உறவுகளில் திருமணத்துல எனக்கு எப்பவும் ஒரு கன்ஃபியூசன் உண்டு...
இன்னான்னு கேக்கறீங்களா...
என்ன என்ன முறையில உறவில் திருமணம் பாஸிபிள்.... அக்கார்டிங் டு அவர் பாரம்பரியம்...
ஓரு ஆணுக்கான ஆப்சன்ஸ்....
1) அக்காள் மகளை திருமணம் செய்தல்.
2) அப்பாவின் தங்கை/அக்காளின் மகள்.
3) அம்மாவின் தம்பி/அண்ணணின் மகள்.
தெளிவாத்தான இருக்கு என்ன கன்பியூசன் அப்படின்றீங்களா...
ஸ்டடி த ஃபாலோயிங் சினாரியோ...
ஓரு ஆண் தன் அக்காள் மகளை கல்யாணம் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
அவர்களுக்கு ஒரு பையன் பிறக்கிறான்.
அந்த பையனுக்கு அப்பாவின் அக்கா = அத்தை.
அதே பையனுக்கு அம்மாவின் அம்மா = ஆயா.
அந்த குழந்தை அப்பாவின் அக்காவை அத்தையாக கருதுகிறது என்று வைத்துக் கொள்வோம்.
அத்தையின் இரண்டாவது மகள் அப்பாவை வைத்து பார்த்தால் அத்தை மகள். கட்டும் முறை.
அம்மாவை வைத்து பார்த்தால் அம்மாவின் தங்கை சின்னம்மா. அச்சச்சோ...
அப்படின்னா....
அப்பா அக்கா மகளென்று கல்யாணம் செய்த பெண் பையனின் அம்மா...
அப்பாவின் அக்காவான அத்தையின் மகள் என்ற முறையில் பையனுக்கும் கல்யாணம் செய்யும் முறை....
அப்பாவுக்கும் பையனுக்கும் ஒரே பெண் முறைப்பெண் !!!!!!!!!!!!!
ஓ... நோ.... கன்பியூசன்...
யாராச்சும் வந்து எனது கன்பியூசனை கிளியர் பண்ணுங்களேன்.
Thursday, September 06, 2007
Tuesday, September 04, 2007
வணக்கம் வாத்யாரே - வாத்யார் தினமாமே...
இன்னிக்கு வாத்தியார் தினமாம்பா....
இந்த இனிய நாளில நம்ம பள்ளிக்கூட காலத்தை கொஞ்சூண்டா கொசுவத்தி சுத்தறம்பா....
அது ப்ளஸ் டூ பள்ளியிறுதி....
நமக்கு தமிழ்வாத்தியார் கிளாஸ்தான் ரொம்ப புடிக்கும். அவரது வார்த்தைகளில் சிந்தாமணி சிந்தும். வளையாபதி வளையும். சிலப்பதிகாரம் சிலம்பாடும். அவரை மாதிரி யாராலயும் தாலாட்டு பாட முடியாது...
அவரது தமிழ் கேட்டு தூங்கியவன் நான்.. ஒரு முறை பிடித்து விட்டார். "இரண்டாவது பெஞ்சில மூணாவது எருமை எழுந்திரு".
"சார்"
"சீவக சிந்தாமணியை எழுதியது யார்?"
கொஞ்சம் திருதிருவுக்கு அப்புறம் புத்திசாலித்தனமாய் "சிந்தாமணிப்புலவர். சார்".
"புத்திசாலி எருமையே... கடைசி பெஞ்சில போய் பீரியட் முடியறவரைக்கும் நில்லு"....
அப்புறம் தமிழ் வகுப்பில் எனது விழிப்புணர்வு அதிகமானது. எனக்கு விழிப்புணர்வு ஊட்டிய தமிழாசான் மறக்க முடியாதவர்.
-----
எங்கள் ஆங்கில ஆசிரியர் ஷேக்ஸ்பியரின் நேர் வாரிசு..
"ஒன் நரி ஜம்பிங் ஜம்பிங் ஃபார் திராட்சை" என்ற அளவில் இருந்த என் வக்காபுலரியை விரிவு படுத்தியவர்.
தூங்கும் மாணவர்களை குறிபார்த்து சாக்பீஸ் எறிந்து எழுப்புவார் என்பதால் அவரும் எனக்கு விழிப்புணர்வு ஊட்டியவரே.
---------
இயற்பியல் செய்முறைத்தேர்வு.
திரு திரு என்று முழித்துக் கொண்டிருக்கிறேன்.
தனிஊசலை ஆட்டி நான் செய்த சோதனையில் புவிஈர்ப்பு விசை 6.13 என்று வந்திருந்தது. சரியானது 9.8.
