Tuesday, August 28, 2007

டாக்டர் விஜய்.. வாழ்க... வாழ்க...

செய்தி:- சென்னை மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் நடிகர் விஜய்க்கு டாக்டர் பட்டம் வழங்குகிறது. நடிப்புத்திறன், வாழ்வியல் பண்பாடு, சமூக சிந்தனை ஆகியவற்றுக்காக இந்த பட்டம் அவருக்கு வழங்கப்படுகிறது.

------------------

நடிப்புத்திறன்

நடிகர் விஜயின் நடிப்புத்திறனை ஒரு வரியில் சொல்லமுடியாது. இரண்டு வரியில் சொல்லி விடலாம்.
"அண்ணா. ஏனுங்கண்ணா."

தமிழ் சினிமா கண்டெடுத்த மிகச்சிறந்த நடிகர் அவர். முகபாவங்களை வெளிப்படுத்துவதில் அவரைப்போல் மற்றொருவரை காண முடியாது.
அவரது நடிப்புத்திறனை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்பதிலிருந்தே அவர் எத்தனை சிறந்த நடிகர் என்பது தெள்ளென விளங்கும்.

வாழ்வியல் பண்பாடு:

அதிகம் பேசாதவர். பேசத்தெரியாது என்பது காரணமில்லை. அடக்கம்தான் காரணம். இது அவரது வாழ்வியல் பண்பாடு.
படத்திற்கு மூன்றிலிருந்து நான்கு கோடி வரை வாங்கும் அசாதாரண நடிகரான இவர் தமது சம்பாத்தியத்தை நல்ல முறைகளில் முதலீடு செய்யும் வாழ்வியல் நெறியுடையவர்.
இவரது வாழ்வியல் முறை: நடிகருக்கு தேவையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகள் மேற்கொள்கிறார்.
இத்தகு இவரது வாழ்வியல் பண்பாடு தமிழ் சமுதாயத்திற்கே வழிகாட்டியாக உள்ளது என்றால் அது மிகையாகாது.

சமூக சிந்தனை:

இவரது சமூக சிந்தனைபற்றி நாளெல்லாம் சொல்லலாம்.
குறிப்பிட்ட சமூகம் மட்டுமே பயன்படுத்தி வந்த வடுமாங்காய் மற்றும் தயிர்சாதத்தை ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கும் அறிமுகப்படுத்திய இவரது அரும்பணி இங்கு குறிப்பிடத்தக்கது.
தலைசிறந்த சமுதாய நோக்கு உள்ள படங்கள் பலவற்றில் இவர் தொடர்ந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழன் என்ற ஒரு திரைப்படத்தில் இவரை பாராட்டி தபால் தலையே வெளியிடப்பட்டது.
இவரது திரைப்பாடல்கள் கமர்கட், பர்பி என்று தமிழர்கள் மறந்து போன அவர்களது தின்பண்டங்களை அவர்களுக்கு மறு அறிமுகம் செய்தவை.
இவரது திருப்பாச்சி என்ற படத்தின் மூலம் சென்னையின் அனைத்து ரவுடிகளையும் அழித்து சென்னையை அமைதிப்பூங்காவாக்கியவர்.
இவரது சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

இத்தகு சிறந்த நடிப்புத்திறன், சீரிய வாழ்வியல் பண்பாடு, சீர்மிகு சிந்தனைகள் கொண்ட இவர் டாக்டர் பட்டம் பெற்றது அந்த டாக்டர் பட்டத்திற்கே கிடைத்த பெருமையாகும்.
வாழ்க டாக்டர் விஜய்.
வாழ்க அவருக்கு பட்டம் கொடுத்த பல்கலைக்கழகம் மற்றும் ரசிகர்கள்.
வாழ்க ! வாழ்க !

Friday, August 24, 2007

தற்கொலை பன்னிக்க சிலவழிகள்

பன்னி(bunny)யின் தற்கொலை முயற்சிகள்.



ஒரே நேரத்துல ஏகப்பட்ட சிகரெட்டு குடிச்சா கேன்சர் வந்து போய் சேந்துடலாம் இல்லை.



மணியாக மணியாக மேல போயிடலாம்.



இந்தியன் கிரிக்கட் டீம் பேட் பண்ணா டைரக்டா சொர்க்கம்தான்.




அவங்க போகட்டும். நமக்கு பிரளயம் வரும்.



கேப்டன் பிரபாகரன் படம் நியாபகத்துக்கு வருது.






என்ன ஒரு பிளானிங்.



இவ்வளவு கஷ்டம் எதுக்கு பேசாம தொடர்ந்து டி.வி. பார்த்தா போதாதா.

