட்டல்களை வாரிக் கொண்டான்.

-------------------

"தலைவா. ஒரு பட்டி மன்றம் பேச போறேன். மேட்டரு வேணுமே."

"என்ன தலைப்பு".

"பாரதிதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது சமூக சிந்தனையே."

"நல்ல தலைப்பு".

"அவரோட அச்சமில்லை அச்சமில்லை பாட்டை சொல்லலாமா. நல்ல சமூக சிந்தனை பாட்டு இல்லை".

"அச்சமில்லை அச்சமில்லை பாரதியார் பாட்டு. மோகன்ராஜ்".

--------------------------------------

"தலீவா நம்ப தலைவரோட பிறந்த நாளுக்கு நம்ப கட்சியோட நகர கிளை சார்பா ஒரு மலர் வெளியிடறோம். அதுல போடறதுக்கு ஒரு கவிதை எழுதி தர்றியா."

சில நாட்கள் கழித்து அந்த மலரில் வெளியான அவனது (!!) கவிதையை கொண்டு வந்து காட்டினான்.

------------------------------

"தலீவா. பஸ் ஸ்டாண்டுல நம்ப பேனர் பார்த்தியா."

"இல்லியே மோகன்ராஜ்".

இழுத்து கொண்டு போய் காட்டினான்.

நகருக்கு வரும் கட்சித்தலைவரை இருகரம் கூப்பி மாணவர் அணி செயலாளர் (!!!) மோகன்ராஜ் வரவேற்று கொண்டிருந்தார்.

இவன் எப்போது மாணவர் அணி செயலர் ஆனான் என்று நான் விழித்துக் கொண்டிருந்தேன்.

--------------------


துறைத்தலைவர் என்னை அழைத்திருந்தார்.

"என்னடா நினைச்சிருக்கான் உன் ஃபிரண்டு மோகன்ராஜ். நாலு ஆட்டோவில போய் யாரையோ அடிச்சிருக்கான். உனக்கு தெரியுமா ?"
"தெரியாது. சார்".
"இவன மாதிரி ஸ்டூடண்டெல்லாம் நம்ம காலேஜ்ல படிக்கிறாங்கன்னு நினைச்சா.... சே... இதுக்கு மேல இப்படி பண்ணினான்னா சஸ்பெண்டுதான்னு சொல்லி வை.".

"இதை அவனையே கூப்பிட்டு சொல்ல வேண்டியதுதான. நான்தான் கிடைச்சனா." மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்.

----------

"தலீவா. நம்ம தலைவருக்கு எதிரா போஸ்டர் ஒட்டியிருந்தான் தலைவா அவன். வுடுவனா நானு. பின்னிட்டோம் இல்லை". அடுத்த நாள் மோகன்ராஜ் என்னிடம் அளந்து கொண்டிருந்தான்.
இவனிடமிருந்து விலகியிருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

--------

கல்லூரி நாட்கள் முடிந்து பல வருடங்கள் ஓடிவிட்டன.
அவனைப்பற்றிய தகவல்களோ தொடர்போ இல்லை.
பணிநிமித்தம் பலஇடங்கள் சுற்றிய வண்ணம் நான்.

ஒரு விடுமுறைக்கு ஊருக்கு சென்றபோது அவனை பார்க்க நேர்ந்தது.
கரைவேட்டிகள் சூழ வீட்டிற்கே வந்திருந்தான்.

"தலைவா. எம்.எல்.ஏ. எலக்சன்ல நிக்கிறேன். மறக்காம ஓட்டு போட்டுடு." மோகன்ராஜ்.

இளங்கவிக்கோ (!!) மோகன்ராஜ் தேர்தலில் போட்டி. பேப்பரில் படித்தது. இவன்தானா அது !!!

"தலிவா. இவர்தான் கவிஞர் காசிமுத்து. நமக்கான கவிதையெல்லாம் இப்ப இவர்தான் எழுதறாரு."

பக்கத்திலிருந்த அந்த கோஸ்ட் ரைட்டரை பார்த்து சிரித்தேன்.

----------