நமது சோதனை சாலையில் புவிஈர்ப்பு விசை 6 தான் என்று சொல்லி என்னை தூக்கி விட்ட இயற்பியல் ஆசிரியர் என் ஏணி.
--------
விலங்கியல். தவளையை அறுக்க வேண்டும்.
அவரவர்களையே தவளையை கொண்டு வர சொல்லியிருந்தார் ஆசிரியர்.
என்னருகே வந்தார்.
"என்ன இது"
"தவளை சார்"
"இது தேரை. தவளை கொண்டு வர சொன்னா தேரைய கொண்டு வந்திருக்க. தவளைன்னா ராணா ஹெக்சா டாக்டைலா... சரி ஒழிஞ்சி போ".
---
கொடுக்கப்பட்ட உப்பை கண்டறிய வேண்டும்.
ஏற்கனவே ஐந்து சோதனை குடுவைகளை உடைத்திருந்தேன்.
உப்பு தீர்ந்து விட்டது. பக்கத்திலிருந்த பையனிடம் அவன் உப்பை கடன் வாங்கினேன்.
பல சோதனைகளுக்குப் பிறகு எனது சோதனை குடுவையில் பழுப்பு சிவப்பு பச்சை என வானவில்லின் பல நிறங்களில் வளையங்கள் தோன்ற பழுப்பு வளைய சோதனையில் உப்பு தேறியது என்று முடிவு செய்து "மெக்னீசியம் நைட்ரைடு" சார் என்றேன்.
"இல்லையே உனக்கு நான் குளோரைடுதானே கொடுத்தேன்". உப்பை பரிசோதித்தார்.
"இது நான் உனக்கு கொடுத்த உப்பில்லையே."
"உப்பு தீர்ந்துடுச்சுன்னு பக்கத்துல கடன் வாங்கினேன் சார்."
"முண்டம். உப்பு தீர்ந்துடுச்சுனா எங்கிட்ட வரவேண்டியதுதான. பக்கத்துல அவனுக்கு கொடுத்ததுதான் நைட்ரைடு. உனது குளோரைடு. மெக்னீசியம் குளோரைடுன்னு எழுதி பேப்பரை கொடுத்துட்டு போ."
கருணை மழை பொழிந்த கெமிஸ்ட்ரி வாத்தியார் வாழ்க.
--------
"இந்தா உனக்கு சாமந்திப் பூ. இதுக்கு படம் வரையத் தெரியுமில்லை".
"இல்லை சார். நான் செம்பருத்திதான் படிச்சிட்டு வந்திருக்கேன். செம்பருத்தியே கொடுங்க சார்".
"உன்னையெல்லாம் வச்சிகிட்டு... இந்தா. தொலை".
எனது வாழ்க்கை பாதையில் செம்பருத்தியை தூவிய எனது தாவரவியல் ஆசிரியர் வாழ்க.
------
பரவளையம் அதிபரவளையம் நீள்வட்டம் வகையிடுதல் தொகையிடுதல் என வகை தொகையில்லாத ஒரு பாடத்திடம் நான் மாட்டித் திணறிய போது......
எண்ணித் துணிந்து எனக்கும் கணிதம் வரும் என்பதை எனக்கே உணர்த்திய என் கணிதப் பெருந்தகை...
-------
எல்லோரையும் ஒரு முறை எண்ணிப் பார்க்கிறேன்.
அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
--------------------------------------
இந்த இனிய நாளில நம்ம பள்ளிக்கூட காலத்தை கொஞ்சூண்டா கொசுவத்தி சுத்தறம்பா....
அது ப்ளஸ் டூ பள்ளியிறுதி....
நமக்கு தமிழ்வாத்தியார் கிளாஸ்தான் ரொம்ப புடிக்கும். அவரது வார்த்தைகளில் சிந்தாமணி சிந்தும். வளையாபதி வளையும். சிலப்பதிகாரம் சிலம்பாடும். அவரை மாதிரி யாராலயும் தாலாட்டு பாட முடியாது...
அவரது தமிழ் கேட்டு தூங்கியவன் நான்.. ஒரு முறை பிடித்து விட்டார். "இரண்டாவது பெஞ்சில மூணாவது எருமை எழுந்திரு".
"சார்"
"சீவக சிந்தாமணியை எழுதியது யார்?"
கொஞ்சம் திருதிருவுக்கு அப்புறம் புத்திசாலித்தனமாய் "சிந்தாமணிப்புலவர். சார்".
"புத்திசாலி எருமையே... கடைசி பெஞ்சில போய் பீரியட் முடியறவரைக்கும் நில்லு"....
அப்புறம் தமிழ் வகுப்பில் எனது விழிப்புணர்வு அதிகமானது. எனக்கு விழிப்புணர்வு ஊட்டிய தமிழாசான் மறக்க முடியாதவர்.