Wednesday, August 22, 2007

பதிவர் மொக்கராசுவின் மொக்கை பதிவு.

இது பதிவர் மொக்கராசுவின் கதை.

மொக்கராசு உலகமறிந்த மொக்கை பதிவர். தமது பெயருக்கேற்ப மொக்கையான பதிவுகளை எழுதுபவர். இத்தகைய மொக்கராசு பதிவுலகமோ காணாத மொக்கை ஒன்றை பதிய முடிவெடுத்தார். மொக்கை என்றால் உங்க வீட்டு மொக்கை எங்க வீட்டு மொக்கையல்ல உலகமகா மொக்கையாக இருக்க வேண்டும். வருங்கால சந்ததிகள் மொக்கை பதிவென்றால் தன் பதிவைத்தான் காட்டும் அளவுக்கு அது இருக்கு வேண்டும் என்று நினைத்தார்.

மூளையை கசக்கினார். மொக்கை ரசத்தை பிழிந்தார்.
ஒவ்வொரு எழுத்தையும் ரம்பத்தால் ராவி வலையேற்றினார்.
மொக்கை தாங்காமல் அவரது கணினியின் கீபோர்டு கதறியதை கூட அவர் பொருட்படுத்தவில்லை.
திரட்டிகளில் இணைப்பு கொடுத்தபிறகு ஒருமுறை தன் கதையை தானே படித்துப்பார்த்தார் மொக்கராசு.
அவரது மொக்கையை அவராலேயே தாங்க முடியாமல் மொக்கராசு மண்டை சிதறி இறந்தார்.

அதற்குள் அந்த மொக்கை பதிவு வலையுலகமெங்கும் பரவிவிட்டது. அந்த பதிவை திறந்த சிலரின் கணினிகள் புகை கக்கின. நெருப்பு நரி நிஜமாகவே நெருப்பை கக்கியது. மொக்கை பதிவை படித்த இதய பலவீனமானவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஆணிபிடுங்குவதில் இருந்து ஆசுவாசப்படுத்திக்கொள்வோம் என அப்பதிவை திறந்தவர்கள் மொக்கையின் தாக்கத்தால் தங்கள் தலையில் கடப்பாரை இறங்குவதாக உணர்ந்தார்கள்.

பலர் பதிவை படித்து பைத்தியமானார்கள். பத்தாவது இருபதாவது மாடியென உயரமான இடங்களில் வேலை செய்த பலர் ஜன்னல்கள் மூலம் எகிறி குதித்தனர். பலர் தங்கள் கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்து தங்கள் கணினியே தாக்க ஆரம்பித்தனர். வீடுகள், பிரெளசிங் செண்டர்கள் எல்லாவற்றிலும் இதே நிலைதான். மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களில் பலருக்கு என்ன ஆனது என்று அறியாமல் குழம்பின.

அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அனைத்து நாடுகளின் உளவுத்துறையும் உஷார் படுத்தப்பட்டன.

ஒய்டுகே இதனுடன் ஒப்பிடும்போது ஒன்றுமேயில்லை என பில்கேட்ஸ் தெரிவித்தார்.

இது பின்லேடனின் சதியாக இருக்கலாம் என அமெரிக்க அதிபரும் இங்கிலாந்து அதிபரும் கருத்து தெரிவித்தனர்.

இத்தனை களேபரத்துக்கும் பின் இத்தனைக்கும் காரணம் ஒரு மொக்கை பதிவே என்று தெரிய வந்தது.

இந்தப்பதிவை தடைசெய்யக் கோரி ஐநாவின் மனிதஉரிமை அமைப்பு கோரிக்கை விடுத்தது.

போர்க்கால நடவடிக்கை எடுத்து பிளாக்கரில் அந்த மொக்கை பதிவு முடக்கப்பட்டது.

உலகமே பெருமூச்சு வாங்கியது.

இந்த மொக்கை பதிவின் ஆற்றல் அணுகுண்டின் ஆற்றலை விட அளப்பரியது என்று வியந்த அமெரிக்க இராணுவம் அதன் காப்பி ரைட்சை வாங்கியுள்ளது.

எதிர்காலத்தில் தன்னை எதிர்க்கும் நாடுகள் மீது இப்பதிவை ஏவிவிட அமெரிக்க இராணுவம் பதுக்கி வைத்துள்ளதாக தெரிகிறது.

ஐநாவில் மொக்கைபதிவு தடுப்புத் தீர்மானமும் அதையடுத்து நிறைவேறியுள்ளது.

இவ்வாறு உலகையே கலக்கிய மொக்கைராசுவின் மொக்கை பதிவு ஒரு முடிவுக்கு வந்தது.

சுபம்.