-----
எங்கள் ஆங்கில ஆசிரியர் ஷேக்ஸ்பியரின் நேர் வாரிசு..
"ஒன் நரி ஜம்பிங் ஜம்பிங் ஃபார் திராட்சை" என்ற அளவில் இருந்த என் வக்காபுலரியை விரிவு படுத்தியவர்.
தூங்கும் மாணவர்களை குறிபார்த்து சாக்பீஸ் எறிந்து எழுப்புவார் என்பதால் அவரும் எனக்கு விழிப்புணர்வு ஊட்டியவரே.
---------
இயற்பியல் செய்முறைத்தேர்வு.
திரு திரு என்று முழித்துக் கொண்டிருக்கிறேன்.
தனிஊசலை ஆட்டி நான் செய்த சோதனையில் புவிஈர்ப்பு விசை 6.13 என்று வந்திருந்தது. சரியானது 9.8.
நமது சோதனை சாலையில் புவிஈர்ப்பு விசை 6 தான் என்று சொல்லி என்னை தூக்கி விட்ட இயற்பியல் ஆசிரியர் என் ஏணி.
--------
விலங்கியல். தவளையை அறுக்க வேண்டும்.
அவரவர்களையே தவளையை கொண்டு வர சொல்லியிருந்தார் ஆசிரியர்.
என்னருகே வந்தார்.
"என்ன இது"
"தவளை சார்"
"இது தேரை. தவளை கொண்டு வர சொன்னா தேரைய கொண்டு வந்திருக்க. தவளைன்னா ராணா ஹெக்சா டாக்டைலா... சரி ஒழிஞ்சி போ".
---
கொடுக்கப்பட்ட உப்பை கண்டறிய வேண்டும்.
ஏற்கனவே ஐந்து சோதனை குடுவைகளை உடைத்திருந்தேன்.
உப்பு தீர்ந்து விட்டது. பக்கத்திலிருந்த பையனிடம் அவன் உப்பை கடன் வாங்கினேன்.
பல சோதனைகளுக்குப் பிறகு எனது சோதனை குடுவையில் பழுப்பு சிவப்பு பச்சை என வானவில்லின் பல நிறங்களில் வளையங்கள் தோன்ற பழுப்பு வளைய சோதனையில் உப்பு தேறியது என்று முடிவு செய்து "மெக்னீசியம் நைட்ரைடு" சார் என்றேன்.
"இல்லையே உனக்கு நான் குளோரைடுதானே கொடுத்தேன்". உப்பை பரிசோதித்தார்.
"இது நான் உனக்கு கொடுத்த உப்பில்லையே."
"உப்பு தீர்ந்துடுச்சுன்னு பக்கத்துல கடன் வாங்கினேன் சார்."
"முண்டம். உப்பு தீர்ந்துடுச்சுனா எங்கிட்ட வரவேண்டியதுதான. பக்கத்துல அவனுக்கு கொடுத்ததுதான் நைட்ரைடு. உனது குளோரைடு. மெக்னீசியம் குளோரைடுன்னு எழுதி பேப்பரை கொடுத்துட்டு போ."
கருணை மழை பொழிந்த கெமிஸ்ட்ரி வாத்தியார் வாழ்க.
--------
"இந்தா உனக்கு சாமந்திப் பூ. இதுக்கு படம் வரையத் தெரியுமில்லை".
"இல்லை சார். நான் செம்பருத்திதான் படிச்சிட்டு வந்திருக்கேன். செம்பருத்தியே கொடுங்க சார்".
"உன்னையெல்லாம் வச்சிகிட்டு... இந்தா. தொலை".
எனது வாழ்க்கை பாதையில் செம்பருத்தியை தூவிய எனது தாவரவியல் ஆசிரியர் வாழ்க.
------
பரவளையம் அதிபரவளையம் நீள்வட்டம் வகையிடுதல் தொகையிடுதல் என வகை தொகையில்லாத ஒரு பாடத்திடம் நான் மாட்டித் திணறிய போது......
எண்ணித் துணிந்து எனக்கும் கணிதம் வரும் என்பதை எனக்கே உணர்த்திய என் கணிதப் பெருந்தகை...
-------
எல்லோரையும் ஒரு முறை எண்ணிப் பார்க்கிறேன்.
அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
--------------------------------------
இறைவன் இருக்கின்றானா ???????????????????
எனது அந்திப்பொழுதொன்றில் கடற்கரையோரம் நின்றிருந்தேன்.
கண்ணுக்கெட்டும் தூரம் வரை பரந்து விரிந்த கடல்.
அதன் விஸ்தீரணத்தின் விந்தையில் மயங்கியிருந்தேன்.
மெல்ல பரிதிசாய வர்ணத்தின் விந்தைகள் கண்முன்.
மாலை வானத்தில் சிவப்பு வண்ணத்தை குழைத்தது யார்.
மேகப்பந்தலை அவனியெங்கும் அலையவைத்தவன் எவன்.
கடலின் அலைகளுக்கு தரைதொட்டு திரும்ப சொன்னது யார்.
கடற்கரையெங்கும் மணல்படுக்கை பரப்பியவன் எவன்.
மெல்ல பொழுது சாய செவ்வண்ணம் மறைய..
இருளென்னும் போர்வையை யாரிங்கு போர்த்துவது.
வானத்து மின்மினி பூச்சிகள் யாரிங்கு தூவியது
வட்டத் தட்டொன்றை யார் நிலவென வீசியது....
தீண்டி செல்லும் கடற்காற்றை வீசச்சொன்னவன் எவன்.
இதமான குளிரொன்று இதயத்தில் இறக்குபவன் எவன்.
காலைத் தொட்டுச் செல்லும் கடல்நீரே...
ககனம் சுற்றும் காற்றே கண்டதுண்டோ அவனை.
கண்முன் தொடர்ந்து மாறிய காட்சிஜாலங்கள்..
இத்தனைக்கும் ஒளிஓவியன் ஒருவன் இருக்கின்றானா...
இறையொருவன் இத்துணையும் அமைத்து ஒளிந்தானா...
இருக்கின்றான் எனில் எங்கிருக்கின்றான் அவன்.
இல்லையெனில் இவ்வையகமும் அண்டப் பேரண்டமும்
அலையும் கடலும் காற்றும் யாவும் தான்தோன்றியோ...
அண்டப் பேரண்டத்தின் சிறுதுளி புவியெனில்..
இதன் புறத்திருப்பானோ இல்லை அகத்திருப்பானோ.
இறைவனவன் இருப்பும் இன்மையும் இவ்வையத்தின்
இயக்கத்தை இயல்பை மாற்றத் தகையதோ.
எண்ணத்தில் விளைந்த விந்தைகள் விடையின்றி
பொங்கு கடலுக்கு விடைகொடுத்து வீடுசேர்ந்தேன்.
கண்ணுக்கெட்டும் தூரம் வரை பரந்து விரிந்த கடல்.
அதன் விஸ்தீரணத்தின் விந்தையில் மயங்கியிருந்தேன்.
மெல்ல பரிதிசாய வர்ணத்தின் விந்தைகள் கண்முன்.
மாலை வானத்தில் சிவப்பு வண்ணத்தை குழைத்தது யார்.
மேகப்பந்தலை அவனியெங்கும் அலையவைத்தவன் எவன்.
கடலின் அலைகளுக்கு தரைதொட்டு திரும்ப சொன்னது யார்.
கடற்கரையெங்கும் மணல்படுக்கை பரப்பியவன் எவன்.
மெல்ல பொழுது சாய செவ்வண்ணம் மறைய..
இருளென்னும் போர்வையை யாரிங்கு போர்த்துவது.
வானத்து மின்மினி பூச்சிகள் யாரிங்கு தூவியது
வட்டத் தட்டொன்றை யார் நிலவென வீசியது....
தீண்டி செல்லும் கடற்காற்றை வீசச்சொன்னவன் எவன்.
இதமான குளிரொன்று இதயத்தில் இறக்குபவன் எவன்.
காலைத் தொட்டுச் செல்லும் கடல்நீரே...
ககனம் சுற்றும் காற்றே கண்டதுண்டோ அவனை.
கண்முன் தொடர்ந்து மாறிய காட்சிஜாலங்கள்..
இத்தனைக்கும் ஒளிஓவியன் ஒருவன் இருக்கின்றானா...
இறையொருவன் இத்துணையும் அமைத்து ஒளிந்தானா...
இருக்கின்றான் எனில் எங்கிருக்கின்றான் அவன்.
இல்லையெனில் இவ்வையகமும் அண்டப் பேரண்டமும்
அலையும் கடலும் காற்றும் யாவும் தான்தோன்றியோ...
அண்டப் பேரண்டத்தின் சிறுதுளி புவியெனில்..
இதன் புறத்திருப்பானோ இல்லை அகத்திருப்பானோ.
இறைவனவன் இருப்பும் இன்மையும் இவ்வையத்தின்
இயக்கத்தை இயல்பை மாற்றத் தகையதோ.
எண்ணத்தில் விளைந்த விந்தைகள் விடையின்றி
பொங்கு கடலுக்கு விடைகொடுத்து வீடுசேர்ந்தேன்.
Subscribe to:
Posts (Atom)
